Advertisment

இந்த வார ராசிபலன்  14-9-2025 முதல் 20-9-2025 வரை

thisweekrasi
முனைவர் முருகுபாலமுருகன்
தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திரம்- 1.
சந்திரன்: ரோகிணி- 4.
செவ்வாய்: சித்திரை- 3. 
புதன்: உத்திரம்- 1. 
குரு: புனர்பூசம்- 2. 
சுக்கிரன்: ஆயில்யம்- 4. 
சனி: உத்திரட்டாதி- 1 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 
கிரக மாற்றம்: 
14-9-2025 சிம்ம சுக்கிரன் இரவு 12.17 மணிக்கு
15-9-2025 கன்னி புதன் பகல் 11.07 மணிக்கு
17-9-2025 கன்னி சூரியன் அதிகாலை 1.47 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம்
14-9-2025 இரவு 8.03 மணிக்கு மிதுனம்.
16-9-2025 இரவு 12.28 மணிக்கு கடகம்.
19-9-2025 காலை 7.06 மணிக்கு சிம்மம். 
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவது, உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தற்போது 5-ல் இருக்கக்கூடிய சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் திங்கட்கிழமைமுதல் 5-ல் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16.
ரிஷபம்  
Advertisment
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். ராசியாதிபதி சுக்கிரன் திங்கட்கிழமை முதல் 4-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதற்கான நேரமாகும். மேல் அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி சுமூக நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 17, 18.

thisweekrasi1

மிதுனம் 
Advertisment
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாத
முனைவர் முருகுபாலமுருகன்
தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: உத்திரம்- 1.
சந்திரன்: ரோகிணி- 4.
செவ்வாய்: சித்திரை- 3. 
புதன்: உத்திரம்- 1. 
குரு: புனர்பூசம்- 2. 
சுக்கிரன்: ஆயில்யம்- 4. 
சனி: உத்திரட்டாதி- 1 (வ).
ராகு: பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 
கிரக மாற்றம்: 
14-9-2025 சிம்ம சுக்கிரன் இரவு 12.17 மணிக்கு
15-9-2025 கன்னி புதன் பகல் 11.07 மணிக்கு
17-9-2025 கன்னி சூரியன் அதிகாலை 1.47 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: ரிஷபம்
14-9-2025 இரவு 8.03 மணிக்கு மிதுனம்.
16-9-2025 இரவு 12.28 மணிக்கு கடகம்.
19-9-2025 காலை 7.06 மணிக்கு சிம்மம். 
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனத்தோடு செயல்படுவது, உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தற்போது 5-ல் இருக்கக்கூடிய சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் திங்கட்கிழமைமுதல் 5-ல் சுக்கிரன் சஞ்சரிக்க இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16.
ரிஷபம்  
Advertisment
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். ராசியாதிபதி சுக்கிரன் திங்கட்கிழமை முதல் 4-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக விலகி மனநிம்மதி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதற்கான நேரமாகும். மேல் அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி சுமூக நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரம் ஆகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 17, 18.

thisweekrasi1

மிதுனம் 
Advertisment
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் வரும் திங்கட்கிழமை முதல் 4-ல் சஞ்சரிப்பதாலும், வார முற்பாதியில் சூரியன் 3-ல் இருப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்கவேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முடிந்தவரை வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது மிகவும் சிறப்பு. ஒருசிலருக்கு வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 19, 20.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் ராகு, 12-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. அலைச்சல் காரண மாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வருகின்ற புதன்கிழமைமுதல் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வார பிற்பாதியில் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான சூழ்நிலை நிலவும். ஒருசிலருக்கு உடனிருப்பவரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகுகால நேரத்தில் தீபம் ஏற்றுவதன்மூலம் அனுகூலங்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 17, 18.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த உடல்ரீதியான பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். ஜென்ம ராசி மற்றும் 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை தற்போது பெறமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் கிடைத்து மன நிம்மதி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 19, 20.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 10-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி தற்போது வக்ரகதியில் இருப்பதாலும் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதனை உங்களின் தனித்திறமையால் சமாளிக்ககூடிய பலம் உண்டாகும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். வயது மூத்தவர்களிடம் வீண் பேச்சை குறைப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரரீதியாக தற்போது கிடைப்பதை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உடன் வேலை செய்யக்கூடிய நபர்களால் சில இடையூறுகள் இருக்கும் என்றாலும் அதிகாரியின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட எளிதில் செய்து முடிக்க முடியும். மாணவ- மாணவியர்கள் வீண் நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 18.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், வார முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் எல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையை எட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல் பட்டால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த பணியையும் சிறப்பாக செய்து முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் வாரத்தில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் திங்கட்கிழமை முதல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கக்கூடிய நேரமென்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டால் நிலைமையை சமாளித்து ஒரு வளமான பலன்களைப் பெறலாம். தற்போதைக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. சில நேரங்களில் சில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்க முடியும். பணியில் இருப்பவர்களுக்கு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன்காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாத ஒரு சூழ்நிலையும் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 19, 20.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும், திங்கட்கிழமைமுதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக இருந்து மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. அரசாங்க வகையில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் தேடிவரும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு கடந்தகாலங்களில் இருந்துவந்த தேவையற்ற இடையூறுகள் விலகி படிப்பில் சிறப்பாக விளங்கி நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் நற்பலன்களை அடைவதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 6-ல் குரு சஞ்சரிப்பதாலும், வார முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் திங்கட்கிழமைமுதல் சுக்கிரன் 8-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. வரும் புதன்கிழமை முதல் சூரியன் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வார பிற்பாதியில் உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் சற்றுக் குறைந்து ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. முடிந்தவரை முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் மன நிம்மதியற்ற நிலை உண்டாகும். பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. வரும் நாட்களில் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 18.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய நேரம் ஆகும். ஒருசில நேரங்களில் உங்களது கோபத்தை குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய நேரம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் போட்ட முதலை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது, கூட்டாளிகளை கலந்தாலோசித்து சில செயல்களில் செயல்படுவதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகரீதியாக உங்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். பணி நிமித்தமாக தேவையற்ற பயணங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் முடிந்தவரை பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதும் சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதும் நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், தற்போது 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் புதன்கிழமைமுதல் 7-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே மனஸ்தாபம் ஏற்படக்கூடிய நேரமாகும். உறவினர்கள் மூலமாக தேவையில்லாத நெருக் கடிகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைபடக்கூடிய நேரமாகும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டிய காலமாகும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு தற்போது வேலைப்பளு அதிகரிக்கக்கூடிய நேரம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஒருசிலருக்கு உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். மாணவ- மாணவியர்கள் வீண் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கை யோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி களைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 14, 19, 20.
bala130925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe