முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, 
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532. 
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:
சூரியன்: ஆயில்யம்- 3.
சந்திரன்: அவிட்டம்- 3.
செவ்வாய்: உத்திரம்- 4. 
புதன்: பூசம்- 3 (வ).  
குரு: திருவாதிரை- 4. 
சுக்கிரன்: திருவாதிரை- 4. 
சனி: உத்திரட்டாதி- 2 (வ).
ராகு : பூரட்டாதி- 2.
கேது: பூரம்- 4. 

கிரக மாற்றம்: 
11-8-2025 புதன் வக்ர முடிவு பகல் 12.59 மணிக்கு
16-8-2025 சிம்ம சூரியன் இரவு 11.52 மணிக்கு சந்திரன் மாறுதல் ஆரம்பம்: கும்பம் 
12-8-2025 காலை 6.10 மணிக்கு மீனம் 
14-8-2025 காலை 9.06 மணிக்கு மேஷம்
16-8-2025 பகல் 11.43 மணிக்கு ரிஷபம்

Advertisment


மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடியப் பலம் உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக பிரச்சினைகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடுவது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 14, 15.

Advertisment

ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் என வர்ணிக்கக்கூடிய 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் அதிகரிக்கும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப் பாக இருப்பதால் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவிகள் உங்க ளுக்கு கிடைக்கும். உங்க ளுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். உத்தியோக ரீதியாக நீங்கள் சிறப் பாக செயல்படுவது மட்டு மில்லாமல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக் கூட நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதன்மூலமாக அனுகூலங்கள் நடக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

thisweekrasi1

மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களால் வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தற்போது சற்று பொறுமையோடு இருப்பது, கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வது மிகவும் நல்லது. வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்களுடைய வேலையை செய்வது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் கவன சிதறல் காரணமாக படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க இடையூறுகள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.

கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை யோடு செயல்படுவது நல்லது. சனிபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதாலும், 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். நேரத்திற்கு சாப்பிடு வது நல்லது. ஒருசிலருக்கு தேவை யில்லாத பயணங்களால் வீண்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட வீண் மனஸ்தாபம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருப்பது மட்டுமில்லாமல் அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். ஒருசிலருக்கு நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்புக்காக நேரத்தை செலவிடவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரரை தரிசிப்பதன்மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு உண்டு. கணவன்- மனைவியிடையே கடந்தகால கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். சனி வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இடத்தை அடைவீர்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11.

கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- சூரியன் சேர்க்கைபெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், 6-ல் ராகு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பொருளாதாரரீதியாக அனுகூலமான நிலை ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது முடிவுக்கு வந்து மனஅமைதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூலமான நிலை உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகமானது இருக்கிறது. திருமணமான புதுமணத் தம்பதிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இனிய செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகக்கூடிய நேரமாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங் களில் உங்களுக்கு இருந்துவந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி நல்ல யெபர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலை புரிந்து நடந்துகொண்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு வரும் நாட்களில் உல்லாச பயணங்கள் செல்லக்கூடிய யோகமானது இருக்கிறது. வரும் நாட்களில் அனுகூலங்களை பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14, 15.

விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். குரு, சுக்கிரன் 8-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நெருங்கியவர்களால் சில நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வண்டி, வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்ப வர்கள் உங்கள் மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக நண்பர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச்செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 14, 15, 16.

தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் சுக்கிரன் சேர்க்கைப் பெற்று உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் இருப்பது உங்களுக்கு பல்வேறு வளமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு உன்னதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சனிபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சுரிப்பதால் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து மனநிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எளிதில் சில காரியங்களை முடித்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாகச் செயல்படுவது மட்டுமில்லாமல் அதிகாரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 16.

மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் குரு, சுக்கிரன், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டும். 3-ல் சஞ்சரித்த சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக கிடைக்க வேண்டிய லாபங்கள் தடைப்படும். ஒருசில முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடிகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையில்லாத ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல்ரீதியாக சிறு பாதிப்புகள் இருக்கின்றபொழுதே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என நினைத்தாலும் தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13.

கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் மாதக் கோளான சூரியன் சஞ்சரிப்பதும், 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக்கொண்டு பொறுமையோடு செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். கடந்தகாலங்களில் உங்களுக்கிருந்து வந்த தேவையில்லாத நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். தேவையில்லாத பயணங்களைத் தள்ளிவைக்க வேண்டிய நேரமாகும். உறவினர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 14, 15.

மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் குரு, சுக்கிரன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செய-லும் சிந்தித்துச் செயல்படவேண்டிய நேரமாகும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் கடைப் பிடித்தால் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். நெருங்கியவரிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்குமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்தோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் தற்சமயத்திற்கு கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பைகூட உதாசீனப்படுத்தாமல் சரியானமுறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உடன்பிறந்த வரிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு மட்டுமில்லாமல் உடல்ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும். அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் நன்கு செயல்படவேண்டும் என்று நினைத்தாலும் ஞாபகம் மறதி ஏற்படக்கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 16.