இந்த வார ராசிபலன் 13-7-2025 முதல் 19-7-2025 வரை

thisweekrasi
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: புனர்பூசம்- 3.
சந்திரன்: திருவோணம்- 4.
செவ்வாய்: பூரம்- 3. 
புதன்: ஆயில்யம்- 2. 
குரு: திருவாதிரை- 2. 
சுக்கிரன்: ரோகிணி- 2. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்: 
13-7-2025 சனி வக்ர ஆரம்பம் காலை 9.28 மணிக்கு
16-7-2025 கடக சூரியன்  மாலை 5.32 மணிக்கு
16-7-2025 புதன் வக்ர ஆரம்பம் பகல் 10.14 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மகரம்
13-7-2025 மாலை 6.53 மணிக்கு கும்பம்.
15-7-2025 இரவு 11.58 மணிக்கு மீனம்.
18-7-2025 அதிகாலை 3.39 மணிக்கு மேஷம்.
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வார முற்பாதியில் சூரியன் 3-ல் இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். செவ்வாய், கேது 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எளிதில் எதிர்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து வளமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஒருசில அனுகூலங்கள் கிட்டும். மாணவ- மாணவியர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். பிறரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 18, 19. 
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து எதிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமைமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை அடையக்கூடிய நேரமாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். செவ்வாய், கேது 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17.
மிதுனம் 
(மிருகசீரி
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: புனர்பூசம்- 3.
சந்திரன்: திருவோணம்- 4.
செவ்வாய்: பூரம்- 3. 
புதன்: ஆயில்யம்- 2. 
குரு: திருவாதிரை- 2. 
சுக்கிரன்: ரோகிணி- 2. 
சனி: உத்திரட்டாதி- 2. 
ராகு: பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்: 
13-7-2025 சனி வக்ர ஆரம்பம் காலை 9.28 மணிக்கு
16-7-2025 கடக சூரியன்  மாலை 5.32 மணிக்கு
16-7-2025 புதன் வக்ர ஆரம்பம் பகல் 10.14 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மகரம்
13-7-2025 மாலை 6.53 மணிக்கு கும்பம்.
15-7-2025 இரவு 11.58 மணிக்கு மீனம்.
18-7-2025 அதிகாலை 3.39 மணிக்கு மேஷம்.
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வார முற்பாதியில் சூரியன் 3-ல் இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். செவ்வாய், கேது 5-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளை எளிதில் எதிர்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால சோதனைகள் எல்லாம் மறைந்து வளமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் ஒருசில அனுகூலங்கள் கிட்டும். மாணவ- மாணவியர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். பிறரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 18, 19. 
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து எதிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமைமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை அடையக்கூடிய நேரமாகும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். செவ்வாய், கேது 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர்- ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையும். வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடைவீர்கள். சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உத்தியோகரீதியாக எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிகாரியிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். பணிநிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக படிப்பது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். 
ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய்- கேது, 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு இருக்கவேண்டும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 9-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி,  இனி வக்ரகதியில் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையினை அடையமுடியும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய காலமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவதன்மூலமாக வளமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 18, 19.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கக் கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒருசில நேரங்களில் கோபத்தை குறைத்துக்கொண்டு சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு வரும் நாட்களில் இருக்கிறது. உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுடைய வேலைப்பளு சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியரிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நன்று.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த அரசாங்க உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மனமகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியி-ருந்து வந்த மனக்கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த வீண் பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி மனநிம்மதி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கடந்த கால கடன்களை குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங் கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது மிக மிக நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை யம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18, 19.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 9-ல் புதன், 10-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பெண்கள் வழியில் ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருநல்ல நிலையை அடையமுடியும். தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சூரியன் வரும் வியாழக்கிழமைமுதல் 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வாரம் முற்பாதியை விட பிற்பாதியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பேச்சை குறைப்பது மிகவும் நல்லது. ஒருசிலருக்கு உடன் வேலை செய்யக்கூடிய வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, அம்மன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 18, 19.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களின் சகலவிதமான தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி இனி வக்ரகதியில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 7, 8-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய நேரமென்றாலும் முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடன்பிறந்த வர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சூழ்நிலையை புரிந்துகொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு எதிலும் பொறுப்போடு செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களைப்பெற முடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படவேண்டும். குரு 6-ல் சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்துகொண்டு கவனமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கலாம். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக மன நிம்மதிக்குறைவு ஏற்படும். நீங்கள் பொறுமையோடு செயல்பட்டாலும் உங்கள்மீது வீண்பழிச்சொற்கள் வரக்கூடிய நேரமென்பதால் நீங்கள் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. முருக வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 16, 17.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதும் வரும் வியாழக்கிழமைமுதல் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நெருங்கியவர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்களைப் பெறுவீர்கள். சனி உங்கள் ராசிக்கு 2-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றமுடியும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சற்று விட்டுகொடுத்து செல்வது நல்லது. பேச்சில் பொறுமையோடு இருந்தால் ஒரு வளமான பலன்களைப் பெறலாம். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள்கூட தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற நரசிம்மர் வழிபாடு மேற் கொள்வது, முருகனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 18, 19.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 4, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். உடல்ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் மட்டும் தற்போது கவனத்தோடு இருக்கவேண்டும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாம-ருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது உத்தமம். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 16, 17.
bala180725
இதையும் படியுங்கள்
Subscribe