முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: திருவோணம்- 3.
சந்திரன்: பூசம்- 1.
செவ்வாய்: திருவோணம்- 1. 
புதன் : அவிட்டம்- 1. 
குரு: புனர்பூசம்- 1 (வ). 
சுக்கிரன்: அவிட்டம்-1. 
சனி: உத்திரட்டாதி- 1. 
ராகு: சதயம்- 3.
கேது: பூரம்- 1.    

rasi

கிரக மாற்றம்: 
3-2-2026 கும்ப புதன் இரவு 9.52 மணிக்கு
6-2-2026 கும்ப சுக்கிரன் அதிகாலை 1.11 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: கடகம்
2-2-2026 இரவு 10.47 மணிக்கு, சிம்மம்
5-2-2026 அதிகாலை 4.20 மணிக்கு, கன்னி
7-2-2026 பகல் 1.22 மணிக்கு, துலாம்
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதாலும், புதன்கிழமைமுதல் லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிக்க இருப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தி-ருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய நேரம் ஆகும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய நேரமாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நேரமாகும். ஒரு சிலருக்கு சக ஊழியரினால் இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 1, 2.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகி மனக்கவலையை உண்டாக்கும். உடனிருப்பவர்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைக்க வேண்டும். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள் வீண் பழிகளை சொல்லக்கூடிய நேரம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக்கூடிய நேரமென்பதால் படிப்பு விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரம் ஆகும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் உடன் இருப்பவர்கள் அதனை தவறாக புரிந்துகொள்ளக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். சனி பகவான் 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு வக்ரகதியில் இருப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணத்தை எளிதில் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அதனை எளிதில் செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு தீபம் ஏற்றுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 5, 6.
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், வரும் புதன்கிழமைமுதல் 7-ல் புதன் சஞ்சரிக்க இருப்பதும் மிகவும் உன்னதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டமுடியும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வரும் நாட்களில் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது சற்று குறைந்து நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடைவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சாதிக்கக்கூடிய நேரமாகும். உடன்பிறந்த வர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை வரும் நாட்களில் பெறுவீர்கள். காலபைரவரை வழிபாடு செய்வது, வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் நடக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 7.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 10-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்புக்கான ஆதாயத்தை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பூர்வீக சொத்துவகையில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வதும், லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வதும் அனுகூலமான பலன்களை உண்டாக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 5, 6. 
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வண்டி வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். உங்கள் ராசிக்கு 4, 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், 6-ல் சனி சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் சற்று குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான காரியத்தைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்களால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை நீங்கள் பெறுவதற்கு சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு மேற் கொள்வதன்மூலம் ஏற்றங்கள் ஏற்படும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய்- சூரியன் சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், வரும் புதன்கிழமைமுதல் 4-ல் புதன் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்ககூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாத ஒரு காரியத்தை வரும் நாட்களில் முடிக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களை வரும் நாட்களில் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். உடல் ஆரோக்கியரீதியாக இந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் சூழ்நிலையை எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சாதிக்கக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களை நீங்கள் பெறுவதற்கு தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, ராகுகால நேரத்தில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 3, 4, 5, 6.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்க வேண்டும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் உண்டாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரவுகள் உங்களுக்கு கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல லாபங்கள்கூட தடைப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. உத்தியோகரீதியாக பார்க்கின்ற பொழுது மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். குறிப்பாக எடுக்கின்ற பணிகளை ஒரு குறித்த நேரத்தில் முடிப்பதில் தேவையற்ற தடங்கல்கள் உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் படிப்பு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 5, 6, 7.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி 3-ல் வலுவாக இருப்பதும், குருபகவான் வக்ரகதியில் இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசி மற்றும் 2-ஆம் வீடுகளில் சுக்கிரன், புதன் இந்த வாரத்தில் சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு என்றாலும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணி தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு காரியத்தைகூட நீங்கள் கையாண்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வதும் அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 7.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருக்க வேண்டும். கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதும், உற்றார்- உறவினர்களிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பதும் தற்போதைக்கு நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்சமயத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒருசில முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளி வைப்பது உத்தமம். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3, 4.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது மிகவும் உன்னதமான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை வரும் நாட்களில் அடைவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிறப்பான லாபத்தை வரும் நாட்களில் பெறமுடியும். உங்களுக்கு தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைவதால் மனநிம்மதியுடன் எதிலும் செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உடன்பிறந்தவரிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நீண்டநாட்களாக தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைக்கூட எளிதில் புரிந்துகொண்டு தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்களை பெறுவதற்கு துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: . 3, 4, 5, 6.