"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கண்ணதாசன் திரைப்படப் பாடல் எழுதியுள்ளார் அதுபோல் மனிதர்கள் நினைப்ப தெல்லாம் நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதை பார்க்கும் இறைவன், பாவம் மனிதன், யாருக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் என்னை மறந்து விடுகிறார் களே' என்று எண்ணுவாராம். மேலும் மனிதன் கேட்பதையெல்லாம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு புராண சம்பவம்.
பொதுவாக முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் காட்டில்தான் குடில் அமைத்து வசிப்பார்கள்.
அவர்களுக்கு சீடர்கள் இருப் பதுண்டு. அப்படி ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்துவந்தார். மிகுந்த தவவலிமை கொண்டவர். அவர் குடிலில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது.
காட்டில் கிடைக்கும் கனிகளை உண்ணும் முனிவர், அதில் ஒரு பகுதியை நாய்க்கு அளிப்பார்.
அதனால் அந்த நாய் முனிவர்க்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. மேலும் காய்கனிகளை உண்டு வந்ததால் அந்த நாய்க்கு மாமிசத்தை உண்ணும் ஆசை வரவேயில்லை.
ஒருநாள் அந்த குடில் பகுதிக்கு சிறுத்தை ஒன்று வந்தது. அந்த நாயைக் கண்டதும் அதை வேட்டையாட துரத்தி யது. அச்சமடைந்த அந்த நாய் வேகமாக ஓடிச்சென்று முனி வரிடம் தஞ்சமடைந் தது. முனிவர் "பயப்பட வேண்டாம். உன்னை என் குழந்தைபோல் வளர்க்கிறேன். உனக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராமல் பாதுகாப் பது எனது கடமை'' என்று கூறி தன் கமண் டலத்திலிருந்து சிறிது நீரை எடுத்து அந்த நாய்மீது தெளித்தார். உடனே அந்த நாய் ஒரு பெரிய சிறுத்தையாக உருமாறியது. தன்னை விரட்டி வந்த சிறுத்தையை துரத்தியடித்தது.
சிறுத்தையாக மாறிய நாய் அதே விசுவாசத் தோடு முனிவரின் குடிலில் வசித்தது. ஒருநாள் புலி ஒன்று பயங்கர பசியோடு முனிவர் குடிலிலிருந்த சிறுத்தையை வேட்டையாட துரத்தியது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த சிறுத்தை முனிவரிடம் அடைக்கலமானது. முனிவர் அதன்மீது தீர்த்தத்தைத் தெளித்து அதை புலியாக மாற்றினார். பிறகு என்ன? அந்த புலியை ஓடஓட விரட்டியது. இப்படி நாயாக இருந்து உருமாற்றம் அடைந்த புலி நாளாக ஆக அதன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக தனது அசைவ குணத்தை அடைந்து அவ்வப்போது மற்ற மிருகங்களை வேட்டையாடி புசித்தது.
இந்த நிலையில் ஒருநாள் சிங்கம் ஒன்று குடிலிலிருந்த சிறுத்தையைத் துரத்தியது. உடனே எப்போதும்போல் ஓடிப்போய் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் அப்போதும் தீர்த்தத்தை தெளிக்க, அது மிகப்பெரிய சிங்கமாக மாறியது. தன்னைத் துரத்திய சிங்கத்தை துரத்தியடித்தது. சில நாட்கள் சென்று மிகப்பெரிய யானை ஒன்று அந்த சிங்கத்தை துரத்தியது. அதன் பலத்தின் முன்னே நாம் என்ன செய்யமுடியும் என்று பயந்துபோன
"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்று கண்ணதாசன் திரைப்படப் பாடல் எழுதியுள்ளார் அதுபோல் மனிதர்கள் நினைப்ப தெல்லாம் நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள். இதை பார்க்கும் இறைவன், பாவம் மனிதன், யாருக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் என்னை மறந்து விடுகிறார் களே' என்று எண்ணுவாராம். மேலும் மனிதன் கேட்பதையெல்லாம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு புராண சம்பவம்.
பொதுவாக முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் காட்டில்தான் குடில் அமைத்து வசிப்பார்கள்.
அவர்களுக்கு சீடர்கள் இருப் பதுண்டு. அப்படி ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்துவந்தார். மிகுந்த தவவலிமை கொண்டவர். அவர் குடிலில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது.
காட்டில் கிடைக்கும் கனிகளை உண்ணும் முனிவர், அதில் ஒரு பகுதியை நாய்க்கு அளிப்பார்.
அதனால் அந்த நாய் முனிவர்க்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. மேலும் காய்கனிகளை உண்டு வந்ததால் அந்த நாய்க்கு மாமிசத்தை உண்ணும் ஆசை வரவேயில்லை.
ஒருநாள் அந்த குடில் பகுதிக்கு சிறுத்தை ஒன்று வந்தது. அந்த நாயைக் கண்டதும் அதை வேட்டையாட துரத்தி யது. அச்சமடைந்த அந்த நாய் வேகமாக ஓடிச்சென்று முனி வரிடம் தஞ்சமடைந் தது. முனிவர் "பயப்பட வேண்டாம். உன்னை என் குழந்தைபோல் வளர்க்கிறேன். உனக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராமல் பாதுகாப் பது எனது கடமை'' என்று கூறி தன் கமண் டலத்திலிருந்து சிறிது நீரை எடுத்து அந்த நாய்மீது தெளித்தார். உடனே அந்த நாய் ஒரு பெரிய சிறுத்தையாக உருமாறியது. தன்னை விரட்டி வந்த சிறுத்தையை துரத்தியடித்தது.
சிறுத்தையாக மாறிய நாய் அதே விசுவாசத் தோடு முனிவரின் குடிலில் வசித்தது. ஒருநாள் புலி ஒன்று பயங்கர பசியோடு முனிவர் குடிலிலிருந்த சிறுத்தையை வேட்டையாட துரத்தியது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த சிறுத்தை முனிவரிடம் அடைக்கலமானது. முனிவர் அதன்மீது தீர்த்தத்தைத் தெளித்து அதை புலியாக மாற்றினார். பிறகு என்ன? அந்த புலியை ஓடஓட விரட்டியது. இப்படி நாயாக இருந்து உருமாற்றம் அடைந்த புலி நாளாக ஆக அதன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக தனது அசைவ குணத்தை அடைந்து அவ்வப்போது மற்ற மிருகங்களை வேட்டையாடி புசித்தது.
இந்த நிலையில் ஒருநாள் சிங்கம் ஒன்று குடிலிலிருந்த சிறுத்தையைத் துரத்தியது. உடனே எப்போதும்போல் ஓடிப்போய் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் அப்போதும் தீர்த்தத்தை தெளிக்க, அது மிகப்பெரிய சிங்கமாக மாறியது. தன்னைத் துரத்திய சிங்கத்தை துரத்தியடித்தது. சில நாட்கள் சென்று மிகப்பெரிய யானை ஒன்று அந்த சிங்கத்தை துரத்தியது. அதன் பலத்தின் முன்னே நாம் என்ன செய்யமுடியும் என்று பயந்துபோன சிங்கம் ஓடிச்சென்று முனிவரிடம் அடைக்கலமானது.
முனிவர் அந்த சிங்கத்தின்மீது தீர்த்தத்தைத் தெளித்து அதை ஒரு வினோதமான பெருத்த மிருகமாக மாற்றினார்,
இந்த மிருகத்தைக்கண்டு காட்டிலிருந்த அனைத்து மிருகங்களும் மற்ற இனங்களும் பயந்து மிரண்டு பதுங்கிக் கிடந்தன.
இதைக்கண்டு அந்த வினோத விலங்கு பெரும் சந்தோஷமடைந்தது. அதோடு அதற்கு மிகப்பெரிய ஆணவம் ஏற்பட்டது.
நம்மைவிட வலிமையான மிருகங்கள் காட்டில் இல்லை. நாமே ராஜா என்று கொக்கரித்த அந்த மிருகம், காட்டிலிருந்த மற்ற மிருகங்களை வேட்டையாடி தின்னத் தொடங்கியது. நாளுக்கு நாள் அந்த மிருகத்தின் கர்வம் அதிகரித்தது.
இதையெல்லாம் முனிவரும் அறிந்து வைத்திருந்தார். ஆனால் அந்த மிருகத்தைக் கண்டு அவர் பயப்படவே இல்லை. காட்டு விலங்குகள் எல்லாம் நம்மைக்கண்டு அஞ்சுகின்றன. இந்த முனிவர் மட்டும் பயப்படாமல் இருக்கிறாரே. இவரை அடித்துக் கொல்லவேண்டுமென்று முடிவுசெய்தது.
ஒருநாள் முனிவரைக் கொல்வதற்காக அந்த வினோதம் மிருகம் முனிவரை நெருங் கியது. முனிவர் தன் கமெண்டலத்திலிருந்த நீரை அள்ளி அந்த மிருகத்தின்மீது விசிறினார். உடனே அந்த வினோத மிருகம் மீண்டும் பழையபடி நாயாக மாறி விட்டது. இதன்மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்து அதை நல்லவழியில் பயனுள்ள வழியில் வாழவேண்டும்.
அதை விடுத்து பலம் பொருந்தியவர்கள், வலிமையுள்ளவர்கள், மற்றவர்களை அழிக்க நினைக்கக்கூடாது. இப்படித்தான் கடவுளிடமிருந்து பல வரங்களை பெற்ற அரக்கர்கள் அதை தவறாகப் பயன்படுத்தியதால் வரம் கொடுத்த தெய்வங்களே அவர்களை அழித்தார்கள். எனவே நாம் எப்போதும் நிதானத்துடன் வாழவேண்டும் என்பதே இதன் கருத்து.
இப்படிப்பட்ட வலிமை பொருந்திய இறைவன் சிவபெருமான் பழமலை நாதராக விருத்தகிரீஸ்வரராக அம்பாள் விருத்தாம்பிகையுடன் அருளாட்சி செய்துவருகிறார் வெங்கனூர் கிராமத்தில்.
அதேபோல் ஒரு பணக்காரரின் ஆணவத்தை அழித்தார் மக்களைக் காக்க அவதாரம் எடுத்த பெருமாள். ஒரு கிராமத்தில் ஊர் ஊராகச் தலையில் சுமந்துசென்று துணி வியாபாரம் செய்துவந்தார் கோவிந்தன் என்பவர். இவர் பெருமாளின் தீவிர பக்தர். மாதந்தோறும் வரும் துவாதசியன்று யாராவது இரண்டு பெருமாள் பக்தர்களை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, அவர்களுக்கு விருந்துவைத்து சாப்பிட சொல்வார். அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து உபசரித்து அனுப்பும்போது வழிச்செலவுக்கு தன்னால் இயன்ற சிறு தொகையைக் கொடுத்து அனுப்புவதை வழக்கமாக செய்துவந்தார். ஒரு மாத துவாதசியன்று அந்த ஊரில் பெரும் செல்வந்தரான ஒருவர் ஏகாதசி உபவாசம் செய்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம், தட்சணை கொடுக்கப்போவதாக பலரும் பேசிக்கொண்டார்கள். அது உண்மை என்பது துவாதசி என்று தெரியவந்தது. அன்றைக்கு கோவிந்தன் வழக்கமாக இரு வயோதிகர்களுக்கு விருந்து வைக்கத் தேடினார். யாரும் கிடைக்கவில்லை. எல்லாரும் பணக்காரர் அளித்த விருந்தை சாப்பிட சென்றுவிட்டனர். கோவிந்தன் அன்று முழுவதும் விரதமிருந்து நதியில் குளித்துவிட்டு, விரத பூஜையை நடத்தினார். யாராவது இருவர் வந்து சாப்பிடும் வரை அவரும் அவரது மனைவியும் பசியோடு காத்திருந்தார்கள்.
பணக்காரர் வீட்டு விருந்தில் பலவிதமான உணவுப் பண்டங்கள், வகை வகையான காய்கறிகள் இப்படி தடபுடலான விருந்தை சாப்பிடுவதை விட்டுவிட்டு ஏழையான கோவிந்தன் வீட்டுக்கு யார் வருவார்கள்? விடாமுயற்சியாக தெருத்தெருவாக தேடிச் சென்றார் கோவிந்தன். அப்போது ஒரு வயதான முதியவர், அவரது மனைவி, வயதான கிழவி ஆகியோ ரைக் கண்டார். துவாதசி விருந்துக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் இருவரும் சம்மதித்தனர். மிக்க மகிழ்ச்சி என்று சாஷ்டாங்கமாக அவர்கள் காலில் விழுந்து வீட்டுக்கு அழைத்துச்சென்று விரதத்தை முடித்து அவர்களை சந்தோஷமாக சாப்பிட செய்தார். சாப்பிட்டு முடிந்ததும், தாம்பூலம் கொடுத்து வழிச்செலவுக்கு ஒரு நாணயத்தையும் கொடுத்தார் கோவிந்தன்.
அப்போது கோவிந்தன் அவர்களைப் பார்த்து, "இதே ஊரில் பணக்காரர் ஒருவர் ஆயிரம் பேருக்கு வகை வகையான உணவை விருந்து வைக்கிறார்.
அப்படிப்பட்ட ருசியான விருந்தில் கலந்துகொண்டு சாப்பிடாமல். இந்த ஏழையின் அழைப்பை ஏற்று வீட்டுக்கு வந்து சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டீர்களே'' என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
அப்போது அந்த தம்பதிகள், அந்த பணக்கார ஆணவத்தோடும் தனது பணக்கார வறட்டு கௌரவத்திற்காகவும் அன்னதானம் நடத்துகிறார்.
ஆனால் உள்ளன்போடு எளிய உணவாக நீ அளித்தது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுவே பெரும் மனநிறைவு எங்களுக்கு. அப்படியே அந்த பணக்காரர் விருந்துக்கு சென்றிருந்தாலும் சாப்பாடு தரமாட்டார்கள்'' என்று முதியவர் சொல்ல.. "ஏன் ஐயா அப்படி சொல்கிறீர்கள்? ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் போடும்போது உங்களுக்கு மட்டும் கிடைக்காதா என்ன?'' என்று கோவிந்தன் கேட்க, அதற்குப் பெரியவர், "அந்த பணக்காரர் ஆயிரம் பேர்களுக்கு முன்கூட்டியே அனுமதி சீட்டு வழங்கிவிட்டார். அதற்குமேல் ஒருவர் போனால்கூட அவர்களுக்கு சாப்பாடு இல்லை. நீ வேண்டுமானால் நேரில் என்னோடு வா. அங்கே என்ன நடக்கிறது என்று பார்'' என்று கூற தம்பதிகளுடன் கோவிந்தன் பணக்காரர் நடத்திய விருந்து மண்டபத்திற்குச் சென்றார்.
அங்கே வகை வகையான உணவுகள். நீண்ட வாழையிலை. வரிசை வரிசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பந்தியில் போய் பெரியவர் உட்கார, அங்கே காவலுக்கு நின்ற ஒருவர் "அனுமதி சீட்டு இருக்கா?' என்று கேட்க, "இல்லை' என்று பெரியவர் சொன்னதும், அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக. "அனுமதி சீட்டு இருந்தால்தான் சாப்பாடு' என்று தள்ளிவிட்டார். இரண்டாவதாக ஒரு பந்தியில் பெரியவர் உட்கார, அங்கே இரண்டு மனிதர்கள் "அனுமதி சீட்டு இருக்கா' என்று கேட்க, பெரியவர் "இல்லை' என்றதும் அவரை அடிக்காத குறையாகத் துரத்தினார். மூன்றாவதாக ஒரு பந்தியில் போய் பெரியவர் அமர, அங்கேயும் பணக்காரரின் வேலையாட்கள் கையில் வைத்திருந்த தடியால் ஓங்கி பெரியவர் முதுகில் அடித்தார்கள். அந்த அடி அங்கிருந்த அனைவர் முதுகிலும் சுளீர் என விழுந்தது. ஐயோ என்று அலறினார்கள். அப்போது தான் அந்தப் பணக்காரர் தன் ஆணவப் போக்கை உணர்ந்தார்.
அடிவாங்கிய பெரியவரைத் தேடினார் கோவிந்தன். அவரையும் காணோம்; அவர் அருகில் நின்றிருந்த கிழவியையும் காணோம். அப்போது தான் கோவிந்தன். தன் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டது சாட்சாத் பெருமாள், மகாலட்சுமி ஆகிய இருவரும்தான் என்பதை உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இவர் மட்டுமல்ல; அனைவரும் அறிந்தனர். விருந்து வைத்த பணக்கார பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு வேண்டினார். அன்றோடு அவரது ஆணவம் அழிந்தது. இப்படி ஆணவத்தை அடக்கி பணக்காரர்கள்முதல் சாதாரண ஏழைகள்வரை அனைவரும் சமம் என்பதை உணர்த்தி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கும் வரங்களை வாரி வழங்குகிறார் வெங்கனூர் கிராமத்தி லுள்ள கம்பம் பெருமாள், மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடனான வரதராஜப் பெருமாள்.
இப்படி அரியும் சிவனும் அருகருகே அமர்ந்து அருளாட்சி செய்யும் வெங்கனூரி லுள்ள பழகமலைநாதர் ஆலயம் எப்படி உருவானது? ஊரைச் சேர்ந்த சிலர் மாதம் இருமுறை வரும் பிரதோஷ காலங்களில் தவறாமல் விருத்தாசலத்திற்கு நடந்தே சென்று, பழமலைநாதர், அம்பாள்கள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை, நந்திகேஸ்வரர் ஆகியோரை வழிபட்டு வருவது வழக்கம். மழைக்காலங்களில், ஆறு, ஓடைகளில் தண்ணீர் நிறைந்து ஓடும்.
அதை கடந்து கோவிலுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். ஒருமுறை இது குறித்து விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் தரிசனம் செய்யும்போது மனமுருக வேண்டி நின்றனர். அப்போது அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது "பக்தர்களே, மழைக்காலங்களில் உங்கள் உயிரை துச்சமாக மதித்து ஆறு, ஓடைகளைக் கடந்து வந்து வணங்குவது என்னை நெகிழ வைத்தது. எனவே இனிமேல் அதுபோல் சிரமப்பட்டு இங்கு வரவேண்டாம். என் பெயரால் உங்கள் ஊரிலேயே ஒரு ஆலயம் உருவாக்குங்கள். நான் உங்களுக்கு அங்கேயே தரிசனம் தருகிறேன்' என்றது இறைவனின் குரல்.
சந்தோஷம் அடைந்த பக்தர்கள் தங்கள் ஊருக்கு வந்ததும் சிவனுக்குக் கோவில் எழுப்பினார்கள். அப்படி உருவானதுதான் பெருமாள் கோவில் அருகே ஒரே வளாகத்தில் அமைந்துள்ள பழமலைநாதர், விருத்தாம்பிகை ஆலயம்.
இவ்வாலய இறைவன், இறைவியைக் குறித்து அர்ச்சகர், பரமசிவம் கூறும்போது, "பல்வேறு கிராமங்களிலிருந்து ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் தங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை வாங்கி வந்து கொடுக்கிறார்கள். பிரதோஷத்தில் கலந்து கொள்கிறவர்கள் அனைவருக்கும் நினைத்த காரியம் நிறைவேறுகிறது. திருமணத் தடை, வியாபாரத்தில் சுணக்கம், குடும்பத்தில் கணவன்- மனைவி கருத்து வேறுபாடு உள்ளவர் கள் பிரதோஷ காலத்தில் வந்து வழிபட்டு தங்கள் இன்னல்கள் நீங்கி சந்தோஷமாக வாழ்கிறார்கள். பிரதோஷம் மட்டுமல்ல; அனைத்து சிவனுக்குரிய திருவிழாக்கள் சிறப் பாக நடைபெறுகிறது. இறைவனுக்கு அருகே மேற்கு நோக்கி வள்ளி, தெய்வானையுடன் முருகன், அவருக்கு வலதுபுறம் நவகிரகம். இப்படி அனைத்து தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ள கோவில்.
மையத்தில் கம்பம் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருளாட்சி செய்துவருகிறார். இவருக்கு சனிக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடை பெறுகிறது. வாரம்தோறும் சனிக்கிழமையன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றக் கோரி வருகிறார்கள். அனைத்து வேண்டுதலை யும் நிறைவேற்றி வைக்கிறார் பெருமாள்.
அதற்கு கைம்மாறாக பக்தர்கள் தெருக்கூத்து வைப்பது, பசு, கன்றுகளை நேர்த்திக்கடனாகக் கொண்டுவந்து கொடுப்பது, அன்னதானம் என சனிக்கிழமைதோறும் மக்கள் திரள் திரளாக வந்து பெருமாளையும் பழமலைநாதர், முருகனையும் ஒருங்கே வழிபட்டுச் செல்கிறார் கள்'' என்றார்.
"வெங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார்- சிவசக்தி தம்பதிகளுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நீண்டநாட்களாக ஆண் குழந்தை இல்லை. பெருமாளிடம் வேண்டுதல் வைத்தனர்.
பெருமாள் அருளால் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வரமளித்த பெருமாள் கோவிலுக்கு சந்தோஷத்துடன் பல சிறப்புகளைச் செய்த தம்பதிகள், இரண்டு வெள்ளியிலான சடாரிகளை தயார் செய்து காணிக்கையாக அளித்துள்ளனர். கோவிலுக்கு வழிபட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் அந்த சடாரியை வைத்து பெருமாளின் ஆசிர்வாதம் வழங்கப்படுகிறது'' என்கிறார்கள். கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார், கம்பத்தை வழிபாடு செய்துவரும் பூசாரி மருதமுத்து ஆகியோர்.
அய்யனார், பச்சையம்மன், செல்லியம்மன் என கோவில்கள் நிறைந்த கிராமமாகத் திகழ்கிறது வெங்கனூர்.
அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள ராமநத்தம். இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் வடக்கில் உள்ளது. அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. ஆலய தொடர்புக்கு: 86109 32487, 78986 23500.