Advertisment

இந்த வார ராசி பலன்  12-10-2025 முதல் 18-10-2025 வரை

thisweekrasi
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, 
தபால் பெட்டி எண்: 2255, வடபழனி, சென்னை- 600 026. 
தொலைபேசி: 044 2488 1038
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சித்திரை- 1.
சந்திரன்: மிருகசீரிடம்- 3.
செவ்வாய்: சுவாதி- 4. 
புதன்: சுவாதி- 3. 
குரு: புனர்பூசம்- 3. 
சுக்கிரன்: உத்திரம்- 3. 
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்: 
17-10-2025 துலா சூரியன் பகல் 1.46 மணிக்கு.
18-10-2025 கடக குரு இரவு 7.47 மணிக்கு.
 

thisweekrasi2

சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மிதுனம்
14-10-2025 அதிகாலை 5.59 மணிக்கு கடகம்
16-10-2025 பகல் 12.42 மணிக்கு சிம்மம்
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்: இல்லை
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
Advertisment
ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பிறர்க்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட வீண் செலவுகள் தற்போது குறைந்து சேமிக்கக்கூடிய 
அளவிற்கு ஒருசில சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லஷ்மி நரசி
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, 
தபால் பெட்டி எண்: 2255, வடபழனி, சென்னை- 600 026. 
தொலைபேசி: 044 2488 1038
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: சித்திரை- 1.
சந்திரன்: மிருகசீரிடம்- 3.
செவ்வாய்: சுவாதி- 4. 
புதன்: சுவாதி- 3. 
குரு: புனர்பூசம்- 3. 
சுக்கிரன்: உத்திரம்- 3. 
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.
கிரக மாற்றம்: 
17-10-2025 துலா சூரியன் பகல் 1.46 மணிக்கு.
18-10-2025 கடக குரு இரவு 7.47 மணிக்கு.
 

thisweekrasi2

சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மிதுனம்
14-10-2025 அதிகாலை 5.59 மணிக்கு கடகம்
16-10-2025 பகல் 12.42 மணிக்கு சிம்மம்
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்: இல்லை
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்களது முன்கோபத்தை குறைத்துக்கொண்டால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. குறிப்பாக கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களில் நேரத்தை செலவிடுவதைவிட பயனுள்ள காரியங்களுக்கு நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
Advertisment
ராசியாதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு 2-ல் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பிறர்க்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட வீண் செலவுகள் தற்போது குறைந்து சேமிக்கக்கூடிய 
அளவிற்கு ஒருசில சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லஷ்மி நரசிம்மரை தரிசிப்பதுமூலம் அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு அதிர்ஷ்டமானது இருக்கிறது. நெருங்கியவர்களின் உதவியானது மிகச் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் தற்போது சற்று குறைந்து ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிட வேண்டிய காலமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக அனுகூல மான பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 16, 17, 18.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் ராகு, 12-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்கள்மூலமாக வீண் விரயங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலமாக இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பைகூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

thisweekrasi1

சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எந்த ஒரு விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய காலமாகும். குருபகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணி சுமை இருந்தாலும் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல ஞாபக சக்தியுடன் செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 17, 18.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய், 7-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருக்கவேண்டும். பண வரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற சுணக்கங்கள் ஏற்படும். உத்தியோகரீதியாக உங்கள் பணியில் நீங்கள் செய்வது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்களுடைய பணியும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் புதன், பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கடினமான பணியைக்கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் ராகு இருப்பதாலும் சனி வக்ரகதியில் இருப்பதாலும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்ககூடிய பலம் உண்டாகும். சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு ற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதன்மூலம் ஏற்றங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17, 18.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் உங்கள் உழைப்பால் உயர்வுகளை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிலருக்கு உடனிருப்பவர்கள் செய்யக்கூடிய சில செயல்கள் காரணமாக கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்கள் மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவதன்மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் புதன், செவ்வாய் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களை எளிதில் திருப்திபடுத்த முடியும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். கடந்தகாலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது குறைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு அதிகப்படியான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் மேலும் அனுகூலமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், 10-ல் புதன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். வேலையாட்கள் உதவியானது தக்க நேரத்தில் கிடைப்பதால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்களால் சிறு சிறு நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளித்து எடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்களுக்கு கவனக்குறைவு ஏற்படலாம் என்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களை அடைவதற்கு துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வதன்மூலமாக நற்பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியை குருபகவான் பார்ப்பதும் பாக்கிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி மனதில் மகிழ்ச்சி ஏற்படும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் சின்ன சின்ன மறைமுக எதிர்ப்புகள் உங்கள் மன அமைதியை குறைக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். சில நேரங்களில் கூட்டாளிகளை ஆலோசித்து செயல்படுவதன்மூலமாக சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு ஒரு கௌரவமான நிலையை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நிகழ்வுகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16, 17, 18.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். குருபகவான் 4-ல் இருப்பதால் சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படவேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். சில நேரங்களில் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்காமல் நீங்கள் நேரடியாக சில காரியங்களில் ஈடுபட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஒருசிலருக்கு தொழில்ரீதியாக சில சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடிய ஒரு நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிக மிக நல்லது. வேலைக்கு செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். ஒரு சிலருக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு இருக்கவேண்டும். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 16, 17, 18.
bala111025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe