Advertisment

இந்த வார ராசிபலன் 17-8-2025 முதல் 23-8-2025 வரை

thisweekrasi
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மகம்- 1.
சந்திரன்: ரோகிணி- 1.
செவ்வாய்: அஸ்தம்- 1. 
புதன்: பூசம்- 3.
குரு: புனர்பூசம்- 1.
சுக்கிரன்: புனர்பூசம்- 2. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 

thisweekrasi2

கிரக மாற்றம்: 
21-8-2025 சுக்கிரன் கடகத்தில் அதிகாலை 1.19 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம் 
18-8-2025 பகல் 2.40 மணிக்கு மிதுனம்
20-8-2025 மாலை 6.35 மணிக்கு கடகம்
22-8-2025 இரவு 12.16 மணிக்கு சிம்மம்
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
Advertisment
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இது நாள்வரை உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்த சூரியன் இனி 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எந்த ஒரு காரியத் தையும் கச்சிதமாக செய்து முடித்து நல்லபெயர் எடுக்கக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. மாணவ- மாணவி யர்கள் சிறப் பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண் களை எடுக்கக் கூடிய நேரமாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரிய, கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத் தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். புதிய வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நேரம் என்றாலும் அதற்கு தகுந்தபடி உங்களுடைய பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிட்டால் அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 21, 22.
மிதுனம் 
Advertisment
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை,
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மகம்- 1.
சந்திரன்: ரோகிணி- 1.
செவ்வாய்: அஸ்தம்- 1. 
புதன்: பூசம்- 3.
குரு: புனர்பூசம்- 1.
சுக்கிரன்: புனர்பூசம்- 2. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 

thisweekrasi2

கிரக மாற்றம்: 
21-8-2025 சுக்கிரன் கடகத்தில் அதிகாலை 1.19 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம் 
18-8-2025 பகல் 2.40 மணிக்கு மிதுனம்
20-8-2025 மாலை 6.35 மணிக்கு கடகம்
22-8-2025 இரவு 12.16 மணிக்கு சிம்மம்
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
Advertisment
உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இது நாள்வரை உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரித்த சூரியன் இனி 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எந்த ஒரு காரியத் தையும் கச்சிதமாக செய்து முடித்து நல்லபெயர் எடுக்கக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. மாணவ- மாணவி யர்கள் சிறப் பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண் களை எடுக்கக் கூடிய நேரமாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரிய, கேது சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத் தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். புதிய வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நேரம் என்றாலும் அதற்கு தகுந்தபடி உங்களுடைய பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிட்டால் அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 21, 22.
மிதுனம் 
Advertisment
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணியை தற்போது எளிதில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடன்பிறந்தவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையோடு செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். வேலைக்கு செல்பவர் களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்துவந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது விலகி நல்ல பெயர் எடுக்க முடியும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்படக்கூடிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 23.

thisweekrasi1

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 8-ல் ராகு சஞ்சரிப்பது மட்டுமில்லாமல், தற்போது சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது பணிச்சுமை அதிகரிக்கக்கூடிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக ஊழியர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையற்றவகையில் நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் ஞாபக மறதி உண்டாகக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 21, 22.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன், குரு சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி பணியில் நிம்மதி யுடன் செயல்பட முடியும். ஒருசிலருக்கு விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களை அடைவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன்மூலம் நற்பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20, 23.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாயும், 12-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது, உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு நீங்கள் நடந்துகொண்டால் ஒருசில ஆதாயத்தை நீங்கள் அடையமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். முக்கிய விஷயங்களை வெளி இடங்களில் பேசாமல் இருந்தால் மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் எளிதில் சமாளித்து ஏற்ற மிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார்- உறவினர்களை தற்போதைக்கு சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. தேவையில்லாத பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பதுமூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருக்கவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. வரும் நாட்களில் நற்பலன்களை அடைவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், கேது, பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். பல்வேறுவகையில் வளமான பலன்களை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துவகையில் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது பிறரால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை எடுப்பது மட்டுமில்லாமல் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்ல முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் புதன், 10-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். சூழ்நிலையை புரிந்து கொண்டு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளாமல் கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பைக்கூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திகொள்வது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நேரமாகும். வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையற்றவகையில் வீண் இடையூறுகள், படிப்பில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, கால பைரவரை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 23.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் கடந்த ஒரு மாதமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் விலகி மன நிம்மதி ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவானது மிகவும் சிறப்பாக இருக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முன்புவிட தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, சுக்கிரன், 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். ராகுபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு இருப்பது, பிறருக்கு முன்ஜாமீன் தருவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்பட்டால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். தேவையில்லாத தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால் ஓய்வு நேரம் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20, 21, 22.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை தரக்கூடிய அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்படவேண்டும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. உடன்பிறந்தவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையமுடியும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய யோகம் இருக்கிறது என்றாலும் சில நேரங்களில் பெற்றோர், ஆசிரியரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் எதிர் பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மன நிம்மதியுடன் எதிலும் செயல்பட முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெரிய இடத்து நட்பு கிடைப்பதால் எதையும் எளிதில் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். சனிபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பாராட்டுதலை அடையக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 23
bala160825
இதையும் படியுங்கள்
Subscribe