முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சித்திரை- 3.
சந்திரன்: உத்திரம்- 3.
செவ்வாய்: விசாகம்- 2.
புதன்: விசாகம்- 1.
குரு: புனர்பூசம்- 4.
சுக்கிரன்: அஸ்தம்- 1.
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு : பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்:
24-10-2025 விருச்சிகம்
புதன் பகல் 12.33 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கன்னி
21-10-2025 காலை 9.36 மணிக்கு துலாம்.
23-10-2025 இரவு 10.06 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கை பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும் என்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்திலும் தற்போது சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உடனிருப்பவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைய சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22, 23.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். குருபகவான் அதிசாரமாக 3-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகளும், வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு சூழலும் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைவதற்குதட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24, 25.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்க ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் தற்போது அதிசாரமாக 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகவும் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டு. உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது அதற்கான லாபத்தை அடையக்கூடிய நேரமாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25,
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். அசையும், அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது கடினமான வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடிய நிலை, உடனிருப்பவர் களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும். பணிநிமித்த மாக தேவையற்ற பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருந்தால்தான் நல்ல மதிப் பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைய அம்மனின் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதாலும், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிலும் தைரியத் தோடு செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குருபகவான் தற்போது அதிசாரமாக 12-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன் மூலமாக அவர்களின் உதவியால் ஒருசில ஆதாயத்தை அடையலாம். பெண்கள்மூலமாக தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் முனைப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் ராகு சஞ்சரிப்பதும், இதுநாள்வரை 10-ல் சஞ்சரித்த குரு தற்போது அதிசாரமாக 11-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பல்வேறு வகையில் வளமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் குறையும். சனி வக்ரகதியில் இருப்பதால் தொழில்ரீதியாக எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உணர்ச்சிவசப்படாமல் இருப்பது மிகவும் நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டு மில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். ஒருசிலருக்கு உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். குடும்பத்தில் தடைப்பட்ட மங்கள நிகழ்வுகள் தற்போது கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற் கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 24, 25.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 5-ல் ராகு, 12-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துவிட்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களால் நிம்மதிக் குறைவுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் பொதுவாக பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தாமதமாகக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மற்றவர்களை நம்பாமல் சில நேரங்களில் நீங்கள் நேரடியாக சில விஷயங்களில் செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருப்பது மட்டு மில்லாமல் மற்றவருடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய சக மாணவர்களிடம் சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த குரு தற்போது அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய ஒரு பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற வகையில் வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 24, 25
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடினமான பணியைகூட சுலபமாக செய்துமுடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப்பெற்று பெற்றோர், ஆசிரியரிடம் பாராட்டுதலை பெறமுடியும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22, 23.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுநாள்வரை 6-ல் சஞ்சரித்த குரு தற்போது அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் ஏற்படும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலமும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமும் வரும் நாட்களில் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். மாணவ- மாணவியர் கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூல மான பலன்களை பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24, 25.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதாலும், 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குரு அதிகாரமாக 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. உறவினரிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறிய வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரிவர பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில நல்ல மாற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்வழியில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு.
வெற்றி தரும் நாட்கள்: 24, 25.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குருபகவான் தற்போது அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதாலும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்லமுன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்தகால தேக்கங்கள் தற்போது குறைந்து பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதுடன் வேலையாட்கள் ஒத்துழைப்பும் சற்று சாதகமாக இருக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, தேவையற்ற பயணங்களை தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் ஒரு வளமான பலன் களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. முடிந்தவரை வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சில நேரங்களில் கோபப்படாமல் நிதானத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20.