"முன்னே யுருவாய் முடிந்தது மெவ்விடம் சிங்கிலி அது

பெண்ணாணுமாகப் பிறந்த தலமடா சிங்கா.

தன்னையறியும் தலமேது சொல்லடி சிங்கிலி அது

கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா.'

Advertisment

-பீர் முகம்மது

அகத்தியர்: காக புசுண்டரே, கர்மவினைகளின் தாக்கம் பற்றி அறிந்தவரே, இந்த பூமியில் ஒரு குழந்தை தந்தையிடம் உருவாகி, தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து, சரீரம் பெறும் நிகழ்வு பற்றியும், தாயின் கர்ப்பத்தைவிட்டு வெளியேறி, பூமியில் பிறந்தபின்பு, காற்று மண்டலத்தில் உலாவிக்கொண்டிருந்த, அந்த குழந்தைக்குரிய உயிர்க்காற்று, அந்த சிசுவின் உடலுக்குள் எந்த உறுப்பின்மூலம், எப்போது, எவ்வாறு நுழைந்து உடலுக்கு உயிரைத் தருகின்றது. என்ற விவரங்களையும் விளக்கமாகக் கூறினீர்கள்.

இந்த பூமியில் பெண்ணிணத்தின் பெருமையையும், ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய்படும் வேதனைகளையும், மக்கள் அறிந்து உணர்ந்துகொள்ளும் வண்ணம் உரைத்தீர்கள். இனி இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் தோன்றுவதற்கு எது மூலமாக உள்ளது? என்பது பற்றியும், அதனை நீங்கள் அறிந்துகொண்ட அனுபவத்தை யும் விளக்கமாகக் கூறுங்கள்.

Advertisment

ஒரு கருகூடி, கர்ப்பந்தாங்கி, பெற்று வளர்த்த தன் தாயின், பெருமையை- அவர் தியாகச் செயலை எண்ணிப் பாராமல், பெற்ற தாய்க்கு, ஒவ்வொரு மனிதனும் என்னவிதமான செயல்களைச் செய்து, தாயின் சாபத்தை தனக்குத்தானே எவ்வாறு உருவாக்கிக்கொள்கின்றார்கள். பெற்ற தாய் விட்ட சாபத்தால், அவர்களின் அடுத் தடுத்த பிறவிகளிலும், அவர்களின் வம்ச வாரிசுகள் தங்கள் வாழ்க்கையில் அடைந்து அனுபவிக்கப்போகும் துன்பங்களையும் பற்றி தெளிவாகக் கூறுங்கள்.

ss

காகபுசுண்டர்: இந்த அண்டத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவரே, பாமரனுக்கும் பகுத்தறிவை போதித்தவரே, உடல், உயிர், ஆன்மா, இம்மூன்றின் செயல் நிலை பற்றிய உண்மையை அறிந்து, உலக மக்களுக்குக் கூறியவரே, என் ஆசானே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிக்கு என் பணிவான வணக்கங்கள். இந்த பூமியில் அனைத்து உயிரினங்களும் எந்த சக்தியால் படைக்கப்பட்டு வருகின்றது, என்ற தங்களின் கேள்விக்கு, என் அனுபவத்தில் நான் கண்டறிந்து கொண்டதைப் பற்றி முதலில் கூறுகின்றேன்.

"பாரப்பா ஆகாயம் செல்லும்போது

பாலகனே சக்கரம்தான் சுற்றி யாட

நானப்பா சக்கரத்தைப் பிசகொட்டாமல்

அதன்மேலே யேறியுந்தா னப்பாற் சென்றேன்.

நேரப்பா நெடுந்தூரம் போகும்போது

நிச்சயமாய் கம்பத்தின் நிலையைக் கண்டேன்

வீரப்பா அக்னிபோல் படர்ந்து நிற்கும்

வெளியொன்றுந் தெரியாமலிருக்கும் தானே.'

அகத்தியர் பெருமானே, இச்சபையில் குழுமி இருக்கும் சித்தர் பெருமக்களே, சூரியன் உடைந்து சிதறியபோது, அதில் உடைந்த பாகங்கள் அண்டத்தில் சிதறி. தெறித்தன, அதில் ஒரு சிதறிய துண்டுதான் இந்த பூமி. இந்த மண்ணுலகில் கடல்நீர் பொங்கி, பூமி பிளந்து, இயற்கை மாறுபட்டு பிரளயம் தோன்றும்போது, காக ரூபத்தில் நான் ஆகாயத்தில் பறந்து, அலைந்து திரியும் போது, ஒரு நெருப்புக்கோளம் சக்கரம்போல், சுழன்று, சுழன்று வந்தது. காகரூபமாக இருந்த நான் அந்த சக்கரத்தின்மேலே ஏறிக்கொண்டேன். அகத்தியர் பெருமான் எனக்கு போதித்த வாசியோகத்தை முறையாகச் செய்து 10 விதமான சக்திகளையும் பெற்றவன் என்பதால், பஞ்சபூத சக்திகள் எனக்கு அடங்கி, என் ஆணைக்குக் கட்டுப் பட்டு இருப்பதால், அந்த அக்னி சக்தி எனக்கு எந்த பாதிப்பையும் செய்யவில்லை.

அந்த நெருப்பு சக்கரத்தில் ஏறி நான் சென்றபோது, அதில் ஒரு அக்னி கம்பம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதைப் பற்றியும், அதில் கண்ணால் கண்டதைப் பற்றியும் இன்னும் கூறுகின்றேன்.

"இருக்குமடா எங்குமொன்றாய் அக்னிக் கம்பம்

என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா

உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்

ஒகோகோ அவள் உருவைப் பார்க்கும்போது

பெருக்கவே முன்பார்த்தாற் புருட ரூபம்

புத்திரனே பின் பார்த்தாற் பெண்போல் ரூபம்'

அக்னி சக்கரத்தில் ஏறி சுற்றிவரும்போது, அண்டத்தையே அடைந்துக் கொண்டது போல், ஒரு நெருப்புதான் அதில் தெரிந்தது. அந்த தூணில் நான் பார்த்தது ஒரு பெண் உருவம், பெண்முகம். அந்த அக்னி கம்பம் சுற்றி சுழன்று வரும்போது, அந்த உருவத்தின் முன்பக்கம் ஒரு ஆணின் உருவமாகத் தெரிந்தது. கம்பத்தின் சுழற்சியால், பின்பக்கம் பார்க்கும்போது அது பெண்ணின் உருவ மாகத் தோற்றமளித்தது.

இந்த ஆண், பெண் இருவித தோற்றத் தையும் நான் பார்த்தபோது, பெண்ணில் இருந்துதான் ஆண் தோன்றினான். ஆண் சக்தியையும், பெண்ணின் சக்தி இவை இரண்டையும், தன்னுள் ஒருங்கே கொண்ட வள் பெண் என்றும், ஒரு ஆண் தனியாக இந்த பூமியில் உருவாக முடியாது, ஒரு பெண்தான் ஆண் இனத்தை உருவாக்க முடியும். ஒரு பெண்ணின் உள்ளேதான் ஒரு ஆண் மறைந்து, அடக்கமாகி உள்ளான். ஆணி ணத்தை தன்னுள் அடக்கி வைத்துக் கொள்ளும் சக்தி கொண்டவள் பெண் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த அக்னி கம்பத்தில் நான் கண்டஆணும், பெண்ணும்தான் இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரின் தாயும், தந்தையும் என்பதை யும் நான் உணர்ந்து கொண்டேன்.

"பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால்

பெண்ணொருத்தி தானாதிலே நின்ற கோலம்

கரந்ததையா யிவ்வளவும் அந்த மாது

சூட்சுமமே அல்லாது வேறொன் றில்லை.'

இந்த பூமியில் உயிரினங்களைப் பிறப் பித்துக் கொண்டிருக்கும் மூல சக்தி எது? அது உயிர்களை எவ்வாறு தோற்றுவிக்கின்றது? உயிரினங்கள் எதில் இருந்து தோன்றி பூமியில் பிறக்கின்றன என்பதையும் கூறுகின்றேன். அண்டத்தில் சுற்றிவரும் அந்த நெருப்புத் தூணிலே இருக்கும் பெண்ணிடம இருந்துதான் உயிர்கள் இந்த மண்ணுலகில் பிறப்பிக்கப்படுகின்றது. உயிர்கள் உருவாவதற்கு மூலகாரண சூட்சு மமே பெண்தான். வேறு எந்த சக்தியாலும் இந்த மண்ணுலகில் எந்த ஒரு உயிரையும் படைக்க முடியாது. என்பதே நான் கண்களால் பார்த்து, அனுபவத்தால் அறிந்த உண்மை.

கிரகங்கள், பஞ்சபூதங்கள், கடவுள், தெய்வங்கள் போன்று இன்னும் உள்ள அனைத்து சக்திகளையும்விட அதிக சக்தி கொண்டது பெண்ணினம்தான். பொதுவாக அனைத்து உயிரினங்களையும் உருவாக்கும் அதீத சக்தி கொண்டவள் பெண்தான்.

ஒரு குடும்பத்தில் வாழவந்த பெண், பிறந்த பெண், தனக்கு சம்பந்தமே இல்லாத பெண் களுக்கு செய்யப்படும் பாவமும், கொடுமையும் அந்த வம்சத்தையே நிர்மூலமாகக்கி விடும். ஒரு நாட்டு மன்னனின் ஆட்சியில், அதிகாரத் திமிரால் செங்கோலை, கொடுங்கோலாக உபயோகித்து, எந்த நாட்டில் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப் படுகின்றார்களோ, அந்த மன்னன் பட்டம் இழந்து, பதவி இழந்து, ஆட்சியை இடிந்து நாடிழந்து அலைவான்.

ஆசான் அகத்தியர் பெருமானே, இனி உங்களின் அடுத்த கேள்விக்கு பதிலைக் கூறுகின்றேன்.

அகத்தியர்: காகபுசுண்டரே இன்று சபை முடியும் நேரம் வந்துவிட்டது. நாளை தமிழ்ச் சபையில் உங்கள் விளக்கத்தைக் கூறுங்கள். இன்று சபை கலையலாம்.

இன்று நாம் படிக்கும் புராண, இதிகாசங் களிலும், சரித்திர வரலாறுகளிலும், பெண்களுக்குச் செய்த பாவத்தால், கொடுமைகளால், அந்த நாட்டு கொடுங் கோல் ஆட்சி செய்த மன்னர்கள், பட்டம், பதவி இழந்து, நாடிழந்து, உயிரை விட்டார் கள் என்பதை அறிய முடிகின்றது.

மகாவிஷ்ணு தன்னுடைய எட்டு அவதாரங் களில், மச்சவதாரம் முதல் வாமன அவதாரம் வரை உள்ள ஐந்து அவதாரங்களில், பல மன்னர் களைக்கொன்று, அவர்களின் மனைவிகளை விதவைகளாக்கி, வாழ்க்கையை இழக்கச் செய்தார். வாழ்விழந்த அந்தப் பெண் களின் சாபத்தைப் பெற்றதால், ஆறாவது அவதாரமான "பலராமன்'' அவதாரத்தில் ஒரு பெண்ணை மணந்துகொள்ள முடியாமல், ஒரு குடும்பம் இல்லாமல், தனக்கென்று ஒரு நாடில்லாமல் பெண்ணின் சாபப் பலனை அனுபவித்தார்.

இராமாயணத்தில், இராமனின் மனைவி சீதையை இலங்கை வேந்தன் இராவணன் சிறையெடுத்து கவர்ந்து சென்று, இலங்கை அசோகவனத்தில் சிறையில் வைத்து கொடுமைபடுத்தியதால் இறுதியில் இராம, இராவண யுத்தத்தில் தன் சகோதரர்களையும், புத்திரர்களையும் இழந்து, வம்சம் அழிந்து, போரில் தானும் மரணமடைந்தான்.

அவன் ஆட்சிசெய்த இலங்கை தேசமும் அழிந்தது. இராவணன் பெரிய சிவபக்தன் என்றும், சிவனிடம் பல வரங்களைப் பெற்றவன் என்றும் இராமாயணத்தில் கூறுப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சீதையின் சாபத்தை, சிவனின் வரத்தால் தடுக்கமுடியவில்லை. பெண்களுக்கு பாவம் செய்தவன், பெரிய பக்தன் ஆனாலும், கடவுளுக்கு பல கோவில்களைக் கட்டி பூஜை, யாகம் செய்தாலும், அவனை வரம் தந்த கடவுள்கூட காப்பாற்றமாட்டார்.

இராமாயண காவிய நாயகன் இராமன், கர்ப்பிணி என்றும் பாராமல் தன் மனைவி சீதையை, அயோத்தியைவிட்டு வெளியேற்றி, காட்டிற்கு அனுப்பி மிகப்பெரும் பாவத்தைச் செய்தார். சீதைக்குச் செய்த கொடுமையால் தன் வாழ்வில் மிகப்பெரும் துயரத்தையும், மனக்குழப்பத்தையும் அடைந்து, நிம்மதி இல்லாமல் வாழ்ந்து, இறுதியில் சரயு நதிக்குச் சென்று, நதி நீரில் மூழ்கி தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார்.

மகாபாரத்தில் துரியோதனன், துச்சாதனன கௌரவர்கள், தங்கள் சகோதரர்கள் பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை அரச சபையில் அனைவரும் பார்த்திருக்க, அவளின் ஆடையை அவிழ்த்து அவளை அவமானப்படுத்தி, துன்புறுத்தி மனம் கலங்கச் செய்த பாவத்தால், பாதிக்கப்பட்ட திரௌபதிவிட்ட சாபத்தால் மகாபாரதப் போரில் கௌரவர்களும், அவர்களுக்கு உதவி செய்த அனைவரும் மரணத்தை எய்தினார்கள் அவர்கள் வம்சமும் அழிந்தது.

நமது தமிழ் மன்னர்களின் ஆட்சியிலும், மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன், தவறான நீதி கூறி, கோவலனைக் கொன்றதால், பாதிக்கப்பட்டு கணவனை இழந்த மனைவி கண்ணகி, விட்ட சாபத்தால், அரச சபையிலேயே வெண் கொற்றக்குடை முறிந்து, செங்கோல் உடைந்து, அரியணைப் பிளந்து பாண்டிய மன்னனும், அவர் பட்டத்தரசியும் மரணத்தை அடைந்தார்கள். கண்ணகியின் சாபத்தால் அவன் தலை நகரம் மதுரையும் அகனியால் தீக்கரையாகி, எரிக்கப்பட்டு அழிந்தது.

இன்றைய நாளில், இலங்கையில், ராஜபக்ஷே ஆட்சியில் பல தமிழ்ப் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, பல துன்பங்களை அடைந்து, உடல் உறுப்புகளை இழந்து, கொலை செய்யப்பட்டு உயிரையும் துறந் தார்கள். பெண்களுக்குச் செய்த இந்த பாவ செயல்களால், ராஜபக்ஷே ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும்போதே, பட்டம், பதவி இழந்து, நாடிழந்து சொந்த நாட்டைவிட்டு, தன் நாட்டு மக்களாலேயே விரட்டப்பட்டார். அரசியலில் இருந்து அப் புறத்தப்பட்டு அரசியல் அனாதையாகி தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிற்கு உதவி செய்த அண்டை நாட்டு ஆட்சியாளர் களையும், அந்த நாட்டு தலைவர்களையும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் சாபம் விட்டுவைக்கவில்லை. அவர்களும் உயிரைத் துறந்து, பட்டம் பதவி, ஆட்சி, அதிகாரம் இழந்து, நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்கள். வம்சம் விருததியடைய முடியாமல் பெண் சாபம் தடுத்து வருகின்றது இந்த பெண் சாபத்தை நிவர்த்தி செய்தால் இந்த வம்சத்தார் பெருமையடையலாம்.

இன்றைய நாளிலும் இந்திய தேசத்தில், பல மாநிலங்களில் பெண்கள், திரௌபதியைப் போல் ஆடை களைந்தும், வன்கொடுமை செய்யப்பட்டும் கற்பழிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் அவமானப்படுத்தப்படுகின் றார்கள். நாட்டை ஆட்சி செய்பவர்களின் ஆணவ அதிகாரத்தால், பதவித் திமிரால் இதுபோன்று பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் தொடர் கதையாகி வருகின்றது. பாதிக்கப்பட்டு, துன்பட்ட இந்த நாட்டுப் பெண்கள் மனம் வெறுத்துவிட்ட சாபம் இந்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னனையும், அவனுக்கு உதவிசெய்து, துணையாக இருப்பவர்களின் பட்டம், பதவி, ஆட்சி, அதிகாரத்தை இழக்கச் செய்து, நாடிழக்கச் செய்து, ராஜபக்ஷேவைப் போன்று அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள். இராவணனுக்கு நிகழ்ந்ததைப் போன்று எந்த கடவுளும், பூஜையும், யாகமும் இவர்களுக்கு உதவி செய்யாது, பலன் தராது.

இதுபோன்று மக்கள் மன்றத்திலும், தன் ஆளுமைக்குட்பட்ட நாட்டுப் பகுதிகளிலும் பெண்களை அவமானப்படுத்தியதைக் கண்டிக்காத, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காத மன்னர்களும், தலைமை பீடத்தில் இருக்கும் பல தலைவர்களும் பதவியை இழந்துள்ளார்கள். புராண, இதிகாச, சரித்திர வரலாறுகளின் உண்மையை அறிந்தவர்களுக்கு இது நன்கு தெரியும். புரியும். பாவ- சாபத்தின் தாக்கம் மறைந்து செயல்படும், இது காலத்தின் கட்டாயம், காகபுசுண்டர் நாடி வாக்கு பொய்த்தது இல்லை.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)