"துடுக்க தாய் தந்தையை தாஷணித் துரைத்த தோஷம்

அடுக்கவே பெற்றோரை யடித்து மிதித்த தோஷம்

கூச்சலாய் தாய் தகப்பன் கோபத்தால் விட்ட சாபம்

நடுக்கவே வந்ததப்பா நல்லோர்கள் சாபம் தானே.'

Advertisment

(அகத்தியர்- கர்ம காண்டம்)

அகத்தியர்: காகபுசுண்ட முனிவரே, பெண்மையின் பெருமையையும், அவர்களின் அளப்பறிய ஆற்றலையும், தியாகத்தின் திருவுருவம் பெண்கள்தான் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும்வண்ணம், அனுபவத்தில் அறிந்து, புரிந்துகொண்டதை அருமையாகக் கூறினீர்கள். பெற்ற தாய்க்கும் பெண்ணினத்திற்கும், பாதிப்பைத் தந்து, பாவ- சாபத்தை உண்டாக்கும் பாவச் செயல்கள் எது என்பதைப்பற்றி, அனைவரும் அறிந்துகொள்ளும்வகையில், இந்த சித்தர் சபையில் விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: அறிவிற் சிறந்தவரே, அனைத்தும் அறிந்தவரே, பூரண ஞானியே, உங்கள் பொற்பாதங்களுக்கு வணக்கம். இந்த தமிழ் மண்ணில் நீங்கள் அவதரித்து, பிறந்தது, இத்தமிழ் மக்கள் செய்த புண்ணியம் என்பேன். இந்த பூமியில் ஒரு கும்பல், தான் சுகமாக வாழ மக்களை ஏமாற்றி பொருள் பறிக்க, மனிதர்கள் வாழ்க்கையில் உயர்வுபெற செய்யமுடியாத, உலகில் இல்லாத, பொய்யான மாயைக் கருத்துகளைக் கூறி பரப்பி வருகின்றது. நீங்களும், இந்த சபையில் கூடியிருக்கும், அனைத்து சித்தர்களும், பொய்யர்கள் கூறும் இந்த பொய்யான மாயைக் கருத்துகள் மக்களிடம் பரவாவண்ணம், மக்களுக்கு பகுத்தறிவையும், எதனையும் ஆராய்ந்து அறியும், அனுபவ அறிவையும் போதனை செய்துவருகின்றீர்கள். இந்த திராவிட சித்தர் சபையில், உங்கள் தலைமையில் என் கருத்துகள் அரங்கேற்றம் செய்வது நான் செய்த புண்ணியம், எனக்குக் கிடைத்த பாக்கியம்.

Advertisment

"நடுவாக வந்தவிடம் பாராத் தோஷம்.''

ஒரு குழந்தை முதன்முதலில், பஞ்சபூத சக்தியினால், தந்தை உண்ணும் உணவினால் அவன் விந்தணுக்களில் உருவாகி, தந்தை, நமது தாயிடம் உறவு கொள்ளும் போது, அவன் விந்தணுக்கள், தாயின் கர்ப்பப்பை யினுள்ள கருமுட்டையுடன் இணைந்து, ஒரு குழந்தையாக உருவாக்குகின்றது. முதன்முதலில் தந்தையிடம் உருவான விந்து, இந்த பூமியில் ஒரு குழந்தையாக பிறப்பதற்கு இடையில் தாயின் கர்ப்பத்தில் வளர்கின்றது. குழந்தையின் இரண்டாம் நிலை வளர்ச்சி தாயிடம்தான். மனித உடலை உருவாக்குபவள் தாய்தான்.

ஒருவன் தன்னை உருவாக்கும், தன் தாய்க்கு செய்யும் கொடுமைகளும், தீமைகளும், அவனை பெற்றெடுத்த தாயே, மனம் வெறுத்து விடும் சாபத்தை அடையச் செய்து, அவனது அடுத்தடுத்தப் பிறவிகளில் அந்த வம்சத்து ஆண்களுக்கும், அந்த குடும்பத்தில் திருமணம் முடித்து வாழவரும் பெண்களுக்கும், அந்த குடும்பத்தில் பிறக்கும் ஆண்- பெண் வாரிசுகளுக்கும் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில், பாதிப்பைத் தந்து, நிம்மதி இல்லா வாழ்வை வாழச் செய்துவிடும். இனி இந்தப் பெண் சாபம் பெண்களின் வாழ்க்கையில் என்னவிதமான பாதிப்புகளைத் தந்து அனுபவிக்கச் செய்யும் என்பதையும் அறிந்துகொள்வோம்.

வம்சத்தில் பெண் சாபத்துடன் பிறப்பவர் களின் வாழ்க்கையில், திருமணம் தடை, தாமதப்படும். கணவன்- மனைவியிடையே பிரிவு, விவாகரத்து வழக்குகள் ஏற்படும். பெண்கள் திருமணம் முடிந்து சிறிது காலத்திலேயே, கணவனை இழந்து விதவையாக நேரிட்டுவிடும். தாம்பத்திய சுகத்தைக் குறைக்கும். கணவன் நோய்வாய்ப்பட்டு விடுவான். அதனால் சாபம் பெற்ற இந்தப் பெண்ணே குடும்ப பாரத்தைச் சுமந்து வாழச் செய்துவிடும்.

இந்த வம்சத்தில் பிறக்கும் சில ஆண்கள், பெண்களுக்கு, ஆபிசார தோஷ பாதிப்பு, மனநோய் பாதிப்புகள் உண்டாகக்கூடும். வம்சத்தில் பாதிக்கப்பட்டு வாழ்க்கை இழந்து, இறந்துபோன பெண்களின் ஆவியின் தாக்கம் உண்டாகி சிரமப்படச் செய்யும். பொதுவாக பெண் சாபம் பெற்று பிறந் துள்ளவர்களுக்கு மனதில் இனம்புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும், மனக் குழப்பம் இருக்கும், ஆண்களுக்கு விதவைகள் உறவு, மாற்றான் மனைவியிடம் தொடர்பு, மாற்றுசாதி, மாற்று இன பெண்களிடம் நட்பு, உறவு, உண்டாகும். இதனால் அந்தப் பெண்கள் சுலபமாக இவர்களை ஏமாற்றி பணம், பொருட்களை பறித்துவிடுவார்கள்.

ss

பெண் சாபம் பெற்று பிறந்துள்ள பெண்கள், கணவனைத் தவிர அந்நிய ஆண்களுடன் தொடர்பு, வேசித் தொழில் செய்து பிழைத்தல், சில பெண்கள் ஆண்களுக்கு பணம் தந்து பொருள், சொத்துகளை இழப்பது போன்ற செயல்களைச் செய்து வாழ நேரிட்டுவிடும்.

குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். ஒரே வீட்டில் வசித்தாலும், கணவன்- மனைவி இருவரும் அவரவர்கள் விருப்பம்போல் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். வம்சத்தில் பிறந்த பெண்களுக்கு காதல் சம்பந்தமான நிகழ்வுகள், அதனால் சிலர் திருமணத்திற்குமுன்பே கர்ப்பம் அமையும் நிலை, கருக்கலைத்தில் நிலை உண்டாகும். வேறு ஆணுடன் வீட்டைவிட்டு வெளியேறி தங்கள் விருப்பம் போல் திருமணம் செய்துகொள்வார்கள். தாய், தந்தை சாபம் பெற்றவர்கள், வம்ச வாரிசுகள், பூர்வீக ஊரில் அல்லது முன்னோர் வசித்த வீட்டில் வாசம் செய்யமுடியாமல், வேறு ஊர், வேறு இடங்களுக்கு சென்று வசிக்க நேரும்.

குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளால், பிரச்சினைகள் அல்லது அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். பொதுவாக பெற்ற தாய்க்கு கொடுமைகளைச் செய்து, அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தந்து, அவர்களின் நோய் நீக்காமல் அலட்சியப்படுத்தி, சிரமத்துடன் வாழச் செய்யும் மகன்களுக்கு பெற்ற தாய் மனம் வெறுத்த விட்ட சாபம், அவர்களின் குடும்பத்தில் பிறக்கும் வம்ச வாரிசுகளின் வாழ்க்கையிலும் தொடர்ந்து, இதுபோன்ற பாதிப்புகளைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடும்.

பெண்களுக்கு அவளின் கணவனின் தாயாரான, தன் மாமியார்க்கு, மருமகள் செய்யும் சிரமங்கள், பாதிப்புகள், அவர்களுக்கு பெண் சாப பாதிப்பினை அடையச் செய்துவிடும். மாமியாரை ஒதுக்கியும், வெறுத்தும், கணவனுக்கு துர்போதனை செய்து, பெற்ற தாயையும், மகனையும் பிரித்து வைப்பதால் இவளும் பெண் சாபத்தை அடைகின்றாள். தன் கணவனுக்கும் பெண் சாபம், தாய் சாபம் பற்ற காரணமாகிவிடுகின்றாள். வயது முதிர்ந்த மாமியாரை வேலைக்காரிபோல் கீழ்த்தரமாக நடத்துவது, அவளுக்கு அன்னம், தண்ணீர் கொடுக்காமல் பசியும், பட்டினியுமாய் கஷ்டப்படச் செய்வது, வீட்டில் இருந்து விரட்டி அனாதைபோல் அலையச் செய்வது என இதுபோன்ற இன்னும் பல செயல்களைச் செய்து, மாமியாரை கொடுமைப்படுத்தும் பெண்களுக்கும், இதுபோன்ற செயல்களைச் செய்து, தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளை கொடுமைப்படுத்தும், மாமியார்களுக்கும் பெண் சாபம், உருவாகி, அவர்களுக்கு பிறக் கும் பெண்களுக்கு, அவர்கள் வாழப்போகும் கணவன் வீட்டில் இதுபோன்ற கொடுமைகளை மகள்கள் அனுபவிப்பார்கள்.

பெண் சாபம் பெற்ற பெண்களுக்கு, புத்திரத்தடை, புத்திர தோஷம், உண்டாகி வம்ச விருத்தியைத் தடுக்கும், கர்ப்பப்பையில் நோய், கருக்குழாய் அடைப்பு, சுருங்குதல், கரு கூடாமை, கருகலைதல், அல்லது அவர்களே கருவைக் கலைத்துக்கொள்ளுதல் போன்றவை உண்டாகும். பெற்ற தந்தையின் சாபத்தால் மட்டும், புத்திர சாப தோஷம் உண்டாகாது. பெற்ற தாய், மாமியார் சாபத்தாலும், வம்சத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு புத்திர தோஷம் உண்டாகி, புத்திர பேற்றைத் தடுக்கும். இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாய்- தந்தைக்கு கடன் பட்டவர்களாக இருப்பார்கள்.

அகத்தியர்: இந்த பூமியில் பிறக்கும் ஆண்- பெண் அனைவரும் பெற்றவர்களுக்கு கடன்பட்டவர்கள் என்று கூறுகின்றீர்கள். எவ்வாறு கடன் பெற்றார்கள் என்றும் விளக்கமாகக் கூறுங்கள்.

காகபுசுண்டர்: அறிவு போதிக்கும் ஆசானே, ஒரு குழந்தையைப் பெற்றவர்கள், தன் குழந்தையிடம் எதனையும் எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை. பெற்ற பிள்ளையை வளர்ப்பதில்லை. தாய் தன் குழந்தை நல்ல உடல் வளர்ச்சி பெறவேண்டும் என்று தன் இரத்தத்தைப் பாலாக்கி ஊட்டுகின்றாள். ஈ, எறும்பு, கொசு கடிக்காமல், நோய் தாக்காமல் பாதுகாத்தும், கண் துஞ்சாமல், உறக்கமின்றி, ஒரு தாய் பிள்ளைக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்து வளர்க்கின்றாள்.

பெற்ற தந்தை, உழைத்து, பொருள் சம்பாதித்து, தன் குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க வீடு, கல்வி என அனைத்தையும் தந்து, பருவ வயது வந்தவுடன் உத்தியோகம் தேடித்தந்து, ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்து, அவனுக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிவைத்து சமுதாயத்தில் தன் பிள்ளையை ஒரு மனிதனாக வாழச் செய்கின்றான். தன் இரத்தத்தை வியர்வையாக்கி, உழைத்து, தன் பிள்ளைகள் சுகமாக வாழ சொத்துகளையும் சம்பாதித்து வைக்கின்றான் தந்தை.

பெற்றவர்கள், தங்கள் பிள்ளைகள் பெரியவர்களாகி, தங்களைக் காப்பாற்று வார்கள் என்ற சுயநல எண்ணம்கொண்டு, எதனையும் எதிர்பார்த்து தங்கள் குழந்தைகளை வளர்ப்பது இல்லை. நாம் பெற்ற பிள்ளைகளை நமது கடமை என்று வளர்த்து ஆளாக்குகின் றார்கள்.

இந்த பூமியில் ஆணையோ, பெண் ணையோ கடவுள் உருவாக்கி பிறப்பிப்பது இல்லை. காப்பாற்றுவதுமில்லை. தாயும், தந்தையும்தான் நம்மை உருவாக்கி பிறப் பித்து, தங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து, சம்பாதித்து, காப்பாற்று கின்றார்கள். இதுதான் நாம் பெற்றவர்களுக்குப் பட்ட பிறவிக்கடன். ஒருவன் இந்தக் கடனை அந்தப் பிறவியிலேயே திருப்பி செலுத்தி கடனைத் தீர்த்துவிடவேண்டும். அவ்வாறு தீர்க்காதவர்களுக்கு சாபம் உண்டாகி அடுத் தடுத்த பிறவிகளில் பல சிரமங்களைத் தரும்.

அகத்தியர்: புசுண்டரே, ஒருவன் தாய்- தந்தைக்கு பட்டகடனை, அந்தப் பிறவி யிலேயே தீர்த்துவிடவேண்டும் என்றும், தீர்க்காதவர்களுக்கு பாவ- சாப- தோஷம் பற்றும் என்றும் கூறுகின்றீர்கள். பெற்ற கடனை எவ்வாறு தீர்ப்பது என்றும் கூறுங்கள்.

காகபுசுண்டர்: அகத்தின் இயல்பை அறிந்த அகத்தியர் பெருமானே, தமிழ் மக்களுக்கு நடைமுறை வாழ்வியல் தர்மத்தை போதித்தவரே, பெற்றவர்களுக்கு பிள்ளைகள் பட்டகடனை, அந்தப் பிறவியிலேயே எப்படி தீர்ப்பது என்ற வழியைக் கூறுகின்றேன்.

ஒருவன் குழந்தையாக, சிறுவனாக இருக்கும் போது, நமது தாய்- தந்தை இளமையாக இருந்து, உழைத்து நமக்குத் தேவையான உணவு, உடை என அனைத்தையும் தந்து, சொத்துகளை சேர்த்துவைத்து நம்மைக் காப்பாற்றுகின்றார்கள். இது நாம் குழந்தையாக இருக்குபோதே பெற்றவர்களுக்குப் பட்டகடன்.

நமது தாய் தந்தை வயது முதிர்ந்து, முதுமை யின் காரணத்தால் உடல் தளர்ந்து, உழைக்கும் சக்தி குறைந்து, தங்கள் தேவைகளை, தாங்களே செய்துகொள்ள முடியாத நிலையில், பிறர் உதவியை எதிர்பார்த்து, ஒரு குழந்தையின் நிலையில் இருப்பார்கள். நாம் குழந்தையாக இருக்கும்போது, இளமை யாக இருந்தவர்கள், நாம் இளமையாக இருக்கும்போது குழந்தை யாகி விடுவார்கள். அவர்களின் முதுமைக் காலத்தில், நாம் உழைத்து, சம்பாதித்து, அவர் களுக்கு உணவு, உடை, இருக்க இடம் தந்து, நோய் நீக்கி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லாமல் காப்பாற்றவேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் குழந்தையாக இருந்து அவர்களிடம் பெற்ற அனைத்தையும், பட்ட கடனை, அவர்களின் முதுமைக் காலத்தில் திருப்பி செலுத்தி, பெற்றோர் கடனைத் தீர்த்து, அவர்களின் ஆசியையும், அருளையும், நல் வாழ்க்கையும் பெற்றுக்கொண்டால், பித்ரு தோஷம், புத்திர சாபம், உண்டாகாது. இது தான் தாய், தந்தை சாப- தோஷம் நீக்கும் பரிகார நிவர்த்தி வழிமுறைகள். வேறு எந்த சக்தியாலும் இந்த தோஷங்களை நீக்க முடியாது.

அகத்தியர்: சித்தர் பெருமக்களே இன்று தமிழ்ச் சபை கலையும் நேரம் வந்துவிட்டது. நாளை மற்றொரு பாவ- சாபம் பற்றி தெரிந்து கொள்வோம். சபை கலையலாம்.

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)