ராஜஸ்தானின் கரோலி மாவட்டத்தில், திரிகூட மலைத் தொடரில் உள்ளது கேளி மாதா ஆலயம். வடகிழக்கு ராஜஸ்தானிலுள்ள சம்பல் பள்ளத்தாக்கின் அருகிலிருக்கும் கேளா என்னும் கிராமத்திலுள்ள இந்த ஆலயத் தில் வருடம் முழுக்க கூட்டம் இருக்கும்.
இந்த ஆலயத்தைப் பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. இந்த கிராமத்தை பண்டைக் காலத்தில் யது வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு காக்ரோனின் கிச்சி ராஜபுத்திரர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். கிச்சி மன்னர் களில் ஒருவரான முகுந்த தாஸ் 1116-ஆம் வருடத்தில் இந்த ஆலயத்திற்குத் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலைக் காப்பாற்றுவதற்கான இராணுவச் செலவு, பிரசாதத்திற்கான செலவு, பூஜை செலவு ஆகிய அனைத்தையும் அவரே செய்திருக்கிறார்.
ரகுதாஸ் என்ற மன்னர் சிவப்புநிறக் கற்களைக்கொண்டு இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார். கரோலி மன்னர்கள் தொடர்ந்து இந்த ஆலயத்தைப் பாதுகாத்த தாக வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலிலுள்ள கேளிதேவியின் சிலைக்கு அருகில் சாமுண்டாதேவியின் சிலை இருக்கிறது. சித்திரை மாதத்தில் 17 நாட்கள் இங்கு "லக்கி மேளா' என்னும் பெயரில் திருவிழா நடைபெறும். அப்போது ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், ஹரியானா, குஜராத், தென்னிந்தியா ஆகிய இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களுடைய பிரார்த் தனைகள் நிறைவேறுவதற்காக இந்த அன்னை யைத்தேடி வருகிறார்கள்.
இந்த 17 நாட்களில் முதல் ஐந்து நாட்களும், இறுதி நான்கு நாட்களும் விசேஷமானவை.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கால் நடையாக வந்து, அன்னைக்கு கொடிகளை சமர்ப்பிப்பார்கள்.
இந்தக் கோவிலுக்கு அருகில் கலிஸீல் என்றொரு நதி ஓடுகிறது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்கு நீராடுவார்கள். 17 நாட்களும் திருவிழாக் கோலம்பூண்டு காணப்படும். தினமும் பலவகையான கொண்டாட் டங்கள் நடக்கும். அப்போது பெண்கள் மங்களப் பொருட்களை அன்னைக்கு அணிவிப்பார்கள். பக்தர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது.
திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வருகிறார் கள். குழந்தை பிறந்தபிறகு இங்கு வந்து மொட்டையடிக்கிறார்கள். பக்தர்கள் மேள தாளத்துடன் ஆடிப் பாடியவாறு வரும் காட்சியைப் பார்ப்பதற்கே கோடிக் கண்கள் வேண்டும்.
இந்த ஆலயத்தில் குடிகொண்டி ருக்கும் அன்னையைப் பற்றிய ஒரு கதை இது...
சதிதேவியின் உடல் பாகங்கள் விழுந்த பகுதிகள் சக்தி பீடங்களாக வணங்கப்படுகின்றன. அவற்றி லொன்று இந்த ஆலயம். கேதார்கிரி பாபா என்ற துறவி இங்கு தவம் செய்திருக்கிறார். அவர் தவம்செய்த இடத்தில் பல குகைகள் இருந்தன. அந்தப் பகுதியில் வாழ்ந்த அரக்கன் ஒருவன் மக்களுக்கு நிறைய துன்பங் களைத் தந்திருக்கிறான். அவனைத் தவிர வேறு பல அரக்கர்களும் அங்கு இருந்திருக்கிறார்கள். அவர்களிட மிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கவேண்டும் என்பதற்காக கேதார்கிரி பாபா, அங்கிருக்கும் ஹிம்லாஜ் என்னும் மலையில் அமர்ந்து தவம்செய்திருக்கிறார்.
அப்போது அவருக்குமுன் தோன்றிய அன்னை, "கவலைப்படாதே. நான் இதே இடத்தில் குடிகொண்டு மக்களைக் காப்பாற்றுகிறேன்'' என்று கூறியிருக்கிறாள். அதைத் தொடர்ந்து அன்னை அந்த அரக்கர் களை காளிசிந்த் என்ற ஆற்றின் கரையில் வதம் செய்தாளாம். அங்கி ருக்கும் ஒரு பாறையில் அரக்கனின் பாதச்சுவடு இருக்கிறது. அந்த இடத்திற்குப் பெயர் "தானவ தஹ'. "தானவ' என்றால் அரக்கன் என்று பொருள்.
இன்னொரு கதை...
இந்த மலையில் பல வருடங்களுக்குமுன்பு பஹுரா என்ற கால்நடை மேய்ப்பவன் இருந்தான். அவனது ஆடுகளில் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் நின்று பால் சுரக்கும். அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, மண்ணுக்குக் கீழே அன்னையின் சிலை இருந்திருக் கிறது. அதையெடுத்து பஹுரா பூஜை செய்துவந்தான். அந்த இடத்தில்தான் இப்போதைய ஆலயம் இருப்ப தாகக் கூறுகிறார்கள். பஹுராவின் நினைவிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
ஸ்கந்த புராணத்தின் 65-ஆவது அத்தியாயத்தில் இந்த ஆலயத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த கேளி மாதாவுக்கு கயிலேஸ்வரி, கயிலாதேவி, விந்தியவாசினி, ஹிங்லாஜ் மாதா ஆகிய பெயர்களும் இருக்கின்றன.
முற்பிறவியில் இந்த அன்னையின் பெயர் மகா யோகினி, மகா மாயா என்றிருந்ததாம். நந்தகோபர்- யசோதை தம்பதிகளுக்கு மகளாக இவள் பிறந்ததும், கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசுதேவர்- தேவகியிடம் கொண்டுசெல்லப்பட்டது. அவள் பிறந்த வீட்டிற்கு அவளுக்கு பதிலாக கிருஷ்ணர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது கோபப்பட்ட கம்சன் அந்த குழந்தையைக் கொல்ல முயல, அந்தச் சமயத் தில் அந்தச் சிறுகுழந்தை விஸ்வரூபமெடுத்து விண்ணை முட்டுமளவுக்கு நின்றாள். "உன்னைக் கொல்ல கிருஷ் ணன் பிறந்துவிட்டான்'' என்று கூறி மறைந்தாள்.
இந்த அன்னையை தரிசிக்க விரும்புபவர்கள் சென்னை யிலிருந்து 2,184 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜெய்ப்பூருக் குச் செல்லவேண்டும். ஜெய்ப்பூரிலிருந்து 195 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.