"குறிசொல் மேடைகட்டி கத்தி
கொண்டை குச்சு அங்கியோடு
நெறிமதுரை போலுடுத்தி
நெட்டிடும் சாராயத்தால்
வெறிபிடித்து அமர்ந்த அந்த
வீணரைப் பணிந்தால்
முறிபடும் உனக்கு மோட்ச
வீடடைய வழி சொல்வாரோ.'
(சிவவாக்கியச் சித்தர்)
சட்டைநாதர்: காளி மைந்தரே, காகம் உருவெடுத்து இந்த பூமியில் உயிர்கள் அழிவதையும், பின் பிறப் பதையும் பார்த்தவர் நீங்கள். இம்மண்ணுலகில் உயிரினங் கள் பிறப்பதும், வாழ்க்கையில் நன்மை- தீமைகளை அனுபவித்து வாழ்வதும், பின் இறப்பினை அடைவதுமென்று ஒரு சுழற்சி யாக உள்ளது.
இந்த மண்ணில் வாழும் மனிதர்களின் பிறப்பும் இறப்பும் ஒன்றுபோலவே உள்ளது. அதே போன்று உண்ணுதல், உறங்குதல், பசி, தாகம், மோகம், போகம், உறவுகொள்ளுதல் என அனைத் தும் எந்தவித வேறுபாடுமின்றி உள்ளது. ஆனால் நடைமுறை வாழ்வில் சிலர் செல்வம், செல்வாக்குடனும், இன்னும் சிலர் சிரமம், வறுமையுடனும், சிலர் தன் வாழ்வில் உறவுகளுடன் ஒற்றுமையாகவும், இன்னும் சிலர் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு, பகைமை கொண்டும் வாழ்கிறார்கள். இதுபோன்று மாறுபட்ட பலன்கள் மனிதர்கள் வாழ்வில் உண்டாகக் காரணமென்ன என்பதை இன்று சபையில் தெளிவுபடுத்துங்கள்.
காகபுசுண்டர்: இந்த அண்டத்தையும், அதில் வாழும் உயிரினங்களையும், செயல்படச் செய்துகொண்டிருக்கும் ஐம்பூத சக்திகளும் வந்து வணங்கும் பெருமையும், வணங்கச் செய்யும் சக்தியும் பெற்ற ஆசான் அகத்தியரின் திருவடியை வணங்குகிறேன்.
சட்டைநாதரே, நீங்கள் கேட்டுள்ள கேள்வியும், சந்தேகங்களும் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும், எண்ணத்திலுமுள்ள கேள்விதான். கேள்விக்குரிய பதிலைக் கூறுகிறேன்.
இந்த பூமியில் பிறப்பையும் இறப்பையும், இயற்கை ஒரே முறையில்தான் அமைத்த வைத்துள்ளது. மனிதர்களிடையே சாதி, மதம், உயர்வு, தாழ்வு போன்ற எந்தவொரு ஏற்றத் தாழ்வையும், பாகுபாட்டையும் உண்டாக்கி வைக்கவில்லை. ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான உயர்வு- தாழ்வு என்ற நிலையில் வாழ்க்கை அமைய அவரவரேதான் காரமாகிறார்கள்.
மனிதர்கள் வாழ்வில் உண்டாகும். நன்மையும் தீமையும், உயர்வும் தாழ்வும், செல்வமும் வறுமையும், காரிய வெற்றியும் தோல்வியும் என்ற இருவிதநிலையும், மற்றவர்களால் உருவாக்கித் தரப்படுவதில்லை; ஏற்படுத்துவதில்லை. அவரவரே தன் குணம், எண்ணம், செயல்களால் உருவாக்கிக்கொண்டு வாழ்கிறார்கள். என்பதுதான் உண்மை.
இந்த மண்ணுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முழுமையாக, நன்மை- தீமைகளை அனுபவிப்பதுமில்லை. எல்லாரும் ஏதாவது ஒருவகையில் இரண்டு பலன்களையும், கலந்து அனுபவித்துதான் வாழ்கிறார்கள். ஒருவருக்கு நிறைய செல்வம் இருக்கும். ஆனால் புத்திரர்கள் இல்லாத குறை; செல்வத்தை அனுபவிக்கமுடியாத நோய்த்தாக்கம் இருக்கும்.
இதுபோன்று பலவிதமான குறைகளுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்களின் இந்த நிலைக்கு அவர்களின் முற்பிறவி பாவ- சாபங்கள்தான் காரணமாகும்.
சட்டைநாதர்: ஒரு மனிதனுக்கு பாவ- சாபங்கள் உண்டாவது கிரகங்களாலா? தெய்வங்களாலா?
காசுபுசுண்டர்: மனிதர்களின் வாழ்வில் உண்டாகும் இந்த நிலைக்கு இரண்டுவகை யான காரணங்கள் உண்டு. ஒவ்வொரு மனிதனும் அவனது முற்பிறவிகளில் செய்த பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் முதல் காரணம். இதனைத்தான் தலையெழுத்து, விதி, கர்மவினையென்று கூறிக்கொள்கிறார் கள். மற்றொரு காரணம். மனிதன் தன் வாழ்வின் நடைமுறை செயல்கள்மூலம் தனக் குத்தானே செல்வம்- வறுமை, உயர்வு- தாழ்வு என பலன்களை உருவாக்கிக்கொண்டு வாழ்கிறான். பாவ- சாப- புண்ணியப் பதிவு களுக்கு கிரகமோ, தெய்வங்களோ காரண மில்லை.
சட்டைநாதர்: அறிவிற் சிறந்தவரே, மனிதன் பாவ- சாபப் பதிவுகளை எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறான்; எந்தவிதமான செயல்கள் தலையெழுத்து, விதியை நிர்ணயிக்கின்றன என்பதைக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: ஒரு மனிதன் தன் வாழ்வின் நடைமுறைச் செயல்களால் எவ்வாறு தன் விதியை நிர்ணயித்துக்கொள்கிறான் என்பதைக் கூறுவதற்கு முன்பு, பாவம் எப்படி உருவாகிறது- சாபம் எதனால் உண்டாகின்றது என்பதைக் கூறுகிறேன்.
ஒருவன் தனது பணம், பதவி, ஆட்சி, அதிகாரம், ஆள்பலம், பணபலம், உடல்பலம், புத்தி பலத்தால், திட்டமிட்டு, தான் செய்வது தவறு, துரோகம் என்று தெரிந்தே மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகள், துரோகங்கள், கொடுமைகளைச் செய்வது பாவப்பலனை அவனுக்குத் தந்துவிடுகிறது. பாவத்தை அவனே உருவாக்கிக்கொள்கிறான்.
ஒருவன் தன்னைவிட கீழானவர், உடல் பலம், ஆள்பலம், பணபலம் இல்லாதவர் களை, தனது குடும்பத்து உறவுகளுக்குச் செய்யும் தீமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்த்து செயல்படமுடியாத நிலையில் உள்ளவர்கள், மனம் வெறுத்து சொல்லும் வாக்குதான் சாபமாகும்.
பாவம், சாபம் இவையிரண்டும் இணைந்து செயல்படும் நிலையே தோஷமாகும். பாவத்தின் முற்றிய நிலை சாபம். சாபத்தின் முற்றிய நிலை தோஷமாகும்.
சட்டைநாதர்: ஒரு மனிதனைத் தனது சுயபுத்தியால் எதனையும் புரிந்து செயல் பட்டு வாழச் சொன்னவரே, ஒரு மனிதனுக் குண்டான பாவ- சாபங்கள் எப்போது செயல்படும் என்பதைக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: ஒருவன் தனது முற்பிறவி களில் மற்றவர்களுக்குச் செய்த பாவத்தையும், அதனால் பெற்ற சாபத்திற்குண்டான தண்ட னைப் பலன்களை, சிரமங்களை அடுத்த பிறவியான இப்பிறவி வாழ்க்கையில் அனுபவிப்பான். இந்தப் பிறவியில் செய்யும் பாவச் செயல்களுக்குண்டான தண்டனைக்கு பலன்களை அடுத்து ஒரு பிறவி இந்த பூமியில் பிறந்து அனுபவித்து வாழ்வான்.
அந்தப் பிறவி வாழ்க்கையில் தனது அதிகார பலம், ஆள்பலம் இவற்றால் பிறருக்கு தீமைகளைச் செய்து வாழ்ந்தாலும், எந்த பாதிப்பையும் அடைய மாட்டான். பணம், பொருள், பதவியென என எந்தவிதமான குறையுமின்றி சுகமாக வாழ்வான். வாழ்வில் உயர்ந்துகொண்டே போவான்.
அவன் முற்பிறவியில் செய்த புண்ணியம் தான், இன்றையநாளிலும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், குடும்பத்தினருக்கும். உறவு களுக்கும் தீமைகளைச் செய்பவன்- பிறர் பொருளை அபகரித்து வாழ்பவன். திருட்டுத் தொழில்- செய்து வாழ்வில் உயர்ந்து வாழ்பவர் கள் சுகமாக வாழ காரணம் அவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியம்தான். இந்தப் பிறவியில் செய்யும் பாவங்களுக்கு உண்டான தண்டனை அடுத்த பிறவியில்தான் பலனாக அடையமுடியும்.
இந்தப் பிறவியில் எல்லாருக்கும் நன்மைகளைச்செய்து, உண்மையாக, நேர்மையாக, நல்லவனாக வாழ்பவன், கஷ்டத்துடன் வாழ்ந்துகொண்டு இருப்பான். எல்லாம் என் விதி என்று விதிமேல் பழியைப் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பான். இவன் வாழ்வில் அனுபவிக்கும் குறைகள், சிரமங் களுக்குக் காரணம், தனது முற்பிறவிகளில் தனது குடும்ப உறவுகளுக்கும், தன்னை நம்பியவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அகங்காரத்தால் செய்த பாவங்களும், பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபமும்தான் காரணம்.
சட்டை முனிவர்: ஒவ்வொரு மனிதனும் எதனையும் பகுத்தறிந்து, பகுத்தறிவால் வாழச் சொன்னவரே, காளி மைந்தரே, மனிதர்கள் தங்கள் வாழ்வில் எந்தெந்த செயல்களைச் செய்தால் அவனுக்கு பாவ- சாபங்கள் பற்றும்; முற்பிறவிகளில் என்னவிதமான பாவங்களைச் செய்திருந்தால், இப்பிறவியில் எந்தவிதமான கஷ்டங்களை அவனும், அவன் வம்ச வாரிசுகளும் அனுபவித்து வாழ்வார்கள் என்பதை முக்காலமும் அறிந்த முனிவர் பெருமானே, கூறுங்கள்.
அகத்தியர்: பகுத்தறிவிலும், அட்டமகா சக்தி ஆற்றலிலும், திறமைபெற்ற சித்தர் பெருமக்களே, இன்று நேரம் அதிகமாகி விட்டது. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு காக புசுண்டர் நாளை பதில் கூறுவார். உங்களு டன் இணைந்து, அவர் கூறும் விளக்கத்தைக் கேட்க நானும் ஆவலாக உள்ளேன். இன்று சித்தர்களின் பகுத்தறிவு சபை கலையட்டும்.
"முந்த சன்மமாம் புண்ணிய மிகுந்திடின்
முக்கியமுண்டாகும்
பிந்த சன்மமாம் பாவமே மிகுந்திடிற்
பெரியதோர் துயரமாகும்
அந்த ரண்டையு மறுத்திட ஒளிதரும்
அறிவு கழற் றுணையாகும்
பந்த மானதோர் சித்தர் சித்தாந்தம்
படைத்ததை அறிவாயே.'
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)