முதல் பள்ளிப்படை என்பது வேளாண் குடிமக்களால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழி வழிபாட்டி-ருந்து தொடங்கி, பின் நெசவுத் தொழில் செய்பவர்களிடம் அம்முறை பரவி, தொடர்ச்சியாக வணிகம் செய்பவர்கள் இம்முறையைப் பின்பற்றலானார்கள். இந்த வழிபாட்டில் இருந்துதான் சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பில் உள்ளவர்களுக்கு "கந்து, வல்லம்' வழிபாடெல்லாம் உருவாகியது.
அதில் "கந்து' என்பது ஒரு தூண்; "வல்லம்' அல்லது "வல்லகம்' என்பது ஒரு கற்பலகை. கந்து என்றால் உடல்; வல்லம் என்றால் அவ்வுட-லுள்ள ஒன்பது துவாரங்களின் வழியே செய்யப்பட்டுவரும் ஆற்றல்களின் உருவகம். கந்து என்ற உடலானது ஐந்துவகைத் திறன்களின் கூட்டமைப்பு. அவ்வைந்து திறன்களாவன: நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி. அவை, நிலம்-ந, நீர்-ம, நெருப்பு-சி, காற்று-வ, வெளி-ய ஆகிய எழுத்துகளால் குறிப்பிடப்பட்டன.
கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்த மேற்கண்டவற்றைத் தொடர்ந்து, இந்த அத்தி யாயத் தில் நிலம் அல்லது திடப்பொருளுக்கான குறியீடாக ஏன் "ந' என்னும் தமிழ் எழுத்தைக் குறித்தனர் என்பதை யும், தொடர்ச்சியாக ம, சி, வ, ய ஆகிய குறிப்பெழுத்து களுக்கான விளக்கத்தையும் பார்ப்போம்!
காட்டுவழியில் அச்சமற்ற இரவுத் தங்கல்!
திடப்பொருளாக இருந்ததை "நிலம்' எனக் கொண்டு, "ந' எனக் குறித்தனர். ஏனெனில், ஒரு மலைப்பாதை வழியாக அல்லது காட்டுவழியில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால், அவ்வழியே செல்லும்போது எங்கேனும் இரவுப்பொழுதைக் கழிக்கத் தங்கவேண்டியிருப்பின், அந்த இடத்தில் காட்டுத் தீயோ அல்லது காட்டாற்று வெள்ளமோ வந்துவிடக்கூடாது. அதற்காக, அந்த வழியே ஏற்கெனவே பயணம்செய்து பழக்கப்பட்டவர்கள், அந்த வழித்தடத்தில் எங்கெங்கெல்லாம் இரவுத் தங்கல் செய்யலாம் என்பதை பின்வரும் பயன் பாட்டாளர்களுக்குக் காட்டும் வண்ணம், அந்த இடத்திற்கு அருகி-ருக்கும் பாறைகளில் என்னும் குறியீடிட்டுக் காட்டியிருப்பார்கள். எங்கெல்லாம் ஸ மேற்கண்ட குறியீடு இடப்பட்டி ருக்குமோ, அங்கெல்லாம் எவ்வித அச்சமுமின்றி இரவுத் தங்கல் செய்யலாம். சிலகாலம் தங்கி யிருக்கலாம்; குடியேறவும் செய்யலாம்.
ஆகவே, பின்நாட்களில் குடியிருப்பு நிலத்தைக் குறிப்பிடும் குறியீடாகவும் இது பயன்படலாயிற்று. பாதுகாப்பான நிலப்பரப்பைக் குறிப்பிடும் இந்தக் குறியீடு, பின் "ந' என்ற தமிழ் உச்சரிப் பைக் குறிப்பிடும் எழுத்தாக, தமிழ் பிராமியாக மாறியது. எனவே, நிலத்தைக் குறிப்பதற்கு "ந' என்னும் தமிழ் எழுத்தை சித்தர்கள் அல்லது அறிவர்கள் குறியீடாக எடுத்துக் கொண்டனர்.
காட்டாற்று வெள்ள எச்சரிக்கை!
இதேபோல், ஓரிடத்தில் காட்டாற்று வெள்ளம் மனிதர்கள் தப்பிக்கமுடியாத அளவு திடீரென மலைவழிப் பாதைகளில் வந்துவிடும். அப்படிப்பட்ட இடங்களில் இரவு களில் தங்கிவிடாதீர்கள் என பயணிகளுக்கு எச்சரிக்கும் வண்ணம், அவ்விடத்தைச் சுற்றியுள்ள பாறை களிலும், பெருமரங்களின் அடிப் பகுதிகளிலும் ஸ என்ற குறியீட்டைச் செதுக்கியிருப்பார்கள். இதில் ம என்றால் இரண்டு மலைத்தொடர் களுக்கு இடைப்பட்ட நீரோடை. அதில் எந்நேரமும் வெள்ளம் வந்துவிடக் கூடுமென்பதைக் குறிக்கும் வண்ணம் என்ற அடையாளத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நீரைக் குறிப்பிடும் இவ்வடையாளம், பின்னாளில் தமிழ் எழுத்தான "ம' என்ற எழுத்தை உச்சரிக்கும் தமிழ் பிராமி எழுத்தாக மாறியது. இதனால், நீரை அல்லது திரவத்தைக் குறிப்பிட, சித்தர்கள் அல்லது அறிவர்கள் "ம' என்ற எழுத்தைப் பயன்படுத்தினர்.
உடும்புத்தோலில் வரைபடம்!
அடுத்து இதேபோல் காட்டுவழி, மலைவழிப் பயணத்திற்குப் பயன்படும் பாதையை சங்கிராமச் சாலை என பின்னாளில் அழைத்தனர். ஒரு பெருநகரி-ருந்து மற்றொரு பெருநகரத்திற்கு வணிகர்களோ, மக்களோ செல்லும்போது அவர்கள் இந்த சங்கிராமச் சாலைகளைப் பயன்படுத்த நேர்ந்தால், அவர்களிடம் சில குறிப்புகள் அடங்கிய வரைபடங்களைக் கொடுத்தனுப்புவார்கள். அவை பெரும்பாலும் உடும்புத் தோல் போர்த்தப்பட்ட மரச்சட்டங்கள். சதுர வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ இருக்கும். அதன் சுற்று மரச்சட்டங்களில் சிறிய மணிகளையும் இணைத்திருப்பார்கள்.
அவற்றின் நடுவே சேத்தாங்கொட்டையி-ருந்து எடுக்கப்பட்ட மையினால் வரைபடம் வரைந்திருப்பார்கள். உடும்புத் தோலால் ஏன் அதைச் செய்திருப்பார்கள் என்றால், இரவு நேரங்களில் தீப்பந்தங்களுக்கு முன்னால் அவ்வரைபடத்தை வைத்தால், உடும்புத்தோலானது ஒளி ஊடுருவும் தன்மையுடையதால், சேத்தாங்கொட்டை மையினால் வரையப்பட்ட கோடுகள் ஒளியைத் தடுத்து, மையில்லாத பகுதியில் ஒளி ஊடுருவிப் பிரகாசமாகத் தெரிந்து, வரைபடம் தெளிவாக, பகலைவிட இரவில் நன்றாகத் தெரியும். காட்டுவழிப் பயணம் மேற்கொள்ளும் அனைவரிடமும் இந்த உடும்புத்தோல் வரைபடம் கொடுக்கப்படும். அவர்கள் இந்த சங்கிராமச் சாலைக்குள் நுழைந்து, அதைவிட்டு வெளிவரும் வரையிலும், அவற்றை ஒ-யெழுப்பும் தோல் இசைக்கருவியாகவும் பயன்படுத்துவார்கள். அவற்றைத் தட்டித் தாளம் இசைக்கும்போது பயணம் உற்சாகமானதாக இருக்கும்.
அவ்வொலி கேட்டு யானை, புலி, கரடிகள் அவ்விடத்தைவிட்டு ஒதுங்கிச் செல்லும்.
அதற்காகவும் அவ்வொ- இசைக்கப்படும்.
சேத்தாங்கொட்டை மை, நீரிலோ மற்ற திரவங்களிலோ பட்டாலும் அழியாத தன்மையுள்ள மையாகும். இதுபோன்ற மரச்சட்டங்களில் பொருத்தப்பட்ட உடும்புத்தோலானது, சுமார் 200 வருடங் களுக்குப் பழுதாகாமல் இருக்கக்கூடியவை. இவ்வரைபடங்களில், மேல்பகுதி மேற்குத் திசையையும், கீழ்ப்பகுதி கிழக்கு திசையையும் காட்டும். சங்க காலத்தில் ஒரு வரைபடத்தின் திசைகள் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டன. ஒரு வரைபடத்தின் முன்னால் நின்றால், நம் வலக்கைப் பகுதி வடக்குத் திசையையும், இடக்கைப் பகுதி தெற்குத் திசையையும் குறிக்கும் விதத்தில் வரைவார்கள். இதைக் கொண்டுதான், இதுவரை மேற்குத் திசையிலுள்ள நிலக்குறியீடுகளை மேல்- அதாவது மேலைநாடு, மேலக்கால், மேலக்குளம் மேலவளவு, மேலவீடு என நாம் கூறிவருகிறோம். கிழக்குத் திசையில் உள்ளவற்றை, உதாரணமாக- கீழைநாடு, கீழவளவு, மேலூர், கீழுர், கீழக்கால், கீழக்குளம், கீழவீடு எனக் கூறும் வழக்கம் சங்ககாலத்தி-ருந்து இன்றுவரையிலும் தொடர்கிறது.
இந்த வரைபடங்கள், ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர், மேற்பகுதியை வடக்கு திசையாகவும், கீழ்ப்பகுதியை தெற்கு திசையாகவும், வலக்கைப் பகுதி கிழக்காகவும், இடக்கைப் பகுதி மேற்காகவும் குறிப்பிடப்பட்டன. இவ்வாறு பழங்காலத்தில் வரையப்பட்ட சங்கிராம வரைபடங்களில் காட்டுத்தீ எந்தெந்தப் பகுதி களிலெல்லாம் அதிகம் பரவ வாய்ப்புள்ளதோ, அந்தப் பகுதிகளில் ஒரு தீப்பந்தத்தில் எரியும் தீச்சுடர் போன்ற அமைப்புக் குறியீட்டை எழுதி யிருப்பார்கள். அப்பகுதிகளில் இருக்கும் பாறை, மரங்களிலும் இந்தக் குறியீட்டை செதுக்கியிருப்பார்கள். இதனைத் தமிழ் எழுத்துகளில் "சி' என்ற உச்சரிப்புக்குரிய எழுத்தாகப் பயன்படுத்தியமையால், சித்தர்கள் அல்லது அறிவர்கள் நெருப்பைக் குறிப்பதற்கு "சி' என்ற எழுத்தால் குறித்தனர்.
மனிதர்களை உருட்டும் காற்றாடிப் பாறை!
சதுரகிரி மலையின் வடபகுதிகளில் காற்றாடிப் பாறைகள் எனப்படும் சில பகுதிகள் உள்ளன. பழங்காலங்களில் அறிவர்கள் அல்லது சித்தர்கள், மருத்துவ மூலிகைகள் எடுப்பதற்காக அம்மலைகளில் சென்று தங்கும் பழக்கம் இருந்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றானது மேற்குமலைத்தொடர் கனவாய்கள் வழியே நுழைந்து, மிகவேகமாக வந்து சதுரகிரி மலைத்தொடர்களை மோதும் இடங்களிலுள்ள பாறைகளே காற்றாடிப் பாறைகள் என்றழைக்கப்பட்டன. அந்த இடங்களில், மக்கள் உடுத்தும் உடைகளை சலவைசெய்து காயப்போட்டால், காற்றால் அடித்துச் செல்லப்பட்டு, அதலபாதாளத்தில் கொண்டுபோய் போட்டுவிடும். மேலும், அதன்மீது நிற்கும் மனிதர்களையும், அவர்கள் அதன்மீது வைக்கும் உடைமைகளையும் உருட்டிவிடும் அளவுக்கு, மிகுந்த வேகத்தோடு வந்து மோதிக் கடந்துசெல்லும். அவ்விடங்களில் திடீர்திடீரென காற்று புயலாக மாறும். எனவே அவ்விடங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதைக் குறிப்பிடும் வண்ணம் அப்பாறைகளில் என்ற குறியீட்டைச் செதுக்கினர்.
இந்தக்குறியீடு, பின்னாளில் தமிழில் "வ' என்ற எழுத்தின் உச்சரிப்புக்குரிய வடிவமாக தமிழ் பிராமியில் பயன்படுத்தப்பட்டது. அதனால், சித்தர்களான அறிவர்கள் காற்றைக் குறிப்பிடும் குறியீடாக "வ' என்ற எழுத்தைப் பயன்படுத்தினார்கள்.
மலைமுகடுக்கு மேல் வான்வெளி!
சுத்தவெளி என்பது என்னவென்றால், கொடைக்கானலில் மன்னவனூரில் மலைச்சிகரத்திற்குமேல் பேரீச்சம் பகுதியில், "அதற்குமேல் மலைமுகடுகள் இல்லை; இனி வான்வெளிதான்' என்பதைக் குறிப்பிடும் முறையில் என்ற குறியீட்டை வரைந்தனர். இதுபோன்று அழகர்கோவில், மேகமலை, திருப்பதி வேங்கடமலை, கொல்லிமலை, சிறுமலை, சபரிமலைப் பகுதிகளில் காட்டியுள்ளனர். இந்த என்ற குறியீடு, தமிழ் எழுத்துகளில் "ய' என்ற எழுத்திற்காக, தமிழ் பிராமிக் குறியீடாகக் கொண்டமையால், சித்தர்கள் அல்லது அறிவர்கள் வான்வெளியைக் குறிப்பிடும் குறியீடாக "ய' என்ற எழுத்தைப் பயன்படுத்தி னார்கள்.
இதனால்தான் தற்போது பஞ்சபூதங்கள் என்று சொல்லக்கூடிய ப் நிலம் - ந
ப் நீர் - ம
ப் நெருப்பு - சி
ப் காற்று - வ
ப் சுத்தவெளி- ய
சேர்ந்து "நமசிவய' என்னும் மந்திரமானது.
ஐந்து கூறுகளாலான உடல்!
சிவம்- அதாவது சடத்தை- நமது உடம்பைக் குறிப்பதாக சிவாலயங்களில் உச்சரிக்கப்படுகிறது. நமது அண்டத்திலுள்ள அனைத்துப் பருப்பொருள்களும் இந்த ஐந்து கூறுகளைத்தான் உள்ளடக்கியுள்ளன. அதேபோல், இப்புவியிலுள்ள அனைத்து உயிரினங்களின் உடலும் இந்த ஐந்து கூறுகளை உள்ளடக்கியுள்ளது. இதனைப் பிண்டம் என்றும் கூறுவர். அதனால்தான் அண்டத்திலுள்ளது பிண்டத்திலும், பிண்டத்திலுள்ளதுதான் அண்டத்திலும் இருக்கக்கூடிய ஐந்து கூறுகளைக் கொண்ட கூட்டமைப்பாக உள்ளது. இந்தக் கூட்ட மைப்பை, "கந்து' என்று சித்தர்கள் கூறுகின்ற னர். கந்து என்றால் இணைதல் என்று பொருள்.
எனவே, நமது உயிர்மெய்யை, மெய்- உடல்- கந்து எனவும், உயிர்- வல்லம் எனவும் உருவகப்படுத்தினர். வல்லி என்றால் ஆற்றல், ஆவி. அதுவே பின்னாளில் "வல்லி' என்ற உயிரின் உருவகமாக வழிபடப்பட்டது.
இதுவரை வெளிவராத வல்லக உயிர் மந்திரம் வரும் இதழில்...
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்