சித்தர்கள் அருளிய வாசி யோகம் 70 - சித்தர்தாசன் சுந்தர்ஜி!

/idhalgal/om/vasi-yoga-by-siddhas-70-siddhardasan-sunderji

"மந்திரம் சொல்லுவார் தம்மை யறியார்

தனிமந்தி ரம் சொல்லுவார் பொருளை யறியார்

மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்'

(பாம்பாட்டிச் சித்தர்)

காகபுசுண்டர்: ஒரு குழந்தை, தந்தையின் விந்தில் இரண்டு மாதம் வளர்ந்து, தாயின் கர்ப்பத்தில் 275 நாள் முதல் 285 நாட்கள் பல நிலைகளில் வளர்ந்து, உடல் உருவாகி, ஒரு குழந்தையாக, தனது முற்பிறவி கர்மவினைப் பதிவுகளைத் தாங்கி, அவற்றை அனுபவிக்கச் செய்யக்கூடிய சரியான நாள், நேரத்தில் இந்த பூமியில் பிறக்கின்றது.

ஒரு குழந்தையை உருவாக்குவதில், பெண் ணின் பங்குதான் அதிகம். சீவராசிகளின் உடல் பெண்ணிணால் உருவாக்கப்படுவதால் சரீரத்தை "பெண்' என்றும் கூறுகின்றோம். பெண்ணினத்தை பஞ்சபூதங்களில் பூமிக்கு ஒப்பிடுகின்றோம்.

இந்த பூமிதான் அனைத்து உயிரினங்களை யும், தாவரங்களையும் தன்னுள் உருவாக்கி வளர்க்கின்றது. தான் உருவாக்கிய அனைத்து உயிர்களின் உடல்வளர்ச்சிக்குத் தேவையான, அனைத்துவகை உணவுப் பொருட்களையும், அவற்றின் நோய் தீர்க்கத் தேவையான மருத் துவ மூலிகைகளையும், தானே உற்பத்தி செய்து பூமி வழங்குகின்றது. மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களைத் தவிர, வேறு எந்தப் பொருளும் உடல் வளர்ச்சிக்கு உதவாது.

பூமியின் செயல்போன்றே, ஒரு சிசுவை, தன் கர்ப்பத்தில் தாங்கி, அதற்கு தான் உண்ணும் உணவு, நீர், காற்று, இவற்றைத் தந்து, தன்னுள் வைத்து வளர்த்து, பெற்றெடுத்து, தான்பெற்ற பிள்ளையின் உடல் வளர்ச்சிக்கு, தன் இரத்தத்தையே பாலாக மாற்றி, தன் குழந் தைக்கு ஊட்டி, உடல் வளர்ச்சி பெறச் செய்கின் றாள் தாய். அதனால்தான் பெற்ற தாயை பூமித்தாயுடன் ஒப்பிடுகின்றோம்.

இந்த பூமி, தன்னுள் விழுந்த ஒரு விதையை, முளைப்பருவம், செடிப் பருவம், பூப்பருவம், காய், கனிப்பருவம் என்று பல பருவங்களாக வளர்த்து, உருவாக்கு கின்றது. அதேபோன்றுதான் ஒரு பெண்ணும் கர்ப்பகால பருவம், மசக்கை கால பருவம், பேறு

"மந்திரம் சொல்லுவார் தம்மை யறியார்

தனிமந்தி ரம் சொல்லுவார் பொருளை யறியார்

மந்திரஞ் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள்

மதிலினைச் சுற்றுவார் வாயில் காணார்'

(பாம்பாட்டிச் சித்தர்)

காகபுசுண்டர்: ஒரு குழந்தை, தந்தையின் விந்தில் இரண்டு மாதம் வளர்ந்து, தாயின் கர்ப்பத்தில் 275 நாள் முதல் 285 நாட்கள் பல நிலைகளில் வளர்ந்து, உடல் உருவாகி, ஒரு குழந்தையாக, தனது முற்பிறவி கர்மவினைப் பதிவுகளைத் தாங்கி, அவற்றை அனுபவிக்கச் செய்யக்கூடிய சரியான நாள், நேரத்தில் இந்த பூமியில் பிறக்கின்றது.

ஒரு குழந்தையை உருவாக்குவதில், பெண் ணின் பங்குதான் அதிகம். சீவராசிகளின் உடல் பெண்ணிணால் உருவாக்கப்படுவதால் சரீரத்தை "பெண்' என்றும் கூறுகின்றோம். பெண்ணினத்தை பஞ்சபூதங்களில் பூமிக்கு ஒப்பிடுகின்றோம்.

இந்த பூமிதான் அனைத்து உயிரினங்களை யும், தாவரங்களையும் தன்னுள் உருவாக்கி வளர்க்கின்றது. தான் உருவாக்கிய அனைத்து உயிர்களின் உடல்வளர்ச்சிக்குத் தேவையான, அனைத்துவகை உணவுப் பொருட்களையும், அவற்றின் நோய் தீர்க்கத் தேவையான மருத் துவ மூலிகைகளையும், தானே உற்பத்தி செய்து பூமி வழங்குகின்றது. மண்ணில் உற்பத்தி யாகும் பொருட்களைத் தவிர, வேறு எந்தப் பொருளும் உடல் வளர்ச்சிக்கு உதவாது.

பூமியின் செயல்போன்றே, ஒரு சிசுவை, தன் கர்ப்பத்தில் தாங்கி, அதற்கு தான் உண்ணும் உணவு, நீர், காற்று, இவற்றைத் தந்து, தன்னுள் வைத்து வளர்த்து, பெற்றெடுத்து, தான்பெற்ற பிள்ளையின் உடல் வளர்ச்சிக்கு, தன் இரத்தத்தையே பாலாக மாற்றி, தன் குழந் தைக்கு ஊட்டி, உடல் வளர்ச்சி பெறச் செய்கின் றாள் தாய். அதனால்தான் பெற்ற தாயை பூமித்தாயுடன் ஒப்பிடுகின்றோம்.

இந்த பூமி, தன்னுள் விழுந்த ஒரு விதையை, முளைப்பருவம், செடிப் பருவம், பூப்பருவம், காய், கனிப்பருவம் என்று பல பருவங்களாக வளர்த்து, உருவாக்கு கின்றது. அதேபோன்றுதான் ஒரு பெண்ணும் கர்ப்பகால பருவம், மசக்கை கால பருவம், பேறு கால பருவம், குழந்தை வளர்ப்பு பருவம் என்று நான்கு நிலை களில் தன் குழந்தையை பெற்று, வளர்த்து, ஆளாக்குகின்றாள். ஒரு குழந்தையை உருவாக்குவதில் தந்தையின் பங்கு மூன்று நிமிடம். ஆனால் தாயின் பங்கு 30 மாதங்கள்.

வால்மீகி: புசுண்ட முனிவரே, மண்ணில் விதைத்த விதை, முளைவிட்டு, வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து, முற்றிய கனி கொடுப்பது போல், பெண்களுக்கு, பருவ காலங்களைக் கூறுகின்றீர்கள். அப்பருவ காலங்களைப் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: வணக்கத்திற்குரிய, வால்மீகி சித்தர் பெருமானே, தங்களின் கேள்விக்குரிய, பதிலை, இந்த பூமியில் பிறந்து, வாழும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். உங்கள் கேள்விமூலம், ஒரு தாய் தன் குழந்தையை, கரு உருவானதில் இருந்து, பெற்றெடுக்கும் வரை எவ்வளவு சிரமம், கஷ்டத்தை அனுபவிக் கின்றாள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

ஒரு சிசுவின் உடல் வளர்ச்சி நிலையைக் கூறுகின்றேன்.

ss

கர்ப்ப காலம்

ஒரு ஆணும், பெண்ணும் உறவு கொள்வதால், அந்தப் பெண் கருத் தரித்து கர்ப்பம் அடையும் காலமே, கர்ப்ப காலமாகும். ஒரு குழந்தை கருகூடி கர்ப்பம் அடைவதை ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பகால நாட்களே நிர்ண யம் செய்யும். பெண் கர்ப்பம் அடைய ஆணின் விந்து, காரணமானாலும், கர்ப்பம் அடைய தகுதியுடைய நாட்கள் அந்தப் பெண்ணின் சரீரத்தில்தான் அமைந் துள்ளது. பெண்ணின் கர்ப்பகால நாட்கள் பற்றிக் கூறுகின்றேன்.

சித்தர் பெருமக்களாகிய நாம் கணக்கீடு செய்து உருவாக்கிய ஒரு தமிழ்மாதம் என்பது, அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள் கொண்ட 27 நாட்கள் ஒரு மாத கால கணக்காகும். பெண்களின் மாதவிடாய் காலம் 27 நாட்கள் ஆகும். ஒரு குழந்தை தந்தையிடம் 2 மாதமும், தாயின் கர்ப்பத்தில் 10 மாதம் (270 நாட்கள்) இந்த 12 மாதங்கள் (324 நாட்கள்) உருவாகி வளர்ச்சி அடைந்து பிறக்கின்றது. ஒரு குழந்தையின் பிறப்புக்காலமே ஒரு வருட கணக்கீடு ஆகும்.

(இன்றையநாளில், ஜோதிடர்கள் கூறுவதுபோல், தசை, புக்தி, அந்தர கால பலன்கள் நடைபெறாமல் போவதற்கு, ஆங்கில வருடக்கணக்கீடு செய்து பலன் கூறுவதுதான் காரணம். ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாகி பிறக்கும் காலம் வரை உள்ள சித்தர்கள் கூறிய 270 நாட்களைகொண்டு கணக்கீடு செய்தால் தசை, புக்தி, பலன்கள் சரியாக இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஜோதிட சாஸ்திரம் உருவாக்கிய காலத்தில் ஆங்கில வருடக் கணக்கு கிடையாது.)

பெண்களுக்கு மாதந்தோறும், உதிரப் போக்கு உள்ள மூன்று அல்லது ஐந்து நாட்கள், மாதவிடாய்க் காலமாகும். இந்த நாட்களில், பெண்ணின் கர்ப்பை வாசல் திறந்து, கர்ப்ப பையிலுள்ள அழுக்குகள் வெளியேறி, கருப்பை சுத்தமாகும். இந்த மாதவிடாய் நாட்களில் ஆண், பெண் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது.

பெண்களுக்கு உதிரப்போக்கு நின்று, கர்ப்பப்பை சுத்தம் அடைந்து, மாதவிடாய் காலம் ஐந்து நாள் முடிந்து, அடுத்துவரும் 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 இந்த 12 நாட்களில் மட்டும், கர்ப்பப்பையில் புதிதாக கருமுட்டைகள் உருவாகும். இந்த 12 நாட்கள் மட்டும் பெண்ணின் கர்ப்பப்பை வாசல் திறந்து இருக்கும். கடலிலுள்ள முத்துச் சிப்பி, மழைநீர்த் துளிக்காக, வாயைத் திறந்து, எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல், ஆணின் விந்தணுவின் வருகையை எதிர்பார்த்து, பெண்ணின் கர்ப்பப்பை வாசல் திறந்து இருக்கும்.

இந்த 12 நாட்களில் மட்டும் கணவன்- மனைவி தாம்பத்திய உறவு கொண்டால், ஆணின் விந்து, கர்ப்பக்குழாய் வழியாக, கர்ப்பப்பையை அடைந்து பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து, கருகூடி கர்ப்பம் அடையச் செய்யும். இந்த 12 நாட்கள் சென்றபின்பு, கர்ப்பப்பையின் வாசல் மூடிக்கொள்ளும். அதன்பின் தாம்பத்திய உறவுகொண்டால், கருகூடி பெண் கர்ப்பம் தரிக்கமாட்டாள்.

இந்த பூமியில், ஐந்தறிவுள்ள விலங்கு, மிருகம், பறவைகள் என அனைத்து பெண் உயிரினங்களும், தன் கர்ப்ப காலம் அறிந்து, ஆண் இனத்துடன் இணைந்து, கூடி, கர்ப்பம் தரித்துக்கொள்ளும். ஆனால் ஆறறிவுள்ளவன் என்று கூறிக்கொள்ளும் மனிதர்கள் மட்டும், கருகூடும் கர்ப்பகால நாட்கள் தெரியாமல் உறவுகொண்டு, குழந்தை பிறக்க வில்லையென்று, பெண்கள்மீதும், விதிமீதும் பழியைப் போடுகின்றார்கள். இன்னும் ஒரு சூட்சும ரகசியத்தையும் கூறுகின்றேன். அறிந்துகொள்ளுங்கள்.

பெண் மாதவிலக்கான 7, 9, 11, 13, 15, 17 இந்த ஒற்றைப் படையான 6 நாட்களில் கணவன்- மனைவி தாம்பத்திய உறவுகொண்டு கர்ப்பம் அடைந்தால், அந்த கர்ப்பத்தின்மூலம் பெண் குழந்தை பிறக்கும். இந்த நாட்களில் பெண் கருமுட்டைகள் உருவாகும். பெண் குழந்தைவேண்டும் என்று விரும்புபவர்கள், இந்த நாட்களில் மட்டும் தாம்பத்திய உறவு கொண்டு, தங்கள் விரும்பியபடி பெண் குழந்தையை அடையாளம்.

மாத விலக்கு முடிந்த 6, 8, 10, 12, 14, 16 இந்த இரட்டைப் படையான 6 நாட்களில், தாம்பத்திய உறவுகொண்டு, பெண் கர்ப்பம் தரித்தால், அந்த கர்ப்பத்தில் ஆண் குழந்தை பிறக்கும். இந்த ஆறு நாட்களில் பெண்ணின் கர்ப்பப் பையில் உருவாகும் கருமுட்டைகள், ஆண் கருமுட்டையாகும். ஆண் குழந்தை வேண்டும் என விரும்பும் தம்பதிகள் இந்த நாட்களில் உறவு கொண்டால், பெண் கர்ப்பம் தரித்து ஆண் குழந்தையைப் பெற்றுத்தருவாள்.

ஆணின் விந்தணுக்களில், ஆண் அணுக்கள், பெண் விந்தணுக்கள் என்று தனித்தனி பிரிவு கிடையாது. பெண்ணிடம் உற்பத்தியாகும் கருமுட்டைகளில் தான், ஆண் கருமுட்டை, பெண் கருமுட்டை என்ற பிரிவுகள் உண்டு.

வால்மீகி: நான்கு யுகங்களிலும் வாழ்ந்துவருபவரே, புசுண்ட முனிவரே, தாங்கள் கூறுவது மனித இனத்திற்கு மட்டுமா? அல்லது பூமியில் வாழும் அனைத்து சீவன்களுக்கும், பொதுவான விதியா? இதனை எப்படி அறிவது? காகபுசுண்டர்: சித்தர் பெருமானே, மனிதன், விலங்கு, பறவை என அனைத்து உயிரினங்களுக்கும், இந்த நியதியை, இயற்கை பொதுவாக படைத்துள்ளது. ஒரு கோழி முட்டையிட ஆரம்பித்தவுடன், அது ஒற்றைப் படை நாட்களில் இடும் முட்டைகளை தனியே சேகரித்தும், இரட்டைப்படை நாட்களில் இடும் முட்டைகளை தனியே சேகரித்து வைத்து, இந்த இரண்டு வகை முட்டைகளையும் தனித்தனியே அடை காத்து வைத்தால், அதில் ஒற்றைப் படை நாட்களில் கோழிவிட்ட முட்டையில், பெண் குஞ்சுகள் பொரிந்து வெளியே வரும். இரட்டைப் படை நாட்களில் விட்ட முட்டைகளில் ஆண் குஞ்சுகள் மட்டும் பொரிந்து வெளியே வரும்.

வால்மீகி: பெண் குழந்தைகள் மட்டும் பிறப்பதற்கு, பெண்தான் காரணம் என்றும் இன்னும் சிலர், குழந்தையே பிறக்கவில்லையென்றால், பெண் மலடானவள் என எல்லாவற்றிற்கும், பெண்களைத்தான் குறையாகக் கூறுகின்றார் கள். இது உண்மையா?

காகபுசுண்டர்: பெண்களில் மலடானவர்கள் இருப்பதாகக் கூறுபவன் மூடன். ஆண் குழந்தை பிறக்காததற்கு, பெண்தான் காரணம் எனக் கூறுபவர்கள் முட்டாள்கள். பெண் மண்ணைப் போன்றவள். இந்த மண்ணில் வீரியமுள்ள எந்த விதையை விதைத்தாலும், அது முளைத்து, செடியாகி, மரமாகும். விதை வலுவுடன் இருந்தால், மண் அதனை வளர வைத்துவிடும். இதைப் போன்றுதான், ஆணின் விந்தணு சக்தியுடன், பலமுள்ளதாக இருந்தால் பெண் அதைத் தாங்கி கர்ப்பம் தரித்துவிடுவாள். மண்ணிலும் மலடு கிடையாது; பெண் இனத் திலும் மலடான பெண் கிடையாது.

ஆண் விதைக்கருவைக் கொடுப்பவன், அந்த விதையை வளர்த்து, குழந்தையாகக் கொடுப்பவள் பெண். எனவே ஒரு குழந்தை பிறப்பதற்கும், பெண் கர்ப்பம் தரிப்பதற்கும், கர்ப்பம் அடையமுடியாமல் போவதற்கும் ஆண்தான் காரணம், பெண் காரணமல்ல.

பெண்ணின் கர்ப்பகால நாட்கள் அறிந்து, தாம்பத்திய உறவுகொண்டால், நிச்சயமாக, பெண் கர்ப்பம் தரித்து, வம்சம் விளங்க வாரிசுகளைப் பெற்றுத் தருவாள்.

அகத்தியர்: கன்னி மைந்தரே, காக புசுண்டரே இன்று சபை கலையும் நேரம் வந்துவிட்டது. நாளை பெண் கர்ப்பம் பற்றிய மற்ற விவரங்களை அறிவோம். இன்று சபை கலையலாம்.

சித்தர்களைப் பற்றி வாழுங் கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)

om010623
இதையும் படியுங்கள்
Subscribe