கிரக பாத சாரம்:
சூரியன்: கேட்டை- 4.
சந்திரன்: அஸ்தம்- 4.
செவ்வாய்: மூலம்- 2. 
புதன்: அனுஷம்- 2. 
குரு: புனர்பூசம்- 3 (வ). 
சுக்கிரன்: கேட்டை- 2. 
சனி: பூரட்டாதி- 4. 
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2. 
கிரக மாற்றம்: 
16-12-2025 தனுசு சூரியன்
அதிகாலை 4.20 மணிக்கு.
20-12-2025 தனுசு
சுக்கிரன் காலை 7.45 மணிக்கு.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கன்னி
14-12-2025 இரவு 9.41 மணிக்கு, துலாம்.
17-12-2025 பகல் 10.26 மணிக்கு, விருச்சிகம்.
19-12-2025 இரவு 10.51 மணிக்கு, தனுசு.

மேஷம்   

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத தனசேர்க்கை ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தற்போது 8-ல் சஞ்சரிக்க கூடிய சூரியன்- செவ்வாய்க்கிழமைமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் சற்றுக் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் படிப்படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுக்கு இருந்த வேலைப்பளு சற்று குறைவதால் பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறந்த ஞாபகசக்தியுடன் செயல்பட்டு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

ரிஷபம்  

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

Advertisment
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப் பெற்று 7-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு சனிபகவான் லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனசேர்க்கையைப் பெற்று சகல சௌபாக்கியங் களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் செவ்வாய்க்கிழமைமுதல் 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதன் மூலமாக நற்பலன் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 18, 19.

மிதுனம் 

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

Advertisment
உங்கள் ராசிக்கு 6-ல் சுக்கிரன், புதன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். சில விஷயங்களில் வேலையாட்களின் உதவியை எதிர்பார்க்காமல் நீங்கள் நேரடியாக இருந்து செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறரை நம்பி பண உதவி செய்வதைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்து சிறப்புடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கக் கூடிய பலம் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களில் நேரத்தை செலபடுவதை விட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். இந்த வாரத்தில் அனுகூல பலன்களை அடைவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, காலபைரவர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலங்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20.

கடகம்  

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும், ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பெயர், புகழ் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பாராத லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வளர்ச்சிக் காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அரசாங்க உதவிகள் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு பணியில் உயர்வும், கடந்தகால நெருக்கடிகள் குறையக்கூடிய ஒரு சூழலும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் எதிலும் முனைப்புடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் சரபேஸ்வர வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 20. 

சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய அதிர்ஷ்டமானது இருக்கிறது. உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குருபகவான் வக்ரகதியில் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். ஒருசில விஷயங்களில் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும் என்பதால் பொறுப்புடன் செயல்பட்டால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் ஏற்றங்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேய வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16.

கன்னி 

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், செவ்வாய்க் கிழமைமுதல் 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்ப தால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்தோடு இருக்க வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்கள் ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சற்று பாதிக்கும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 14, 17, 18, 19.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் புதன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நினைத்த தெல்லாம் நடக்கும். உங்களது கனவுகள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கொடுத்த வாக்குறுதியை எளிதில் காப்பாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணியைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கடினமான பாடங்களைகூட எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சிறந்து விளங்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக் கிழமைகளில் அர்ச்சனை செய்வதன்மூலம் நல்லது நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 20.

விருச்சிகம் 

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் சாதகமாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், செவ்வாய்க்கிழமைமுதல் 2-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வண்டி, வாகனங்கள்மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும், வேலைக்குச் செல்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் எதிர்கொண்டு ஏற்றம்மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள், மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடியவர்களின் பேச்சை கேட்காமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைவதற்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 17, 18, 19.

தனுசு 

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதாலும், ராசியாதிபதி குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்தோடு இருக்கவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருக்கவேண்டும். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களை அனுசரித்துச் சென்றால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். ஒருசிலருக்கு வெளியூர் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை அடைய மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 20.

மகரம் 

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனிபகவான் 3-ல் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் ஏற்றம்மிகுந்த பலன்களை அடைய முடியும். உங்களுக்கு இருந்துவந்த கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். குரு தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைக்கூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடையக்கூடிய நேரமாகும். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகமும் அதன்மூலம் அதிர்ஷ்டங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தற்போது படிப்பில் கவனமாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். இந்த வாரத்தில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17, 18, 19.

கும்பம்  

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், புதன், 11-ல் செவ்வாய், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகள் தற்போது குறையும். உங்கள் ராசியில் ராகு, 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பது சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள்: 17, 18, 19, 20.

மீனம் 

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். வரும் செவ்வாய்க்கிழமைமுதல் சூரியன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தேவையில்லாத பயணங்களைத் தள்ளிவைப்பது சிறப்பு. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக்கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். நீண்டநாட்களாக புதிய வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கக்கூடிய நபர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரும். மாணவ- மாணவியர்கள் உடனிருக் கக்கூடிய மாணவ- மாணவிகளிடம் பேச்சில் கவனத் தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் ஏற்றத்தை அடைய உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 20.