வாழவைப்பாள் வாராஹியம்மன்!

/idhalgal/om/varahiyamman-will-live

குருவின் ஆசியும் இறைவனின் ஆசியும் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம் என நம் முன்னோர்கள் செல்வார்கள். இது உண்மைதான்! நம் பாரத தேசத்தில் இவ்விருவரின் ஆசியால் இரண்டு பேரரசுகள் தோன்றி, நல்லாட்சி புரிந்தன.

பதினான்காம் நூற்றாண்டில் முஸ்லிம் பேரரசால் ஒடுக்கப்பட்ட இந்துக்களின் துயர் துடைக்க, விஜயநகரப் பேரரசை (1336-1565) சங்கம சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவர் ஸ்ரீ வித்யாரண்ய மகா சுவாமிகள் (1302-1387) என்ற குருவின் ஆசியாலும், அவரது வழிகாட்டுதலுடனும் உருவாக்கினார்கள். அதே போன்று களப்பிரர் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு (850-1279) தஞ்சையில் விஜயாலயர் (850-887) என்பவரால் நிறுவப்பட்டது.

சரிவுற்ற சோழப் பேரரசை எதிரிகளிடமிருந்து காத்து நல்லாட்சி புரிய காரணமாக இருந்த இறைவியின் பெயர் தான் வாராஹி (வராகி) அம்மன். அம்பிகையின் படைத் தளபதியான வாராஹியம்மன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய அபூர்வ சக்தி.

விஜயாலயர் தான்பெற்ற முதல் வெற்றிக்கு அடையாள மாக தஞ்சையில் துர்க்கைக்கு ஒரு கோவிலைக் கட்டினார்.

மாமன்னர் இராஜராஜர் (985-1014) தான் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலில் தன் நாட்டைக் காத்துவரும் ஆதி வாராஹியம்மனுக்கு தனிச் சந்நிதியை ஏற்படுத்தினார்

குருவின் ஆசியும் இறைவனின் ஆசியும் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம் என நம் முன்னோர்கள் செல்வார்கள். இது உண்மைதான்! நம் பாரத தேசத்தில் இவ்விருவரின் ஆசியால் இரண்டு பேரரசுகள் தோன்றி, நல்லாட்சி புரிந்தன.

பதினான்காம் நூற்றாண்டில் முஸ்லிம் பேரரசால் ஒடுக்கப்பட்ட இந்துக்களின் துயர் துடைக்க, விஜயநகரப் பேரரசை (1336-1565) சங்கம சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவர் ஸ்ரீ வித்யாரண்ய மகா சுவாமிகள் (1302-1387) என்ற குருவின் ஆசியாலும், அவரது வழிகாட்டுதலுடனும் உருவாக்கினார்கள். அதே போன்று களப்பிரர் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு (850-1279) தஞ்சையில் விஜயாலயர் (850-887) என்பவரால் நிறுவப்பட்டது.

சரிவுற்ற சோழப் பேரரசை எதிரிகளிடமிருந்து காத்து நல்லாட்சி புரிய காரணமாக இருந்த இறைவியின் பெயர் தான் வாராஹி (வராகி) அம்மன். அம்பிகையின் படைத் தளபதியான வாராஹியம்மன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய அபூர்வ சக்தி.

விஜயாலயர் தான்பெற்ற முதல் வெற்றிக்கு அடையாள மாக தஞ்சையில் துர்க்கைக்கு ஒரு கோவிலைக் கட்டினார்.

மாமன்னர் இராஜராஜர் (985-1014) தான் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலில் தன் நாட்டைக் காத்துவரும் ஆதி வாராஹியம்மனுக்கு தனிச் சந்நிதியை ஏற்படுத்தினார். வாராஹியம் மனைப் போற்றும் வகையில் சோழ அரசனான முதலாம் குலோத்துங்கனில் தளபதி சுந்தரேசர்-

"இருகுழை கோமளம் தாள்

புஷ்பராகம் இரண்டு கண்ணும்

குருமணி நீலம் கை கோமேதகம்

நகம் கூர் வயிரம்

திருநகை முத்து கனிவாய்

பவளம் சிறந்த வல்லி

மரகத நாமம் திருமேனியும்

பச்சை மாணிக்கமே'

எனத் தொடங்கும் வாராஹி மாலையை இயற்றினார். நம் வாழ்க்கையில் வெற்றிகள் கிட்டவும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும், வாக்குப்பலிதம் பெறவும், மனக் கவலை நீங்கவும், செல்வம் பெருகவும், விவசாயம் செழிக்கவும் வாராஹியம்மனை வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு வரும் வழிபாடாகும்.

உலகில் வாழும் அனைத்து ஜீவராசி களையும் ரட்சித்துக் காத்து வரும் அன்னை பராசக்தி பரமசிவனின் சக்தியாகவும், பிரம்மா (படைத்தல்), மகாவிஷ்ணு (காத்தல்), பரமசிவன் (அழித்தல்) ஆகிய சக்திகளைத் தன்னகத்தே கொண்டு முப்பெரும் தேவியர்களின் ஒரே சக்தியாக சண்டிகாதேவி, துர்க்கை, காளி, லலிதாம்பிகை, இராஜ ராஜேஸ்வரி என்கிற திருப்பெயர்களில் நம்மைக் காத்து வருகிறாள். இதைத்தான் ஸ்ரீ தேவிமாஹாத்மியம் என்கிற நூலில், "ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம் சக்திபூதே ஸநாதனி' எனக் கூறப்பட்டுள்ளது. மூன்று தொழிலுக்கும் காரண சக்திதான் அம்பிகை என்கிற பரமேஸ்வரி.

முன்னொரு காலத்தில் கொடிய செயல்களைப் புரிந்து மக்களையும், தேவர் களையும் துன்புறுத்தி வந்த அரக்கர்குல அரசர்களான சும்பன், நிசும்பன் உள்ளிட்ட வர்களை போரில் வதம் செய்ய அனிமா, மகிமா போன்ற அஷ்டமா சித்திகளைத் தன்னுள் கொண்ட அம்பிக்கையின் போர்ப் படையில் ப்ரஹ்மானீ, மஹேச்வரீ கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹி, சாமுண்டி இந்திராணி போன்ற வடிவங்களில் அம்பிக்கையின் அம்சங்களாக தேவியர்கள் தோன்றி, அசுரர்களுடன் கடும்போர் புரிந் தனர். ஸ்ரீ தேவிமாஹாத்மியம் சுலோகபடி மகாவிஷ்ணுவின் சக்தியாக (வராஹ மூர்த்தி) போர்க்களத்தில் வாராஹியம்மன் தோன்றினாள்.

"யஜ்ஞவாராஹ மதுலம் ரூபம்

யா பிப்ரதோ ஹரே

சக்தி ஸாப்யாயயௌ தத்ர

வாராஹீம் பிப்ரதீம் தனும்:'

(ஹரியின் சக்தியாக வாராஹி உருவத்தில் தோன்றினாள்)

இந்த வாராஹியம்மனே அம்பிகையின் போர்ப்படைக்குத் தளபதியாக இருந்து போரில் வெற்றிலைப்பெற்று தேவர்களும், மக்களும் நிம்மதியுடன் வாழ வழிசெய்தாள் என்பது புராண வரலாறு.

வாராஹியம்மன், ஆதி வாராஹி, லகு வாராஹி, பஞ்சம வாராஹி, அஸ்வாரூடா வாராஹி, தண்டநாத வாராஹி, தூம்ர வாராஹி, ப்ருஹத் வாராஹி, ஸ்வப்ன வாராஹி என எட்டு வடிவங்களை எடுத்தாள் என லலிதேபாக்யானம் நூல் தெரிவிக்கிறது.

கரிய நிறத்தில் வராஹ (பன்றி) முகத்துடன் கையில் உலக்கை, கத்தி, கேடயம், கலப்பை போன்றவற்றை ஏந்திய திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறாள் வாராஹியம்மன். திருச்சி திருவானைக்காவலில் கொலுவீற்றிருக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வாராஹி அம்மனின் அம்சம். அதேபோல் திருக்கடையூர் அபிராமியும் வாராஹியம்மனின் அம்சம் என்பதை அபிராமி பட்டர் தனது பாடலில்-

"நாயகி நான்முகி நாராயணி

கைநளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி

சாமளை சாதி நச்சு

வாயகி மாலினி வாராஹி

சூலினி மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள்

சரணம் அரண் நமக்கே'

என குறிப்பிட்டுள்ளார். பஞ்சமி திதியில்

வாராஹியம்மனை வழிபடும் வழக்கம் இருப்பதால் வாராஹியம்மனை பஞ்சமி என்றும் அழைப்பதுண்டு. சப்த கன்னிகையில் ஐந்தாவதாக இருப்பவளாகிய இந்த

vv

அம்மனை அபிராமி பட்டர்லி

"பயிரவி பஞ்சமி பாசாங்குசை

பஞ்சபாணி வஞ்சர்

உயர்அவி உண்ணும் உயர்சண்டி

காளி ஒளிரும் கலா

வயிரவி மண்டலி மாலினி

சூலி வராகி என்றே

செயிர்அவி நான்மறை சேர்

திருநாமங்கள் செப்புவரே'

என்கிற பாடல் மூலம் அம்மனின் வடிவங்

களைப் போற்றும்வகையில், அதில் வாராஹி அம்மனைப் பற்றியும் பாடியுள்ளார்.

வாராஹியம்மனை மாதம்தோறும் வரும் பஞ்சமி திதி, அஷ்டமி திதி,

அமாவாசை, பௌர்ணமி மற்றும் ஆனி மாதம் வரும் ஆஷாட நவராத்திரியின்போது பஞ்சமி திதியில் சிறப்பாக வழிபடுவதுண்டு. பொதுவாக வெள்ளிக்கிழமை இரவு சந்தியா வேளைக்குப்பிறகு செவ்வரளி, மருக்கொழுந்து, நீலநிற சங்குப்பூ, செம்பருத்தி போன்றவற்றால் அர்ச்சனை யும் பூஜையும் செய்து, முடிவில் கிழங்கு வகைகள் (சர்க்கரைவள்ளி, கோரை), செவ்வாழை, மாதுளை பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்தல் அவசியம். பூஜையின்போது மூலமந்திரமான

"ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி

வார்காலி வார்தாலி வாராஹி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம: ருந்தே

ருந்தினி நம: ஜம்பே ஜம்பினி நம:

மோஹே மோஹினி நம:

ஸ்தம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்

ஸர்வேசாம் ஸர்வ வாக் சித்த

சக்ஷீர் முக கதி ஜிஹ்வா

ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம்

வச்யம் ஐம் க்லௌம்

ஐம ட: ட: ட: ட: ஹூம்

அஸ்த்ராய பட்'

எனும் நூற்றுப் பதின்மூன்று எழுத்துக் களைக்கொண்ட இதனையும், வாராஹி அஷ்டோத்ர சத நாமாவளி, ஸ்ரீ வாராஹி சுவசம், ஸ்ரீ வாராஹி மாலை போன்ற துதிப்பாடலை பக்தியுடன் பாராயணம் செய்தால், நம்மைக் காக்க வாராஹியம்மன் நிச்சயம் துணைக்கு வருவான் என்பது சத்தியம். வாராஹியம்மன் வழிபாட்டுடன் பைரவரையும் சேர்த்து வழிபட்டால் கூடுதல் பலன் உண்டு.

தமிழ்நாட்டில் பழைமையான வாராஹி யம்மன் கோவில்கள் (சந்நிதி) தஞ்சை பெரிய கோவிலிலும், காஞ்சிபுரம் அருகே பள்ளூரிலும், இராமநாதபுரம் உத்தர சோசமங்கையிலும் உள்ளன. அன்னை வாராஹியை மனமுருக பக்தியுடன் வழிபடு வோம் நம் வாழ்வில் வளம் பெறுவோம்.

"ஓம் உக்ர ரூபாய வித்மஹே:

ஹல ஹஸ்தாய தீமஹி

தன்னோ, வாராஹி ப்ரசோதயாத்'

(வாராஹி காயத்ரி மந்திரம்)

om011123
இதையும் படியுங்கள்
Subscribe