அகத்தியர்: இந்த மண்ணுலகில், மனிதன்முதல் எறும்புவரை பிறக்கும், உயிரினங்கள் அனைத்தும், மரணமடைந்து விடும். அதுதான் "விதி' என பூரண ஞானம் இல்லாதவர் கள் கூறும் கூற்றைமாற்றி, இந்த தேசத்தின் தென்புலத்திலுள்ள, இந்த தமிழ் மண்ணில், மனிதர்களாகப் பிறந்து, வாசியோகம் செய்து, காற்றை தன்னுள் கட்டி, பத்து விதமான தீட்சைகளைப் பெற்று, அஷ்ட மகா முதலான அனைத்து சக்திகளிலும் சித்திகள் அடைந்து, பூவுலகில் பிறப்பது அனைத்தும் இறக்கவேண்டும் விதிக் கணக்கிணைப் பொய்யாக்கி, மரணத்தை வென்று, இன்றும், என்றும் வாழும் மகாசித்தர் பெருமக்களே, இந்த சித்தர் சபையில், சாளி மைந்தன் காகபுசுண்டன், ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு பிறவியிலும், தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் நன்மைகள்- தீமைகள் என அனைத்திற்கும், அவரவர் முன் பிறவிகளில் செய்த பாவ- சாப- தோஷ, கர்ம வினைகள்தான் காரணம் என கூறி வருகின்றார்.
காகபுசுண்டர், தமிழ் சபையில் இன்று கூறும் இன்னும் ஒரு பாவ- சாப- தோஷப் பதவி பற்றியும், அதனால் மனிதர்கள், தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் சிரமம், தடைகள், குறைகள் பற்றி அறிவோம். புசுண்டரே, தாங்கள் இன்று கூறுவதைக் கேட்க ஆவலாக உள்ளோம்.
இடைக்காடர்: அமுதினும் இனிய தமிழ்மொழியை உருவாக்கி, தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்து, தமிழின மக்கள் தன் மானம் குறையாமல், தலை நிமிர்ந்து வாழ, நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், அவரவர் வம்சமுன்னோர்களே தமிழ்மக்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் என்று தெய்வங்களை அடையாளம் காட்டி, வம்சமுன்னோர் களின் ஆத்மாக்களை வழிபடவேண்டிய வழிபாட்டு முறைகளைக்கூறி, இம் மண்ணுலகில், மக்கள் பிறப்பால் அனைவரும் ஒன்று பேசும்மொழியாலும், செய்யும் தொழிலாளும் இனம் என்ற அடையாளம் காட்டி, சமூக நீதியைப் போதித்தவரே, எங்கள் ஆசானே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடிக்கு என் பணிவான வணக்கங்கள்.
ஆசானே, காகபுசுண்ட ரிஷி, பாவ- சாப- தோஷம் பற்றிக் கூறுவதற்குமுன்பு என் மனதில் தோன்றிய ஒரு கேள்விக்கு, தாங்கள் விளக்கமாக, விடைகூற வேண்டுகின்றேன். தங்கள் பதிலைக் கேட்டபின்பு, புசுண்டரிஷி கூறுவதைக் கேட்க சித்தமாக உள்ளேன். சபையில் இடையூறு செய்கின்றேன் என்று தாங்கள் கருதவேண்டாம்.
அகத்தியர்: அகத்தியன், யான் உருவாக்கிய தமிழ்மொழியையும், தென்புல தமிழின மக்களையும், காப்பாற்றும் சித்தர் பெருமக்களே, மரணத்தை வென்று, பூமியில் வாழ்பவர்கள், தமிழ் மொழியையும், தமிழின மக்களையும் அழியாமல் காப்பாற்றுபவர்கள் நீங்கள்தான்.
இடைக்காடரே, இவ்வளவு சக்தியும், பெருமையும் பெற்ற உங்கள் கேள்வி, சபைக்கு இடையூறு என்று நான் நினைப்பேனா. உங்கள் கேள்வி, தமிழ் மக்களுக்கு ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ளவும், ஒரு நன்மையை அடைந்துகொள்ளத்தக்கதாகத்தான் இருக் கும். தயங்காமல் கேளுங்கள். காகபுசுண்டரே, இடைக்காடனின் கேள்விக்கு, நான் பதில் கூறியபின்பு, தாங்கள் பாவ- சாப- தோஷப் பதிவுகள் பற்றிக் கூறவேண்டியதைக் கூறுங்கள்.
இடைக்காடரே, உங்கள் கேள்வி என்ன? கூறுங்கள்.
இடைக்காடர்: ஆசானே, இந்த பூமியில் எவ்வளவோ உயரமான மலைகள் உண்டு. அந்த மலைகளில் எல்லாம், வெறும் பாறைகளும், கற்களும், மரம், செடி, கொடி, வன விலங்குகள்தான் இருக்கும். ஆனால் தென் தமிழ் நாட்டிலுள்ள பொதிகை மலை, உங்களால், உலகிலேயே உயரமான ஞானமலையாக உள்ளது. தென் பொதிகையில் தென்றலும், செந்தமிழும், சித்த ஞானமும் ஓங்கி உயர்ந்துள்ளது. சித்தர்களின் சித்தாந்த கொள்கை, சமூகநீதியை உருவாக்கி பறைசாற்றும் ஞானமலையாக உள்ளது.
ஆசானே, தாங்கள் கூறும்போது வாசி யோகம் செய்து, பத்துவிதமான தீட்சைகளை, முழுமையாக அடைந்தால்தான், அட்டமகா சக்திகளையும், மரணத்தைவென்று வாழும் சக்தியையும் அடைந்து, சித்தனாக முடியும் என்று கூறினீர்கள். அந்த பத்துவிதமான தீட்சைகளை பற்றியும், ஒவ்வொன்றையும் அடையும்போது உண்டாகும் நிகழ்வுகளைப் பற்றியும் கூறுங்கள்.
அகத்தியர்: இடைக்காடரே, ஒரு சாதாரண கேள்வியைக் கேட்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் தாங்களோ, எவரும் அறியாத, மனிதர்களிடம் உள்ள அளப்பற்ற ஆற்றலை, மனிதர்களே அறிந்துகொள்ள முடியாத, சித்தர்கள் நாம் பதினெட்டுப் பேர் கள் மட்டுமே, அறிந்துகொள்ள சித்தர் ரகசியத்தை பற்றிய விளக்கத்தை கேள்வி யாகக் கேட்டுள்ளீர்கள்.
மனிதர்களை சித்தர்களாக்கும், இந்த வாசியோக முறையைத் தேடி, கலி காலத்தில் மாந்தர்கள் தேடித் தேடி அலைவார்கள். வருங்காலத்தில் மக்களை ஏமாற்றி பொருள் பறித்து வாழும் நபர்கள், இதனைப் பயன்படுத்திக்கொண்டு, தாடி வளர்த்து, சடை முடிதரித்து, ருத்ராட்சம் அணிந்து, தங்களை பெரிய சக்திமான்களைப்போல் கூறி பொய் வேடம் தரித்து, தங்களை சித்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீடர்கள் என்ற பெயரால் சிலரைக் கும்பலாக சேர்த்துக்கொண்டு, தங்கள் குரு எனக் கூறிக்கொண்டு, இந்த வாசியோகத்தைப் பற்றி, எல்லாம் தெரிந்தவர்கள்போல, பொய்களைக்கூறி, மடம், பீடம் அமைத்து, கடவுள், தெய்வம் எனக்கூறி வாசியோகத் தைக்கூறி, வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி, பொருள் பறித்து வாழ்வார்கள். இது வருங்காலத்தில் நடக்கப்போகும் செயல்.
இந்த பொய்யர்களின், புனை வேடத்தை யும், பொய்யான வாசியோக பயிற்சி முறையையும், மக்கள் புரிந்துகொண்டு, அந்த போலி குருமார்களையும், மடாதிபதி, பீடாதிபதி களையும் மக்கள் புறந்தள்ளி விலக்கி வைக்க உள் கேள்வியும், என் பதிலும், மக்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காக, இப்போது, உன் கேள்விக்கு வாசியோகம் பற்றிய உண்மை விளக்கத்தைக் கூறுகின்றேன்.
"வாசி' என்றால், "காற்று' என்று அர்த்த மாகும். ஒவ்வொரு மனிதனிடம் மறைந்துள்ள, அனைத்து சக்திகளையும் தூண்டி, செயல்பட வைப்பது அவரவர் சுவாச மூச்சுக் காற்றுதான்.
சுவாசிக்கும்போது, அவரவர் மூக்கின் வலது, இடது, துவாரங்களில் ஓடும் காற்றின் நிலை யறிந்து தன் வாழ்வில் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் செய்து அந்த செயல்களில் வெற்றியையும், லாபத்தையும் அடைந்து கொள்ளவேண்டும்.
வாசியோகம் செய்யும்போது, "ஓம்' என்ற வார்த்தையையும், "ராம்' என்ற சொல்லையும், பயன்படுத்தவேண்டும். இதனை வாசி மந்திரங்கள் என்று கூறலாம்.
வாசி செய்யும்போது, "ஓ' என்ற எழுத்தை மட்டும் வாயினால் சொல்லாமல், மனதினுள் கூறிக்கொண்டே, காற்றினை உடலின் உள்ளே வேகமாக இழுக்கவேண்டும். சில நொடிகள் உடலின் உள்ளே காற்றை அடக்கி, நிறுத்தி வைத்து, பின்பு "ம்' என்ற எழுத்தை மனதினுள் கூறிக்கொண்டே காற்றை மெதுவாக வெளியே விடவேண்டும்.
இதேபோன்று, "ராம்' என்ற சொல்லிலுள்ள "ரா' என்ற எழுத்தை மட்டும் மனதினுள் கூறிக்கொண்டே காற்றை உள்ளே இழுக்க வேண்டும். சில நொடிகள், காற்றை உள்ளே கட்டி, அதன்பின்பு "ம்' என்ற எழுத்தை மனதினுள் கூறியபடியே, காற்றை மிக மெதுவாக வெளியேவிட வேண்டும். இதனால் வாசியோகப் பயிற்சி செய்யும்போது, மனதில் எந்தவிதமான சலனமோ, வேறு எண்ணங் களோ உதிக்காது; தோன்றாது. மனம் சுவாச காற்றைப் பற்றியே கவனித்துக்கொண்டி ருக்கும். மனம் அசையாமல், ஆரவாரம் செய்யா மல் அடங்கியிருக்கும். இந்த இரண்டு சொற் களும்தான் வாசியோக மந்திரங்களாகும்.
(இன்றைய நாளில், "ஓம்', "ராம்' என்ற சொற்களின் உண்மைத்தன்மை, பொருளறியா மல், அதன் பயன்பாடு தெரியாமல், பயன் படுத்தும் முறை தெரியாமல், "பிரணவ மந்திரம்' என்று கூறிக்கொண்டு, "ஓம்' என்றும் "ராம்' என்று உரத்த குரலில், ஓங்கி, ஓங்கி சப்தப் போட்டுக்கொண்டும், "ஓங்காரம்' என்று ஆரவாரம் செய்துகொண்டு அலைகின்றார்கள். இன்னும் பலர் "ஓம்' "ராம்' என்ற சொற்களை வைத்து, தங்களை வளர்த்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திவருகின்றார்கள். "ஓம்' என்பது சிவனையோ, "ராம்' என்ற சொல் இராமனையோ குறிப்பது அல்ல; காற்றை அடக்கிவைப்பது.
இன்றைய குருமார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் கடவுளைக் காணவும், தங்கள் வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சினைகள், சிரமங்கள் தீரவும், மனம் அமைதி அடைய வும் இந்த இரண்டு சொற்களைக் கூறிக் கொண்டு தவம், தியானம், தாரணை செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள். தவமும், தியானமும், பலிதம் தராது. மனம் அமைதி யடையாது. "ஓம்', "ராம்' என்ற சொற்களை வாசியோகம் செய்யும்போது, அதற்குரிய தாரக மந்திரங்கள் ஆகும்.)
ஒருவன் தனது 12 வயதில் முறையாக வாசியோகம் செய்யத் தொடங்கினால், அவனுடைய 48 வயதில், அனைத்து சக்தி களையும் பெற்று சித்தர் நிலையை அடைய லாம். வாசியோகப் பயிற்சி செய்யும்போது, உடல் அளவிற்கு அதிகமான வெப்பநிலையை அடையும். அதற்கு சித்தர்கள் நாம் சாப்பிட்டு வரும் மூலிகையை உண்டு உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். உணவு, சாப்பாடு, நீர், என எதுவும் சாப்பிடாமல் பயிற்சி செய்வதால், உடலில் சக்தி குறையும், அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து பலத்தையும் தந்து, உடல்நலத்தை தந்து, உடலில் தேய்ந்துபோன அனைத்து திசுக்களையும் புதுப்பித்து, உருவாக்கி என்றும் இளமையாக இருக்க செய்யும் இந்த மூலிகை.
வாசியோகம் செய்து, பத்து தீட்சைகளை அடையும்போது, உடலில் உண்டாகும் மாற்றங்களையும் மனிதனுள் மறைந்திருக்கும் அனைத்து, சக்திகளையும் வெளிப்படும் அனுபவ நிலையைக் கூறுகின்றேன்.
ப் முதல் தீட்சையை அடைந்துவிட்டால், உடலிலுள்ள ரோம துவாரங்கள் வழியாக கெட்ட நீர் வியர்வையாக கசிந்து வெளிப்படும்.
ப் இரண்டாவது நிலை தீட்சியில் சித்தி பெற்றால், உடம்பிலுள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூவகை தோஷமும் உடம்பிலிருந்து நீங்கும்.
ப் மூன்றாவது தீட்சையில், வெற்றி யடைந்தால், உடம்பிலுள்ள பழைய கெட்ட ரத்தங்கள் கசிந்து வெளியேறும்.
ப் நான்காவது தீட்சையில், பாம்பு தோல் உரிப்பதுபோல், உடம்பிலுள்ள தோல் உரியும்.
ப் ஐந்தாவது தீட்சையில் சித்திபெறும் போது, மனிதன் பிறப்பின்போது உடலிலிருந்த பழைய தோல் கழன்றுபோய், சிவந்த நிறமாக புதிய தோல் உருவாகும். மண், நீர், தீ, காற்று, ஆதாயம் (மனம்) என்ற இந்த ஐந்து சக்திகளும் நம்முள் அடங்கி கட்டுப் பட்டு நாம் சொன்னபடி கேட்கும். மழை, வெயில், இடி, மின்னல், புயல், பூமி அதிர்ச்சி போன்று இன்னும் அனைத்தும் நாம் சொன்னபடி செயல்படும்.
ப் ஆறாவது தீட்சையில், சுழுமுனை வாசல் திறந்து, மூன்றாவது கண் பார்வை உண்டா கும். தூர திருஷ்டி உண்டாகும். இருந்த இடத்தில் இருந்தே இந்த பூமியில் மற்றும் கிரகங்கள், நட்சத்திரங்கள் என அனைத்து அண்டங்களிலும் நிகழும், நிகழ்வுகளை கண்டறியும் சக்தி உண்டாகும்.
ப் ஏழாவது தீட்சையில், சிவந்த தோல்மாறி, தேகம் பொன்னிறமாக நெருப்பைப்போல், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். இறந்து, மறைந்து போன ஆத்மாக்களுடன் பேசலாம். அந்த ஆத்மாக்களின் நிலையை அறிந்துகொள்ள முடியும்.
ப் எட்டாவது தீட்சையில், சித்தி பெற்று விட்டால், அமர்ந்தபடியோ, நின்ற நிலை யிலேயோ நமது உடலை உயரே தூக்கலாம். வானில் பறக்கலாம், நீரில் தக்கையைப் போன்று மிதக்கலாம். கூடுவிட்டுக்கூடு பாயும் சக்தி உண்டாகும்.
ப் ஒன்பதாவது தீட்சையை பெற்று விட்டால், தேகம் சூரியனைப் போன்று பிரகாசமாகும், பழைய பொன்னிறம் மாறும். அட்டமகா சக்திகள் என்ற எட்டுவிதமான சக்திகளும் நமக்கு உண்டாகும்.
(எட்டுவிதமான சக்திகள் எவையெவை என்று அறிவோம்) ப் அனிமா- அணுவைவிட சிறியதாக உடலை சுருக்கிக்கொள்வது.
ப் மஹிமா- உடலைப் பெரிதாக்கி விஸ்வரூபத்தை அடைவது.
ப் ஹரிமா- உடல் எடையைக் கூட்டி அதிக பளு வாக்குவது.
ப் லஹிமா- உடல் எடையைக் குறைத்து, பஞ்சு போன்று லேசாக்குவது.
ப் பிராப்தி- பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், முக்கோடி தேவர்கள், வேதம், புராணக் கதைகளில் கூறப்படும் கடவுள், தெய்வங்கள், தேவதைகளை வசப்படுத்துவது, அணுகளை நாம் நினைத்தவுடன் நம்முன் வந்து கைகட்டி நின்று நாம் கூறும் வேலைகளைச் செய்வது.
ப் பிரகாமியம்- பிறர் உடம்பில் நுழைவது, கூடுவிட்டுக் கூடுபாய்வது.
ப் ஈசத்துவம்- ஐந்தொழிலை நடத்தி செயல்படும் சக்தி உண்டாகும்.
ப் வசித்துவம்- இந்த அண்டத்திலுள்ள அனைத்தையும் தன்வசமாக்குதல்.
10. வாசியோகம் முறையாகச் செய்து, பத்தாவது தீட்சையையும், வெற்றிகரமாக அடைந்தவர், உடலை கத்தியால் வெட்டி னால், உடலின் உள்ளே கத்தி புகுந்து, வெளியே வரும். தேகத்தை வெட்டாது. தந்தை- தாய், கொடுத்த, அவர்களால் உருவாக்கப்பட்ட உடல் அழிந்து, எலும்பு, நரம்பு, ரத்தம், தசை, திசுக்கள் இல்லாத காற்று உடலாக சரீரம் மாறிவிடும். இதனைத் தான் சொரூப சித்தி அடைவது என்று கூறுவார்கள்.
இந்த பத்து தீட்சையிலும் சித்தி பெற்று, சக்தி அடைந்தவர் காதுக்கு நரை, திரை, மூப்பு, பிணி என எதுவும் உண்டாகாது. என்றும் இளமையுடன் இருப்பார்கள்.
நினைத்த உருவத்தை அடைவார்கள். மரணம் உண்டாகாது. மரணமில்லா பெருவாழ்வு பெற்றவர்கள். இதனைத்தான் "சாகாகால், வேகாத்தலை, போகப்புனல்' என்ற நிலையை அடைந்தவர்கள் என்பார்கள். இவன்தான் சித்தன்.
இடைக்காடனே, இப்போது புரிகின்றதா? மரணத்தை வென்று வாழும் சித்தர்கள் நிலையை அடைய, இந்த பத்துவிதமான தீட்சைகளையும் வாசியோகம் செய்து அடையவேண்டும். கடவுள், தெய்வம், தேவதைகளை வணங்கி, பூஜை, தவம், தியானம், தாரணைகள் செய்து, எந்த சக்திகளையும் அடையமுடியாது. அதனால் தான் சித்தர்களாகிய நாம் எந்த கடவுளையும், வணங்காமல் காற்றையே கடவுளாக வழிபடுகின்றோம். சித்தர்களின் கடவுள் காற்றுதான்.
இடைக்காடர்: ஆசானே, என்னையும் மதித்து, என் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் பதில் கூறிய தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். எனது சந்தேகம் தீர்ந்தது.
வாசக அன்பர்களே, இன்றையநாளில், கடவுளை வணங்கி, குருவை வணங்கி, தானம், தர்மங்கள் செய்து, ஏதாவது மந்திரங்களைக் கூறிக்கொண்டு, ஒரு மடத்திற்குச் சென்று, ஒருவரைக் குருவாக ஏற்றுக்கொண்டு வாசி யோகப் பயிற்சி தருகின்றேன் எனக் கூறிக்கொள்பவர்களிடம் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டு, ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி, அவர்களிடம் தீட்சையைப் பெற்றுக்கொள்வது, நானும் வாசியோகம் செய்து அந்த தீட்சை, இந்த தீட்சை பெற்றுவிட்டேன் என்று பெருமை பேசி திரிவது; வாசியோக நிலை அல்ல. அது தீட்சையும் அல்ல. இவர்களுக்கு தீட்சை தந்த குருவும், அவர்களிடம் தீட்சை பெற்ற இவர்களும் தங்களுக்குண்டாகும் ஒரு சிறிய நோய் உபாதைக்குக்கூட, மருத்துமனை சென்று, மருத்துவம் பார்த்து, மருந்து சாப்பிட்டுத்தான் நோயை தீர்த்துக்கொள்கின்றார்கள்.
திருமூலர், திருமந்திரத்தில் பொருளுக்காக அலையும் இந்த குருமார்களையும், பொருள் தேடி அலையும் சீடர்களைப் பற்றி கூறும்போது. இக்கலி காலத்தில் மக்கள்.
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்பாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே என்று கூறுகின்றார்.
இன்றைய போலி குருமார்களின், பொய்யான புராதன வார்த்தைகளை நம்பி மக்கள் பொருளையும், காலத்தை யும், தன்னையும் இழந்துவிடக்கூடாது.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)