சித்தர்கள் அருளிய வாசி யோகம் 59 - சித்தர்தாசன் சுந்தர்ஜி!

/idhalgal/om/vasi-yoga-by-siddhas-59-siddhardasan-sunderji

"காவியுஞ் சடைமுடி கமண்டலங் கலாசனம்

தாவு ருத்ராட்சம் யோகதண்டு கொண்ட மாடுகள்

தேவியை யலையவிட்டு தேசமெங்கும் சுற்றியே

பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.'

-சிவவாக்கியர்

கொங்கண சித்தர்: பகுத்தறி வில் சிறந்து உயர்ந்தவரே, நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ பகுத்தறிவை போதிப்பவரே, உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் சீர்பெற, மக்கள் திறன் பெற்று செயலாற்ற வாழ்க்கை வழிமுறைகளையும், மருத்துவத் தையும், வாசி யோகத்தையும், ஆன்மா அமைதியும் வளமும்பெற்று வாழ வழிகாட்டியவருமான ஆசானே! உங்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன்.

இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதன், விலங்கு, பறவைகள், மரம், செடி, கொடி, புல், பூண்டு என அனைத்து உயிரினங் களும் உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்று நிலைகளையும் பெற்றதாக ஒருநிலையில் படைக்கப்பட்டுள்ளன என்று கூறினீர்கள். ஆனால் மனிதன், விலங்கு, பறவைகள் போன்றவற்றுக்கு வாழ்க்கை முறையில் பேச்சு, ஒலி, அசைவு, உண்ணுதல், உறங்கு தல், உறவு கொள்ளுதல், இனவிருத்தி செய்து அவற்றை வளர்த்தல், மரணமடைதல் என அனைத்திலும் தாங்கள் கூறுவதுபோல இல்லையே! வேறுபாடுகள் உள்ளனவே.

மனிதர்கள், விலங்குகள், பறவைகள் செயல்படு வதுபோல தாவரங்கள் செயல்படுவதில் லையே. ஆனால் நீங்கள் தாவரங்களும் உயிரினங்கள்தான் என்று கூறுகிறீர்கள். அவற் றுக்கும் ஆன்மா உண்டு; ஆன்மாவின் செயல்பாடு உண்டு என்று கூறுகிறீர்கள். இதை விளக்கவேண்டும்.

அகத்தியர்: திராவிடநாட்டுப் பகுதியான கொங்கு தேசத்தில் பிறந்து, பகுத்தறிவால் இயற்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, தமிழ்ப் பகுதியான தாமிரபரணி நதிக்கரையில் வசிக்கும் இந்த அகத்தியனை ஆசானாக ஏற்று, அட்டமா சக்திகளையும் சித்திகளையும் பெற்று, கொங்குப் பகுதி மக்களுக்கு பகுத்தறிவையும் சித்தாந்தக் கருத்துகளையும் போதித்து, அயல் தேசத்தினர் போதித்த சாஸ்திரம், தர்மம் எனக்கூறும் பொய்யான வழிகளை மறுத்து, உழைப்பால் உயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கை வளம்பெற வழிகாட்டும் கொங்கண சித்தரே! சித்தர்களின் இந்தப் பகுத்தறிவுச் சபையில் இன்று நீங்கள் எழுப்பியுள்ள வினாவுக்கு பதில் கூறுகிறேன். உங்கள் கேள

"காவியுஞ் சடைமுடி கமண்டலங் கலாசனம்

தாவு ருத்ராட்சம் யோகதண்டு கொண்ட மாடுகள்

தேவியை யலையவிட்டு தேசமெங்கும் சுற்றியே

பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.'

-சிவவாக்கியர்

கொங்கண சித்தர்: பகுத்தறி வில் சிறந்து உயர்ந்தவரே, நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ பகுத்தறிவை போதிப்பவரே, உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் சீர்பெற, மக்கள் திறன் பெற்று செயலாற்ற வாழ்க்கை வழிமுறைகளையும், மருத்துவத் தையும், வாசி யோகத்தையும், ஆன்மா அமைதியும் வளமும்பெற்று வாழ வழிகாட்டியவருமான ஆசானே! உங்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன்.

இந்த பூமியில் பிறந்து வாழும் மனிதன், விலங்கு, பறவைகள், மரம், செடி, கொடி, புல், பூண்டு என அனைத்து உயிரினங் களும் உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்று நிலைகளையும் பெற்றதாக ஒருநிலையில் படைக்கப்பட்டுள்ளன என்று கூறினீர்கள். ஆனால் மனிதன், விலங்கு, பறவைகள் போன்றவற்றுக்கு வாழ்க்கை முறையில் பேச்சு, ஒலி, அசைவு, உண்ணுதல், உறங்கு தல், உறவு கொள்ளுதல், இனவிருத்தி செய்து அவற்றை வளர்த்தல், மரணமடைதல் என அனைத்திலும் தாங்கள் கூறுவதுபோல இல்லையே! வேறுபாடுகள் உள்ளனவே.

மனிதர்கள், விலங்குகள், பறவைகள் செயல்படு வதுபோல தாவரங்கள் செயல்படுவதில் லையே. ஆனால் நீங்கள் தாவரங்களும் உயிரினங்கள்தான் என்று கூறுகிறீர்கள். அவற் றுக்கும் ஆன்மா உண்டு; ஆன்மாவின் செயல்பாடு உண்டு என்று கூறுகிறீர்கள். இதை விளக்கவேண்டும்.

அகத்தியர்: திராவிடநாட்டுப் பகுதியான கொங்கு தேசத்தில் பிறந்து, பகுத்தறிவால் இயற்கையின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, தமிழ்ப் பகுதியான தாமிரபரணி நதிக்கரையில் வசிக்கும் இந்த அகத்தியனை ஆசானாக ஏற்று, அட்டமா சக்திகளையும் சித்திகளையும் பெற்று, கொங்குப் பகுதி மக்களுக்கு பகுத்தறிவையும் சித்தாந்தக் கருத்துகளையும் போதித்து, அயல் தேசத்தினர் போதித்த சாஸ்திரம், தர்மம் எனக்கூறும் பொய்யான வழிகளை மறுத்து, உழைப்பால் உயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கை வளம்பெற வழிகாட்டும் கொங்கண சித்தரே! சித்தர்களின் இந்தப் பகுத்தறிவுச் சபையில் இன்று நீங்கள் எழுப்பியுள்ள வினாவுக்கு பதில் கூறுகிறேன். உங்கள் கேள்விக்குரிய பதிலை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியமே. அகத்தியன் யான் கூறுவதை அறிந்து தெளிந்து கடைப்பிடித்து வாழ்ந்தால் அனைத்து மக்களும் பாவம், சாபமில்லாத வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

ss

சித்தர் பெருமக்களே, பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பயன்தராது. இந்த பூமியில் உருவமுள்ளது, சுவாசித்து வாழ்வது, உடல் வளர்ச்சியுள்ளது, தன் இனத்தை விருத்திசெய்து அழியாமல் காப்பது போன்றவை அனைத்துக்குமே ஆன்மநிலை உண்டு. பசி, நோய், மகிழ்ச்சி என அனைத்துமுண்டு.

மனிதன், விலங்கு, பறவைகள் ஒலிகளை எழுப்புவதுபோல தாவரங்களும் ஒலியை எழுப்பும். பூமியில் அனைத்து உயிரினங் களும் ஒலி எழுப்புவது காற்றின் உதவியால் தான். காற்று இல்லையென்றால் பேசினா லும் கத்தினாலும் வாய் அசையுமே தவிர ஒலி வெளியே வராது. தாவரங்களும் இதேபோன்று வெளிப்புறத்தில் வீசும் காற்றின் உதவியால் காற்றின் அளவைப் பொருத்து ஆக்ரோஷமாகவும் வேகமாகவும் மென்மையாகவும் செயல்படும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்போது மரங்களின் அசைவு மக்கள் பயப்படும்படி, பொருட் களைத் தூக்கி வீசுமளவில் இருக்கும். இது கோப, ஆக்ரோஷ நிலை. மென்மையாக மக்கள் மகிழும் வண்ணம் வீசும்போது மகிழ்ச்சி நிலை. காற்றில்லாமல், தாவரங்கள் அசையாமல் செயல்படாமல் ஸ்திரமாக நிலையில் இருக்கும்.

உயிரினங்கள் தூங்குவதுபோல் தாவரங்களும் உறக்கம் கொள்ளும், உயிரினங் களுக்கு நீரின் தேவை இருப்பதுபோல தாவரங்களுக்கும் நீரின் தேவை இருக்கிறது. உயிரினங்கள் பூமிக்குமேலே உள்ள நீரைக் குடித்து வாழ்கின்றன. தாவரங்கள் தன் இலை, தழைகளின் உதவியால் காற்றில் கலந்துள்ள நீர் சத்தை உறிஞ்சியும், மண்ணிலுள்ள நீரைத் தன் வேர்களால் உறிஞ்சிக் குடித்தும் உயிர் வாழ்கின்றன.

உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் நீர் அருந்துவதில் பெரிய வேறுபாடு உண்டு. உயிரினங்கள் நீரை நேரடியாகதான் குடிக்கமுடியும். காற்று, மண் போன்றவற்றுடன் கலந்து அருந்தமுடியாது. ஆனால் தாவரங்கள் நீரைமட்டும் தனித்துக் குடிக்காது. மண் அல்லது காற்றுடன் கலந்திருக்கும் நீரை மட்டும்தான் தனியே பிரித்து அருந்தி தன் நீர்த் தேவையைத் தீர்த்துக் கொள்ளும்.

ஒரு தாவரத்தை நீரில் மட்டும் போட்டு வைத்தால் அந்தத் தாவரம் வளராது; அழுகி அழிந்துவிடும். காற்றில் போட்டுவைத்தால் காய்ந்து வாடி வதங்கிவிடும்; வளராது. ஆனால் மண்ணில் நீரை ஊற்றினால் அந்தத் தாவரம் அந்த நீரை உறிஞ்சிக் குடித்து செழித்து வளரும். தாவரங்களுக்கு மண்தான் தாய். தாவரங்கள் பூமித்தாயின் குழந்தைகள்.

அவற்றின் இறுதிக்காலம்வரை மண்ணை விட்டுப் பிரியாது. மண் தாவரத்தைப் பிரியாது. இவையிரண்டும் ஒன்றையொன்று பிரியும் காலம்தான் தாவரத்தின் மரண நிலை.

மண்ணுக்கும் தாவரத்துக்கும் தொடர்பை உண்டாக்குவது மரத்தின் வேர்ப்பகுதிதான். வேர் மரணமடையும்போது பூமியின் தொடர்பு துண்டிக்கப்பட்டு தாவரம் மரணமடையும் பூமியில் வாழும் உயிரினங் களைப்போல பூக்களைப் பூத்து பருவ மடைந்து, வண்டுகள், தேனீக்கள்மூலம் மகரந்தச் சேர்க்கையடைந்து கருவுற்று, காய் காய்த்துப் பழமாகி, அதனுள் விதை உருவாகி, அதன் விதை முற்றி, அந்த விதைகள்மூலம் மறுபடியும் மண்ணில் இணைந்து முளைத்து தாவர இனத்தை விருத்தி செய்கிறது.

மண்ணுலகில் மனிதர்களும், விலங்கு, பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தங்கள் கருவை கர்ப்பத்தில் வைத்துக் காப்பாற்றி வளர்த்து, கருவளர்ச்சிக் காலம் முடிந்தபின்பு பூமியில் பெற்றெடுக்கின்றனவோ, அதேபோன்று தாவரங்களும் தங்களின் விதைக்கருவினை காய்கனிகளில் வைத்து வளர்ச்சிபெறச் செய்து, விதை முற்றியபின்பு பூமியில் விடுகின்றது. மண்ணில் விழுந்த விதை தன் இனத்தை மீண்டும் பெருக்குகின்றது. உயிரினங்களுக்கு உண்டான இயற்கையின் அனைத்து விதிகளும் நியதிகளும் தாவரங்களுக்கும் உண்டு. தாவரங்களுக்கும் ஆன்மநிலை உண்டு என்பதை என் அனுபவத்தில் அறிந்தேன்.

இந்த சமயத்தில் உங்களுடன் ஒரு விஷயத் தைப் பகிர்ந்துகொள்கிறேன். அன்பர்களே, தாவரங்களுக்கும் ஆன்மநிலை உண்டு. தாவரங்களுடன் கலந்துபேசி உறவாடி வாழும் அனைத்து விவசாயிகளுக்கும், பயிர்த் தொழில் செய்யும் அனைத்து விவசாயி களுக்கும் இது நன்கு தெரியும். விவசாயிகள் மட்டுமே தாவரங்களுடன் அதிகமான நேரம் இருப்பார்கள். இரவு, பகலென்று காலநேரம் பார்க்காமல் இருப்பார்கள். தாவரங்களுடன் ஒட்டி உறவாடி அவற்றைக் காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது ஊர் காவேரி நதியின் அருகிலேயே அமைந்தது. காவேரியின் பாசனத்தால் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை என அனைத்துப் பயிர்களும் விளையும் வளமான பூமி. நான் சிறுவனாக இருக்கும்போது எனது பாட்ட னார் காலை, மாலை என இருவேளைகளிலும் எங்களது எல்லா வயல்களையும் தவறாமல் சென்று பார்த்துவருவார். ஒருநாள் நான் அவரிடம், "நீங்கள்தான் காலையில் வயலுக்குச் சென்று வருகிறீர்களே. மீண்டும் மாலையில் ஏன் செல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில் அந்த வயதில் எனக்கு சரியாகப் புரியவில்லை.

ஆனால் இப்போது நான் விவசாயம் செய்யும்போது அதன் விளக்கத்தை அனுபவத்தில் அறிந்துகொண்டேன். நம் வாழ்வின் செயல்களில் உண்டாகும் அனுபவம் தான் நமக்கு குரு என்பது உண்மைதான். நான் கேட்ட அந்த கேள்விக்கு என் பாட்டனார், "அடேய் பயலே... நமது வயலில் உள்ள வாழை, நெல் பயிர்களுக்கு உயிர் உண்டு.

அவையும் மனிதர்கள் போன்றவைதான். நான் காலையில் வயலுக்குச் செல்லும்போது, நம்மைக் காப்பாற்றுபவர் நம்மைப் பார்க்க வந்துவிட்டார்; இன்று நமக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றைத் தந்துவிடுவார் என்று மகிழ்ச்சியடையும். இதனால் இன்னுமொரு நன்மையும் உண்டு. முதல்நாள் இரவு வயலுக்குப் பாய்ச்சிய தண்ணீர் வயலின் எல்லா பகுதிக்கும் பாய்ந்துள்ளதா- தண்ணீர் வயலில் தங்காமல் நண்டுகள் போட்ட வளைமூலம் வெளியில் சென்றுவிட்டதா என்று கவனித்து, நண்டுகள் போட்ட துளைகள் இருந்தால் அவற்றை அடைத்து நீர்தேங்கச் செய்யலாம்.

மாலையில் வயலுக்குச் செல்லும்போது, வயலில் நீர் இல்லையென்றால் நீர் பாயச் செய்துவிடலாம். நான் வயலைச் சுற்றிப் பார்த்து வரும்போது, மனிதர்களுடன் பேசுவதுபோல பயிர்களுடன் பேசுவேன். "நீங்கள் நோயில்லாமல் நன்கு விளைந்து அதிகமான பலன் தரவேண்டும். அனைவரது பசியையும் போக்கவேண்டும். உங்களை நான் பாதுகாத்து வளர்ப்பதுபோல நீங்கள் எங்களை வாழ்க்கையில் உயர்வுபெறச் செய்யவேண்டும். இந்த வயல் என்னைக் காப்பாற்றுவதுபோல எனது வாரிசுகள் காலத்திலும் எங்களைவிட்டுப் போகாமல் எங்கள் வம்சத்தையும் காப்பாற்றவேண்டும்' என்று அவற்றிடம் தினமும் பிரார்த்தனை செய்வேன்.

காலை, மாலை என இரு வேளைகளிலும் வயலுக்குச் சென்று பார்ப்பதையும், நான் கூறுவதையும் அந்தப் பயிர்கள் கேட்டுப் புரிந்துகொள்ளும். "நமது முதலாளி தினமும் நம்மைப் பார்த்து பெற்ற பிள்ளைகளைப் போல வளர்க்கிறார்' என்று மகிழ்ச்சியடை யும். "நம் முதலாளியின் வாழ்க்கையின் உயர்வு நம்மிடம்தான் உள்ளது' என்றெண்ணி பயிர்கள் நன்கு விளைந்து, நல்ல விளைச்சலைத் தரும். நீர் குறைவான காலத்தில்கூட வறட்சி யைத் தாங்கி விளைச்சலைத் தரும். உங்கள் காலத்திலும் இந்த வயல்கள், சொத்துகள் இருக்கவேண்டுமென்று கோவிலில் வேண்டு வதுபோல வயலிடம் வேண்டிக்கொண்டு வருவேன்.

காலை, மாலை வயலுக்குச் செல்வதால் நல்ல தூய்மையான காற்றை சுவாசிக்கலாம். அதனால்தான் இவ்வளவு வயதாகியும் இன்னும் திடகாத்திரத்துடன் இருக்கிறேன். ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அதைத் தீர்க்க சரியான யோசனை, வழி கிடைக்க வில்லையென்றால் வயலுக்குச் சென்று பயிர்களுடன் இருக்கும்போது மனம் அமைதி யாகும். மனம் அமைதியானால் பிரச்சினைகளுக்கு சரியான யோசனை தோன்றும். எவ்வளவு மனக்குழப்பம், சிரமமிருந்தாலும் வயல்வெளிகள், தோட்டங்கள், மரங்கள், பூஞ்செடிகள் இடையே இருந்தால் மனம் அமைதியாகிவிடும். பெற்ற பிள்ளை போடாத சோற்றை நட்ட பயிர்கள் நமக்குப் போடும்'' என்றார்.

இன்றுவரை என் பாட்டனார் கூறியதை நான் கடைப்பிடித்து வருகிறேன். ஐந்து தலைமுறைகளாக எங்களது பூர்வீக சொத்து அழியாமலிருந்து எங்களைக் காப்பாற்றிவருகிறது. தாவரங்களுக்கும் ஆன்மா உண்டு என்பதை என் அனுபவத்தில் அறிந்தேன். உயிருள்ள தாவரங்களின் விதைகளை பூஜை, யாகம், ஹோமம் என்னும் பெயரால் நெருப்பிலிட்டு அழிக்கும்போது, உயிர் களைக் கொன்ற கொலைப் பாவம் (பிரம்ம ஹத்தி தோஷம்) உண்டாகும். அது அந்த வம்ச வாரிசுகளுக்கும் அடுத்த பிறவிகளில் தொடர்ந்துவந்து சிரமங்களைத் தந்துவிடும். ஹோமம், யாகம் என்னும் பெயரால் கொலைப் பாதகத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)

om010722
இதையும் படியுங்கள்
Subscribe