கிராமவாசி ஒருவர் ஒரு முனிவரைப் பார்த்து, "இறைவனை அடைய என்ன வழி'' என்று கேட்டார். முனிவர் அவரிடம், "இடைவிடாமல் தேடு'' என்றார்.

படிப்பறிவில்லாத, எந்த ஞானமுமில்லாத அந்த மனிதருக்கு அவர் சொன்னது புரியவில்லை. "இடைவிடாமல் தேடுவதென்றால் என்ன? அது எப்படி?'' என்று அப்பாவியாய்க் கேட்டார்.

முனிவரோ, "திணறித் திணறித் தேடு'' என்றார். அந்த எளிய கிராமவாசியோ மிகவும்

குழம்பிப்போனார். "அப்படியென்றால் என்ன?'' என்று மீண்டும் வெகுளியாய்க் கேட்டார்.

Advertisment

செய்யவேண்டிய வேலைகள் அதிகமிருந்ததால், முனிவருக்குக் கோபம் வந்துவிட்டது. "ஒன்று வேண்டுமென்றால் இடைவிடாது தேடிப் பெறவேண்டும் என்னும் சாதாரண விஷயத்தைக்கூட புரிந்துகொள்ளமுடியாத மனிதர். இவர் இறைவனை அடைய வழிகேட்கிறார். சொன்னால் புரியாமல் விழிக்கிறார்' என எண்ணினார். அருகிலிலிருந்த குளத்தில் அந்த மனிதரை இறங்கச் சொன்னார்.

தண்ணீரில் அவர் நின்றதும், அவரது தலையை நீருக்குள் அழுத்திப் பிடித்துக் கொண்டார். அந்த மனிதரோ மூச்சுவிட முடியாமல் திணறி, திண்டாடினார். சில நொடிகள் திணறவைத்த முனிவர் அவரை விடுவித்து, "இப்படித்தான் திணறத் திணற தேடு'' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

"நீருக்குள் அமிழ்ந்திருந்த அந்த கணம்

Advertisment

எப்படி மூச்சு முட்டியது- திணறியது-

சுவாசிக்கப் போராடியது- தலை நீருக்குமேலே வந்ததும், சுவாசிக்க பிராணவாயு தேடி ஜீவனானது எப்படி அலைந்து தேடியது!' அந்த மனிதர் சிந்தித்தார்.

அப்படியென்றால் இதுதான் தேடலா? இப்படித் தேடினால் கடவுளைக் காண்பேனா?

சரியென்று தீர்க்கமாய் முடிவெடுத்து, இறைவனை இடைவிடாமல் நினைத்து, நீரில் மூழ்கி, மூச்சு பிடித்துத் திணறி நின்றார் அந்த எளிய கிராமவாசி. விடாப்பிடியாய்த் தொடர்ந்தார்.

ஆதரவாய் ஒரு கரம் அவரை வெளியில் கொண்டுவருவதை உணர்ந்தார். அருகில் கருணையோடு, சுற்றிலும் பிரகாசம் சூழ நின்றவரைப் பார்த்தார். மனம் துள்ளியது. அப்படியென்றால் இவர்தான் கடவுளா? தாமதிக்கவில்லை அவர். சிறிது தூரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த முனிவரை அழைத்துக் கேட்டார். "இவர்தான் கடவுளா?''

முனிவருக்கு அங்கு யாரையும் தெரிய வில்லை. கலகலவென்று அன்பாய், அழகாய் சிரிக்கும் கடவுள். கிராமவாசியின் கண்ணுக் குத் தெரிந்த கடவுள் அந்த முனிவரின் கண்ணுக் குத் தெரியவில்லை.

காலகண்ட முனிவர் என்னும் அவர் அந்த எளிய மனிதரைப் பார்த்து, "உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது'' என சொல்லி-ச் சென்று விட்டார்.

ஆம்! கிராமவாசியின் கண்களுக்குத் தெரிந்த கடவுள் முனிவருக்குத் தெரியவில்லை. காரணம், முனிவர் தேடச் சொன்னார். அதனால் முனிவரின் கண்களுக்கு கடவுள் தெரியவில்லை. கிராமவாசியோ முழு நம்பிக்கையோடு மூச்சுத் திணறத் தேடினார். இறைவனைக் காணப்பெற்றார்.

இதில் இரண்டு உண்மைகள். ஒன்று, ஒருவர் அறிவுரை சொன்னார்; தான் முயல வில்லை.மற்றொருவர், ஒரே நாள்தான் உபதேசம் பெற்றார். ஆழமான நம்பிக்கை வைத்தார். இறைவனை மட்டுமே தீவிரமாய் நினைத்து நீரில் மூழ்கிநின்றார். இறையருள் பெற்றார்.

மெய்ஞ்ஞானம் பெற, கடவுளை அடைய, உண்மையான பக்தி, கடுமையான உழைப்பு, திடமான நம்பிக்கை கொண்டு, வைராக் கியத்துடன் தியானம், யோகம், தவம் புரிந்தவர்கள் வாழ்ந்த பூமி நம் பூமி. இன்றும் வெளிநாட்டினார் நம் நாட்டிற்கு தியானம், யோகா கற்க வருகிறார்கள்.

இன்றைய காகலட்டத்தில் முறையான யோகா, தியானம் போன்றவையே உண்மையான அமைதி தருமென்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

c

வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறுக்கே ஒருவர் சாலையைக் கடக்க நடந்துவருகிறார். இடிக்கக்கூடாதென்று நிறுத்துகிறோம். இயந்திரத்தையும் அனைத்து விடுகிறோம். ஒரே பதட்டம், படபடப்பு.

முதலி-ல் கா-லின் அடியி-லிருக்கும் நிறுத்தியை அழுத்தி வண்டியை நிறுத்துகி றோம். இதுதான் உடம்பு. உடலை ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டும். இது யோகாசனங்கள்.

பதட்டம், பட படப்பு விலக மனது சமன்படவேண் டும். இது யோகா. இங்கே நம் மனது- வண்டியின் இயந்திரத்தை நிறுத்தியதைப்போல், மனதையும் நிறுத்த வேண்டும். இது தியானம்.

உடலை ஒரு நிலையில் நிறுத்த ஆசனங்கள்.

மனதை ஒரு நிலையில் நிறுத்த தியானம்.

மூச்சை சீராக வைக்க பிராணாயாமம்.

அந்த எளிய கிராமவாசிபோல் முழு ஈடுபாட்டுடன் ஒன்றி செய்தால், ஒவ்வொரு செயலையும் அற்புதமாய், ஒரு தியானமாய்ச் செய்யமுடியும்.

எளிய உதாணம் ஒன்று...

சாப்பிடுவதென்றால் சாதத்தில் சாம்பார் கலப்பது, பிசைவது, வாயில் போட்டு சுவை உணர்வது, துளி உப்பு தேவையெனில் சேர்த்துக்கொள்வது- இவை எல்லாவற்றையும் தியானமாகச் செய்யமுடியும். அந்த நேரத்தில் கோபம், பயம், குழப்பம் போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை.

ஒரு பக்தர், அவர் வாழ்நாளே கடவுளுடன்தான். கடவுள் சேவையில்தான். மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டுகிறார். ஆராதனை முதலில் வலமிருந்தா, இடமிருந்தா? சந்தேகம்... எப்படிச் செய்தால் கடவுளுக்குப் பிடிக்கும்? கவனம் முழுவதும் ஆரத்தி தட்டைக் கைமாற்றுவதிலேயே இருந்தது. மனம் சிதறியது.

ஒரு செயலை முழு மன ஈடுபாட்டுடன், சரணாகதியோடு நாம் செய்யும்போது, தெளிவு தானே கிடைக்கும். குழப்பம் இல்லையே!

நமக்கு நம்மீது, நமது இறைபக்திமீது நம்பிக்கை இல்லையா? நூறு சதவிகிதம் உண்டு தானே. நான் எது செய்தாலும் முழுமனதுடன், என் இறைவனுக்குப் பிடித்த விதமாகத்தான் ஆழ்மன விருப்பத்துடன் செய்கிறேன் என்ற திட நம்பிக்கை, அர்ப்பணிப்பு, அறியாப்பிழை இருப்பினும் என்னையறிந்த என் இறைவன் மன்னித்து ஏற்றுக்கொள்வார் எனும் தூய பக்தியானது தெளிவை மட்டுமே கொடுக்கும்.

முத-லில் இங்கொரு உண்மையை ஒப்புக் கொள்வோம். நமக்கு மிகவும் நெருக்கமானவர் நாம்தான். உங்களுக்கு நீங்களன்றி வேறு யார் நெருக்கமாக இருக்கமுடியும்?

உண்மை இதுவாக இருக்கையில், நம் மகிழ்ச்சி எங்கே பிறக்கிறது? நமக்குள்ளேயா? நமக்கு வெளியிலா? உள்ளேதான்!

மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்மால் கொடுக்கவும் முடியாது. வாங்கவும் முடியாது.

அனுபவிக்கத்தான் முடியும். அது எப்போதும் நம்முள்தான் இருக்கிறது. அதைத் தூண்டி உயிர்கொடுக்கும் சக்தியை நாம் யாரிடம் ஒப்படைக்கிறோம் என்பதுதான் பார்க்க வேண்டிய தேவை.

வெளியில் கோபம், பொறாமை, பேராசை, வெறுப்பு, சோம்பல், பணம், பதவி, புகழ் போன்ற வற்றிடம் ஒப்படைத்துவிட்டு, நிம்மதியில்லை- மகிழ்ச்சியில்லை என்று அழுவதில் என்ன அர்த்தமுள்ளது? "சந்தோஷமாய் இருக்க, கவலையை மறக்க குடிக்கிறேன்' என்று சதாசர்வ காலமும் குடித்து, மனைவி, குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி, குடிக்கப் பணத் தேவையால் கடன் வாங்கி, திருடி அவமானப் பட்டு, குடும்பத்தை இழந்து, உடல்நலம் கெட்டு, குடல் வெந்து, மருத்துவமனையில் படுத்து, துன்பமாய் இருக்கிறதென அழுவதில் என்ன பயன்? மகிழ்ச்சியென்றுதானே குடித்தோம். பின் ஏனிந்த அவலம்? நம் நிம்மதிக்கும், அவலத் திற்கும் நாம்தானே காரணம்!

அந்த கிராமவாசிபோல் எளிய மனதினராய், திட நம்பிக்கையுடன், ஆர்ப்பாட்டமில்லாமல், முழு அர்ப்பணிப்போடு இறைவனடி தேடுவோம். அவன் தாளில் சரணடைந்து அழிவில்லா இன்பம் பெறுவோம்.

அமைதியும் ஆனந்தமும் எளிதில் கிடைப்பதில்லை. வெளியிலிருந்தும் கிடைப்ப தில்லை. நம் சித்தர்கள் கூற்றுப்படி ஒரேவழி தியானம் மட்டுமே. மனதை இறைவன்பால் செலுத்துவதே தியானம்.

"மனம் அது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்' என்பார். யோகம், தியானம், தவம் யாவும் நம் பூமியில் சித்தர்களின் அரிய அனுபவங்கள். இறைவனும் நாமும் இணைவதற்கு இவையே சிறந்த வழிகள்.

"கூடித்தவம் செய்து கண்டேன்

குரைகழல் தேடித்தவம் செய்து கண்டேன்

சிவகதி வாடித்தவம் செய்வதே

தவம்

இவைகளைந் தூடிற்

பல உலகோ ரெத்தவரே.'

-திருமந்திரம்