துரை வண்டியூரில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும், அனைத்து பிரச்சினைகளுக்கும், நோய்களுக்கும் தீர்வு தந்துவரும் அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் "பாண்டி முனிசாமி'யை குலதெய்வமாக வழிபட்டு வாழ்வில் பல வெற்றி சிகரங்கள் தொட்டு புகழ், நற்பெயர், பாராட்டு விருதுகளை பெற்று வரும், மதுரை அண்ணாநகர் அம்பிகா சினிமா தியேட்டரின் தென்புறத்திலுள்ள அண்ணா நகர் பேருந்து ஸ்டாண்ட் சாலையிலுள்ள கோனார் அம்மா மெஸ் மாடியில் அலுவலகம் அமைத்து 1993 ஆண்டுமுதல் முப்பது ஆண்டுகால அனுபவ ஆற்றலுடன் ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து நிபுணராக, தெய்வீக கம்பீர தோற்ற முடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் எஸ். ராமசிவநேசன் M.A., M.A., B.Ed., P.G.D.J.M.C., D.F.S., அவர் களை பற்றிய சிறப்பு தகவல்களை முதலில் காண்போம்...

dd

இவர் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது, புதிதாக தொடங்கும் தொழிலுக்கு பெயர்வைத்து தருவது வாழ்வில் தோல்விகளை கண்டு துவண்டு போனவர்களுக்கு பெயர்களை தகுந்தபடி மாற்றி வைத்துத்தந்து வாழ்வில் மறு மலர்ச்சியை, மகிழ்ச்சியை, எழுச் சியை, உயர்வை தருவது போன்ற நியூமராலஜி பணி, புதிய வீடுகளுக்கு பிளான்போட்டு தருவது, பழைய வீடுகளை அதிர்ஷ்டமாக்கி திருத்தி அமைத்து கொடுப்பது, கல்வி நிலையங்கள், தொழிற்சாலை களிலுள்ள குறைகளை அகற்றி வெற்றிகரமாக மாற்றித்தரும் வாஸ்து சாஸ்திர பணிகள், எதிர்கால பலன்கள் கூறும் ஜோதிட பலன்கள் கூறும் பணி ஆகியவற்றை பலரும் பாராட்டி நன்றிகூறி வாழ்த்தும்படி பல ஆண்டுகளாக செய்துவருகிறார்.

இவரிடம் முறைப்படி வாஸ்து சாஸ்திர கலை கற்ற பலர் இன்று உலகம் முழுக்க புகழுடன் செயல் பட்டுவருவதும், யார் யார் எந்தெந்த ரத்தின கற்கள் அணிந்தால் நல்லது என்பதை விளக்கும் "அதிர்ஷ்டக்கல்' எனும் நூல், நியூமராலஜியிலுள்ள சூட்சும ரகசியங்களை கூறும் "நியூமராலஜி ரகசியம்' எனும் நூல், வாஸ்து பற்றி முழு விவரங் களை தெளிவாக கூறும் "வாஸ்து ரகசியம்' எனும் நூல், ஆக மூன்று அற்புதமான மனித வாழ்வின் உயர்விற்கு அவசியம் தேவைப்படும் மூன்று நூல்களை எழுதி வெளி யிட்டு இருப்பதும், ஜோதிடம், வாஸ்து, நியூமராலஜி இவற்றின் சிறப்புகளை கூறும் "ராமசிவநேசன் வாஸ்து' என்ற பெயரில் "யூட்யூப் சேனல்' நடத்திவருவது குறிப்பிடத் தக்கது.

நியூமராலஜி, வாஸ்து நிபுணர், பேரறிஞர், மாமேதை என அனைவராலும் போற்றப் படும் வணங்கப்படும் இவர் இவரது குலதெய்வமான "மதுரை வண்டியூர் பாண்டி முனீஸ்வரர்' அருளால்பெற்ற திறமையை, வளமான, நலமான தனது வாழ்வு பற்றி கூறுகிறார்.

"என் தந்தை பிரபல ஜோதிட, நியூமராலஜி, வாஸ்து, மனையடி சாஸ்திர அறிஞராக திகழ்ந்த திரு. சக்தி ஞானவீரணன் அவர்கள் தான் என் குரு. ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கஷ்டங்களை போக்குவதில் முதலில் வந்து நிற்பது குலதெய்வம் மட்டுமே. குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் மகத்தானது. சக்திவாய்ந்த பிற தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை குடும்பத்தோடு வருடம் ஒரு முறையாவது சென்று வணங்க தவறக் கூடாது. குலதெய்வம் மட்டுமே நம் குடும்ப நல வாழ்விற்கு முழுப்பொறுப்பு ஏற்று வழிகாட்டு கிறது. நான் பத்தாம் வகுப்பு படித்து வந்தபோது, எனக்கு விவரம் தெரிந்து என் அப்பா மற்றும் குடும்பத்துடன் எங்கள் குலதெய்வமான "மதுரை வண்டியூர் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர்' கோவில் சென்றிருந்தோம். அப்போது முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் பல வருடங்கள் பழகிய குடும்ப நண்பர்போல் எங்களிடம் வந்து என்னை உற்றுப் பார்த்து விட்டு "தம்பி... நீ ஏன் உங்கப்பா மாதிரி ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து, மனையடி சாஸ்திரம் படித்து அதையே தொழிலா செஞ்சு பலபேர்களின் வாழ்விற்கு வழிகாட்டக்கூடாது? என்று கேட்டு விட்டு சட்டென்று கூட்டத்தில் சென்று மறைந்து விட்டார். எனக்கு என் தந்தை தொழிலை செய்யச் சொல்லி அப்போதே அருள் கட்டளை இட்டுச் சென்றது எங்கள் குலதெய்வம் பாண்டி முனீஸ்வரர் தான் என்பதை உணர்ந்து நானும், என் தந்தையும் குடும்பத்தினர் அனைவரும் மெய்சிலிர்த்து போனோம். என் தந்தையுடன் அவரது அற்புதமான தெய்வீக கலை முற்றுபெற்று விடக்கூடாது. நான் அதனைத் தொடர்ந்து செய்து என் வாழ்வில் வளம்பெற்று பிறர் வாழ்விலும் வளம் காணச் செய்ய பாண்டி முனீஸ்வரர் அருள்வாக்கு சொன்னபடியே அன்றே அந்தக்கோவில் உள்ளேயே ஸ்தல விருட்சத்தின் கீழே பாண்டி முனீஸ்வரரை பரிபூரண சரணாகதி அடைந்து மனமார வேண்டிக்கொண்டு என் தந்தையே குருவாக அமர்ந்துகொண்டு எனக்கு நியூமராலஜி, வாஸ்து, ஜோதிடக்கலை கற்றுக் கொள்ளத் துவங்கி நான் இந்த மூன்று கலையையும் முழுமையாக கற்று இன்று பலரும் பாராட்டி, போற்றி புகழ்ந்து வணங்கும்படி வாழ்ந்து வர முழுக்காரணம் முனீஸ்வரர் தான்.

நான் இரண்டு முதுகலை பட்டம் பெற்றும், எம்.ஏ ஜெர்னலிசம் படித்ததால் பத்திரிகை பணியில் சேர்ந்து சம்பாதித்து உயர்வுபெற்று இருக்கமுடியும். ஆனால் குலதெய்வ கட்டளையில், வழிகாட்டு தலால் இன்று வாஸ்து, நியூமராலஜி ஜோதிட நிபுணராக எனக்கு ஆத்ம திருப்தி தரும் நிறைவான வாழ்வு வாழ்ந்துவருகிறேன்.

dd

Advertisment

இன்னொரு முக்கிய சம்பவமும் நான் சந்தித்தேன். வாஸ்து தொழிலுக்கு சென்னைக்கு முதல்முதலாக வேட்டுவான்கனி என்ற ஏரியாவிற்குதான் வந்தேன். அப்போது கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கிய மதிப்புமிகு கணபதி ஸ்தபதி அவர்களை தற்செயலாக சந்தித்துப் பேசினேன்.

அவர் எனக்கு வாஸ்து பற்றிய பல விவரங்களை சொல்லிக்கொடுத்தார். என்னை அவர் மகாபலி புரம் அழைத்துச்சென்றும், வாஸ்து பற்றிய பல நூல்களை தந்து படிக்கவைத்தும் பேருதவி செய்தவர். அவரை என்றுமே என்னால் மறக்க முடியாது. திறமைமிக்க கணபதி ஸ்தபதி அவர்களை எனக்கு காண்பித்ததே எங்கள் குலதெய்வம் பாண்டி முனீஸ்வரர்தான். என்னைப்போல் பலருக்கும் வண்டியூர் பாண்டி முனீஸ்வரர் முத்தான, சத்தான திறமை தந்து வழிகாட்டி வருகிறார்!

தனது குலதெய்வம் பற்றி விவரித்த திரு. ராமசிவநேசன் மேலும் சில சுவையான தகவல்களை இங்கே தருகிறார்.

"இறைவனை வரவழைக்க நாம் ஆலயம் அமைக்கிறோம்; கட்டுகிறோம். அந்த ஆலயம் சரியான அமைப்பில் இருந்தால்தான் நமக்கு சுப பலன்களை, அருளை தரமுடியும். ஆலயம் என்பதிலேயே சூட்சுமம் உள்ளது. ஆலயம் என்று பிரித்து பார்க்கவேண்டும். ஓம் எனும் பிரணவ ஒலியில் அடிப்படை அகர, உகர, மகரம் ஆகும். இந்த லயத்தை நாம் கோவில்களில் உருவாக்கணும். பிரபஞ்ச சக்தியை ஈர்த்து அதை சக்தி பெட்டகமாக மாற்றுவதுதான் நமது பணி. அப்போதுதான் தெய்வ சக்தியை மக்கள் பெறமுடியும். சில மன்னர்கள், தனவந்தர்கள் ஆலயத்தை மாற்றி அமைக்கும்போது குறைகள், முரண்பாடு கள் ஏற்பட்டது உண்டு. ஆனால், ஆதி சிற்பக் கலை, வாஸ்துக் கலைக்கு குருவான மயன் மூன்று நிலைகளாக இதை பிரிக்கிறார். உருவம், அருஉருவம், அருவம் என்று பிரிக்கிறார். மனிதன் போன்ற உருவம் உடைய சிவனை வணங்குகிறோம்.

"அருஉருவம்' என்பது லிங்கம். அங்கே சிவன் இருக்கி றார். உருவம் இல்லை. மூன்றாவது நிலை அருவம். அங்கே பிரபஞ்சம் மட்டும்தான் இருக்கும். உதாரணமாக பதினெட்டுபடி ஏறி கதவை திறந்து பார்க்கும்போது வெட்டவெளிதான் இருக் கும். சிதம்பரத்தில் "சிதம்பர ரகசியம்' என்பதே வெட்ட வெளிதான். வாஸ்துவில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை பிரிக்கிறார்.

மனிதமாநெறி, புனிதமா நெறி என்று பிரிக்கிறார். மனிதமாநெறி என்பது தமக்கு பலன் தருவது. அகபரமசைகை வாஸ்து. அதில் பிரமாஸ்தானம் என்று வரும். ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தி ஒன்று வரும். அதுமாதிரி ஆலாதிபடி பிரித்து எடுப்பது. அதுதான் மனைகள். வீட்டுக்கான வாஸ்து வேறு. கோவில்களில் புனிதமாநெறி அது பிறருக்கு பலன் தருவது. மண்டுக வாஸ்து. அதில் பிரம்மபிந்துதான் இருக்கும். பிரம்ம ஸ்தானம் இருக்காது. அதில் எட்டுஎட்டு அறுபத்தி நான்காக பிரித்து வரக்கூடியது. அந்த மாதிரி அமைப்பில் ஆலயங்கள் அமைக்கும் போது மிகச்சிறந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து தெய்வசக்தியை அமர்ந்து அங்கு வழிபட செல்லும் மக்களுக்கு வேண்டிய வரங்களை கொடுத்து நினைத்த காரியங் களை நடத்தி தருகிறது. நிறைய ஊர்களில் பராமரிக்கப்படாத கோவில்கள் அதிகமாக இருக்கும். பூஜை புனஸ்காரங்கள் இல்லாத கோவில்கள் உண்டு. வாஸ்து குறைபாடே இதற்கு காரணம். மனிதன் சுயநலம், பொதுநலத்துடன் வாழ வேண்டும். சுயநலம் என்பது தன் வீட்டை வாஸ்துப்படி நல்லா கட்டி நல்லா வாழ்வது. பொதுநலம் என்பது வாஸ்துப்படி ஊர் கோவில்கள், குலதெய்வ கோவில்களை அமைப்பது கடமை என்றே கருதவேண்டும்.

கோவில்களில் வாஸ்து குறைகளை திருத்தி அமைப்பது மிகமிக முக்கியம். வாஸ்து முறையால் மூடப்பட்டும், வழக்குகளில் சிக்கியும் உள்ள கோவில்களை சீரமைப்பது சிறப் பாகும். எனது குலதெய்வ அனுகிரகத்தினால் வாஸ்து கலை கற்ற நான் பல கோவில்களுக்கு சென்று வாஸ்து குறைகளை நீக்கி பக்தர் களுக்கு சந்தோஷமும், மகிழ்ச்சியும் தீவிர இறைபக்தியும் தந்து வருகிறேன்!!

திரு. ராமசிவநேசன் அவர்களில் வாஸ்து, நியூமராலஜி, ஜோதிட கலைப்பணி மேலும் பலருக்கு வழிகாட்ட வாழ்த்தி, இவரின் குலதெய்வம் மதுரை வண்டியூர் அருள்மிகு பாண்டி முனீஸ்வரரின் அருள்கடாட்சம் இவருக்கும், எல்லாருக் கும் கிடைக்கவேண்டி பிரார்த்தனை செய்து விடைபெற்றோம்.

இவரை தொடர்புகொள்ள: 98421 52064.