"கோயிலுங் குளங்களுங் குறிக்கும் குருக்களாய்
மாயையிலும் மடியிலும் மனதிலே மயங்கு கின்றீர்
ஆயனையும் அரனையும் அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே.'
(சிவவாக்கியர்)
"ஆயன்'' என்று கூறப்படும் மகாவிஷ்ணுவும், "அரன்'' என்று கூறப்படும் சிவபெருமானும், கோவிலிலுள்ள கடவுள்கள் அல்ல. அவரவர் தாயும், தந்தையும்தான் என்பதை அறிந்து, பெற்றோரை தெய்வங்களாக வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.)
அகத்தியர்: தென் புலமான, இந்த திராவிட மண்ணில், பிறந்து வாழும் மக்களுக்கு மாயாவாதிகள் உரைக்கும், நான் மறைநூல்கள் கூறும் கருத்து, கொள்கைகளாக மறுத்தழித்து, மக்கள் அனைவரும் ஓர் குலமென்றும், ஆன்ம நேயத்துடன், அனைவரையும் பாகுபாடு இல்லாமல் நேசித்து, ஒவ்வொருவர் கூறும் கூற்றிலும், உண்மை எது? பொய் எது? என்று பகுத்தறிந்து, செயல்பட்டு வாழ்ந்து, அவரவர் செல்வச் செழிப்புடன், உயர்வானதாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்டும், சைவ (அறிவு) சித்தாந்த கொள்கைகளை ஆய்ந்தறிந்து நல்ல வழி காட்டும் கருத்துகளை கூறி மக்களை தெளிவுபடுத்தும் பணியினை சித்தர்களாகிய நாம் செய்துவருகின்றோம்.
திராவிட சித்தர்கள்கூடிய இத்தமிழ் சங்கத்தில், மனிதர்கள் வாழ்வில் உண்டாகும். நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, வெற்றிகள், தடைகள் என அனைத்திற்கும், அவரவர் தனது ஒவ்வொரு பிறவியிலும், தன் குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யும் பாவ- புண்ணியங்கள்தான் காரணம் என்று காகபுசுண்ட மகாமுனிவர், நம்மிடையே தெளிவாகக் கூறிவருகின்றார். இன்று அவர் எந்த பாவ- சாபம் பற்றிக் கூறுகின்றார் என்பதை அறிவோம்.
காகபுசுண்டரே, இதுநாள்வரை, பெற்ற தாய், தந்தைக்கு, ஒருவர் செய்த பாவங்களால், அவர்களின் அடுத்தடுத்தப் பிறவிகளின் வாழ்வில் தண்டனையாக அனுபவிக்கும் பலன்களைக் கூறினீர்கள். இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களில் அடுத்த ஒரு உறவு, யாருக்கும் எந்தவிதமான பாவங்களை, ஒரு பிறவியில் செய்தால், அவரின் அடுத்தடுத்தப் பிறவிகளில் என்னவிதமான பலன்களைத் தண்டனையாக அனுபவித்து வாழநேரிடும் என்பதைப் பற்றி தெளிவாகக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: இந்தப் பூவுலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களின், ஆன்மாவையும், அவைகளின் வாழ்வியல் செயல்களையும் அறிந்தவரே, மனிதர்களின் வாழ்வில் உயர்வு, செல்வம் இவற்றை அவரவர் அறிவு, ஆற்றலால், தங்கள் வாழ்வின் நடைமுற
"கோயிலுங் குளங்களுங் குறிக்கும் குருக்களாய்
மாயையிலும் மடியிலும் மனதிலே மயங்கு கின்றீர்
ஆயனையும் அரனையும் அறிந்துணர்ந்து கொள்வீரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே.'
(சிவவாக்கியர்)
"ஆயன்'' என்று கூறப்படும் மகாவிஷ்ணுவும், "அரன்'' என்று கூறப்படும் சிவபெருமானும், கோவிலிலுள்ள கடவுள்கள் அல்ல. அவரவர் தாயும், தந்தையும்தான் என்பதை அறிந்து, பெற்றோரை தெய்வங்களாக வணங்கினால் நன்மைகள் உண்டாகும்.)
அகத்தியர்: தென் புலமான, இந்த திராவிட மண்ணில், பிறந்து வாழும் மக்களுக்கு மாயாவாதிகள் உரைக்கும், நான் மறைநூல்கள் கூறும் கருத்து, கொள்கைகளாக மறுத்தழித்து, மக்கள் அனைவரும் ஓர் குலமென்றும், ஆன்ம நேயத்துடன், அனைவரையும் பாகுபாடு இல்லாமல் நேசித்து, ஒவ்வொருவர் கூறும் கூற்றிலும், உண்மை எது? பொய் எது? என்று பகுத்தறிந்து, செயல்பட்டு வாழ்ந்து, அவரவர் செல்வச் செழிப்புடன், உயர்வானதாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிகாட்டும், சைவ (அறிவு) சித்தாந்த கொள்கைகளை ஆய்ந்தறிந்து நல்ல வழி காட்டும் கருத்துகளை கூறி மக்களை தெளிவுபடுத்தும் பணியினை சித்தர்களாகிய நாம் செய்துவருகின்றோம்.
திராவிட சித்தர்கள்கூடிய இத்தமிழ் சங்கத்தில், மனிதர்கள் வாழ்வில் உண்டாகும். நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு, வெற்றிகள், தடைகள் என அனைத்திற்கும், அவரவர் தனது ஒவ்வொரு பிறவியிலும், தன் குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யும் பாவ- புண்ணியங்கள்தான் காரணம் என்று காகபுசுண்ட மகாமுனிவர், நம்மிடையே தெளிவாகக் கூறிவருகின்றார். இன்று அவர் எந்த பாவ- சாபம் பற்றிக் கூறுகின்றார் என்பதை அறிவோம்.
காகபுசுண்டரே, இதுநாள்வரை, பெற்ற தாய், தந்தைக்கு, ஒருவர் செய்த பாவங்களால், அவர்களின் அடுத்தடுத்தப் பிறவிகளின் வாழ்வில் தண்டனையாக அனுபவிக்கும் பலன்களைக் கூறினீர்கள். இன்று நீங்கள் குடும்ப உறுப்பினர்களில் அடுத்த ஒரு உறவு, யாருக்கும் எந்தவிதமான பாவங்களை, ஒரு பிறவியில் செய்தால், அவரின் அடுத்தடுத்தப் பிறவிகளில் என்னவிதமான பலன்களைத் தண்டனையாக அனுபவித்து வாழநேரிடும் என்பதைப் பற்றி தெளிவாகக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: இந்தப் பூவுலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களின், ஆன்மாவையும், அவைகளின் வாழ்வியல் செயல்களையும் அறிந்தவரே, மனிதர்களின் வாழ்வில் உயர்வு, செல்வம் இவற்றை அவரவர் அறிவு, ஆற்றலால், தங்கள் வாழ்வின் நடைமுறை செயல்களால்தான் அடையமுடியும். நம்பிக்கையால் அடையமுடியாது என்ற உண்மையை சித்தர்களாகிய எங்களுக்கு போதித்தவரே, எங்கள் ஆசானே, அகத்தியர் பெருமானே, உங்கள் திருவடி பணிகின்றேன்.
ஒரு மனிதனின் குடும்ப உறவுகளில், பெற்ற தாய், தந்தைக்கு அடுத்த உறவு உடன்பிறந்த சகோதர, சகோதரி களின் உறவுதான் முக்கியமானது. ஒருவன் தன் உடன்பிறந்த வர்களுக்கு செய்யும் பாவங்களால், தீமைகளால் தனது அடுத்தடுத்தப் பிறவிகளில் என்னவிதமான பலன்களை அடைவான் என்பதைப் பற்றி இந்த சித்தர்கள் சங்கமத்தில் கூறுகின்றேன்.
"கூடியே பிறந்த விடங் காணா தோஷம்'
ஒரு குடும்பத்தில் ஒரே தாய், தந்தைக்குப் பிறந்த அனைத்து சகோதர, சகோதரிகளும், இரத்த சம்பந்தம் பெற்ற உடன்பிறப்புகள் ஆவார்கள். இவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் செய்யும் தீமைகளால், பாதிக்கப்பட்டவர் விட்ட சாபம், சகோதர- பங்காளி சாபமாக வளர்ந்து, தீமைகள் செய்த சகோதரத்தினை அவனின் அடுத்தடுத்த பிறவிகளில் சிரமமான பலன்களைத் தண்டனையாகத் தந்து, அனுபவிக் கச் செய்யும்.
ஒருவன் தனது முற்பிறவிகளில், தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து, அனைவரும் ஒன்றாக உழைத்து, சொத்துகள், நிலம், வீடு, பணம் என எல்லாம் சம்பாதித்து, வாழ்வில் உயர்ந்த பின்பு, உடன்பிறந்தவர்களுக்கு முறையாகத்தர வேண்டிய பாகச் சொத்து, பணத்தினை தராமல், எல்லா சொத்துகளையும் நான்தான் சம்பாதித்தேன் என்று கூறி அவர்களை ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்து, அனைத்து சொத்து களையும் தானே அபகரித்துக் கொள்வதால், பாகச் சொத்தினை இழந்த சகோதரர்கள் மனம் வருந்திவிட்ட வாக்கு, சகோதர சாபமாக வளர்ந்து சொத்தை அபகரித்துக் கொண்டவனின், அடுத்தடுத்த பிறவிகளில் பின் தொடர்ந்து, வாழ்க்கையில் பாதிப்பைத் தரும்.
வம்ச முன்னோர்கள், தங்களின் வம்ச வாரிசுகள், அவர் களின் வாழ்க்கையில், கஷ்டப்படாமல் சுகமாக வாழ வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு உழைத்து, நிலம், வீடு, பணம், தொழில், வியாபாரம் என தேடி உருவாக்கி வைத்து இறக்கின்றார்கள்.
முன்னோர்கள் தேடிவைத்த இந்த பூர்வீக சொத்துகள், அனைத்து குடும்ப வாரிசுகளுக்கும் சமமான உரிமையுள்ளதாகும். அவர்களுக்கு முறையாகச் சேரவேண்டிய பங்கு சொத்துகளை தராமல், ஏமாற்றி அபகரித்துக்கொள்வதால், சொத்துகளை இழந்தவர்கள் மனம் எரிந்து வாரிவிட்ட வாக்கு சகோதரர்களின் சாபமாகி அடுத்தடுத்தப் பிறவிகளில் தொடர்ந்து வாழ்க்கையை பாதிப்பு அடையச் செய்துவிடும்.
அகத்தியர்: காகபுசுண்ட முனிவரே, இந்த குடும்ப சொத்துகளை ஏமாற்றி அபகரித்துக்கொண்டதால் உண்டான முற்பிறவி சகோதர சாபம் இப்பிறவியில் அவனுக்கு என்னவிதமான பலன்களைத் தரும் என்பதைப் பற்றிக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: "அமுத தமிழோகிய அகத்தியரே'' எங்கள் ஆசானே, இந்த சகோதர சாபம் பெற்று பிறந்தவர்களின் இப்பிறவி வாழ்க்கையில் இவருடன் பிறந்த சகோதரர்கள், பங்காளிகள், ரத்த சம்பந்தமான உறவுகளால் ஒதுக்கப்படுவான். சகோதரர்கள், பங்காளிகள், பகையாளியாகி, இவனுக்கு எதிராக செயல்படுவார்கள், எதிரியாக நினைப்பார்கள். உறவுகளின் ஆதரவும், பிறர் உதவியும் கிடைக்காது.
குடும்பத்தில் நிலம், வீடு, பணம் என சொத்து தகராறு உண்டாகும். பூர்வீக சொத்துகளில் வில்லங்கம், வியாஜியம், வழக்கு என உண்டாகிவிடும். அல்லது பூர்வீக சொத்துகள் இவருக்கு கிடைக்காமல் போய்விடும் அல்லது இல்லாமலேயே போய்விடும். பூர்வீக சொத்துகளை அனுபவிக்கவிடாமல் செய்துவிடும். பூர்வீக சொத்துகளால், தன் வாழ்வில் உயர்வினை அடைய முடியாது. முன்னோர்கள் தேடிவைத்த சொத்து, பணம், தொழில், வியாபாரம், இவர்களுக்கு நன்மை தராது. இவருக்கு தன் குடும்பத்தார்களாலும், மற்ற உறவுகளாலும் நன்மை கிடைக்காது. சொந்த சாதி, இனத்து மக்களாலும் நன்மையும், உதவியும் கிடைக்காது.
இப்பிறவி வாழ்வில் இவர் சுயமாக உழைத்து, சுய உழைப்பால் தனது இப்பிறவி வாழ்க்கைக்கு தேவையான வீடு, நிலம், சொத்துகளை சம்பாதித்துதான் அமைத்துக்கொள்ள நேரும். தனது திருமணத்தைக்கூட இவர் தனது சுயமுயற்சியால்தான் செய்துகொள்ளவேண்டும். இவரின் குடும்பத்தாரோ, பெற்றோரோ, சகோதர, சகோதரிகளோ, மற்ற உறவுகளோ, முன்னின்று இவருக்கு திருமணம் செய்துவைக்க மாட்டார்கள்.
இவர் தன் குடும்பத்தினருக்கு, சகோதர, சகோதரிகளுக்கு, ஒரு தந்தையைப் போல் இருந்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி, கல்வி, தொழில், திருமணம் இவற்றை அமைத்துக்கொடுத்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து. நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தாலும், கடைசியில் அவர்களால் எந்த நன்மையும், உதவியும் கிடைக்காது. அவர்கள் நன்றி, விசுவாசம் இல்லாதவர்களாகவே மாறிவிடுவார்கள். சகோதர, சகோதரிகளின் திருமணத்திற்குப்பின்பு, இவருக்கு ஏதாவது ஒரு குற்றத்தைச் சுமத்தி, இவர்களைவிட்டு விலகி சென்றுவிடுவார்கள். உறவை முறித்துக்கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் தங்கள் பங்கை வாங்கிச் செல்வதற்காக உறவுகொண்டாடி வருவார்கள். அல்லது இவர்களை உறவு தேடி வராமலே போய்விடுவார்கள்.
இவர் தன் வாழ்வில், தனது முன்னோர் கள் வாழ்ந்த பூர்வீக வீட்டில் வாசம் செய்து, வாழமுடியாது. வேறு இடம் அல்லது வேறு ஊர் சென்று பிழைத்து வாழ நேரிடும். இவரிடம் உதவிபெற்ற உறவினர் கள், நண்பர்கள்கூட நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். இவரின் கஷ்ட காலங்களில் உதவிசெய்ய மாட்டார்கள். முற்பிறவிகளில் இவர்களால் ஏமாற்றப்பட்டு, சொத்துகளை இழந்து பாதிக்கப்பட்ட சகோதரர்கள், இந்தப் பிறவியில் நிலம், வீடு, வாகனம், பணம், உறவு கள் ஆதரவு என சொத்து, சுகங்களுடன் வசதியான செல்வ வாழ்க்கையை அடைந்து சுகமாக வாழ்வார்கள்.
ஆசானே, ஒருவன் தனது முற்பிறவிகளில், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு செய்யும், பாவங்களால் மட்டும் சகோதர சாபம் உருவானது இல்லை. சமுதாயத்தில் தன்னை சேர்ந்தவர்கள், நம்பியவர்களுக்குச் செய்யும் துரோகங்களாலும் சகோதர சாப நிலை உருவாகி, அவனது அடுத்தடுத்தப் பிறவி வாழ்வில் பாதிப்பு, கஷ்டங்களைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடும்.
தொழில், வியாபாரம் இவற்றி மற்றவர்களுடன் சேர்ந்து, கூட்டாக தொழில் செய்யும்போது, அவர்களும் தொழிலில் தனது பங்கு பணத்தை முதலீடு செய்கின்றார்கள். தொழிலில் வரும் லாபத்தில் அவர்களுக்கும் சரியான பங்குண்டு என்பதால், அவர்களும் சமமான உரிமையைப்பெற்ற, சகோதர, பங்காளி உறவு நிலையை அடைகின்றார்கள்.
கூட்டுத் தொழில் செய்யும்போது இவனை நம்பித்தான் தொழில் கூட்டாளிகள் பங்கு பணத்தை முதலீடு செய்கின்றார்கள். கூட்டுத்தொழிலை நிர்வாகம் செய்யும் இவன், அதில் வரும் லாபத்தை பொய்க்கணக்கு எழுதி, தொழிலில் நஷ்டம் எனக்கூறி, அவர்கள் முதலீடு செய்த பங்கு பணத்தையும், தொழிலில் வந்த லாபப் பணத்தையும், அபகரித்துக்கொண்டும், அவர்களை தொழிலைவிட்டு வெளியேற்றிவிடுவதால், பணத்தையும், தொழிலையும் இழந்தவர்கள் மனம் வெறுத்துவிட்ட சாபமும். சகோதர சாபமாகி இவனை வாட்டும்.
ஒரு நிர்வாகத்தில் அல்லது ஒரு முதலாளியிடம் வேலை செய்யும்போது, தன்மேல் நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை கொடுத்த முதலாளிக்கு, தொழில் வருமானத்தில் வரும் பணத்தை, பொய்க் கணக்கு எழுதி, வேலை கொடுத்த முதலாளிக்கு துரோகம் செய்து பணத்தை அபகரித்துக்கொள்வது, நிர்வாகத்தில் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்துக்கொடுத்து, வேலையாட்களை ஏமாற்றுவது, தன்னுடன் இணைந்து பணிபுரியும் சக தொழிலாளர்களைப் பற்றி, பொய்யான தகவல்களைத் தன் முதலாளியிடம் அல்லது தனக்குமேல் நிலையிலுள்ள அதிகாரிகளிடம் புறம் கூறி, அவர்களின் தொழில், உயர்வு, வாழ்க்கையை கெடுப்பதும் சகோதர சாபம்தான்.
ஒருவன் தன்னிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் விவசாய நிலம், வீடு, மனை இவற்றை ஏமாற்றி, தானே கைப்பற்றிக்கொள்வது. அரசனிடம் வேலை பார்த்து, அரசிடம் உதவிகேட்டு வருபவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு தன் வாழ்வை உயர்த்திக்கொள்வது, தன்னை நம்பி உத்தியோகம் தந்த அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வைப்பது, நீதித்துறையில் நீதி சொல்லும் பதவியை வகிக்கும்போது, பணம் கையூட்டுப் பெற்றுக்கொண்டோ அல்லது தனக்கு வேண்டியவர்களுக்காக ஒரு சார்பாக நீதி வழங்கி, தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நிரபராதியை தண்டிப்பது நீதியின் மாண்பை, மரியாதையைக் கெடுப்பதும் சகோதர சாபம்தான்.
ஒருவன் தன் வாழ்வின் தேவைக்காக, மற்றவர்களிடம் பணம் கடன் பெற்றுக்கொண்டு, வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றுவது. என இதுபோன்று தன்னை நம்பியவர்களுக்கு செய்யும் துரோகச் செயல்கள் அனைத்தும் சகோதர சாபம்தான்.
சுந்தரானந்தர்: புசுண்ட மகாமுனிவரே, ஒருவன் தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கும், தொழில் கூட்டாளிகளுக்கும், தன்னுடன் பணிபுரியும் சகதொழிலாளர்களுக்கும், தன்னை நம்பிய முதலாளிக்கும் வேலைக்காரர்களுக்கும் செய்யும் ஏமாற்றுதலையும், நம்பிக்கை துரோகச் செயல்களைப் பற்றிக் கூறி, அதனால் சகோதர சாபம் ஏற்பட்டு, அவனின் அடுத்தடுத்தப் பிறவி வாழ்க்கையில் பாதிப்பை அடைவான் என்று கூறீனீர்கள். இச்சாபத்தால், அவனின் அடுத்தப் பிறவிகளில் அனுபவிக்கப் போகும் பலன்களையும், தமிழ் சங்கத்திலுள்ள சித்தர்களாகிய எங்களுக்கு விளக்கமாகக் கூறுங்கள்.
அகத்தியர்: சுந்தரா, உன் கேள்வி நியாயமானதும், எல்லாருக்கும் தேவையானதும், அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமானதுதான். இன்று சபைமுடியும் நேரம் வந்துவிட்டது. நாளை சபையில் சகோதர சாபத்தால், அவரவர் வாழ்வில் அனுபவிக்கும் பலன்களை காகபுசுண்டர் கூறுவதைக்கேட்டு தெளிவுபெறுவோம். இன்று தமிழ்ச் சபை கலையலாம்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)