"நேமங்கள் நிட்டைகள் பேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்பணஞ் சந்திசெய் மந்ர யோகம்
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறுமிவர் செய்யும் பூசைகள்
சர்ப்பனையே.''
(சர்ப்பனை- பலனற்றது) -பட்டினத்தார் அகத்தியர்: இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் முற்பிறவி வாழ்வின் செயல்களையும், அதன்காரணமாக அடுத்தடுத்து இம்மண்ணுலகில் பிறந்து, முற்பிறவி கர்மவினைப் பதிவுகளுக் குத் தகுந்தப்படி இப்பிறவி வாழ்வில் அனுபவிக்கும் பலன்களையும் முற்றாக அறிந்த புசுண்டரே, இன்று இத்தமிழ்ச் சங்கத்தில், பெற்ற தந்தைக்குச் செய்த கொடுமைகளால் அடுத்தடுத்த பிறவிகளில் அவனும், அவன் வாரிசுகளும் அனுபவிக்க நேரிடும் பலன்களைக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: தமிழோதிய அகத்தியரே, தமிழ்மொழியையும், தமிழர் இனத்தையும், தமிழினத்திற் கென்று நான்கெல்லையை வகுத்து தமிழ்நாட்டையும் உருவாக்கித் தந்தவரே, இத்தமிழ்நாடு "அகத்தியன் நாடு' என்று கூறியவரே, அண்டங்கள், அனைத்துக் கோள்கள், பஞ்சபூதங்கள் மற்றும் இந்த பூமியில் பிறக் கும் ஒவ்வொரு மனிதனின் உடல், உயிர், ஆன்மா, அவனின் ஊழ்வினைப் பதிவுகள், வாழ்க்கைப் பலன், அதற்குரிய காரண, காரிய சூட்சும ரகசியத்தை அறிந்தவரே, இந்த பகுத்தறிவுத் தமிழ்ச் சங்கத்தை, பொருநை நதி பாய்ந்து வளம்தரும் பொதிகைமலையில் தோற்றுவித்தவரே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிகளுக்கு என் ஆத்மார்த்தமான வணக்கங்கள். நீங்கள் எனக்கு போதித்து நான் அறிந்தவற்றை உங்கள் ஆணைப்படி இப்போது கூறுகிறேன்.
இந்த தமிழ்ச் சபையில் சங்கமமாகி யிருக்கும் சித்தர் பெருமக்களே, ரிஷிகள், முனிவர்கள், ஞானி, மகான்கள், ஆச்சாரியார் கள், பிரும்மரிஷி பட்டம் பெற்றவர்கள், சித்தர்கள், பாராளும் மன்னர்கள், பாமர குடிமக்கள், ஆன்மாவை நேசிக்கும் ஆன்மிகவாதிகள், கடவுள் பெயரைக் கூறி பணம் சம்பாதிக்கும் ஆஸ்திகர்கள் (ஆஸ்திலி பொருள்), வடபுலத்து ஆஸ்திகர்கள், ஆச்சாரியார்களின் புராண, இதிகாச கதைகளில் கூறப்படும் மும்மூர்த்த
"நேமங்கள் நிட்டைகள் பேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்பணஞ் சந்திசெய் மந்ர யோகம்
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறுமிவர் செய்யும் பூசைகள்
சர்ப்பனையே.''
(சர்ப்பனை- பலனற்றது) -பட்டினத்தார் அகத்தியர்: இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனின் முற்பிறவி வாழ்வின் செயல்களையும், அதன்காரணமாக அடுத்தடுத்து இம்மண்ணுலகில் பிறந்து, முற்பிறவி கர்மவினைப் பதிவுகளுக் குத் தகுந்தப்படி இப்பிறவி வாழ்வில் அனுபவிக்கும் பலன்களையும் முற்றாக அறிந்த புசுண்டரே, இன்று இத்தமிழ்ச் சங்கத்தில், பெற்ற தந்தைக்குச் செய்த கொடுமைகளால் அடுத்தடுத்த பிறவிகளில் அவனும், அவன் வாரிசுகளும் அனுபவிக்க நேரிடும் பலன்களைக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: தமிழோதிய அகத்தியரே, தமிழ்மொழியையும், தமிழர் இனத்தையும், தமிழினத்திற் கென்று நான்கெல்லையை வகுத்து தமிழ்நாட்டையும் உருவாக்கித் தந்தவரே, இத்தமிழ்நாடு "அகத்தியன் நாடு' என்று கூறியவரே, அண்டங்கள், அனைத்துக் கோள்கள், பஞ்சபூதங்கள் மற்றும் இந்த பூமியில் பிறக் கும் ஒவ்வொரு மனிதனின் உடல், உயிர், ஆன்மா, அவனின் ஊழ்வினைப் பதிவுகள், வாழ்க்கைப் பலன், அதற்குரிய காரண, காரிய சூட்சும ரகசியத்தை அறிந்தவரே, இந்த பகுத்தறிவுத் தமிழ்ச் சங்கத்தை, பொருநை நதி பாய்ந்து வளம்தரும் பொதிகைமலையில் தோற்றுவித்தவரே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிகளுக்கு என் ஆத்மார்த்தமான வணக்கங்கள். நீங்கள் எனக்கு போதித்து நான் அறிந்தவற்றை உங்கள் ஆணைப்படி இப்போது கூறுகிறேன்.
இந்த தமிழ்ச் சபையில் சங்கமமாகி யிருக்கும் சித்தர் பெருமக்களே, ரிஷிகள், முனிவர்கள், ஞானி, மகான்கள், ஆச்சாரியார் கள், பிரும்மரிஷி பட்டம் பெற்றவர்கள், சித்தர்கள், பாராளும் மன்னர்கள், பாமர குடிமக்கள், ஆன்மாவை நேசிக்கும் ஆன்மிகவாதிகள், கடவுள் பெயரைக் கூறி பணம் சம்பாதிக்கும் ஆஸ்திகர்கள் (ஆஸ்திலி பொருள்), வடபுலத்து ஆஸ்திகர்கள், ஆச்சாரியார்களின் புராண, இதிகாச கதைகளில் கூறப்படும் மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் என அனைவரும், இந்த பூமண்டலத்தில் தொடர்ந்து பல அவதாரங்கள் எடுத்துப் பிறப்பதற்கும், பஞ்சமகா பாவங்கள்தான் காரணமாகும்.
இந்த ஐந்துவிதமான பாவங்களையே முற்பிறவி கர்மவினை, ஊழ்வினை, விதி, தலையெழுத்து என்று பலவிதமாகக் கூறுகிறார்கள். இந்த ஐம்பெரும் பாவ- வினைப் பதிவுகளே மோட்சம், முக்தியை அடையவிடாமல் பிறவித் தொடர்ச்சியைத் தருபவை.
அகத்தியர்: புசுண்டனே, மனிதன் பிறப் பிற்குக் காரணமான பஞ்சமா பாதகங்கள் எவை? அவை எங்கிருந்து உருவாகின்றன என்பதைக் கூறுங்கள்.
காகபுசுண்டர்:
1. ஒருவன் தன்னைப் பெற்ற தந்தைக்குச் செய்த கொடுமைகளால் உண்டாவது தந்தை (பித்ரு) பாவ- சாப தோஷமாகும்.
பெண்கள் தங்கள் கணவரைப் பெற்ற தந்தைக்கு (மாமனார்) செய்யும் கொடுமைகளால் அவளுக்கு பித்ருதோஷம் உண்டாகும்.
2. ஒரு குழந்தையைப் பத்து மாதங்கள் தன் கர்ப்பத்தில் சுமந்து சிசுவாக வளர்த்து, பூமியில் பெற்றெடுத்து, தன் ரத்தத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்த தாய்க்குச் செய்யும் கொடுமைகளால், பெற்ற தாயே மனம் வெறுத்துவிட்ட வாக்குதான் தாய் சாபமாகும். பெண்கள் தாங்கள் வாழவந்த வீட்டில், தன் கணவனைப் பெற்று வளர்த்த தாய்க்கு (மாமியார்) செய்யும் கொடுமைகளால், அவளுக்கும் தாய் சாபம் பற்றிக்கொண்டு தாக்கும்.
3. ஒருவன் தன் உடன்பிறந்த சகோதரர்களுக்குச் செய்த துரோகத்தால் பாதிக்கப்பட்ட சகோதர- சகோதரிகள் வாரிவிட்ட சாபம் சகோதர சாபமாகும். பெண்களுக்கு தங்களின் கணவனின் உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுக்குச் செய்த கொடுமைகளே அவளுக்கு சகோதர- பங்காளி சாபமாகப் பற்றிக்கொண்டு பலன்தரும்.
4. ஒரு ஆண், தான் மணம் புரிந்த மனைவிக்கு துரோகம், கொடுமைகளைச் செய்து, அவளைக் கஷ்டப்படச் செய்ததால், பாதிக்கப் பட்ட மனைவிவிட்ட வாக்குதான் பாவ- சாப தோஷமாக மாறி பாதிப்பினைத் தரும். பெண்கள் தன் கணவனுக்குச் செய்யும் துரோகச் செயல்களால், அவளுக்கு பாவ தோஷங்கள் பற்றிக்கொள்ளும். இதுவே களத்திர பாவ- சாப தோஷநிலையில் திருமணத்தடை, குடும்ப வாழ்வில் நிம்மதியைக் குலைக்கும்.
5. பெற்ற மகன், மகளை சரியாக கவனியாமல், பசியும் பட்டினியுமாய் அலையவிட்டதாலும், ஒரு தாய், தந்தை தன் குழற்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாததால், பெற்ற பிள்ளைகளே மனம் வெறுத்து கொடுக்கும் சாபம் புத்திர சாப தோஷமாகும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பிறவி நிலையை நிர்ணயிக்கும் இந்த ஐந்து சாபங்களும், அவரவர் குடும்பத்தினுள்ளே ரத்த சம்பந்தமான உறவுகளுக்குள் உருவாக்கிக்கொள்வது. இந்த கர்மவினைப் பதிவுகளைத் தான் தந்தை (பித்ரு) கடன், தாய் (மாதா) கடன், சகோதரக் கடன், புத்திரக்கடன், களத்திரக் கடன் என்று கூறுகிறார்கள். இந்த கடன்களை முழுமையாகத் தீர்த்து முடிக்கும்வரை பல பிறவிகள் தொடர்ந்து பிறக்கச் செய்துவிடும்.
இந்த சபையில் சங்கமித் திருக்கும் சித்தர்களே, இனி முற்பிறவிகளில், தன்னைப் பெற்ற தந்தையால் (பித்ரு) சாபம் பெற்றுப் பிறந்துள்ள ஒருவன், இப்பிறவி வாழ்வில் அனுபவிக்கும் பலன்களைக் கூறுகிறேன்.
பித்ரு சாபம் பெற்றவர்கள் பெரும்பாலும் அந்தஸ்துள்ள, பாரம்பரிய மான, கௌர வமான குடும் பத்தில் பிறந் திருப்பார் கள். இவர்களின் வம்ச முன் னோர்கள் பலவகையான சொத்துகள், நன்செய்- புன்செய் நிலம், பேர், புகழுடன், பலர் மதிக்கத்தக்க வாழ்வு வாழ்ந்திருப்பார்கள்.
வம்ச முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகள் இவர்கள் காலத்தில் இல்லாமல் போயிருக்கும்.
அல்லது இவர்களே தகாத செயல்களைச் செய்தோ அல்லது நான்கு பேருக்கு நன்மை செய்தால் நமக்கு நல்லது நடக்குமென்ற எண்ணத்திலோ தான, தர்மங்களைச் செய்து, கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைக்கொண்டு இறைவழிபாடு, கோவில் பணிகள், குரு மடம் என பணம், பொருள், சொத்துகளை விரயம் செய்தோ அல்லது பிறர் தன்னைப் பெருமையாக நினைக்கவேண்டுமென்று கௌரவத்திற்காக பொருள்களை செலவுசெய்து முன்னோர் தேடிவைத்த சொத்துகளை அழித்துவிடுவார்கள்.
வம்ச முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக சொத்துகள் இருந்தாலும் அவற்றால் எந்த நன்மைகளையும் அடையமுடியாது. பூர்வீக சொத்துகளில் வழக்கு, வியாஜியங்கள், பிரச்சினைகள் இருந்து, அனுபவிக்கமுடியாமல் பித்ரு சாபம் தடுத்துக்கொண்டே இருக்கும். இந்த சாபமுள்ளவனின் குடும்பத்தினர். இவனுக்கு முறையாகச் சேரவேண்டிய, தரவேண்டிய பாகச் சொத்தினைத் தராமல்கூட போகலாம்.
வம்ச முன்னோர்கள், தந்தை செய்த தொழில், வியாபாரத்தை இவர்கள் செய்தால், அவை விருத்தி இல்லாமல் நஷ்டம் உண்டாகும். தொழில் முடங்கும். ஒருசிலர் பூர்வீக சொத்தினைப் பொறுப்பாக வைத்துக் காப்பாற்றிக் கொள்ளாம லும், எந்தவொரு தொழிலும் செய்யாமலும், அனைத்தையும் இழந்துவிடுவார்கள். ஆனால் தனது வம்சத்தின் முன்னோர் வாழ்வைப் பற்றி பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டி ருப்பார்கள்.
தந்தை சாபம் பெற்றுப் பிறந்தவர்கள், இளம்வயதில் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வாழ்வார்கள். மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று அமைந்த பிறகு பொருளாதார சிரமங்களுடன் கஷ்டப்பட்டு வாழ்வார்கள்.
இந்த சாபத்தின் தாக்கத்தால் பூர்வீகத்தில், தன் முன்னோர்கள் வசித்த வீட்டில் வசிக்கமுடியாமல் போய்விடும். தொழில், உத்தியோகம் என ஏதாவது ஒரு காரணத்தால் வேறிடம் அல்லது வேறு ஊர் சென்று வசிக்க நேரிடும். பரதேசம் செல்வான்.
தந்தையை இளம் வயதிலேயே சிலர் இழக்கநேரிடும். அல்லது ஏதாவதொரு காரணத்தால், பெற்ற தந்தையைப் பிரிந்து வாழநேரிடும். தந்தை பாசம் பெரிதாகக் கிடைக்காது. இவன் சம்பாதித்து, தந்தைக்கு சோறுபோட்டு, அவரின் இறுதிக்காலம் வரை தன்னுடன் வைத்துக்காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும். தந்தைவழி உறவுகளால் எந்த நன்மையும் கிடைக்காது. சொந்த இனத்து மக்களால் நன்மைகளை அடையமுடியாது.
சிலர் வாழ்வில், பெற்ற தந்தையே இவர்களைப் புறக்கணிப்பான். சிலருக்கு பகை, துவேஷங்கள்கூட உண்டாகி, ஒருவரையொருவர் எதிரிபோல் பாவிப் பார்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியம், செயல்களில் தடை, தாமதம், பிரச்சினைகள் உண்டாகும். உயரதிகாரிகள், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்களால் பெரிய நன்மைகளை அடையமுடியாது.
சிலரின் உழைப்பு, திறமை, அறிவு, அனுபவம், பணம், பொருள், யுக்தி, யோசனை என அனைத்தையும் மற்றவர்கள்தான் அனுபவிப்பார்கள். இவர்கள் சொல்லும் வழிமுறைகளைக் கேட்டு செயல்பட்டு, மற்றவர்கள் தங்கள் வாழ்வில் உயர்வையடைவார்கள். ஆனால் இவரோ, இவரின் குடும்பத்தினரோ பெரிய உயர்வை அடையமாட்டார்கள்.
இவர் முன்நின்று, மற்றவர்களுக்காக செய்யும் காரியம், பொதுத் தொண்டுகள் என அனைத்தும் வெற்றியைத் தரும். ஆனால் அந்த செயல்களால் உண்டாகும் வெற்றியின் பலன்களையும், நன்மைகளையும் இவர் அனுபவிக்கமுடியாது. பொதுவாக இவரின் செயல்கள் அனைத்தும் பிறரை உயர்த்துவதாக இருக்குமேயல்லாது, இவரின் வாழ்க்கையை உயர்த்துவதாக இருக்காது.
கண் சம்பந்தமான நோய்கள், இதயம், ரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்கள் பாதிப்பைத் தரும்.
பித்ரு சாபமுள்ளவர்கள் எல்லாருக்கும் நன்மைகளைச் செய்வார்கள். ஆனால் இவருக்கு சிரமம், கஷ்டம் என்று வரும்போது, யாரும் இவருக்கு உதவி செய்யமாட்டார்கள். பொதுவாக இவர்கள் வாழ்வில் நன்றி கெட்டவர்களையும் விசுவாசம் இல்லாதவர்களையுமே சந்திப்பார்கள்.
(வாசகர்களே, தந்தை (பித்ரு) சாபம் பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் உண்டாகும் கஷ்டம், தடைகள் விலக, காரிய வெற்றிபெற கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பார்கள். இன்னும் சிலர் கோவில் கட்டுதல், உற்சவம் நடத்துதல் போன்ற இறைப்பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். இன்னும் சிலர் புண்ணியத்தலம், புண்ணிய தீர்த்த யாத்திரை, காசி, கயா, இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்று, தர்ப்பணம், பூஜை, ஹோமம் போன்ற பரிகார பூஜைகளைச் செய்துவருவார்கள். இதுபோன்ற செயல்களால் என்ன பலன் கிடைத்தது? வாழ்வில் பிரச்சினைகள், சிரமங்கள் தீர்ந்ததா என்பது அவர்களுக்கே தெரியும். இவர்களின் கோவில் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் பலிக்காது; பலன் தராது. பித்ரு சாபம் பெற்றவர்களை கடவுள்கூட கைவிட்டுவிடுவார்.)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)