முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: விசாகம்- 1.
சந்திரன்: திருவாதிரை- 2.
செவ்வாய்: அனுஷம்- 2. 
புதன்: அனுஷம்- 3. 
குரு: புனர்பூசம்- 4. 
சுக்கிரன்: சுவாதி- 1. 
சனி: பூரட்டாதி- 4 (வ).
ராகு: பூரட்டாதி- 1.
கேது: பூரம்- 3.

thisweekrasi1

கிரக மாற்றம்: 
9-11-2025 புதன் வக்ரம் ஆரம்பம் இரவு 12.31 மணிக்கு
11-11-2025 குரு வக்ரம் ஆரம்பம் இரவு 10.02 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மிதுனம்
10-11-2025 பகல் 1.03 மணிக்கு கடகம்.
12-11-2025 மாலை 6.35 மணிக்கு சிம்மம்.
15-11-2025 அதிகாலை 3.51 மணிக்கு கன்னி.
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதும் மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தள்ளி வைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாகவும் ஒரு சில ஆதாயத்தை அடையமுடியும். சனி வக்ரகதியில் இருப்பதால் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகாரியிடம் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செல்வதுவிட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடையமுடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 15.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 7-ல் புதன் சஞ்சரிப்பதும் ஏற்றமிகுந்த பலன்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்போடு செயல்படமுடியும். கூட்டாளிகள் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபகவான் 3-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சின்னசின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சுலபமாக கையாண்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக் கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது சிறப்பான ஞாபக சக்தியுடன் செயல்பட்டு அதிக மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடைய முடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப் பது சிறப்பான அமைப்பாகும். தன ஸ்தானமான 2-ல் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து அதனால் உங்களு டைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். பெண்கள்மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியை அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை எளிதில் பூர்த்திச் செய்ய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்தகாலங்களில் இருந்துவந்த நெருக்கடியான நிலை தற்போது விலகி பணியில் தற்போது நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துவகையில் ஆதாயங்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 13, 14.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவு ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய், 8-ல் ராகுசஞ்சரிப்பதால் வேலைப்பளு இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையோடு இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்து கொண்டால் அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங் களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 15.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும், 4-ல் புதன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குருபகவான் தற்போது 12-ல் சஞ்சரிப்ப தால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7-ல் ராகு சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் சிறப்பு. சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் சற்றுக் குறையும். வேலைக் குச் செல்பவர்களுக்கு மற்றவருடைய பணியும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் தீபமேற்றுவதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 13, 14.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குருபகவான் அதிசாரமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் கடந்தகால மனக்கசப்புகள் எல்லாம் தற்போது மறைந்து மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சாதகமாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங் களை பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவ- மாணவியர்கள் எதிலும் முதன்மையாக செயல்படக் கூடிய அமைப்பும், போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய யோகமும் வரும் நாட்களில் இருக்கிறது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12, 15.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத் துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்துகொள்ளக்கூடிய நேரமென்பதால் பொதுவாக பேச்சில் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் ராகுவும், 10-ல் குருவும் சஞ்சரிப்பதால் அலைச்சல், பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை ஏற்படக்கூடிய நேரமென்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும் படி இருக்காது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக மனநிம்மதிக் குறைவு ஏற்படலாம். பொதுவாக சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தேவையற்ற தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண்பழிச்சொற்கள் வரக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமாகும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக வீண் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்றுக் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொண்டால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் மேலதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகக்கூடிய நேரமாகும். வீண்வாக்குவாதத்தைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையற்ற தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் நற்பலன்களை அடைவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்தாலும், சனி வக்ரகதியில் இருப்பதாலும் உங்கள் செயல்களுக்கு நல்ல ஒரு ஆதரவு இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் கடந்தகால கடன் பிரச்சனைகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபங்கள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகுவதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பெண்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களை வரும் நாட்களில் அடையக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் பேச்சில் பொறுமையோடு இருந்து படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பெயர் எடுக்க முடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றுவதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 15.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதாலும், சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. உடனிருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் தற்போதைக்கு பொறுமை தேவை. தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களால் முடிக்கமுடியாத காரியத்தைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு படிப்பில் சிறப்பான மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உங்களது முன்கோபத்தை சற்றுக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது, தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-க மாக தள்ளிவைப்பது உத்தமம், வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு தேவையில்லாத நெருக் கடிகள் காரணமாக மன நிம்மதியானது குறையும். அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்வது மிகவும் சிறப்பு. மாணவ- மாணவியர்கள் உடனிருப்பவர்களிடம் பேசுகின்றபோது சற்று கவனத்தோடு இருந்தால்தான் நிலைமையை சமாளித்து நல்ல மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைவதற்கு அம்மன் வழிபாடு மேற்கொள்வது, கால பைரவரை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13, 14.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சனி, 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக் கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது. குருபகவான் வரும் நாட்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானதோடு இருப்பது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட தடைப்படும். தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்கு களை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருப்பதால் மனநிம்மதியானது குறையும். அதிகாரியிடம் பேசுகின்றபோது வீண் வாக்குவாதத்தைத் தவிர்த்து விட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் சக நண்பர்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்றுக் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களை அடைவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.