சித்தர்கள் அருளிய வாசி யோகம் 68 - சித்தர்தாசன் சுந்தர்ஜி!

/idhalgal/om/vasi-yoga-by-siddhas-68-siddhardasan-sunderji

"வேதாந்த வேதமெல்லாம் விட்டொழித்தே ஞான

ஏகாந்தமாக இருப்பதினி யெக்காலம்

மற்றிடத்தை தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தை தேடியுறங்குவது மெக்காலம்.'

(பத்திரகிரியார்)

அகத்தியர்: இந்த பூமி பற்பல பிரளயங்களில் அழிந்துபோனதைக் கண்டவரே, அதில் வாழ்ந்த உயிரினங்கள் மாண்டுபோனதையும், அவை மீண்டும் பிறந்து உருவானதையும் பார்த்தவரே, புசுண்டரே, பெற்ற தாய்- தந்தைக்கு பிள்ளைகள் செய்யும் துரோகத்தால், கொடுமைகளால் உண்டாகும் பித்ரு, மாத்ரு, பாவ- சாப- உண்மைகளைப் பற்றிக் கூறீனீர்கள்.

ஒரு தாய்- தந்தை, தாங்கள் பெற்ற மகனுக்கு மனம்வெறுத்து எப்படி சாபம் தருவார்கள்? பெற்ற பிள்ளைகள் எவ்வளவு தவறுகள், கொடுமைகள் செய்தாலும், அவற்றை மன்னித்துவிடுவார்களே தவிர, சாபம்விட்டு அவர்கள் கஷ்டப்பட வேண்டு மென்று விரும்பமாட்டாôர்கள்.

ஒரு மனிதனுக்கு பித்ரு பாவ- சாப- சோக- துவேஷ தோஷங்கள் உண்டாக இயற்கையே உருவாக்கிய சூட்சுமமான, மூல ரகசியம் ஏதாவது உள்ளதா? இருந்தால், அதனைப் பற்றி இன்று இச்சபையில் விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: மன்னு தென்றிசையில் தமிழ் மொழியோதிய அகத்தியரே, மதுரத் தமிழோதிய வரே, எண்டிசையும் புகழும் எந்தன் ஆசானே, உங்கள் தாளிணை யெப்போதும் போற்றி வணங்குகிறேன்.

அகத்தியர் பெருமானே, ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், ஆச்சாரியர்களும் அறிந்துகொள்ள முடியாத, ஒரு ஆன்மாவின் நிலையை அறிந்தவர் தாங்கள். ஒரு ஆன்மாவுக்கு அதன் செயல்களால், பாவ- சாப- தோஷ பாதிப்புகளை இயற்கை எவ்வாறு நிர்ணயித்து விதிக்கிறது என்ற சூட்சும ரகசியத்தை, மூலகாரணத்தை சித்தர்களாகிய எங்களுக்கு போதித்து அறியச் செய்தவர் தாங்கள். ஏதுமறியாத ஒரு சாதாரண மானிடனைப் போன்று என்னிடம் கேட்பதை என்னவென்று கூறுவேன். ஆசானே, தாங்கள் கூறியதை இந்த திராவிட சித்தர் கள் சங்கமித்துள்ள இந்த சபையில் கூறுகிறேன்.

இந்த பூமியில் ஒரு ஆண்- பெண் இணைந்து, ஒரு குழந்தையைப் பெறுகின்றனர். அதேபோன்று, விலங்கு, மிருகம், பறவைகளில் ஆண் இனமும், பெண் இனமும் இணைந்து தங்களின் குட்டிகள், குஞ்சுகளைப் பெறுகின்றன. ஆண் இனமும், பெண் இனமும் இணைந்தால்தான் அதனதன் இனத்தில் மற்றொரு உ

"வேதாந்த வேதமெல்லாம் விட்டொழித்தே ஞான

ஏகாந்தமாக இருப்பதினி யெக்காலம்

மற்றிடத்தை தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தை தேடியுறங்குவது மெக்காலம்.'

(பத்திரகிரியார்)

அகத்தியர்: இந்த பூமி பற்பல பிரளயங்களில் அழிந்துபோனதைக் கண்டவரே, அதில் வாழ்ந்த உயிரினங்கள் மாண்டுபோனதையும், அவை மீண்டும் பிறந்து உருவானதையும் பார்த்தவரே, புசுண்டரே, பெற்ற தாய்- தந்தைக்கு பிள்ளைகள் செய்யும் துரோகத்தால், கொடுமைகளால் உண்டாகும் பித்ரு, மாத்ரு, பாவ- சாப- உண்மைகளைப் பற்றிக் கூறீனீர்கள்.

ஒரு தாய்- தந்தை, தாங்கள் பெற்ற மகனுக்கு மனம்வெறுத்து எப்படி சாபம் தருவார்கள்? பெற்ற பிள்ளைகள் எவ்வளவு தவறுகள், கொடுமைகள் செய்தாலும், அவற்றை மன்னித்துவிடுவார்களே தவிர, சாபம்விட்டு அவர்கள் கஷ்டப்பட வேண்டு மென்று விரும்பமாட்டாôர்கள்.

ஒரு மனிதனுக்கு பித்ரு பாவ- சாப- சோக- துவேஷ தோஷங்கள் உண்டாக இயற்கையே உருவாக்கிய சூட்சுமமான, மூல ரகசியம் ஏதாவது உள்ளதா? இருந்தால், அதனைப் பற்றி இன்று இச்சபையில் விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: மன்னு தென்றிசையில் தமிழ் மொழியோதிய அகத்தியரே, மதுரத் தமிழோதிய வரே, எண்டிசையும் புகழும் எந்தன் ஆசானே, உங்கள் தாளிணை யெப்போதும் போற்றி வணங்குகிறேன்.

அகத்தியர் பெருமானே, ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், ஆச்சாரியர்களும் அறிந்துகொள்ள முடியாத, ஒரு ஆன்மாவின் நிலையை அறிந்தவர் தாங்கள். ஒரு ஆன்மாவுக்கு அதன் செயல்களால், பாவ- சாப- தோஷ பாதிப்புகளை இயற்கை எவ்வாறு நிர்ணயித்து விதிக்கிறது என்ற சூட்சும ரகசியத்தை, மூலகாரணத்தை சித்தர்களாகிய எங்களுக்கு போதித்து அறியச் செய்தவர் தாங்கள். ஏதுமறியாத ஒரு சாதாரண மானிடனைப் போன்று என்னிடம் கேட்பதை என்னவென்று கூறுவேன். ஆசானே, தாங்கள் கூறியதை இந்த திராவிட சித்தர் கள் சங்கமித்துள்ள இந்த சபையில் கூறுகிறேன்.

இந்த பூமியில் ஒரு ஆண்- பெண் இணைந்து, ஒரு குழந்தையைப் பெறுகின்றனர். அதேபோன்று, விலங்கு, மிருகம், பறவைகளில் ஆண் இனமும், பெண் இனமும் இணைந்து தங்களின் குட்டிகள், குஞ்சுகளைப் பெறுகின்றன. ஆண் இனமும், பெண் இனமும் இணைந்தால்தான் அதனதன் இனத்தில் மற்றொரு உயிர் உருவாகும்.

வேறெந்த சக்தியிலும், எந்த செயல் களைச் செய்தும் ஒரு குழந்தையைப் பெறமுடியாது என்பது இயற்கை நிர்ணயித்த விதியாகும்.

"சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணகலை சாற்று யாகமம்

விதம்விதமான வேறு நூல்களும்

வீணாண நூலென்று யாடாய் பாம்பே'

(பாம்பாட்டிச் சித்தர்)

இந்த பூமியிலும் அண்டத்திலும் அனைத்து நிகழ்வுகளையும், செயல் களையும் இயற்கையே நிர்ணயிக்கிறது. இயற்கையென்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்தி களின் சேர்க்கைதான். அவற்றின் செயல்களே இயற்கையின் செயல்கள் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.

ஆசானே, மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அமைத்துக்கொண்டது நீதி மன்றங்கள். இங்கு மனிதன் வகுத்த சட்டமும், சாட்சியங்களும் மட்டுமே ஆதாரமாகக்கொண்டு நீதியைத் தீர்மானிக்கிறது. ஆனால் ஒருவர் செய்யும் பாவங்களுக்கு உண்டான தண்டனைகளை இயற்கை உண்டாக்கி வைத்துள்ள நியாயமன்றத்தில் தீர் மானிக்கப்படுகிறது. மனித நீதி வேறு; இயற்கையின் நியாயத் தீர்ப்பு வேறு.

மனிதனின் நீதிமன்றங்கள், தவறு செய்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு தண்டனையைத் தரும். ஆனால், இயற்கை தரும் நியாயத் தீர்ப்பு பல பிறவிகள் தொடர்ந்து, அவன் வம்சத் தையும் வாரிசுகளையும் தண்டனைகளை அனுபவிக்கச் செய்யும். மனிதர் கள் உருவாக்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தவறுகள் செய்தவன் தண்டனை பெறாமல் தப்பித்தாலும், இயற்கையின் நியாய மன்றத் தீர்ப்பின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

பெற்றவர்களுக்குப் பிள்ளைகள் செய்யும் கொடுமையால், தாய்- தந்தை சாபமிடாவிட்டாலும், அதற்குரிய தண்டனையை, தவறுகள் செய்த பிள்ளை களுக்கு இயற்கை நியாயம், அவர்களின் அடுத்தடுத்த பிறவிகளில் அனுபவிக்கச் செய்துவிடும். பெற்றவர்கள் பிள்ளையை மன்னித்தாலும், இயற்கை மன்னிக்காது. இந்த மண்ணுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், பிறந்த வினாடிமுதல், தனது தாய்- தந்தைக்குக் கடன்பட்டு, கடனாளி யாகிறான். இதனையே பித்ரு, மாத்ரு கடன் என்று கூறுவார்கள்.

அகத்தியர்: புசுண்ட முனிவரே, "பித்ரு மாத்ரு கடன்' என்று கூறுகிறீர்கள் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி கடன்பட்டவர்கள் ஆவார்கள்? தங்கள் வம்சம் விளங்க, தாங்களே உருவாக்கிப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டியது தாய்- தந்தையின் கடமையல் லவா? இது எவ்வாறு பிள்ளைகளுக்குக் கடனாகும்? காகபுசுண்டர்: ஆசானே, இந்த மண்ணுல கில் மனிதர்கள் மட்டும் தங்களின் இனவிருத்திக்குப் பிள்ளைகளைப் பெறுவதில்லை. மிருகம், விலங்கு, பறவைகள் என அனைத்து உயிரினங்களும் பிள்ளைகளைப் பெறுகின்றன. இவை அனைத் தும் தன் குழந்தைகள்தானே? தன் முயற்சி, உழைப்பால், தன் உணவிணைத் தேடி உண்ணும் காலம்வரை பால், இரையைத் தந்து காப்பாற்றுகின்றன. பிறகு உறவைத் துறந்து, பிரித்துவிடுகின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் தங்களுக்கு குழந்தைகள் பிறந்ததுமுதல், அவர்களின் வாழ்க்கை இறுதிவரை, தங்களுடன் வைத்துக் காப்பாற்றுகிறார்கள்.

ஒரு குழந்தை தான் பிறந்தவுடன், முதன்முதலில் தன்னைப் பெற்ற தாய்- தந்தைக்குக் கடன்காரனாகிறான்; கடன்படுகி றான். அது எப்படி என்பதைப் பற்றி அறிவோம். ஒரு தாய், தன் கர்ப்பத்தில் ஒரு சிசு உருவானவுடன், அந்த குழந்தைக்கு தான் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்றைத் தந்து, தன் கர்ப்பத்தில் வளர்த்து, பிரசவ சமயத்தில் மரண வேதனையை அனுபவித்து, அந்தக் குழந்தையைப் பெற்றெடுகிறாள்.

siddhar

குழந்தை பிறந்தபின்பு அந்த தாய், தன் ரத்தத்தைப் பாலாக மாற்றி, தனது பிள்ளைக்கு ஊட்டி வளர்க்கிறாள். குழந்தைக்கு ஒரு சிறிய நோய்த் தாக்கம் ஏற்பட்டாலும், அந்தத் தாய் மருந்து சாப்பிட்டு, தான் விரும்புவதை உண்ணாமல் பத்தியமிருந்து, அந்த மருந்தின் சக்தியை தன் முலைப்பால்மூலம் குழந்தைக்கு ஊட்டி, அதன் நோய் தீர்த்துக் காப்பாற்றுகிறாள்.

பெற்ற தாய் தன் குழந்தைக்கு உணவை அளித்துவிட்டுத்தான் அவள் சாப்பிடுவாள். தான் உணவுண்ணாமல் பசியுடன் இருந்தா லும் தன் பிள்ளை பசித்திருக்க விரும்ப மாட்டாள்; விடமாட்டாள். ஒரு தாய், இறுதிக் காலம் வரை ஒரு வேலைக்காரியைப்போல் பணிவிடை செய்து, தான் பெற்ற பிள்ளையின் நலனை மட்டுமே மனதில்கொண்டு செயல்பட்டு வாழ்ந்து மடிகிறாள். ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்யும் செயல்களைப் பற்றிக் கூறினால் சொல்லிக்கொண்டே போகலாம். தாயின் அன்பு ஒரு காவியம். ஒரு தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத் துப் பிழைப்பது, அவள் மறுபிறவி எடுப்பது போல்.

ஒரு தந்தையானவன், தனது விந்தின்மூலம் ஒரு குழந்தையைத் தாயிடம் உருவாக்கிறான். தனது ரத்தத்தை வேர்வையாக்கி, உழைத்துப் பொருள் தேடி, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தந்து, அறிவு பெற கல்வி தந்து, அதன்பின் உத்தியோகம், தொழில் தேடி அமைத்துக்கொடுத்து, அவன் சுகமாக வாழ வீடு கட்டிவைத்து, பெற்ற பிள்ளைகள் பருவ வயதை அடைந்தவுடன் தன் மகனுக்கு ஒரு பெண்ணையும், தன் மகளுக்கு ஒரு ஆணையும் திருமணம் செய்துவைத்து, அவர்களுக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி வைக்கிறான்.

பெற்ற தாயும், தந்தையும் தன் குழந்தைகளுக்கும், தனது வம்ச வாரிசுகளான பேரக் குழந்தைகளும், அவர்கள் வாழ்வில், எந்தவிதமான சிரமம், கஷ்டம் இன்றி வாழ, எதிர்கால சிந்தனையுடன், தன் உழைப்பால் பூமி, நிலம், வீடு, தொழில், வியாபாரம், நகை, பணம் என அனைத்தையும் சம்பாதித்துச் சேமித்து வைக்கிறான்.

இந்த மண்ணுலகில் அனைத்து பெற்றோர் களும், தாங்கள் அனுபவிக்க வீடு, மாடு, மனை, சொத்து, நகை, பணம் இவற்றை சேமிப்பதில்லை. தன் வம்ச வாரிசுகளுக்காத்தான் சம்பாதித்து சேமித்து வைக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு கோடி சொத்துகளை தன் உழைப்பின்மூலம் சம்பாதித்து சேமித்து வைத்தாலும், அவன் இறக்கும்போது, எதனையும் தன் கூடவே எடுத்துக்கொண்டு போவதில்லை. தன் வம்ச வாரிசுகள் சுகமாக வாழக் கொடுத்து விட்டுதான் செல்கிறான். அந்த முன்னோர் கள் தேடிவைத்த சொத்துகளை தனது தவறான செயல்களால் அழித்துவிடாமல், காப்பாற்றி வாழும் வாரிசுகளின் குடும்பம், முன்னோர்களின் ஆசியால், பல தலைமுறை எந்தவிதமான சிரமமும், இன்றி வாழ்ந்துகொண்டிருக்கும். ஒருவன், குழந்தையாக இருக்கும்போது, பெற்றவர்கள் தங்கள் சுகத்தைத் துறந்து பணம் சம்பாதித்து, எந்த எதிர்பார்ப்புமின்றி, வளர்த்து ஆளாக்கின்றனர். குழந்தையாக இருக்கும்போதே, நாம் நமது தாய்- தந்தைக்குக் கடன்பட்டுவிடுகிறோம். இதுதான் பித்ரு, மாத்ரு கடன்.

குழந்தையாக நாம் இருக்கும்போது, பெற்றோர் இளமையாக இருப்பார்கள். நாம் வளர்ந்து வாலிபப் பருவத்தில், உழைத்து பணம், பொருள் சம்பாதிக்கும் நிலையில் இருக்கும்போது, நமது பெற்றோர் நரை, திரை, மூப்பு அடைந்து, ஒரு குழந்தை யைப்போல் உழைக்கும் சக்தி குறைந்திருப் பார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தனது தாய்- தந்தைக்கு வயதான காலத்தில் அவர்களுக்கு உண்ண உணவு, உடை, இருப்பிடம், நோய்க்கு நல்ல மருத்துவம் தந்து, மகிழ்ச்சி யாக வாழவைத்து பித்ரு கடனைத் தீர்த்துக்கொள்ளவேண்டும்.

பெற்றோர்களின் வயது முதிர்ந்த காலத்தில், அவர்களைக் கவனித்துக் காப்பாற்றாமல் கஷ்டப்படச் செய்தால், இந்தப் பிறவியில், அவர்களுக்கு நாம்பட்ட பித்ரு, மாத்ரு கடன் தோஷமாக செயல்பட்டு, அடுத்தடுத்த பிறவிகளில், வம்சத்தைத் தொடர்ந்து, நம்மையும் நம் வாரிசுகளை யும் பாதித்து, வாழ்வில் பல சிரமம், தடைகள், குறைகளைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனும், தனது தாய்- தந்தையின் வயது முதிர்ந்த காலத்தில், அவர்களுக்கு தேவையானதைத் தந்து, இறுதி காலம்வரை மகிழ்ச்சியாக வாழவைத்து அன்பு காட்டி வாழ்ந்தால், குழந்தையாக இருக்கும்போது பட்ட பித்ருக் கடனை அந்தப் பிறவியிலேயே தீர்த்துவிட்டால், நமது தாய்- தந்தை, முன்னோர்களின் ஆசீர்வாதம், புண்ணியமாக செயல்பட்டு, நமது அடுத்தடுத்த பிறவிகளிலும், வாரிசுகளின் வாழ்விலும் தடைகளைத் தடுத்து, அனைத்து நன்மைகளையும் தந்து, வாழ்வில் உயர்ந்த நிலையை அடையச் செய்துவிடும். முன்னோர் களின் ஆத்மா, குலதெய்வமாய் நம்கூட இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும்.

(பெற்ற தாய்- தந்தையின் வயது முதிர்ந்த காலத்தில் கவனிக்காமல் கஷ்டப்பட வைத்துவிட்டு, அவர்கள் இறந்தபின்பு, வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகளுக்கு பித்ரு, மாத்ரு, தோஷம்தான் காரணம் என்று ஜோதிடர்கள் கூறுவதைக்கேட்டு, தோஷம் தீர அமாவாசை விரதம், திதி, தர்ப்பணம், திலஹோமம், காசி, கயா, கங்கையால் தீர்த்தமாடல், இராமேஸ்வரம் சென்று திதி கொடுத்தல், அவர்களின் நினைவுநாளில் ஏழைகளுக்குத் தானம் செய்தல், பசு தானம், வஸ்திர தானம் போன்ற இன்னும் பலவற்றைச் செய்தாலும் பித்ரு, மாத்ரு தோஷம் தீராது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.)

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)

om010423
இதையும் படியுங்கள்
Subscribe