எப்படி யுலகில் உருவானோம் சிங்கி- அது அப்பன் தன்னடப்புக்கு தாய் ஒப்பியதால் சிங்கா.
பொருள்: இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும், அவன் தகப்பனின் மோக ஆசைக்கு, அவன் தாய் ஒப்புக்கொண்டு, இருவரும் தாம்பத்திய உறவு கொள்வதால், தந்தையின் விந்துணுக்கள், தாயின் கருவறையில் சென்று சேர்ந்து, கருவாகி, உருவாகி பிறக்கின்றார்களே தவிர, கடவுள் சக்தி, மந்திர சக்தியால், ஒரு பெண்ணை கர்ப்பம் அடையச்செய்து, ஒரு குழந்தையை உருவாக்க முடியாது. பிறப்பிக்கமுடியாது.
இந்த வுடலுக்கு உயிர்வந்தது எப்படி சிங்கி- அது தொந்தி நடுக்குழி தொப்புள் வழியடா சிங்கா.
தாயின் கர்ப்பத்தில் இருந்து, பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அதன் உயிர் சக்தி, உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளின் வழியே உடலைக் கடந்து உள்ளே புகுவது இல்லை. தாயின் கர்ப்பத்தில், தாய்க்கும், சேய்க்கும் தொடர்பினைத் தந்துகொண்டு இருக்கும் தொப்புள் கொடியை, குழந்தை பிறந்த பின்பு, அதன் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும், குழந்தையையும், தனித்தனியாக பிரிக்கும்போது தொப்புள் கொடி வெட்டப் பட்ட அதே நொடியில், அந்தக் குழந்தையின் உயிர்க்காற்று, தொப்புள் கொடி வழியாக சிசுவின் உடலினுள் புகுந்து, அதன் இதயத்தை இயங்கச்செய்து, உடல் உறுப்புகளில் உயிர்க் காற்று பரவி குழந்தையை உயிருடன் இயங்கச் செய்கின்றது.
(ஒரு குழந்தை பிறந்தபிறகு, அசைவின்றி, சடலம்போல், எந்தவித சப்தமும், அழுகுரலும் இல்லாமல் இருந்தால், பிறந்த அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும், பிடித்து, தலைகீழாக த
எப்படி யுலகில் உருவானோம் சிங்கி- அது அப்பன் தன்னடப்புக்கு தாய் ஒப்பியதால் சிங்கா.
பொருள்: இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும், அவன் தகப்பனின் மோக ஆசைக்கு, அவன் தாய் ஒப்புக்கொண்டு, இருவரும் தாம்பத்திய உறவு கொள்வதால், தந்தையின் விந்துணுக்கள், தாயின் கருவறையில் சென்று சேர்ந்து, கருவாகி, உருவாகி பிறக்கின்றார்களே தவிர, கடவுள் சக்தி, மந்திர சக்தியால், ஒரு பெண்ணை கர்ப்பம் அடையச்செய்து, ஒரு குழந்தையை உருவாக்க முடியாது. பிறப்பிக்கமுடியாது.
இந்த வுடலுக்கு உயிர்வந்தது எப்படி சிங்கி- அது தொந்தி நடுக்குழி தொப்புள் வழியடா சிங்கா.
தாயின் கர்ப்பத்தில் இருந்து, பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அதன் உயிர் சக்தி, உடம்பிலுள்ள ஒன்பது துவாரங்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளின் வழியே உடலைக் கடந்து உள்ளே புகுவது இல்லை. தாயின் கர்ப்பத்தில், தாய்க்கும், சேய்க்கும் தொடர்பினைத் தந்துகொண்டு இருக்கும் தொப்புள் கொடியை, குழந்தை பிறந்த பின்பு, அதன் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும், குழந்தையையும், தனித்தனியாக பிரிக்கும்போது தொப்புள் கொடி வெட்டப் பட்ட அதே நொடியில், அந்தக் குழந்தையின் உயிர்க்காற்று, தொப்புள் கொடி வழியாக சிசுவின் உடலினுள் புகுந்து, அதன் இதயத்தை இயங்கச்செய்து, உடல் உறுப்புகளில் உயிர்க் காற்று பரவி குழந்தையை உயிருடன் இயங்கச் செய்கின்றது.
(ஒரு குழந்தை பிறந்தபிறகு, அசைவின்றி, சடலம்போல், எந்தவித சப்தமும், அழுகுரலும் இல்லாமல் இருந்தால், பிறந்த அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும், பிடித்து, தலைகீழாக தொங்கவிட்டு, குலுக்கு வார்கள். இவ்வாறு செய்வது ஏன்? என்றால், தொப்புள் கொடியில் ஏதாவது அடைப்பு இருந்து, உயிர்காற்று, இதயத்திற்கு செல்லமுடியாமல் தடை ஏற்பட்டு இருந்தால், அந்த தடை விலகி, உயிர்க்காற்று இதயத்தை அடைந்து, சுவாசம் இயல்பாகிவிடும். குழந்தைக்கு உயிர் உண்டாகிவிடும்).
முப்பொருளென்று நீ முன். சொன்னதாரடி சிங்கி- அது அப்பனுமாயிரம் நாதியாம் நாமடா சிங்கா.
ஒரு மனிதன் மூன்று சக்திகளால், உருவாகி, செயல்பட்டு வாழ்கின்றான். ஒருவன் தனித்த மனிதன் அல்ல. அவன் தந்தைவழி முன்னோர்,
தாயின் வம்ச முன்னோர்கள், அவன் முற்பிறவி களில் மற்றவர்களுக்குச் செய்த பாவ- சாப- புண்ணிய பதிவுகள் என்ற மூன்று சக்திகளைக் கொண்டுப் பிறக்கின்றான். ஒருவனின் உயிர், உடல், ஆன்மா, குணம், செயல்களில் அவனின் முன்னோர்கள், உடலைக் கடந்து அவன் உள்ளே இருக்கின்றார்கள்.
அவனின் இப்பிறவி வாழ்க்கையை நிர்ணயித்து நடத்துகின்றார்கள்.
என்ன விதமாக தன்னையறிவது சிங்கி- அது தன்னவன் தாய் தந்தையாகி நாமாவது சிங்கா.
ஒருவன், இப்பிறவி வாழ்வில் அனுபவிக் கும், நன்மை- தீமை நிகழ்வுகளுக்கு காரண, காரியம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அவனின் வம்ச முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையை அறிந்துகொண்டால், அவன் இப்பிறவி வாழ்வின் நிகழ்வுகளுக்கு காரணத்தை அறிந்துகொள்ள முடியும். தன் வாழ்வை சீர்படுத்தி, செம்மையான வாழ்வை அமைத்துக்கொள்ளமுடியும் என்று கூறி இப்பாடல்கள்மூலம் நம்மை தன்னையறிந்து தெளிவடையச் செய்கின்றார். அகத்தியரின் உத்தம சீடரான பீர்முகம்மது சித்தர்.
அகத்தியர்: புசுண்டரே, ஒரு பெண்ணின், கர்ப்ப நிலை பற்றியும், கருப்பையில், குழந்தையின் உடல் உறுப்புகள் வளர்ச்சி பற்றியும் கூறிய நீங்கள், ஆண்- பெண் தாம்பத்திய நிகழ்வினால் கருகூடும் ரகசிய முறையையும் கூறுங்கள்.
காகபுசுண்டர்: இந்த அண்டத்தில், இயற்கையின் அனைத்து செயல்களை யும், அறிந்த பூரண ஞானியே, இந்த பூமிக் கும், உயிரினங்களின் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பினை அனுபவத்தால் அறிந்து கூறிய என் ஆசான் அகத்தியர் திருவடியை, என் சிரம் தாழ்த்தி வணங்கு கின்றேன்.
ஒரு பெண்ணின் கர்ப்பகால நாட்கள், குழந்தையின் கருவளர்ச்சி, உடல் உறுப்புகள் வளர்ச்சி, மசக்கை காலம் பற்றியும் கூறினேன். இப்போது, தங்கள் ஆணைப்படி கருகூடும் ரகசிய நிகழ்வு நிலையைப் பற்றிக் கூறிவிட்டு, பின் தாயின் பேறுகால நிகழ்வைப் பற்றிக் கூறுகின்றேன்.
அகத்தியர் பெருமானே, இந்த மண்ணுலகில் மனிதன் முதலான விலங்கு, மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும், தாம்பத்திய உறவினால், அவைகள் கர்ப்பம் அடைவது, மிகமிக, ரகசியமான நிகழ்வாக, இயற்கை அமைத்துள் ளது. ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவு கொள்ளும்போது, பூமியின் வெளிப்புறத் திலுள்ள மண், நீர், சூரிய ஒளி, பூமியின் காற்று, ஆகாயம் என்ற இந்த ஐந்து, சக்தி களின் தாக்கமின்றி, இவற்றின் தொடர்பில் லாமல், இவைகள் அறியமுடியாத நிலையில், பெண்ணின் கர்ப்பத்தில் ஆணின் விந்தணுக் கள் சென்று சேர்கின்றது.
ஒரு பெண் கர்ப்பம் அடைவதை, பஞ்சபூதங்களும், கிரகங்களும், இன்னும் பலவிதமாக கூறப்படும் கடவுள்களாலும், தெய்வங்களாலும், சித்தர்கள், ரிஷிகள், ஞானி, மகான்கள் எனக் கூறப்படுவோராலும் அறியமுடியாது. ஏன்? பெண்ணிற்கு விந்தணு தரும் ஆணிற்கும், கருவைத் தாங்கி வளர்க்கும் அந்தப் பெண்ணிற்குமே, அப்போது தான் கர்ப்பம் அடையும் நிலையை தெரிந்துகொள்ளமுடியாது. சித்தர் ரகசியம், தெய்வ ரகசியம், தேவரகசியம் என்று மனிதர்கள் கூறும் ரகசியம்களைவிட மிகமிக ரகசியமாக பெண்ணின் கர்ப்பத்தில் கரு உருவாகின்றது என்பதே உண்மை.
ஆண்- பெண் உடலுறவு, பிறர் அறியாவண்ணம், ரகசியமாக நிகழ்கின்ற செயலாகும். பெண்ணுடன், ஆண் உடலுறவு கொள்ளும்போது, ஆணின் விந்தணு குழாய் போன்ற ஆணின் உறுப்புமூலம், பூமியின் வெளிப்புறத் தாக்கமின்றி, மிதமிகப் பாதுகாப்பாக, பெண்ணின் பிறப் புறுப்பின் உள்ளே சென்று, அவள் கர்ப்பப் பைக்கும், பிறப்புறுக்கும் தொடர்பைத் தரும் கருக்குழாய் வழியாக, பெண்ணின் கர்ப்பப் பையில் சேர்ந்து, கருவாகி, உருவாகி வளர்கின்றது.
ஒரு குழந்தை தாயின் கருவறையில், பஞ்சபூதங்கள், கிரகங்கள், பூமிக்காற்று, ஒளி இவற்றின் தாக்கமின்றி, தாயின் மூலம் உணவு, நீர், காற்று, வெப்பம் இவற்றைப் பெற்றுதான் வளர்ச்சியடைகின்றது. ஒவ்வொரு குழந்தையையும், ஒரு பெண்தான் உருவாக்கமுடியும். வேறு எந்த சக்தியாலும் உருவாக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு உடல் தந்து; கர்ப்பத்தில் வளர்த்து உருவாக்கிய தாய்தான் தெய்வம் என்று சித்தர்களாகிய, நாம் அறிந்துள்ளோம்.
ஒரு குழந்தை பஞ்சபூதங்கள், கிரகங்கள், பூமி அதன் வெளிப்புறக்காற்று, வெளிச்சம், வெப்பம், குளிர் போன்றவற்றை அது தாயின் கருவறையிலிருந்து, வெளியே வந்து, பூமியில் பிறந்தபிறகே, இவற்றை தாக்கம், தொடர்பினை முதன்முதலாக அந்தக் குழந்தை அடைகின்றது என்பதே உண்மை.
(இன்றையநாளில் மருத்துவர்கள், ஆணின் விந்தணுக்களை இதேபோன்று பஞ்சபூதங்களின் தாக்கம் இல்லாமல், குழாய்மூலம் பெண்ணின் கர்ப்பப் பையில் கொண்டுசென்று சேர்க்கின்றார்கள். இயற்கை நிர்ணயித்த இந்தக் கருகூடும் வழிமுறையே எந்த சக்தியாலும் மாற்றமுடியாது என்பதை நவீன மருத்துவம்மூலம் நிரூபணமாகின்றது.)
இனி குழந்தை பிறக்கும் நேரமே, பேறு காலமாகும். கருக்கூடிய நாளில் இருந்து, தன் கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு, ஒரு சிறு துன்பமும் இடையூறும் ஏற்படா வண்ணம் உணவருந்தி, மருந்துண்டு, கண்ணை இமை காப்பதுபோல், காப்பாற்றி வளர்ப்பவள்தான் தாய்.
பெண்களின் பிரசவகால நேரம், அந்த தாய்க்கு மறுபிறப்பு நிலையாகும். குழந்தை பிறக்கும்போது, அந்த தாய் அடையும் துன்பத்திற்கு, வேதனைக்கு ஈடாக உலகில் எந்த வேதனையையும் கூறமுடியாது என்பதே உண்மை. ஒரு பெண் தன்னுள் பேணி காப்பாற்றி வளர்ந்த குழந்தையை பிரசவிக்கும்போது, அவள் மரணத்தின் விளிம்பு நிலைக்கே சென்று பிழைத்துவருவாள்.
ஒவ்வொரு மனிதனையும், உருவாக்கி, இந்த பூமியில் பிறப்பித்து, பாலூட்டி வளர்த்து. மனிதனாக்கும், தாயான அந்த தெய்வத்தை தொழுது வணங்காமல், அலட்சியப்படுத்துபவன், உதாசீனப் படுத்த, மரியாதை தராமல் செயல்பட்டு வாழ்பவர்கள், தனக்குத்தானே தாயின் சாபத்தை தேடிக்கொள்கின்றான். தாய்க்கு செய்யும் பாவத்தால், தன் வம்ச வாரிசுகளுக்கும் சாபத்தை தேடி வைக்கின் றான்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)