"முதலிருந்த வாழ்வினையை முப்பாலைச் சுட்டுப்

பதறாமதி பாடுபட்டேன் முதலிருந்த

நல்வினையுந் தீவினையு நாடாமலும் பிறந்து

வல்வினையிற் போக்கி விட்டேன் வாழ்வு.'

Advertisment

(திருவள்ளுவர் ஞானப்பாடல்)

அகத்தியர்: தென்பாண்டி நாட்டில் பொதிகை மலையில் உருவாகி, தமிழ் மண்ணில் ஓடிப்பாய்ந்து, வளம்தரும், பொருநை நதிக்கரையில் தென்புலத்து, திராவிட நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பதிணென்மரும் அகத்தியன் எனது தலைமையில், முதுமொழியான நமது தமிழ்மொழிக்கு முதல் சங்கம் அமைத்து ஒன்றுகூடி, இந்த பூமியில் பிறந்து வாழும், உயிரினங்களின் உடல், உயிர், ஆன்மா, இந்த மூன்றின் இயக்கநிலை, செயல்பாடுகளைப் பற்றி, அனுபவித்தறிந்து ஆய்வு செய்து தமிழ் மக்களுக்கு கூறி வருகிறோம்.

சித்தர்கள் சங்கமித்துள்ள இந்த முதல் தமிழ்ச்சங்கத்தில் மனிதர்களின் ஆன்மாவின் செயலால், அவன் வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகள், உயர்வு, தாழ்வு, பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் பற்றிய காரணகாரிய உண்மைகளை, சாளி மைந்தன்- காகபுசுண்ட ரிஷி விளக்கமாகக் கூறிவருகிறார்.

Advertisment

அறிவிற் சிறந்த சித்தர்களே, தமிழ் மொழியை உடல்தமிழ், உயிர்த்தமிழ் ஆன்ம தமிழ் என்று பிரித்து, முத்தமிழாக உங்களுக்குப் போதித்துள்ளேன். இந்த முத்தமிழ் பற்றி, ஒரு சிறு விளக்கத்தை இப்போது கூறுகிறேன். அதன்பிறகு ஆன்மாவின் நிலைபற்றி புசுண்டர் கூறுவதை அறிவோம்.

உடல் தமிழ், ஒரு குழந்தை உருவாக்கம், கர்ப்ப காலம், உடல் உறுப்புகள், நரம்பு, எலும்பு, வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும், உடல் பலம் குறைதலையும், மேலும் உடல் வலிவுபெற சரியான உணவுமுறைகளையும், உடலில் உண்டாகும் அனைத்துவிதமான உபாதைகளையும், நோய்களையும், தீர்த்து சுகம் பெற மூலிகை மருத்துவ வழிமுறைகளையும் கூறுவது. சுவாசம், பிராண மூச்சுக்காற்று தொய்வின்றி சமநிலையில் இருக்கவும். உடல் பலம்பெற யோகாசன உடற்பயிற்சி முறைகளையும், தெளிவாகக் கூறுவது, உடல்தமிழ் ஆகும். சித்தர்கள் ஆய்வுசெய்து அறிந்து கூறியதால் இதனை சித்த மருத்துவம் என்றும், மூலிகைகள்மூலம் நோய்களைத் தீர்ப்பதால் இதனை மூலிகை மருத்துவம் என்றும், தமிழ்மொழியில் கூறியுள்ளதால் இதனை தமிழ் மருத்துவம் என அழைக்கிறோம். முத்தமிழ் வரிசையில் உடல் தமிழ் முதலானதாகும்.

ss

உயிர்த்தமிழ் என்பது, உயிரினங்களின் உயிர் பற்றிய அனைத்து உண்மைகளையும், எது உயிர்? உயிர் எங்கே இருந்து எப்படி வருகிறது? உயிரின் மூலம் எது? உயிர் எப்போது, எந்த உடலுறுப்பின் வழியாக உடலுக்குள் நுழைகிறது? போன்ற அனைத் திற்கும் விளக்கங்களையும், மனிதர்கள் நீண்ட ஆயுளைப் பெறும் வழிமுறைகளையும், மரணத்தை வென்று, மரணமில்லாப் பெரு வாழ்வை மனிதர்கள் அடைவது எப்படி? உயிருக்கு ஆதாரமான, அவரவரின் மூச்சுக் காற்றின் சக்தியால், அட்டமாசக்தி (அஷ்ட மகாசக்தி) முதலான சக்திகளை மனிதன் எப்படி அடைவது? சுவாச மூச்சுக் காற்றின் நிலையறிந்து மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்யும் செயல்களுக்கு அவரவர் நல்ல நேரம் கெட்ட நேரம் அறிந்து செய்யத் தொடங்குவது எப்படி? வாசியோகம் மூலம் உயிர்க்காற்றின் உதவி கொண்டு, இன்னும் ஏராளமான நன்மைகளை அமைத்துக் கொள்ள வழிகாட்டுவது உயிர்த் தமிழ்ஆகும்.

சித்தர்களாகிய நமக்கு அனைத்து சக்தி களையும் அமையச் செய்தது வாசியோக கலைதான். இதற்கு மூல ஆதாரம் உயிர் மூச்சுக் காற்றாகும். அதனால்தான் நாம் காற்றையே கடவுளாக வணங்குகிறோம்.

கடவுள் எங்கும் உள்ளார் என்று கூறுவார்கள்.

அண்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும், பஞ்சபூதங்களிலும், பூமியிலுள்ள அனைத் துப் பொருட்களிலும் காற்று, நீக்க மற நிறைந்துள்ளது காற்றில்லாத இடமே இல்லை மனிதன்முதல் அனைத்து ஜீவராசி களுக்கும் அசைவைத் தருவது உயிர், அந்த உயிருக்கு மூலாதாரம் காற்று. உயிர் பற்றிய உண்மைகளைக் கூறுவதால் இதனை உயிர்த் தமிழ் என்று கூறினேன்.

ஆன்மத் தமிழ் என்பது, ஒரு மனிதனின் எண்ணம், குணம், வாழ்வின் செயல்கள், வாழ்வியல் முறைகள், அதனால் அவனுக்கு உண்டாகும் உயர்வு- தாழ்வு, அவரவரே உருவாக்கிக் கொள்ளும் பாவ- சாப- புண்ணியம், பிறவித் தொடர்ச்சி, பிறப்பின் முடிவு, மோட்சநிலை, மோட்சமடையும் வழி முறை, பாவ- சாப- நிவர்த்தி, பரிகார வழிமுறை கள் என ஒரு ஆன்மாவின் அனைத்து நிலைகளையும் உருவாக்குவது ஆன்மாதான்.

ஆன்மாவின் செயல்கள் பற்றி சித்தர் களாகிய நாம் அறிந்து கொண்டதை, அனைத்து மக்களும் அறிந்து தெளிவு பெற்றிடச் செய்வது, சித்தர் பெருமக்களாகிய உங்கள் கடமையாகும், தமிழ்மொழி மனிதர்களின் உடல், உயிர், ஆன்மா பற்றியும், மனிதனின் வாழ்க்கை நிலையைப் பற்றி மட்டுமே கூறுவது. வழிபாடுகளைக் கூறுவதல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உடல், உயிர், பற்றி முன்பே தமிழ்ச் சங்கத்தில் விவாதித்து, பல உண்மைகளை அறிந்து தெளிவுபெற்றோம். இனி ஆன்மா வின் செயல்களால் மனிதர்கள் அடையும் பாவ- சாப- புண்ணியம் பற்றி காகபுசுண்டர் கூறும் விளக்கங்களை அறிவோம். புசுண்டரே, இனி நீங்கள் அடுத்த பாவ- சாபங்களைப் பற்றி தொடர்ந்து கூறுங்கள்.

(இன்றைய நாளில், உடல் சுகம், உல்லாச போகம், மோகம் தரும் ஆட்டம், பாட்டு சம்பந்தமான இயல், இசை, நாடகம், இம்மூன்றையும் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் இவை தான் முத்தமிழ் என்று கூறுகிறார்கள். ஆனால் உடல், உயிர், ஆன்மா, இவை மூன்றைப் பற்றியும் சித்தர்கள் கூறியுள்ள மூன்று தமிழ்ப் பிரிவுகளே முத்தமிழ் ஆகும்.

காகபுசுண்டர்: முத்தமிழ் அறிஞரே, தாய்த் தமிழுக்கு தமிழ்ச் சங்கம் அமைத்த வரே, பூரண ஞானம் பெற்று, மூன்று தமிழையும் உருவாக்கி, அதற்கு இலக்கணம், வகுத்துத் தந்த ஆசான் அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிக்கு வணக்கம்.

உடல், உயிர், ஆன்மா, இம்மூன்றும் தமிழுடன் எவ்வாறு கலந்துள்ளது என்பதை மிகத் தெளிவாகக் கூறினீர்கள். உடல் அசை வற்றது. உயிர் உடலுக்கு அசைவைத் தருவது, ஆனால் ஆன்மா உடல், உயிர், இரண்டையும் செயல்படச் செய்வது. உணர்ச்சிகளை உண்டாக்குவது, உடல் கண்களுக்குத் தெரியும். மூச்சுக் காற்றின்மூலம் உயிரை அறிந்துகொள்ளலாம். ஆனால் ஆன்மா கண்களுக்குத் தெரியாது.

ஆன்மாவின் நிலையை அவரவர் செயல் களால், உணர்வுகளால் அறிந்துகொள்ள முடியும். உதாரணமாக உடலில் உண்டாகும்.

வலியின் தாக்கம் உடலை பாதிக்காது. உயிரைப் பாதிக்காது. ஆனால் ஆன்மாதான், அந்த வலி, உபாதையை அனுபவிக்கும். உணர்ச்சியற்று, மயக்கநிலையில் இருப்பவர்க்கு உடல் இருக்கும். உடலில் உயிர் மூச்சுக் காற்று இருக்கும். ஆனால் அவருக்கு உணர்ச்சி இருக் காது. உணர்ச்சி இல்லாமல் இருப்பவனை, அடித்தாலும், அறுத்தாலும் அவருக்கு ஒன்றும் தெரியாது.

உண்ணும் உணவின் சுவையையும், உணவு பிடிக்காத நிலையையும், ஆன்மாதான் உணர்ந்து செயல்படுத்துகின்றது. அவரவர் செயல்மூலம் உண்டாகும் நன்மை- தீமை களை ஆன்மா மறைந்திருந்து அனுபவிக்கச் செய்கிறது. உடல் அழியும், உயிர் காற்றோடு கலந்திருக்கும், ஆன்மா அழியாமல், பிறவிதோறும் உயிர்க்காற்றுடன் இணைந்து, முன்பிறவி கர்மவினைக்குத் தகுந்த நன்மை- தீமைகளை அடுத்தடுத்த பிறவிகளில் பாதிப்பினைத் தரும்.

ஒரு மனிதன் மரணமடைந்த பின்பு, அவன் ஆத்மாவின் தொடர்பு, பூமியிலிருந்து விலகுவதில்லை. அந்த ஆன்மா, ஒரு பிறவியில் தான் செய்த பாவம், சாபம், புண்ணிய பதிவுகள் அனைத்திற்கும் உண்டான நன்மை- தீமைகளை அனுபவித்துத் தீர்த்து முடித்த பின்பு தான் மோட்ச நிலையை அடையமுடியும்.

குடும்பத்து உறவுகளாலோ அல்லது மற்றவர்களாலோ துன்புறுத்தப்பட்டு, ஏமாற்றப் பட்டு, பலவிதமான சிரமங்களை அனுபவித்து, இறந்தவர்களின் ஆன்மா, சாந்தி அடையாமல் கோபாவேசம் கொண்டு, தன்னைத் துன்புறுத்தியவர்களையும், அவர் களின் வம்ச வாரிசுகளின் வாழ்விலும் பலவிதமான சிரமம், தடைகளை உருவாக்கி கஷ்டப்படச் செய்துகொண்டே வரும். இதுபோன்று பழிவாங்கும் ஆவிகளைத்தான் துஷ்ட ஆவிகள் என்று கூறுவார்கள்.

மனிதனாக வாழும்வரையில்தான் தாய்- தந்தை, சகோதரன், கணவன்- மனைவி என்ற உறவு நிலையில் இருப்பார்கள். தன் உறவு களால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டால், அந்த ஆன்மாவிற்கு பந்தபாசம், சொந்தம் கிடையாது. பழிவாங்கும் குணம் மட்டுமே இருக்கும். ஒரு மனிதன் எங்கு பிறந்தானோ, எங்கு தன் குடும்பமாக வாழ்கிறானோ, அவன் இறந்த பின்பும், அவன் ஆன்மா தான் வாழ்ந்த வீட்டில்தான் உலாவிக் கொண்டிருக்கும். அவன் உயிரற்ற உடல் மட்டும்தான் சுடுகாட்டில் அழிக்கப்படும்.

ஒருவன் வாழும்போது, தன் குடும்பத்தி னரால், நன்கு பராமரிக்கப்பட்டு மனநிறைவுடன் இறப்பவர்களின் ஆன்மா, அந்த குடும்பத்திற்கு குலதெய்வமாய் இருந்து, அனைத்து நன்மைகளையும் தந்துவரும். குடும்பத்து உறவுகளால் துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, தற்கொலை செய்து கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி மாண்டு போனவர்களின் ஆத்மாக்கள் அந்த குடும்பத் திற்கு பலவிதமான சிரமங்கள், தடைகளைத் தந்து, செல்வச் செழிப்பை அழித்து, குடும் பத்தை குலைத்துவிடும். அந்த ஆன்மா எந்த பிராயச்சித்தம், பரிகாரத்தையும் ஏற்றுக் கொள்ளாது. செய்த பாவக் கொடுமைகளுக் குரிய தண்டனையைத் தந்து, அனுபவிக்கச் செய்துவிடும்.

இனி அடுத்து ஒரு சாபத்தைப் பற்றி அறிவோம்.

"நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்' தந்தையின் விந்தில் உருவான ஒருவரின் உடல், அவன் குழந்தையாகப் பிறப்பதற்கு முன்பு, இடைப்பட்ட காலத்தில் தாயின் கர்ப்பத்தில் சிசுவாக வளர்கின்றான். தாயின் கர்ப்பம் நடுவான இரண்டாம் நிலை. வளர்ச்சிப் பருவம் ஆகும். இனி தாயினால் உண்டாகும் தோஷம் பற்றி அறிவோம்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)