"வல்லவர்போல் வேதபுராணங் காவியங்கள்
மந்திரங்கள் கோடானகோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றும் தீர்த்தமென்றும்
திருடர்கள் தானலைந்து திரிவார்மடடை.''
(காகபுசுண்டர்)
அகத்தியர்: தென் தமிழ் மண் பகுதியில் உள்ள இந்தப் பொதிகை மலையில் அமைந் துள்ள, இத்தமிழ் சங்கத்தில், சங்கமித்து இருக்கும் சைவத் தமிழ் சித்தர் பெருமக்கள், அனைவருக்கும் இந்த அகத்தியனின் ஆசீர்வாதங்கள்.
இன்று புசுண்ட ரிஷி, எந்தப் பாவச் செயலைப் பற்றிக் கூறுகின்றார், என்பதை தெரிந்துகொள்வோம். புசுண்டரே, தாங்கள், இன்று இச்சபையில் எந்த பாவ- சாபத்தைப் பற்றிக்கூற எண்ணுகின்றீர்களோ, அதைப் பற்றிக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: அழியாப்புகழுடன், நல்லறி வினைப் போதிக்கும் தமிழ்மொழியை நான்கு யுக கணக்கீட்டிற்கு முன்பே உருவாக்கி, கல்தோன்றி, மண்தோன்றி மனித இனத்தில், முன்தோன்றிய, மூத்த குடிமக்களாம், இத்தமிழ் மக்களுக்கு உரைத்தவரே, இத்தமிழ் மக்களுக்கு பகுத்தறிவையும், எல்லாவற்றையும் சிந்திதது, செயல்பட்டு வாழ சுய அறிவு, திறமையை போதித்து, வளர்த்தவரே, பூரண ஞானம் பெற்றவரே, என் ஆசானே, அகத்திய மாமுனி வரே உங்கள் திருவடி பணிந்து வணங்குகின்றேன்.
இந்த மண்ணுலகில் பிறந்து வாழும், ஒவ்வொரு மனிதனும், தனது இப்பிறவி வாழ்க்கையில், வாழ்நாள் முழுவதும், நற்பலன்களையும், தீமையான பலன்களையும் அனுபவித்து வாழ்வது இல்லை. எல்லாரும் ஏதாவது ஒருவகையில் இரண்டு பலன்களையும் சேர்த்தே அனுபவித்து வாழ்கின்றார் கள். இதற்கு காரணம், ஒருவன், அவனின் முற்பிறவி களில், தனது குடும்ப உறவுகளுக்கு, செய்த பாவங் களும், தீமைகளுமே காரணம். இநத பாவங்களையே ஊழ்வினை, கர்மவினை, முற்பிறவி வினை, தலையெழுத்து என்று கூறிக்கொள்கின்றார்கள். ஒருவ முற்பிறவியில் செய்த பாவமும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் வெறுத்துவிட்ட சாபமும், அவன் இந்தப் பூமியில் பிறக்கும், அடுத் தடுத்த பிறவி வாழ்க்கையில் சிரமம், தடைகள், வறுமை இவைக
"வல்லவர்போல் வேதபுராணங் காவியங்கள்
மந்திரங்கள் கோடானகோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றும் தீர்த்தமென்றும்
திருடர்கள் தானலைந்து திரிவார்மடடை.''
(காகபுசுண்டர்)
அகத்தியர்: தென் தமிழ் மண் பகுதியில் உள்ள இந்தப் பொதிகை மலையில் அமைந் துள்ள, இத்தமிழ் சங்கத்தில், சங்கமித்து இருக்கும் சைவத் தமிழ் சித்தர் பெருமக்கள், அனைவருக்கும் இந்த அகத்தியனின் ஆசீர்வாதங்கள்.
இன்று புசுண்ட ரிஷி, எந்தப் பாவச் செயலைப் பற்றிக் கூறுகின்றார், என்பதை தெரிந்துகொள்வோம். புசுண்டரே, தாங்கள், இன்று இச்சபையில் எந்த பாவ- சாபத்தைப் பற்றிக்கூற எண்ணுகின்றீர்களோ, அதைப் பற்றிக் கூறுங்கள்.
காகபுசுண்டர்: அழியாப்புகழுடன், நல்லறி வினைப் போதிக்கும் தமிழ்மொழியை நான்கு யுக கணக்கீட்டிற்கு முன்பே உருவாக்கி, கல்தோன்றி, மண்தோன்றி மனித இனத்தில், முன்தோன்றிய, மூத்த குடிமக்களாம், இத்தமிழ் மக்களுக்கு உரைத்தவரே, இத்தமிழ் மக்களுக்கு பகுத்தறிவையும், எல்லாவற்றையும் சிந்திதது, செயல்பட்டு வாழ சுய அறிவு, திறமையை போதித்து, வளர்த்தவரே, பூரண ஞானம் பெற்றவரே, என் ஆசானே, அகத்திய மாமுனி வரே உங்கள் திருவடி பணிந்து வணங்குகின்றேன்.
இந்த மண்ணுலகில் பிறந்து வாழும், ஒவ்வொரு மனிதனும், தனது இப்பிறவி வாழ்க்கையில், வாழ்நாள் முழுவதும், நற்பலன்களையும், தீமையான பலன்களையும் அனுபவித்து வாழ்வது இல்லை. எல்லாரும் ஏதாவது ஒருவகையில் இரண்டு பலன்களையும் சேர்த்தே அனுபவித்து வாழ்கின்றார் கள். இதற்கு காரணம், ஒருவன், அவனின் முற்பிறவி களில், தனது குடும்ப உறவுகளுக்கு, செய்த பாவங் களும், தீமைகளுமே காரணம். இநத பாவங்களையே ஊழ்வினை, கர்மவினை, முற்பிறவி வினை, தலையெழுத்து என்று கூறிக்கொள்கின்றார்கள். ஒருவ முற்பிறவியில் செய்த பாவமும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் வெறுத்துவிட்ட சாபமும், அவன் இந்தப் பூமியில் பிறக்கும், அடுத் தடுத்த பிறவி வாழ்க்கையில் சிரமம், தடைகள், வறுமை இவைகளைத் தண்டனையாகத் தந்து, அனுபவித்து வாழச் செய்துவிடும் என்ற உண்மையை, சூட்சும ரகசியத்தை சித்தர்களாகிய நாம் அறிவோம்.
ஆசானே, ஒருவன், ஒரு பிறவியில் செய்த பாவங்களுக்குண்டான, தண்ட னையை, அவனின் அடுத்த பிறவியில், அவனின் உடல், உயிர், ஆன்மா, இம் மூன்றின் மூலமும் அனுபவித்து தீர்க்கின் றான். இன்று சித்தர்கள் கூடி சங்கமித் துள்ள இச்சபையில், முற்பிறவிகளில், தான் பெற்ற குழந்தைகளுக்குச் செய்த பாவங்களால், அவனின் அடுத்தப்பிறவி வாழ்க்கையில், என்ன? விதமான சிரமங்கள், தடைகள், கஷ்டங்களை அனுபவிப்பான் என்று கூறுகின்றேன்.
அகத்தியர்: ஒரு பெற்றோருக்கு, ஆண், பெண் என்று இருவிதமான குழந்தைகள் பிறக்கின்றன. இதில் எந்தவகை குழந்தைக்கு பாவம் செய்தால், அது அடுத்தபிறவியில் பாதிப்பு பலன்களைத் தரும்?
காகபுசுண்டர்: அகத்திய முனிவரே, தங்களின் கேள்வி எனக்குப் புரிகின்றது. இந்த கலிகாலத்தில், வேத, சாஸ்திர, கருத்துகளைப் பரப்புவோர், வருங்காலத்தில், ஒருவனுக்கு ஆண் குழந்தை பிறக்காமல், இல்லாது இறந்து போனால், அவன், இறப்பிற்குப் பின்பு, பெற்றமகன் இறுதிச் சடங்கு, பட்சதிதி, மாததிதி, வருடதிதி போன்ற கிரியை செயல்களைச் செய்யமுடியாத நிலை அமைந்தால் இறந்த வனின் ஆத்மா மோட்சம் அடையாது. அந்த ஆன்மா சாந்தி அடையாமல், பசி, தாகம், குளிர் என அலைந்து திரியும் என்றும், பெற்ற பிள்ளை, இதுபோன்ற கிரியைச் செயல்களைச் செய்தால்தான் மோட்சம் அடையும். ஆன்மா சாந்தியடையும் என்று நம்பமுடியாத, நிரூபிக்க முடியாத, பொய்யான கருத்துகளைக் கூறி, பயமுறுத்தி, இறந்து போனவன் பெயரைக் கூறி பொருள் பறித்து சிலர் வாழ்வார்கள். ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றார்கள். குழந்தைகள் என்றால் ஆண், பெண் இரண்டும், ஒரு தந்தையால் உருவாக்கப்பட்டு அவன் விந்தில் பிறக்கும் குழந்தைகள்தான். இருபாலரில் யாருக்கு பாவம் செய்தாலும் பாதிப்பைத் தரும்.
அகத்தியர்: புசுண்ட ரிஷியே, ஒருவனுக்கு ஆண் குழந்தை இல்லாமல் இறந்துபோனால், அந்த ஆன்மாவிற்கு மோட்சம் கிடைக்காது, ஆன்மா சாந்தி அடையாது என்று கூறுகின்றார் களே, அவன் மரணத்திற்குப் பிறகு இறுதி சடங்கு, திதி, கிரியை செய்ய ஆண் குழந்தை இல்லாமல் இறந்து போகின்றவர்களின் ஆன்மாவின் நிலை என்ன என்பதைப் பற்றியும் கூறுங்கள்.
காகபுசுண்டர்: தமிழ் மொழிக்கு இறைவனே, தமிழ் மக்களின் தலைவனே, முதலில், ஒருவன், தனது முற்பிறவியில், தான் பெற்ற பிள்ளை களுக்கு செய்த பாவத்தின் சம்பளத்தை, அதற்குண்டான தண்டனையை இப்பிறவியில் அனுபவிக்கும் பலன்களைப் பற்றி முதலில் கூறுகின்றேன். அதன்பின்பு, ஆண் குழந்தை இல்லாமல், கிரியை செயல்களைச் செய்யும் நிலை அமையாமல் இறந்து போகின்றவர்களின் ஆன்மா அடையும் நிலையைப் பற்றிக் கூறுகின்றேன்.
"வாடிய வித்தோடே சேராத் தோஷம்'' ஒருவன், தன் வம்சம் விருத்தியாக, தன் மனைவியுடன், தாம்பத்திய உறவு கொண்டு, தன் விந்து, விதைமூலம், ஒரு குழந்தையைப் பெறுகின்றான். தன்னால் இந்தப் பூமியில், உருவாக்கப்பட்ட தன் குழந்தைகளைப் பேணி காப்பாற்றாமல் அவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இடம், அறிவுரை கல்வி, அவன்தானே சுயமாக உழைத்து, வாழ வழிவகைகள், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தல், என பல்வேறு நிலைகளில், பெற்ற குழந்தைகளை, காப்பாற்றி வளர்ப்பது ஒரு தந்தையின் தர்மமாகும், கடமையாகும்.
ஒரு குழந்தை, தான்பெற்ற மக்களுக்கு, தந்தைக்குரிய எந்த கடமையையும் செய்யாமல், அவர்களை பசியும், பட்டினியுமாய், அனா தைப் போல் அலைய வைத்தும், பிள்ளையின் முகம் பாராமல் ஒதுக்கிவைப்பதும், அறு நான்கு 24 வயதில், ஒரு கன்னியை திருமணம் செய்து வைக்காமல், பெற்ற பிள்ளைகளை புறக்கணித்து, வாழும், தந்தையின் செயலால், உடலாலும், மனதாலும், வருத்த முற்று வாழும் பெற்ற பிள்ளைகள் விட்ட சாபமே புத்திர சாபம் தோஷமாகும்.
இந்த பாவச் செயல்கள், "புத்திர சாபம், "புத்திர தோஷம்'', "புத்திர சோகம்'', "புத்திர துவேஷம்'' என்று நான்கு நிலைகளில் பாவத் திற்குண்டான தண்டனைகளை தந்து அனுபவிக்கச் செய்யும். அந்த பலன்களைப் பற்றி அறிவோம்.
புத்திர சாபம் பெற்றவர்கள், வாழ்க்கையில், புத்திர பாக்கியம் இல்லாமல் போவது, ஒரு குழந்தையைப் பெற வேண்டி, தானம், தர்மம், தவம், விரதம், பூஜை, ஹோமம், யாகம், கோவில், குளம், புண்ணியஸ்தலம், தீர்த்த யாத்திரை குரு, பீடம் என பணம், பொருளை விரையம் செய்து அலைய வைத்துவிடும். விந்து சக்தி, இல்லாமை, ஆண்மை குறைவு, உண்டாகிவிடும். தன்னைப் பெற்ற தந்தையாலும், தன் குடும்பத்தாராலும் நன்மை அடைய முடியாது. முற்பிறவியில், தான் பெற்ற பிள்ளையை அனாதையைப்போல் அலைந்து, திரிய வைத்ததால், இந்தப் பிறவியில், பிறர் ஆதரவு இல்லாமல் அனாதையைப் போல் வாழ்ந்து மடிந்து போவான்.
"புத்திர தோஷம்'' பெற்று பிறந்தவர்களின் வாழ்க்கையில், இவன்பெற்றவர்களாலேயும், தான் பெற்ற பிள்ளைகளாலும் புறக்கணிக் கப்படுவான். தந்தையும், மகனும், ஏதாவது ஒரு காரணத்தால் பிரிந்து வாழ நேரிட்டுவிடும். பெற்ற பிள்ளை இளம் வயதிலேயே இறப்பான்.
அல்லது பிள்ளை சம்பாதிக்க முடியாத இளம் வயதில் இருக்கும்போது தந்தை இறந்துபோவான்.
"புத்திர சோகம்'' பாதிப்புடன் பிறந்தவர் களுக்கு நீண்ட காலம் குழந்தை பிறக்காமல், ஒரு குழந்தை இல்லையே என்ற சோகத்துடன் வாழ்வார்கள். உடல் ஊனம், மனவளர்ச்சி குறைவு, தீராத நோய் தாக்கம், சரீரசக்தி. இல்லாதது போன்ற குழந்தைகள் பிறந்து, அந்த குழந்தைகளின் நிலைபற்றிய சோகத்துடன் வாழ நேரிடும். மேலும் பிறந்த பிள்ளை முட்டாள், முரடன், திருடன் என்ற பல தீய குணங்களைக் கொண்டு சமுதாயத்தில் தீயவன் என்று பெயரெடுத்து, பிறரால் தூற்றப்பட்டு, பெற்றவர்களுக்கும், குடும்பத்திற்கும், அவமானத் தையும், அவப்பெயரையும் தேடிவைப்பான். குழந்தைகளின் இந்த செயலால் சோகத்துடன் வாழ நேரிடும்.
முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளால், பெரிய நன்மைகளை அடைய முடியாது.
அல்லது பூர்வீக சொத்துகளே ஏதுமில்லாமல் இருக்கும். சொத்துகளில் வில்லங்கம், வியாஜி யம், வழக்குகள் உண்டாகும். வாழ்வியல் பொருள் விருத்தி அடைய முடியாது. பொதுவாக பெற்ற பிள்ளைகளைப் பற்றி ஏதாவது ஒரு கவலை, சோகம் இருந்து கொண்டே இருக்கும். பெற்ற பிள்ளை அற்ப ஆயுளில் இறந்து போய், அந்தப் பிள்ளையின் இறப்பு ஆயுள்வரை சோகத்துடன் வாழச் செய்துவிடும். மனநிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
புத்திர துவேஷ பாதிப்புடன் பிறந்தவர் களின் வாழ்க்கையில், தந்தைக்கும், குழந்தை களுக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கொருவர் எதிரிபோல் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். தந்தையை பிள்ளைகள மதிக்காது, அலட்சியப் படுத்தும் பின் வயதில் தந்தையுடன் சேர்ந்து வாழமாட்டான். பிள்ளைப்பாசம் கிடைக்காது. பிள்ளை தந்தையை புறக்கணித்து, தன் மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்று வசிப்பான்.
முற்பிறவியில், ஒருவன்தான் பெற்ற பிள்ளைகளுக்கு செய்த பாவம், கொடுமைகள், இவனின் விந்தில் உருவாகி பிறந்த பிள்ளைகளாலேயே நிம்மதி இல்லாத வாழ்வை அனுபவிக்கச் செய்துவிடும்.
அகத்தியர்: காகபுசுண்டரே, இன்று சபைகலையும் நேரம் வந்துவிட்டது. இனி நாளை பாவ- சாப- தோஷ பதிவு பற்றி கூறுங்கள். இன்று சபை கலையலாம்.
"பிள்ளைதான் வயதிற் மூத்தாள்.
பிதாவின் சொற்புத்தி கேளான்.
கள்ளினற் குழலாள் மூத்தாள்.
கணவனைக் கருதிப் பாராள்.
தெள்ளற வித்தை கற்றான்
சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால்
உலகத்தினர் பண்டிதரை தேடார்.''
- (விவேக சிந்தாமணி)
மைந்தரும் வயதில் பெரியவர்கள் ஆனால், தந்தையின் சொல்லைக் கேட்க மாட்டார்கள். மனைவி வயது முதிர்ந்தாள். கணவனை மதிக்க மாட்டாள் மாணவர்கள் தெளிவாக கல்வியை கற்றுக்கொண்ட பின்பு, ஆசிரியரை தேட மாட்டார்கள். நோய், பிணி, தீர்ந்து, சரீரசுகம் பெற்றவர்கள் உலகத்தில் வைத்தியரை தேட மாட்டார்கள்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!