முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038,
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:

சூரியன்: விசாகம்- 3.
சந்திரன்: அஸ்தம்- 1.
செவ்வாய்: அனுஷம்- 4. 
புதன்: அனுஷம்- 2 (வ).
குரு: புனர்பூசம்- 4 (வ). 
சுக்கிரன்: சுவாதி- 4. 
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3. 

கிரக மாற்றம்: 

16-11-2025 விருச்சிகத்தில் சூரியன் பகல் 1.37 மணிக்கு

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்: கன்னி
17-11-2025 பகல் 3.35 மணிக்கு துலாம்.
20-11-2025 அதிகாலை 4.14 மணிக்கு விருச்சிகம்.
22-11-2025 மாலை 4.47 மணிக்கு தனுசு.

thiweekrasi1

மேஷம்   

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சூரியன் உடன் இவ்வாரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரமாகும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்களுக்கு உள்ள நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்கா-கமாக தள்ளிவைப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும் என்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவ- மாணவியர்களுக்கு தற்போது கவனச் சிதறல்கள் ஏற்படலாம் என்பதால் படிப்பில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. வரும் நாட்களில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக ஏற்றங்கள் ஏற்படும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.

ரிஷபம்  

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் இவ்வாரத்தில் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ராசியாதிபதி சுக்கிரன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு சஞ்சரிப்பதாலும் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை சமாளித்து ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். வேலைக்கு செல்பவர்கள் உடனிருக்கக்கூடிய சக நண்பர்களை சற்று அனுசரித்துச் செல்வது மூலமாக கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்க முடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதன் மூலமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது நல்லது. வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.

மிதுனம் 

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் தடைபட்டுவந்த சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபகரமான நிலையினை அடையமுடியும் என்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்களை சற்று குறைத்துக் கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். அதிகாரியுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வெளியூர் பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை பெறுவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 20, 21, 22. 

கடகம்  

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் எளிதில் சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் செவ்வாய், சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால்தான் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 22.

சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும், 8-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடனிருப்பவர்கள் செயலால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய நேரம் ஆகும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளித்து அனுகூல பலன்களை அடையமுடியும். தொழில்ரீதியாக பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களது கையிருப்பு குறையும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர், ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.

கன்னி 

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சுக்கிரன் 2-ல் இருப்பதால் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை எல்லாம் தற்போது மாறி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிறரால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 20, 21. 

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து பேசுவது நல்லது. குருபகவான் அதிசாரமாக 10-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொது இடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடிய அமைப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு தற்போது கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால்தான் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.

விருச்சிகம் 

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 4-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் நெருக்கடிகளை சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்துவகையில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் ஏற்படும். தேவையில்லாத தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சக நண்பர்களுடைய பேச்சை கேட்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது, கல்வியில் கவனம் செலுத்துவது தற்போதைக்கு நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்:16, 17, 20, 21.

தனுசு 

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த நல்ல காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். உடன் வேலை செய்யக்கூடிய சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19. 

மகரம் 

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் முழுமையாக விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது, தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு லாபகரமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வருவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21. 

கும்பம்  

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். தொழி-ல் சில மறைமுக எதிர்ப்புகள் இருக்கும் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று கவனத்தோடு நடந்தால் வளமான பலன்களை பெறமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. வருகின்ற நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19, 20, 21.

மீனம் 

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும், குருபகவான் அதிசாரமாக 5-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களது ஆரோக்கியமா னது சிறப்பாக இருக்கக்கூடிய யோகமானது உண்டு. கடந்த ஒரு மாத காலமாக 8-ல் சஞ்சரித்த சூரியன் தற்போது 9-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்ப ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்ட
மானது உங்களுக்கு இருக்கிறது. கடந்தகால பிரச்சினைகள் குறைந்து சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகமானது இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் உங்களுக்கு இருந்த தேக்க நிலை விலகி படிப்பில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வருகின்ற நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்:  16, 22.