"ஏட்டுச் சுரைக்காய் காய்கறிக்கி
யெய்திடாது போல் எண்டிசை திரிந்துங்கதி
யெய்த -லையே நாட்டுக்கொரு கோவில்கட்டி
நாளும் பூசித்தே நாதன்பாதம் காணர்களென்றே
யாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
சுந்தரானந்தர்: இந்த மண்ணுலகில் பிறந்து வாழும் அனைத்து உயிரினங்களின் அகத்திலுள்ள இயல்பான குணங்களை அறிவாலும் அனுபவத்தாலும் அறிந்து எங்களுக்கு போதித்த ஆசான் அகத்தியர் திருவடிக்குப் பணிவான வணக்கம்.
ஆசானே, இந்த பூவுலகில் அரிதிலும் அரிதானது, அளவற்ற ஆற்றல் கொண்டது, ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்வது மனிதனின் சித்த சக்தியும், உடல் சக்தியும்தான் என்ற உண்மையை எங்களுக்கு போதித்தீர்கள். ஒரு மனிதன், தன் வாழ்வில் அனுபவிக்கும் நன்மை, தீமை, உயர்வு, தாழ்வுக்கு அவரவர் முற்பிறவிகளில் செய்த பாவ- சாப- புண்ணிய வினைப்பதிவுகள்தான் காரணம் என்று கூறுகின்றீர்கள்.
ஒரு மனிதனுக்கு பாவ- சாப- புண்ணியப் பதிவுகள் எவ்வாறு உண்டாகிறது? இந்த வினைப் பதிவுகளை ஒருவன் தனக்குத் தானே உருவாக்கிக்கொள்கிறானா அல்லது மற்றவர்களால் அவனுக்கு உருவாக்கி வைக்கப்படுகிறதா? இவற்றைப் பற்றிய விளக்கத்தைக் கூறுங்கள்.
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, கடல் கொந்தளித்து பூகம்பம் ஏற்பட்டு, அதனால் பிரளயம் உருவாகி பூமி அழியும்போது, நாய் உருவம், காக்கை உருவமெடுத்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, பல யுகங்களைக்கண்டு மனிதர்களின் சித்த சக்தியை முழுமையாக அறிந்து கொண்டவரும், நமது மண்பகுதியின் மேற்கு எல்லையான சாளுக்கிய (ஆந்திரா) தேசத்தில் அன்னை காளி தேவிக்கு மகனாகப் பிறந்து அகத்தியரின் மாணாக்கரான காகபுசுண்டர் இன்று சித்தர்கள் சபையை தலைமையேற்று நடத்துவார். உங்களின் ஞானக் கேள்விகளுக்கு விளக்கங்களைக் கூறுவார்.
காகபுசுண்டர்: இந்த மண்ணுலகில் வாழும் சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள் என அனைவருக்கும் தலைமையானவரே, தங்களின் மாணாக்கர்களாகிய எங்களிடையே மொழி, மதம், சாதி, இனம், குலம், கோத்திரம் என வேறுபாடு பார்க்காமல், அன்பு, அடக்கம், ஆற்றல், ஞானம், வாசி, குண்டலினி யோகம், அட்டமகா சித்திகள் என அனைத்தையும் போதித்தவரே, உங்கள் பாதம் பணிகிறேன்.
அகத்தியர் பெருமானே, உங்களின் உடலி-ருந்து வெளிவரும் ஒரு துளி வியர்வைக்கு உள்ள சக்தி அளவுதான் எனது சக்தி. ஆசான், மாணாக்கன் என்ற வேறுபாடு பாராமல், நீங்கள் அனைத் தையும் கற்றதாலும், கற்பிப்பதாலும் கர்வம் கொள்ளாமல், இன்றைய மாணாக்கன் நாளைய ஆசானாக வேண்டும்; இன்றைய தொண்டன் நாளை தலைவனாக வேண்டும் என்ற மனம்கொண்ட உங்களை மறுபடியும் மறுபடியும் வணங்குகிறேன்.
சித்தர் பெருமக்களே, உங்கள் கேள்வி களுக்கு விடைகூறும்முன்பு, எனது கருத்து ஒன்றை இந்த பகுத்தறிவுக் கழகத்தில் கூற விரும்புகிறேன். சபையினருக்கு அது சரியானது என தோன்றினால், அகத்தியரும், சித்தர்களும் அதற்கு அங்கீகாரம், ஒப்புதல் தரவும் வேண்டுகிறேன்.
விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள நாடுகளான சாளுக்கியம் (ஆந்திரா), கொங்கணம் (கர்நாடகா), வேணாடு (கேரளம்), தென்பாண்டியம் பிற என இந்தப் பகுதியை, "தென்புலம்' என்றும், இப்பகுதியில் வாழும் மக்களைத் "தென்புலத்தார்' என்றும், விந்தியமலைக்கு வடக்குப் பகுதியிலுள்ள நாடுகளை "வடபுலம்' என்றும், அந்த நாடுகளில் வசிக்கும் மக்களை "வடபுலத்தார்' என்றும் கூறுகிறார்கள்.
சாளுக்கிய தேசத்தில் உருவாகும் கோதாவரி, கிருஷ்ணா நதிகள் அந்த நாட்டை வளம் பெறச்செய்து, கன்னட தேசத்தில் பாய்ந்து, பின் பிற பகுதியில் ஓடிவந்து, இந்நாடுகளை பாகுபாடின்றி செழிப்புறச் செய்கின்றன.
கொங்கண தேசத்தில் உருவாகும் காவேரி நதி, அந்நாட்டில் பாய்ந்து பயிர் விளையச்செய்து, பின் தமிழ்நாட்டில் பாய்ந்து செழிப்படையச் செய்கிறது.
வேணாட்டிலும் மேற்குப் பகுதி மலைத் தொடரிலும் உருவாகும் பொருநை (தாமிர பரணி), வைகை, அமராவதி போன்ற நதிகள் கேரளத்தில் உருவாகி ஓடிவந்து, பின் தமிழ்நாட்டில் பாய்ந்து இந்த நாடுகளை வளம்பெறச் செய்து, எந்தவிதமான பாகுபாடுமின்றி இந்த நான்கு நாட்டு மக்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த தென்புல மக்கள் பேசும் மொழியில் வேறுபட்டாலும், வாழும் மண்ணாலும், குடிக்கும் நீராலும் ஒன்றுபட்டே உள்ளோம். இயற்கையே நம்மை ஒன்றுபடுத்தி வைத்துள்ளது. வடபுலத்து நதிகளோ, வட புலத்து மக்களோ நமக்கு எந்தவகையிலும் உதவிசெய்வதில்லை. இயற்கையே தென் புலத்தாரும் வடபுலத்தாரும் ஒன்றுசேர்ந்து வாழமுடியாமல் பிரித்தே வைத்துள்ளது. இந்த நிலை எந்த காலத்திலும் மாறாது.
சாளுக்கிய (ஆந்திரா) தேசத்தைச் சேர்ந்த காகபுசுண்டனும், கொங்கணியைச் (கர்நாடகா) சேர்ந்த கொங்கண சித்தரும், வேணாட்டைச் (சேரநாடு, கேரளா) சேர்ந்த போகர் சித்தரும், தமிழ்நாட்டின் கிழக்குப் (சோழநாடு) பகுதியைச் சேர்ந்த திருமூலரும், தென் தமிழ்நாட்டுப் (பாண்டிய) பகுதியைச் சேர்ந்த அகத்தியரும், இந்நாடுகளின் பல பகுதிகளைச் சேர்ந்த இன்னும் அனைத்து சித்தர் பெருமக்களும் பாண்டிய நாட்டுப் பகுதியிலுள்ள இந்தப் பொதிகை மலையில், ஆசான் அகத்தியர் வழிகாட்டுதல்படி அவரையே தலைவராகக்கொண்டு, இந்த பகுத்தறிவு ஞான சபையை உருவாக்கி நாம் ஒன்றுசேர்ந்துள்ளோம்.
இந்த நாட்டுப் பகுதிகளில் ஓடும் நதிகள், நான்கு நாட்டு மக்களையும் எவ்வாறு ஒற்றுமைப்படுத்தியுள்ளதோ, அதேபோன்று, இந்த சபையிலுள்ள அனைத்து சித்தர் பெருமக்களும் ஒத்தக் கருத்துகளால் ஒன்றுபட்டுள்ளோம்.
விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இந்த நான்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும், இந்த தென்புலமே "திருவிடம்' ஆகும். இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் "திருவிடத்தார்' ஆவார்கள். இவர்களின் வாழ்க்கைமுறை, சித்தர்கள் வகுத்தளித்த சித்தாந்த வழிமுறையாகும். இந்த தென்புலத்தை ஆட்சி செய்யும் அரசர்களின் ஆட்சிமுறை "திருவிடத்தார்' ஆட்சிமுறையாகும்.
("திருவிடம்' என்பதே காலப்போக்கில் "திராவிடம்' என்றும், "திராவிட நாடு'' என்றும், "திருவிடத்தார்' என்பது, "திராவிடர் கள், திராவிடமக்கள்' என்றும் மருவி வழங்கப்படுகின்றது.)
சித்தர் பெருமக்களே, இனி நமது சித்தர் சபை, திராவிட நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சித்தாந்தக் கருத்துகளையும், பகுத்தறிவையும் போதிக்கும் "திராவிட பகுத்தறிவுச் சபை' என்றும் அழைக்கப்பட வேண்டும். இதனால் மக்களிடையே ஒற்றுமையுணர்வு வருங்காலங்களிலும் நிலையாக இருக்கும் என்பது எனது எண்ணமும் விருப்பமுமாகும். அறிவிலும், ஆற்றலிலும் உயர்ந்த சித்தர்களும், ஆசான் அகத்தியரும் இதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இந்த திராவிட நாட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள், ஆசான் அகத்தியர் வழிகாட்டியபடி, மொழி, மதம், சாதி, இனம் என்ற வேறுபாடின்றி, வம்சத்தில் மாண்டுபோன முன்னோர்களையே தெய்வமாக வழிபாடு செய்து, திராவிட பண்பாடு, நாகரிகத்தைக் கடைப்பிடித்து, எல்லாரும் ஓர்குலம், எல்லாரும் திராவிட இனம், எல்லாரும் சமம் என்ற சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறோம்.
விந்தியமலைக்கு வடக்குப் பகுதி நாடுகளில் வாழும் வடபுலத்து மக்களும், இன்னும் கடலுக்கு அப்பாலுள்ள வேறுநாடுகளில் வாழும் மக்களும், சுயஅறிவை மழுங்கச் செய்து சிந்தித்து வாழும் திறனைத் தடுத்து, கற்பனைகளில் வாழச்சொல்லும் கொள்கைகளை, கற்சிலை வழிபாட்டைக் கூறும் சாஸ்திரம், மனிதர்களிடையே மதம், சாதி, குலம், கோத்திரம். என வேறுபடுத்திக் கூறும் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்துவருகிறார்கள்.
ஆசான் அகத்தியர் கூறிய சித்தாந்தக் கொள்கைகளுக்கு, திராவிட மக்களின் வாழ்வியல் முறைக்கு எதிரான கொள்கை கள், மாயை வழிபாடு திராவிடப் பகுதியில் ஊடுருவிப் பரவாமல், தடுத்தும், வருங் காலத்தில் சித்தர்களின் சித்தாந்தக் கொள்கைகளை கடைப்பிடித்து வாழும் அரசர்களே இந்த திராவிடப் பகுதி நாடுகளை ஆட்சிசெய்ய நாம் கவனமாக இருந்து செயல்படவேண்டும்.
(திராவிடப் பகுதி மக்களின் வாழ்வியல் முறை, அகத்தியரால் கூறப்பட்ட சித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. வடபுலத்து மக்களின் வாழ்க்கைமுறை வேத, சாஸ்திரக் கொள்கை களை அடிப்படையாகக் கொண்டது. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் மறையான- முரண்பட்ட கருத்துகளைக் கொண்டது.
சித்தர்கள் தங்கள் பாடல்களில் திராவிட சித்தாந்தக் கருத்துகளைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அந்தப் பாடல்களைப் படித்து அதன்பொருளை நன்கு புரிந்தவர் களுக்கும், சித்தர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கும் மட்டுமே இந்த உண்மை புரியும்.)
"வேதமென்ற ஆகமங் களாறு சாத்திரம்
வெவ்வேறு மதசாதி சமய பேதம்
காதமென்ற ஆதிநூல் பதினெட் டாகக்
கருத்துருவ மாயுல கோரை மயக்கங் காட்டி
கீதமென்றா லரிகீதம் சிவகீத மென்றும்
பக்தியுடன் வெவ்வேறாய் பிரித்துக் காட்டி
பாவித்தால் சாவதுவே நிசந் தானென்று
பாடினார் சாத்திரத் தைப்பாடி னாரே.'
(வியாசர் கூறியதாக, அகத்தியர் கூறிய பாட்டு.)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)