பெண்கள் எப்போதும் மனவுறுதியோடு, மன வலிமையோடு இருக்க வேண்டும். அவர் களை அவ்வளவு சுலபத்தில் யாராலும் வீழ்த்திவிட முடியாது. அப்படிப்பட்ட பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்க தான் இந்தப் பரிகாரம். இதைப் பரிகாரம் என்றுகூட சொல்ல முடியாது. அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய விஷயமென்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பின்பற்றினால் அம்மனுக்கு நிகரான சக்தி நிச்சயம் பெண்களுக்குக் கிடைக்கும்.

பெண்களுடைய கழுத்தில் இந்த சங்கிலிகள் இருக்கவேண்டும். அது எந்த சங்கிலி? சாமி டாலரா, மந்திரித்த தாயத்தா என்றெல்லாம் அதிகமாக யோசிக்காதீர்கள். இதுவொரு மிகமிக எளிமையான குறிப்புதான்.

ss

Advertisment

அடுத்தவர்களால் பெண்கள் தோற்கடிக்கப்படக் கூடாதென் றால், பெண்கள் அதற்குண்டான தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ளவேண்டும். எல்லா விஷயத்திற்கும் அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. சொந்தக் காலில் நிற்கக்கூடிய பெண்களுக்கு எப்போதுமே மனபலம், தைரியம் அதிகமாகதான் இருக்கும். அதற்காக திமிருடன் நடக்கவேண்டுமென்று அர்த்தம் கிடையாது. "யாரைச் சார்ந்தும் நான் வாழவில்லை; என் சொந்தக் காலில் உழைத்து சம்பாதித்து வாழ்கின்றேன்' என்ற கர்வத்தில் ஒரு துளி பெண்களில் மனதிலிருந்தால் அதுதான் தவறு. முதலில் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக விஷயத்திற்கு வருவோம். பொதுவாகவே திருமணமான பெண்கள் ஒரேயொரு சரடை மட்டும்தான் கழுத்தில் அணிந்திருப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் சிலரைப் பார்த்தீர்களென்றால், சரடுடன் சேர்த்து இன்னொரு சங்கிலியும் அணிந்திருப்பார்கள். அதாவது ஒரேயொரு சங்கிலி கழுத்திலில்லாமல், கூட துணைச் சங்கிலி ஒன்றிருக்கும். இரண்டு அணிகலன்கள். இப்படி ஜோடியாக ஒரு பெண் கழுத்தில் நகை அணிந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும்.

Advertisment

உதாரணத்திற்கு, நிறைய பெண்கள் கழுத்தில் மஞ்சள் கயிறில் சரடு போட்டிருப்பார்கள்.

அதன்மேலே ஒரு சங்கிலி போட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களுடைய சுபாவம் ஒருமாதிரி இருக்கும். ஒரேயொரு சரடு அணிந்திருக்கக்கூடிய பெண்களின் சுபாவம் வேறொரு மாதிரியிருக்கும். (நீங்கள் வேண்டுமென்றால், இந்த விஷயத்தை இனிமேல் பார்க்கக்கூடிய பெண்களிடத்தில் சோதனைசெய்து பாருங்கள்.)

ஒரேயொரு சரடு அணிந்திருக்கும் பெண்கள் கூடுதலாக ஒரு சங்கிலியை அணிந்துதான் பாருங்களேன். உங்களுடைய சுபாவத்தில் மாற்றம் ஏற்படும். உங்களுடைய துணிச்சல் மேம்படும். நீங்கள் எதிலும் வெற்றியாளராக மாறிவிடுவீர்கள்.

உள்கழுத்தில் அந்த துணைச் சங்கிலியைப் போட்டாலும் சரி; அல்லது நீளமாக துணைச் சங்கிலியைப் போட்டுக்கொண்டாலும் சரி- அது உங்களுடைய விருப்பம். ஆனால் இரண்டு சங்கிலிகள் கழுத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (அந்த காலத்தில் பாட்டிகள்கூட, தாலி சரடோடு இரட்டைவட சங்கிலி அல்லது கோதுமை சங்கிலி என்று விதவிதமாக சங்கிலிகளைப் போட்டிருந்தார்கள்.)

இந்தப் பரிகாரத்திற்கு உள்ளே போய் ஆராய்ச்சி செய்வதற்கெல்லாம் வேலையில்லை. இதை அணிந்தாலே உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும்.

உதாரணத்துக்கு இன்னொரு விஷயம். அந்தக் காலத்தில் அட்டிகை அணியாத பெண்களே இருக்கமாட்டார்கள்.

அம்மன் முதற்கொண்டு ஆடை, அலங்காரங்களில், ஆரத்திற்கு மேலே அட்டிகை போட்டிருப்பது வழக்கம். தாலிச்சரடு போட்டிருந்தாலும் சரி; திருமணமாகாமல் சாதாரண மாலை அணிந்திருந்தாலும் சரி- உள் கழுத்தில் எப்போதும் ஒரு மாலையிருக்கும். ஒரு முத்துமாலையாவது இருக்கும்.

அப்படி உள் கழுத்தில் அணியக்கூடிய அந்த அணிகலனுக்கு தனிச் சிறப்புதான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் முயற்சிசெய்து பாருங்கள். இந்த நகையை அணிந்த மூன்று மாதத்திற்குள்ளேயே நல்ல வித்தியாசத்தை உணரமுடியும்.

இப்படி இரண்டாவதாக அணியக் கூடிய அந்த நகையைத் தங்கத்தில் தான் போடவேண்டுமென்ற அவசியம் கூட கிடையாது. வெள்ளியில் போடலாம். செம்பில் போடலாம். முத்துமாலையாகக்கூட போடலாம். இந்தக் குறிப்பு உங்களுக்கு அழகு சேர்ப்பதோடு, அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.