மது இந்திய திருநாட்டில், ஒவ்வொரு மாதமும், பௌர்ணமி, அமாவாசை கொண்டாடப்படுகிறது. மிக ஆதிபுராணக் காலத்தில் அமாவாசை கொண்டாடப்பட்டதில்லை எனத் தெரிகிறது.

பின்காலத்தில் அமாவாசை தொடங்கப்பட்டதற்கு ஒரு புராணக்கதை உள்ளது. பாரத தேசம் எனும் நாடு தோன்றக் காரணமாக இருந்த பாரத கண்டத்து மன்னன் சாந்தனு மகாராஜாவின் விருப்பத்தால், அவரை சத்தியவதி எனும் மீனவப்பெண் மணந்தாள். பின்னுள்ள மகாபாரதக் கதை உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இந்த சத்தியவதி, முன்ஜென்மத்தில் அச்சோதை எனும் பெண் ஆவாள்.

அவள் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து, பிதுர்க்களை வேண்டினாள். அதில் ஒரு பித்ரு இவளை சாபமிட்டார். இவள் மீண்டும் சொர்க்கத்திற்கும், பூமிக்கும் நடுவே அந்தரத்தில் இருந்தவாறு கடும்தவம் செய்தாள். அந்தத் தவத்தை மெச்சிய பித்ருக்கள் இவளுக்கு வரமளித்தனர். "துவாபர யுகத்தில் ஒரு மீன் வயிற்றில், சத்தியவதி எனும் பெயரோடு பிறந்து, பராசர முனிவரோடுகூடி, வியாசர் என்பவரை பெறுவாய். பின் சாந்தனு மகாராஜாவை மணந்து இரண்டு புத்திரரை பெறுவாய். பின் அச்சோதை எனும் புண்ணிய நதியாக மாறுவாய். நீ சாபம் பெற்ற தினத்தில் பித்ருக்களை நினைத்து பூஜைசெய்தால், அது பித்ருக்களை மிக மகிழ்விக்கும்'' என்று கூறி மறைந்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகே அமாவாசை என்ற திதி தோன்றியது. அதனால் பித்ருக்களை ப்ரீதிபடுத்த, அன்று திவசம், சிரார்த்தம், பிராம்மண தர்ப்பணம் என இவற்றை செய்யும் முறை உண்டாகியது.

Advertisment

aa

ஜோதிடமும் அமாவாசையும்

ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் அமர்ந்திருப்பார். சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பார்.

ஜோதிடம் சூரியனை தந்தை என்றும், சந்திரனை தாய் என்றும் வர்ணிக்கிறது. சூரியனுக்கும். சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை, திதி என்று குறிப்பிடுவார். இதில் 15 திதிகள் உண்டு. இதில் பௌர்ணமி திதியன்று சூரியனும், சந்திரனும் நேரெதிரில் 180 டிகிரியில் இருப்பர். அமாவாசை திதியன்று, சூரியனும், சந்திரனும் சேர்ந்திருப்பர்.

பௌர்ணமி திதியை எல்லாரும் நிறைந்த நாள் எனக் கொண்டாடுவர். நிறைய நல்ல விஷயங்களை ஆரம்பிப்பர். கோவில் தரிசனம் கொண்டாடப்படும்.

இதுவே அமாவாசை திதி எனில் மக்கள் சற்று குழப்பமடைகிறார்கள். இது நல்ல நாளா? கெட்ட நாளா? என ஒரே கன்ப்யூஸ் ஆகி விடுகிறார்கள். இதனை இருவிதமாக யோசிக்கலாம். சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே தாயும், தந்தையும் ஒன்றாக சேர்ந்து நிற்பது என்பது எத்தணை பாக்கியமான விஷயம். எனவே சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசை என்பது ஒரு நல்ல நாள் தான்.

இன்னொரு விதத்தில், சூரியன் மிகப் பிரகாசமான கிரகம். சந்திரன், சூரியன் அளவுக்கு கூற இயலாது. எனவே ஆதி வெளிச் சம் தரும் சூரியனுடன், சந்திரன் சேரும்போது, அவர் பலங்குன்ற வாய்ப்புள்ளது. எனவே சந்திரன் பலமற்ற நாள் சுபத்துக்கு உதவாது எனவும் கூறுகின்றனர்.

ஆயினும் ஜோதிடக் கணக்குப்படி எடுத்துக் கொண்டால். பௌர்ணமி என்பது தேய் பிறையின் ஆரம்பம் எனலாம்.

அமாவாசை என்பது வளர்பிறையின் ஆரம்பம்- சரிதானே.

பௌர்ணமி முடிந்தவுடன் தேய்பிறை ஆரம்பித்துவிடும். சூரியனைவிட்டு சந்திரன் விலக ஆரம்பித்துவிடுவார்.

அமாவாசை முடிந்தவுடன், சந்திரன், சூரியனை நோக்கி விரைவாக நகர்கிறார். தந்தை யைக் காண தாய் விரைகிறார். சிவத்தை நோக்கி சக்தி ஓடுகிறாள். எனவே வளர்பிறை காலம் தொடங்குகிறது.

இதன்படி, அமாவாசையன்று காலை நேரங்களில் பித்ரு விஷயங்களை முடித்து விட்டு பிற்பகலில் வளரும் தன்மையுடைய சுபவிஷயங்களை தொடங்குவது நன்மை தரும்.

யூக கருத்து: முன்காலத்தில் அமாவாசை யன்றும் நல்ல விஷயங்களை எடுத்து செய்திருப்பார்கள். நம்ம ஆட்களைத்தான் தெரியுமே. பித்ரு விஷயங்களை சுத்தமாக மறந்துவிட்டு, லௌகிக விஷயம் மட்டுமே செய்திருப்பார்கள். நடுவில் வந்த, ஒரு புண்ணியவான் ரொம்ப காண்டாகி, அமாவாசை கெட்ட நாள். பித்ரு விஷயம் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்று ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டுவிட்டார் போலும்.

இவர்களை கொஞ்சம் லூஸாகவிட்டால், பித்ருக்களை சுத்தமாக மறந்து விடுவார்களோ!

ஏதோ இப்போதைய அவசரகால கட்டத் தில் ஜாதி பாகுபாடின்றி, அமாவாசைக்கு பித்ருக்களை நினைத்து வழிபடுகிறார் களே அதுவே பெரிய விஷயமல்லவா!

அமாவாசை பூஜை: அமாவாசை பூஜையை பித்ரு தர்ப்பணம் என்றே அழைக்கி றார்கள்.

அமாவாசை தர்ப் பணம், மூதாதையர்களை, மறைந்த முன்னோர்களை நினைத்து, கடற்கரை, நதி ஓரம், கோவில் அருகில், குளக்கரை என இதில் ஓரிடம் தேர்ந் தெடுத்து, இச்சடங்கை ஆசாரிக்கின்ற னர்.

இதில் மூன்று தலைமுறை மறைந்த முன்னோர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கின்றனர். இதில் தூய உறவின் அடையாளமாக பூஜை மலர்களாலும், ஆத்ம திருப்தியின் அடையாளமாக மூன்றுமுறை ஜலதர்ப்பணமும் செய்கின்றனர். இந்த தர்ப்பணத்தின்மூலம் குடும்பத்தினருக்கு நல்ல ஞானமும், தர்மம் செய்யும் வசதியும், சந்ததி பாக்கியமும், நல்ல செல்வமும் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும் என முன்னோர்களை பணிவுடன் வேண்டிக்கொள்கின்றனர். இதன்மூலம் அந்தப் பரம்பரையின் சுபிட்சத்தை மேன்மேலும் வளர்ச்சி அடைவதற்கு, துணைநிற்குமாறு பித்ருக்களிடம் அன்புடன் கோரிக்கை வைக்கின்றனர்.

add

Advertisment

இந்தியாவிலுள்ள அமாவாசை தர்ப்பணம் செய்யும் இடங்கள்

காசி: இங்கு காசி விஸ்வநாதரும், அன்னபூரணியும் எழுந்தருளியுள்ள புண்ணிய கேஷத்ரம். கங்கைநதி கடலென ஓடிக்கொண்டிருக்கிறாள். இங்கு மாலையில் நடக்கும் கங்கா மாதா ஆரத்தி மிகப் பிரசித்திபெற்றது. கங்கை கரையில் எரிந்துகொண்டிருக்கும் பிணங்களிலிருந்து, எவ்வித துர்நாற்றமும் வீசவில்லை என்பது நடைமுறை சத்தியம். இங்கு மரிக்கவேண்டும் என்பதற்காக நிறைய முதியவர்கள், இவ்விடத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கி றார்கள். இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது மிகமிக விசேஷம்.

கயா: இங்கு பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து வணங்குவது மிக உயர்வாக கருதப்படுகிறது. இங்குள்ள விஷ்ணு பாதம் மிகச் சிறப்புடையது. நமது முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகச் சிறப்பான ஸ்தலமாகும்.

இராமேஸ்வரம்: அமாவாசை மட்டுமல்லாது அனைத்து தோஷங்களையும் நீக்கவல்ல ஒரு வலிமையான க்ஷேத்ரம் இராமேஸ்வரம் ஆகும். இங்கு இறைவன் இராமநாத சுவாமி, அம்பாள் பர்வதவர்த்தினி ஆவாள். இந்தக் கோவிலின் ஆகச் சிறந்த சிறப்பு என்னவெனில், வருடத்தின் எல்லா நாட்களிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம் என்பதேயாகும்.

தஞ்சை- செதலப்பதி: இங்கும் கயாவைப்போல் அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.

மற்றைய தர்ப்பண க்ஷேத்ரங்கள்

திருச்சி- பூவாளுர், செங்கல்பட்டு- நென்மேலி, கும்பகோணம்- திருபுள்ள பூதங்குடி, திருவெண்காடு- ருத்ரபாதம், மதுரை- திருப்புவனம், கேரளா- வற்கலை, கேரளா- திருநாவாய், திருவனந்தபுரம்- திருவல்லம், தாடிக்கொம்பு, தஞ்சாவூர்- பாபநாசம், திருநெல்வேலி- பாபநாசம் என இன்னும் நிறைய ஸ்தலங்கள் முன்னோர் வழிபாட்டிற்கு சிறப் பானதாக கூறப்பட்டுள்ளது.

முன்னோர்களின் நினை விற்கு செலவு பண்ண வசதி இல்லாதோர், வேறுசில காரணங்களால் திதி கொடுக்க இயலாதோர் கொஞ்சம் அரிசிக் குருணையும், சிறிது வெல்லமும் சேர்த்து, எறும்பு புற்று இருக்கும் இடத்தில் போட்டு விடுங்கள்.

பசு மாட்டிற்கு அகத்திக் கீரையும், புல்கட்டும் கொடுக்க வேண்டும்.

சில வீடுகளில், ஆண்களுக்கு, இந்த தர்ப்பண விஷயத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அந்த மாதிரி வீடுகளில், பெண்கள், பக்கத்து கோவிலில் அர்ச்சனை செய்யும் அந்தணருக்கு ஒரு கிலோ பச்சரிசி, கொஞ்சம் துவரம் பருப்பு, ஒரு வாழைக்காய் வைத்து, கூடவே கொஞ்சம் காணிக்கையும் வைத்து, கொடுத்துவிடுங்கள் போதும். இராமாயணத்தில், தசரதருக்கு திதி கொடுக்கும் நேரத்தில், இராமர் வர நேரமாகியதாம். அமாவாசை திதி முடியும் நேரம் வந்துகொண்டே இருந்ததால், சீதா பிராட்டியாரே, தசரதருக்கு தர்ப்பணம் கொடுத்துவிட, தசரதரும் சந்தோஷமாக வாங்கிச் சென்றுவிட்டாரம். இது ஒரு செவிவழி புராண செய்தி. எனவே பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா என விவாதிக்க வேண்டாம்.

இந்த 2024-ஆம் ஆண்டு தை அமாவாசை தை மாதம் 26-ஆம் நாள், பிப்ரவரி 9-ஆம் தேதி வரவுள்ளது. தை அமாவாசை சற்று விசேஷசமானது. இது காலபுருசனின் கர்ம ஸ்தானத்தில் ஏற்படும் அமாவாசை.

எனவே இந்நாளில் முன்னோர்களை நினைத்து, வணங்கி வழிபடுவது, குடும்ப சுபிட்சத்திற்கு காரணமாக அமையும்.