தான் அறிந்த ஞானத்தை ஊருக்கு உரைக்கும்விதமாக ஊர் ஊராகச் சென்ற புத்தர், வழக்கம்போல் அன்றைக்கும் ஒரு ஊரில் தன் சீடர்களைச் சந்தித்து ஞான போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது "உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம்' என்றார்.
"குருவே! தாயும், பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். ஒவ்வொரு மனிதனின் தேடலும் ஒவ்வொருவிதமாக இருக்கும் என்பார்கள். ஆனால் இந்த உலகில் ஏழ்மையில் வாடுபவனும் மன மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்; செல்வத்தில் கொழிப்ப வனும் மன மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்.
இது மிகவும் நேருக்கு மாறாக இருக்கிறதே?!'
கேள்வி கேட்ட சீடனைப் (பிக்குவைப்) (பிட்சுவைப்) பசுவின் விழிகளைப்போல் நீண்டு, கருணை ஒளிவீசும் கண்களால் பார்த்து இதழோரம் புன்னகைத்த புத்தர் ஒரு கதையைச் சொன்னார்.
"ஒரு ஊரில் சாலையோரம், நடை பாதையில் தங்கியிருந்தான் இரந்துண்பவன் ஒருவன். மக்கள் தரும் உணவு உள்ளிட்ட பண்டங்களை உண்டு வந்தான். அவன் தங்கியிருந்த இடம் அசுத்தத்தால் மிகவும் துர்நாற்றம் வீசியது. அங்கேயே படுத்துக் கொண்டு, படுத்தபடி மலலிஜலம் கழிப்பான். குளிக்காத அவனும் துர்நாற்றமுடையவனாக இருந்தான். அவ்வழியே போய்வரும் மக்களால் அந்த துர்நாற்றத்தை சகிக்க முடிய வில்லை. வேறுவழியின்றி பொறுத்துக் கொண்டனர்.
ஒருநாள் அவன் தான் தங்கியிருந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டான்.
ஊர்மக்கள், அவனுடைய உடலை மீட்டு, மயானத்தில் உரிய இறுதிக் காரியங்களைச் செய்தனர்.
அவன் வசித்துவந்த இடத்தை முடிந்தளவு சுத்தப்படுத்தினர்.
ஆயினும் அந்த இடத்தைக் கடக்கும்போது துர்நாற்றம் அடித்தது.
இதற்கு தீர்வு தேடிய மக்கள், அவன் படுத்திருந்த இடத்தின் தரையை சில அடிகள் ஆழப்படுத்தி, அந்த மண்னை அப்புறப்படுத்தினால் துர்நாற்றம் இருக்காது என முடிவுசெய்து, அதன்படியே அவ்விடத் தைத் தோண்டினர். ஓரிரு அடிகள் தோண்டிய தும் விநோதமான ஒலி வந்தது. மண்ணைப் பறித்துப் பார்க்கையில் ஒரு இரும்புப் பெட்டி இருந்தது. அதை வெளியே எடுத்து திறந்தனர்.
அது விலை மதிப்பில்லாத புதையல் நிரம்பிய பெட்டி!
-இப்படிச் சொல்லி கதையை நிறுத்தி னார் புத்தர்.
கேள்வி கேட்ட பிக்கு உட்பட எல்லாருக்கும் குழப்பம்.
"இந்த உலகில் ஏழ்மையில் வாடுபவனும் மன மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்;
செல்வத்தில் கொழிப்பவனும் மன மகிழ்ச்சி யைத் தேடி அலைகிறான். இது மிகவும் நேருக்கு மாறாக இருக்கிறதே?!' -என்பதுதான் கேள்வி.
ஏழையிடம் செல்வம் இல்லை; அதனால் அவனால் விரும்பியதை வாங்க முடியாமல் நிம்மதி இழந்து, மன மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான். செல்வந்தனிடம் செல்வம் இருக்கிறது. அவனால் அவன் விரும்பியதை வாங்க முடியும். அப்படியிருந்தும் அவனும் நிம்மதியின்றி, மன மகிழ்ச்சியைத் தேடி அலைகிறானே!
-இதுதான் அந்தக் கேள்வியின் பொருள்.
ஆனால் புத்தரோ பிச்சைக்காரன் லி புதையல் என கதை சொல்கிறாரே?
லிஇதுதான் பிக்குகளின் குழப்பத்திற்குக் காரணம்.
புன்னகைத்தபடி புத்தர் தொடர்ந்தார்....
"அந்த இரந்துண்பவன் மக்களிடம் கையேந்தி நின்றான் தன் மரணம்வரை. ஆனால் அவனுடைய இடத்தில் இருந்த புதையலை அவன் அறியவில்லை.
அதுபோலத்தான்....
ஏழையோ... பணக்காரனோ...
தனது மன மகிழ்ச்சியும், மன நிம்மதியும், மன சாந்தியும், மன அமைதியும் தன்னிடம் தான் உள்ளது; தன் மனதிடம்தான் உள்ளது என்பதை அறியாமையால் அறியாமல் விட்டுவிட்டு, வேறு இடங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்' லிஎன்றார் புத்தர்.
***
நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் வி.என்.ஏ.ரெட்டி மற்றும் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் எம்.ஜி.ஆர்.- தேவிகா நடிப்பில், வந்த "ஆனந்த ஜோதி' படத்தில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் எழுதி, டி.எம்.சௌந்திரராஜன் பாடிய பாடல்...
"கடவுள் இருக்கின்றார்'
பாடலின் முதல் சரணத்தின் இறுதியில்....
"உள்ளத்தில் இருக்கும்
உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?'
-என எழுதியிருப்பார் கண்ணதாசன்.
இரண்டாவது சரணத்தின் தொடக்கத் தில்...
"புத்தன் மறைந்துவிட்டான்
அவன்- தன்
போதனை மறைகின்றதா?'
-எனக் கேட்டிருப்பார்.
***
மனதின் வடிவம் பிறர் பார்க்கும்படி வெளியே தெரியாது; ஆனால் நீங்கள் உங்கள் மனதை உள்ளுக்குள் உருவகமாகக் காணமுடியும்.
உங்கள் மனதில் எண்ணம் எனும் உளியால் நிம்மதியின் உருவத்தைச் செதுக் குங்கள்!