முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026.
தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 
Advertisment
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மூலம்- 2.
சந்திரன்: பூராடம்- 1.
செவ்வாய்: மூலம்- 4. 
புதன்: கேட்டை- 1. 
குரு: புனர்பூசம்- 3 (வ). 
சுக்கிரன்: மூலம்- 1. 
சனி: பூரட்டாதி- 4. 
ராகு: சதயம்- 4.
கேது: பூரம்- 2. 
கிரக மாற்றம்:
இல்லை
 

thisweekrasi1

சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: தனுசு
22-12-2025 பகல் 10.07 மணிக்கு,  மகரம்.
24-12-2025 மாலை 7.46 மணிக்கு, கும்பம்.
27-12-2025 அதிகாலை 3.10 மணிக்கு, மீனம்
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்: இல்லை
மேஷம்   
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய்- சுக்கிரன், சூரியன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் மறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நேரம் ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றத்தை பெறமுடியும். கடந்தகால சட்ட சிக்கல்கள் எல்லாம் விலகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கக்கூடிய நேரமாகும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட எளிதில் முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். பெண்கள் மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலமாக நல்லது நடக்கும்.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25, 26.
ரிஷபம்  
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் மற்றும் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடைய முடியும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். ஒருசிலருக்கு வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உதவியானது தக்க நேரத்தில் கிடைப்பதால் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலமானது உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். வரும் நாட்களில் அனுகூலங்களை பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
Advertisment
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.
மிதுனம் 
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக் கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் குரு, 10-ல் சனி சஞ்சரிப் பதால் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் மட்டுமே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் மேலதிகாரி யிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்களுக்கு தற்போது ஞாபக மறதிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். பெண்கள் மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வரும் நாட்களில் அனுகூலமான பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 27.
கடகம்  
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய், பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவுகள் மிக மிக தாராளமாக இருந்து உங்களது தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய ஒரு பலம் உண்டாகும். உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் குறையும். மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய நேரமாகும். ராகுகால நேரத்தில் அம்மன் வழிபாடு மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் வளமான பலன்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23. 
சிம்மம் 
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்பானது உண்டு. உங்கள் ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு. தேவையில்லாத தூர பயணங்களைத் தள்ளி வைக்க வேண்டிய நேரமாகும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருக்கவேண்டும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்கா-கமாக தள்ளிவைக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. கூட்டாளிகளிடம் பேசுகின்ற பொழுது சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக மன நிம்மதி குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. ஒருசிலருக்கு உங்களது முன்கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தடைப்படும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத்துவிட்டு கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 25, 26.
கன்னி 
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10-ல் உள்ள குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனச்சேர்க்கையை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகள் இருந்தாலும் எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சுக்கிரன் 4-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு உடனிருப்பவர்களால் சிறு சிறு நெருக்கடிகள் இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் வீண் பேச்சை குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் சிறப்பான மதிப்பெண்களை எடுக்கமுடியும். வரும் நாட்களில் அனுகூல பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது விலகும். எதிலும் சாமர்த்தியமாக பேசி அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலன்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கடினமான விஷயத்தைக் கூட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 27.
விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது மிகவும் நல்லது.  தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்து நடந்துகொண்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு காரியத்தை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக முடித்து அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் முன்பைவிட தற்போது எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு படிப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறமுடியும். வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.
தனுசு 
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைப்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராசியாதிபதி குரு வக்ரகதியில் இருப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும். எதிர்பார்க்கின்ற உதவிகள் கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக தொழி-ல் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிகமிக நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவருடைய வேலையும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நேரமாகும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். முக்கிய விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஞாபக மறதி காரணமாக நல்ல மதிப்பெண்கள் எடுக்க இடையூறுகள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 25, 26.
மகரம் 
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு ஆகும். உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக் கூடிய பலம் உண்டாகும். சூரியன், செவ்வாய் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. குறிப்பாக வயது மூத்தவர்களிடம் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் அவர்களிடம் பேசும்பொழுது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நேரமாகும். நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதன்மூலமாக வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 27.
கும்பம்  
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த ஒரு காரியம் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினிடமிருந்து வந்த மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது குறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான பணிகளை கூட சுலபமாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். பயணங்கள் மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களில் கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் அனுகூலப் பலன்கள் அடைய அம்மன் வழிபாடு மேற்கொள்வது, சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறப்பு.
வெற்றி தரும் நாட்கள்: 21, 25, 26.
மீனம் 
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். நண்பர்கள் மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய மனஸ்தாபங்கள் எல்லாம் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு இருந்த போட்டி, பொறாமைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளித்து ஒரு வளமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது உங்களுக்கு குறைந்து நிம்மதியான நிலை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சிறப்பான மதிப்பெண்களை எடுக்கமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24, 27.