"ஓயாமற் பொய்சொல்வார் நல்லோரை நிந்திப்பார்
உற்றுப் பெற்ற தாமரை வைவாவர்சதி யாயிரம் செய்வார்
சாத்திரங்கள் சொல்வார் பிறர்க்குபகாரம் செய்யார்
அண்டினர்க்கு ஈயார் இருந்தென்ன போயென்ன.'
(பட்டினத்தார்)
அகத்தியர்: இந்த தமிழ் திருசங்கத்தில், சங்கமித்து இருக்கும் சித்தர் பெருமக்களே, நம்மிடையே காகபுசுண்ட முனிவர், இந்த பூமியில் பிறக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் உண்டாகும் நன்மை, தீமை, விதி அமைப்பு, அவரவர் முற்பிறவிகளில், தன் குடும்பத்தினருக்கு செய்த நன்மை- தீமை செயல்களால்தான் நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றது என்பதை விளக்கமாகக் கூறிவருகின்றார்.
புசுண்டரே, ஒருவன் தன்னைப் பெற்று வளர்த்த, தாய்- தந்தைக்கு முற்பிறவி களில் செய்த பாவச் செயல்களை அனுபவித்த அவர்கள் மனம் வெறுத்து, விட்ட வாக்கு, சாபத்தால், மறுபடியும் இந்த பூமியில் பிறந்து, முற்பிறவி கர்மவினைக்கு தண்டனையாக, இப்பிறவி வாழ்க்கையில் அனுபவிக்கும் நன்மை- தீமைகளைப் பற்றியும் காரண, காரியத்தையும், மேலும் பெற்றவர்களுக்குச் செய்யும் பாவ- சாப- பதிவுகள் எத்தனைவிதமாக பிரிந்து செயல்படும் என்பதைப் பற்றியும் இச்சபையில் கூறுங்கள். தாங்கள் கூறப்போகும் மற்ற சாபங்களைப் பற்றிய விளக்கங்களைப் பின்னர் கூறலாம்.
காகபுசுண்டர்: ஆசானே, நீங்கள் அனைத்தும் அறிந்தவர். எனக்கு நீங்கள் போதித்த கர்மவினை, ஊழ்வினைப் பற்றி எனக்குப் போதித்தையே இச்சபையில் இப்போது நான் கூறிவருகின்றேன். இன்னும் தங்களிடமிருந்து, நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. தங்களின் கட்டளையை ஏற்று, பெற்ற பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுக்கு செய்யும் பாவ- சாப- தோஷ பதிவுகளின் பல்வேறு பிரிவுகளைப் பற்றியும், அதனால் அனுபவிக்கும் பலன்களைப் பற்றியும் கூறுகின்றேன்.
ஆசானே, ஒருவன் தந்தைக் குச் செய்யும் பாவங்களை தந்தைவிட்ட சாபம் (பித்ரு சாபம்) என்றும், பெற்ற தாய்க் குச் செய்யும் கொடுமை களால் தாய் சாபம் (மாத்ரு சாபம்) என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் இந்த சாபங்கள் நான்குவிதமான பிரிவுகளாக பிரிந்து செயல்படும்.
பெற்றோர்விட்ட சாபம், பித்ரு சாபம், பித்ரு தோஷம், பித்ரு சோகம், பித்ரு வேஷம் என்று நான்குவிதமான வழிகளில் செயல்படும். இதேபோன்று தாய
"ஓயாமற் பொய்சொல்வார் நல்லோரை நிந்திப்பார்
உற்றுப் பெற்ற தாமரை வைவாவர்சதி யாயிரம் செய்வார்
சாத்திரங்கள் சொல்வார் பிறர்க்குபகாரம் செய்யார்
அண்டினர்க்கு ஈயார் இருந்தென்ன போயென்ன.'
(பட்டினத்தார்)
அகத்தியர்: இந்த தமிழ் திருசங்கத்தில், சங்கமித்து இருக்கும் சித்தர் பெருமக்களே, நம்மிடையே காகபுசுண்ட முனிவர், இந்த பூமியில் பிறக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் உண்டாகும் நன்மை, தீமை, விதி அமைப்பு, அவரவர் முற்பிறவிகளில், தன் குடும்பத்தினருக்கு செய்த நன்மை- தீமை செயல்களால்தான் நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றது என்பதை விளக்கமாகக் கூறிவருகின்றார்.
புசுண்டரே, ஒருவன் தன்னைப் பெற்று வளர்த்த, தாய்- தந்தைக்கு முற்பிறவி களில் செய்த பாவச் செயல்களை அனுபவித்த அவர்கள் மனம் வெறுத்து, விட்ட வாக்கு, சாபத்தால், மறுபடியும் இந்த பூமியில் பிறந்து, முற்பிறவி கர்மவினைக்கு தண்டனையாக, இப்பிறவி வாழ்க்கையில் அனுபவிக்கும் நன்மை- தீமைகளைப் பற்றியும் காரண, காரியத்தையும், மேலும் பெற்றவர்களுக்குச் செய்யும் பாவ- சாப- பதிவுகள் எத்தனைவிதமாக பிரிந்து செயல்படும் என்பதைப் பற்றியும் இச்சபையில் கூறுங்கள். தாங்கள் கூறப்போகும் மற்ற சாபங்களைப் பற்றிய விளக்கங்களைப் பின்னர் கூறலாம்.
காகபுசுண்டர்: ஆசானே, நீங்கள் அனைத்தும் அறிந்தவர். எனக்கு நீங்கள் போதித்த கர்மவினை, ஊழ்வினைப் பற்றி எனக்குப் போதித்தையே இச்சபையில் இப்போது நான் கூறிவருகின்றேன். இன்னும் தங்களிடமிருந்து, நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. தங்களின் கட்டளையை ஏற்று, பெற்ற பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுக்கு செய்யும் பாவ- சாப- தோஷ பதிவுகளின் பல்வேறு பிரிவுகளைப் பற்றியும், அதனால் அனுபவிக்கும் பலன்களைப் பற்றியும் கூறுகின்றேன்.
ஆசானே, ஒருவன் தந்தைக் குச் செய்யும் பாவங்களை தந்தைவிட்ட சாபம் (பித்ரு சாபம்) என்றும், பெற்ற தாய்க் குச் செய்யும் கொடுமை களால் தாய் சாபம் (மாத்ரு சாபம்) என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் இந்த சாபங்கள் நான்குவிதமான பிரிவுகளாக பிரிந்து செயல்படும்.
பெற்றோர்விட்ட சாபம், பித்ரு சாபம், பித்ரு தோஷம், பித்ரு சோகம், பித்ரு வேஷம் என்று நான்குவிதமான வழிகளில் செயல்படும். இதேபோன்று தாய்க்கு செய்யும் கொடுமைகள் மாத்ரு பாவம், மாத்ரு தோஷம், மாத்ரு சோகம், மாத்ருவேஷம் என்று செயல்பட்டு பலன்களைத் தரும்.
அகத்தியர்: புசுண்டரே, பெற்றோர் சாபம் நான்குவிதமான செயல்களாகப் பிரிந்து செயல்படும் என்று கூறுகின்றீர்கள்.
அதைப் பற்றியும் விளக்கமாகக் கூறுங்கள்.
1. பித்ரு சாபம்
காகபுசுண்டர்: ஆசானே, ஒரு ஆண், தனது முற்பிறவிகளில், பருவம் அடைந்து, இளைஞானக இருக்கும்போது, தன்னைப் பெற்று வளர்த்த, தந்தைக்கு மரியாதை தராமல், தன் மனம் போன போக்கில் செயல்பட்டு வாழ்ந்து, தனது குடும்ப கௌரவத்தை குலைக்கும் செயல்களைச் செய்தும், வயது முதிர்ந்த தந்தைக்கு உணவு, உடை, இருப்பிடம் தராமல், முதுமையில் கஷ்டப்படச் செய்தும், தந்தையை பிரித்து அனாதைபோல் தனியே வசிக்கச் செய்தும், தான் சுயமாக பணம், பொருள் சம்பாதிக்காமல், முன்னோர் தேடிவைத்த சொத்துகளை விரையச் செலவுகளைச் செய்து அழித்தும், உழைத்து வாழ வேண்டிய வயதில், தந்தையின் உழைப்பில் உண்டு, உடுத்தி வாழ்பவர்களுக்கு பித்ரு சாபம் உண்டாகும்.
இந்த பித்ரு சாபம் பெற்று பிறந்தவர்களின் இப்பிறவி வாழ்வில் பூர்வீக சொத்துகளால் நன்மை இராது. அல்லது இவன் பிறக்கும்போதே முன்னோர் தேடிய சொத்துகள் எதுவுமில்லாமலேயே இருக்கலாம். பெற்ற தந்தை இவனைவிட்டு இளம் வயதிலேயே இறந்து போகலாம். அல்லது இவனுக்குப் பிறந்த மகன் அற்ப ஆயுளில் இறந்து போககூடும். இவனுக்கு பெற்ற தந்தையின் ஆதரவு பாசமும், இவன் பெற்ற பிள்ளையின் பாசமும், ஆதரவுமில்லாமல் போகலாம். அல்லது தனது தந்தையை, தான் பெற்ற மகனைப் பிரிந்து, இவர்களிள் ஆதரவுமில்லாமல், தானே உழைத்து சம்பாதித்து வாழநேரிடும். இதுபோன்று இன்னும் பல சிரமங்களைத் தந்தை வழியில் இப்பிறவியில் அனுபவிக்க நேரிடும்.
இவனின் திருமணத் திற்குப்பின்பு, தன் மனைவியின் தந்தையான மாமனாரின் ஆதரவும், மனைவி குடும்பத் தினரின் ஆதரவுமில்லாமல் போகும். மனைவிக்கு அவரின் பிறந்த வீட்டில் இருந்து முறையாகக் கிடைக் கக்கூடிய உதவி, பணம், பொருள், சொத்து கிடைக் காமல் போய்விடும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் உண்டாகலாம்.
ஒரு பெண் பித்ரு தோஷத்துடன் பிறந்திருந் தால், அவளுக்கு தந்தையின் பாசம் கிடைக்காது. சில பெண்களின் வாழ்க்கையை, அவளே தீர்மானித்து தேடி, அமைத்துக்கொள்ள நேரிடும். இவள் பெற்ற பிள்ளைக்கு அற்ப ஆயுள் காட்டும். அதனால் பிள்ளையின் ஆதரவுமில்லாமல் போகும். பிள்ளையை பெற்று இழப்பாள், கரு கூடாமை, கரு கலைதல், கருவை கலைத்தல் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். கணவன் குடும்பத்தாரின் ஆதரவு இல்லாமல் போகும். மாமனார் இல்லாத நிலை ஏற்படலாம். அல்லது இல்லாதவனை மணமுடிக்க நேரும். இவள் கணவனுக்கும், இவனுக்கும் பிறர் ஆதரவு கிடைக்காமல் இவர்களே உழைத்து, சம்பாதித்து, குடும்பம் நடத்தி வாழ செய்துவிடும்.
2. மாத்ரு சாபம் (தாய் சாபம்)
ஒருவன் தனது முற்பிறவிகளில் பெற்ற தாய்க்கு செய்த பாவ கொடுமைகளால், உண்டான பாவ சாபத்துடன் பிறந்தவர்களின் வாழ்க்கையில், தாய் இளம் வயதிலேயே இறந்து போகலாம் அல்லது பிள்ளையைப் பெற்றுவிட்டு பிரசவ சமயத்தில் இறந்து போகக்கூடும். தாயின் பாசமில்லாமல் வாழ நேரிடும். அல்லது தாயை விட்டுப் பிரிந்து வாழ நேரிட்டுவிடும். குழந்தையாக இருக்கும்போது, தாய்ப்பால் குறைந்து தாய்ப்பால் குடிக்க முடியாமல் போகும். தாயினாலும், தாய்வழி உறவுகளாலும் பெரிய நன்மைகளை அடையமுடியாமல் செய்துவிடும். தாய் பகையாகலாம், தாய்மாமன் உறவும் கிட்டாமல் பகை கூட உண்டாகலாம்.
திருமணத்திற்குப்பிறகு, தன் மனைவியின் தாயான மாமியாரின் ஆதரவு இல்லாமல், பெரிய நன்மைகள் கிடைக்காமல் போகலாம். அல்லது மாமியாரே இல்லாத, தாயில்லாத பெண்ணை மணமுடிக்க நேரிடும். திருமணத்திற்குப் பின்பு, மனைவிக் கும் பெற்ற தாயின் ஆதரவு இல்லாமல் போகும்.
ஒரு பெண் தாய் சாபம் பெற்று பிறந்திருந்தால், இவள் இளம் வயதிலேயே தாயை இழக்க நேரும். தாய்வழி உறவுகளால் பெரிய நன்மை இராது. திருமணத்திற்குப்பிறகு கணவன் வீட்டில் மாமியாரின் கொடுமைகளை அனுபவிக்க நேரிடும். இவள் கணவனுடன் சந்தோஷமாக வாழ்வதற்கு மாமியாரே தடையாக இருப்பாள். இவளின் பாவ சாபம், இவள் பெற்ற பெண்ணிற்கும் தொடர்ந்து இருந்தால் இவளின் மகள் வாழ்விலும் பாதிப்பை உண்டாக்கும்.
3. பித்ரு தோஷம்
ஒரு ஆண் முற்பிறவிகளில் தந்தையின் சாபம் பெற்று பித்ரு தோஷத்துடன் பிறந்திருந்தால், தங்களின் முன்னோர்கள் தேடிவைத்து சொத்துகளால் நன்மை இராது. பூர்வீக சொத்துகள் இருந்தாலும் அந்த சொத்துகளில் வில்லங்கம், வழக்கு, வியாஜியம் ஏற்பட்டு அனுபவிக்கமுடியாமல் செய்துவிடும். அந்த சொத்து விருத்தியை தராது. விருத்தி அடையமுடியாது. இவரின் இப்பிறவி நல்ல வாழ்க்கைக்கு தேவையான அனைத் தையும் இவரே சம்பாதித்து அடைந்து வாழநேடும். திருமணத்திற்குப்பின்பு, மாமனார் வீட்டு ஆதரவு கிடைக்காது. மனைவி வழி உறவுகளால் பெரிய நன்மைகளை அடையமுடியாமல் போகும்.
4. மாத்ரு தோஷம்
ஒரு ஆணிற்கு தாய் சாபம் (மாத்ரு) தோஷமிருந்தால், அவருக்கு தாயின் அன்பும், தாய்வழி தாய்மாமன் உறவுகளால் பெரிய நன்மை கிடைக்காது. பெண்களால் பிரச்சினைகளையும், அவமானத்தையும் சந்திக்க நேரும். மனதில் குழப்பமிருக்கும். சிலருக்கு மனநோய் பாதிப்புகூட ஏற்படலாம். தாயில்லாத பெண்ணை மணந்துகொள்ள நேரிடும். அதாவது மாமியாரில்லாமல் இருக்கலாம். மாமியார் இருந்தால் அவரால் பெரிய நன்மை இராது. மாமனார், மாமியார் பகையாகலாம். பெண்கள் இந்த மாத்ரு தோஷத்துடன் பிறந்திருந்தால், திருமணத்திற்குப் பின்பு, அவளைப் பெற்ற தாயின் பாசம் கிடைக்காமல் போகும். தாய்வழி உறவுகள் பகையாகலாம். வாழவந்த கணவன் வீட்டிலும் மாமியாரின் கொடுமைகளை அனுபவிக்க நேரும். மாமியார் இவளை ஒரு எதிரிபோல் எண்ணி செயல்படுவாள். கணவன், மனைவி பாசத்திற்கு கணவன் வீட்டுப் பெண்களோ அல்லது மாமியாரோ தடையாக இருப்பார்கள். பொதுவாக இந்த தோஷம் கணவன், மனைவி இருவருக்கும் அமைந்து இருந்தால், திருமணத்திற்குப்பின்பு இவர்கள் பிறந்த வீடு, புகுந்த வீடு என இரண்டு வீட்டாரின் ஆதரவு இல்லாமல், இவர்களே உழைத்து சம்பாதித்து வாழநேரிட்டுவிடும்.
5. பித்ரு சோகம்
இவர் முற்பிறவியில் செய்த செயல்களால், பெற்ற தந்தையே மனம் வெறுத்துவிட்ட வாக்கு, பித்ரு சோகத்தை இப்பிறவியில் அனுபவிக்கச் செய்துவிடும். இவர்கள் வாழ்க்கையில் தந்தைக்கு அற்ப ஆயுள்காட்டும் அல்லது இவர்களின் பிறப்பிற்குப்பிறகு, தந்தைக்கு ஏதாவது நோய் உண்டாகி, தந்தையை பற்றிய கவலைய உண்டாக்கி வைக்கும். புத்திரத்தடை, புத்திர பாக்கிய குறைவு ஏற்படும். தந்தையைப் பற்றிய மனக் கவலை மனதில் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த பித்ரு சோகத்துடன் பிறந்த பெண்களின் வாழ்க்கையிலும் தந்தையின் பாசம் தடைப்படும், தந்தை ஏதாவது நோயினால் பாதிக்கப்படுவார். திருமணத்திற்குப்பிறகு மாமனார்மூலம் ஏதாவது கஷ்டங்கள் உண்டாகி கவலைப்படச் செய்யும்.
6. பித்ரு துவேஷம்
இந்த பித்ரு துவேஷ பாதிப்புடன் பிறந்துள்ள ஆண்கள் வாழ்வில், பெற்றவர்களே பிள்ளையைப் புறக்கணிக்கும் நிலை உண்டாகிவிடும். கவனிப்பாரற்ற நிலையில் விடப்படுவார்கள். தந்தையிடம் எப்போதும் எதிலும் கருத்து வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். தந்தையும், மகனும் ஒருவருக்கொருவர் எதிரிபோல் இருப்பார்கள். தந்தையின் பாசம் கிடைக்காது. தந்தை மகனை மதிக்க மாட்டான். மகன் தந்தையை மதிக்கமாட்டான்.
இவர்களின் இளம் வயது வாழ்க்கை சிரமம் மிகுந்ததாக இருக்கும் தந்தையாலும் நன்மை இராது. தந்தைவழி உறவுகளாலும் நன்மை இராது. சொந்த சாதி இனத்து மக்களாலும் நன்மை கிடைக்காது. சுமார் 30 வயதிற்குமேல், திருமணத்திற்குப்பிறகு, தன் சுய உழைப்பால் வாழ்வில் படிப்படியாக வாழ்வில் உயர்வை அடைவான். தன்முன்னோர்கள், தனது தந்தை வசித்த பூர்வீக வீட்டிலோ, அந்த ஊரிலோ வசிக்கமுடியாது. வேறு ஊர் சென்று வசிக்க நேரிடும்.
ஒரு பெண்ணிற்கு இந்த துவேஷ பாதிப்பு இருந்தால், திருமணத்திற்குப் பின்பு மாமனார், மாமியாருடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக வாழமுடியாது. கணவன் அவர்களின் குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப் படுவான். இந்தப் பெண்ணின் உழைப்பும், சம்பாத்தியமும், குடும்பத்தை மேன்மையடையச் செய்ய உதவும்.
ஆசானே, இந்த நான்குவிதமான பாவ- சாப- தோஷ- துவேஷப் பதிவுகள் இது போன்ற வெவ்வேறுவிதமான பலன்களைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடும்.
அகத்தியர்: புசுண்ட முனிவரே, பெற்ற தாய், தந்தைக்குச் செய்யும் பாவச் செயல்களால், அடுத்த பிறவியில் அனுபவிக்கும் பலன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இன்று சங்கம் முடியும் நேரம் வந்துவிட்டது. இனி மற்ற சாப தோஷங்களைப்பற்றி அடுத்துவரும் நாட்களில் அறிந்து கொள்வோம். இன்று சபை கலையலாம்.
(வாசக அன்பர்கள், பாலஜோடி வார இதழில் வரும் அகத்தியர்- ஜீவநாடி தொடரில், மனிதர்களின் வாழ்வில் முற்பிறவி பாவ- சாப- பதிவுகள் இப்பிறவி வாழ்க்கையில் செயல்பட்டு, வாழ்வில் உண்டாகும். சிரமம், தடைகளுக்கு எவ்வாறு காரணமாக இருந்து செயல்படுகின்றது என்று அகத்தியர் கூறும் விதி, விளக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்).
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)