கடந்த பகுதியில் அருணகிரிநாதர் அருளிய தேவேந்திர சங்க வகுப்பின் முதலிரண்டு வரி களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மேலும் அம்பிகையின் மந்திரம் எவ்வாறு வெளிப்படு கிறது என்பதைக் காண்போம்.
"சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள்
சததள முகுளித தாம அங்குச மென்திருத்
தாள் அந்தர அம்பிகை தருபதி சுரரொடு
சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தான் ஆம்படி செங்கையில் வாள்
வாங்கிய சங்கரி.'
கைகளில் சரியும் வளையல்களை அணிபவள்; எரியும் நெருப்பின் வடிவையுடையவள்; நூறிதழ் கள் கொண்ட தாமரை மலர்களாலான மாலை களைத் தன் மார்பில் அணிபவள்; மென்மையான திருவடிகளைக் கொண்டவள்; அந்தரத்தில் இருக்கும் அம்பிகை. இவள் கற்பக மரத்தைக் கொண்ட தேவலோகவாசிகளுடன் அசுரர்கள் போரிட்டபொழுது, அசுரர்களின் மணிமுடிகள் பொடியாகும்படி தன் கையில் வாள்கொண்டு போராடிய சங்கரி.
இந்த வரிகளில் அம்பிகையின் மற்றுமொரு தசமகா வித்யா ஸ்வரூபமான தாராதேவியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இங்கு எரியும் நெருப் பைப்போன்ற வடிவுடையவள் என்று குறிப்படப் படும் தெய்வத்தின் வடிவமே தாராதேவியின் வடிவமாகும். அவளுடைய தியானங்களில் "பிங்கள ஜடா' என்று குறிப்பிடப்பட்டு, அவளு டைய தலைமுடி நிமிர்ந்து நிற்கும் இயல்புடைய தாக இருக்குமென்றும், மூன்று குணங்களான சத்வம், ராஜசம், தமோ குணங்களின் கலவையாக இவளுடைய முடிக் கற்றைகள் இருக்குமாறும் தியானம் செய்யப்படுகிறது.
நூறிதழ்கொண்ட தாமரையை அணியும் மார்புகளை உடையவள் என்று சொல்வது, இந்த இடத்தில், சென்ற வரியில் "தாதாம்புய மந்திரம்' என்னும் சொல்லைப் பொருத்திப் பார்த்தால் மட்டுமே அதற்கான உள்ளர்த்தம் விளங் கும். எவ்வாறு "ஸ்ரீம்' பீஜம்கொண்ட மந்திரமென்று போற்றப்பட்ட அம்பிகை மந்திரத்தை நாம் பார்த்தோமோ, அதன் தொடர்ச்சியாக அந்த "ஸ்ரீம்' பீஜம் எங்கு வரவேண்டுமென்று சொல்லுமிடமே இந்த வரி. இந்த வரியில் அம்பிகையின் மார்புகளைப் போற்றி, பின் அவளுடைய திருவடிகளைக் குறிக்கிறார் அருளாளர். திருவடிகளின் ஸ்வரூபமாக "ஸ்ரீம்' பீஜம் போற்றப்பட்டு, மந்திரத்தின் கடைசியில், மந்திர பாதமாக இந்த பீஜம் வரவேண்டு மென்று குறிப்பிடப்படுகிறது.
இங்கு
கடந்த பகுதியில் அருணகிரிநாதர் அருளிய தேவேந்திர சங்க வகுப்பின் முதலிரண்டு வரி களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மேலும் அம்பிகையின் மந்திரம் எவ்வாறு வெளிப்படு கிறது என்பதைக் காண்போம்.
"சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள்
சததள முகுளித தாம அங்குச மென்திருத்
தாள் அந்தர அம்பிகை தருபதி சுரரொடு
சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தான் ஆம்படி செங்கையில் வாள்
வாங்கிய சங்கரி.'
கைகளில் சரியும் வளையல்களை அணிபவள்; எரியும் நெருப்பின் வடிவையுடையவள்; நூறிதழ் கள் கொண்ட தாமரை மலர்களாலான மாலை களைத் தன் மார்பில் அணிபவள்; மென்மையான திருவடிகளைக் கொண்டவள்; அந்தரத்தில் இருக்கும் அம்பிகை. இவள் கற்பக மரத்தைக் கொண்ட தேவலோகவாசிகளுடன் அசுரர்கள் போரிட்டபொழுது, அசுரர்களின் மணிமுடிகள் பொடியாகும்படி தன் கையில் வாள்கொண்டு போராடிய சங்கரி.
இந்த வரிகளில் அம்பிகையின் மற்றுமொரு தசமகா வித்யா ஸ்வரூபமான தாராதேவியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இங்கு எரியும் நெருப் பைப்போன்ற வடிவுடையவள் என்று குறிப்படப் படும் தெய்வத்தின் வடிவமே தாராதேவியின் வடிவமாகும். அவளுடைய தியானங்களில் "பிங்கள ஜடா' என்று குறிப்பிடப்பட்டு, அவளு டைய தலைமுடி நிமிர்ந்து நிற்கும் இயல்புடைய தாக இருக்குமென்றும், மூன்று குணங்களான சத்வம், ராஜசம், தமோ குணங்களின் கலவையாக இவளுடைய முடிக் கற்றைகள் இருக்குமாறும் தியானம் செய்யப்படுகிறது.
நூறிதழ்கொண்ட தாமரையை அணியும் மார்புகளை உடையவள் என்று சொல்வது, இந்த இடத்தில், சென்ற வரியில் "தாதாம்புய மந்திரம்' என்னும் சொல்லைப் பொருத்திப் பார்த்தால் மட்டுமே அதற்கான உள்ளர்த்தம் விளங் கும். எவ்வாறு "ஸ்ரீம்' பீஜம்கொண்ட மந்திரமென்று போற்றப்பட்ட அம்பிகை மந்திரத்தை நாம் பார்த்தோமோ, அதன் தொடர்ச்சியாக அந்த "ஸ்ரீம்' பீஜம் எங்கு வரவேண்டுமென்று சொல்லுமிடமே இந்த வரி. இந்த வரியில் அம்பிகையின் மார்புகளைப் போற்றி, பின் அவளுடைய திருவடிகளைக் குறிக்கிறார் அருளாளர். திருவடிகளின் ஸ்வரூபமாக "ஸ்ரீம்' பீஜம் போற்றப்பட்டு, மந்திரத்தின் கடைசியில், மந்திர பாதமாக இந்த பீஜம் வரவேண்டு மென்று குறிப்பிடப்படுகிறது.
இங்கு அந்தர அம்பிகை என்னும் பதம், அம்பிகை அந்தரியாக நிற்பவள் என்று பொருள்படும்படி அமைந்துள்ளது. யோக மார்க்கத்தில் ஈடுபடும் சாதகர் களுக்கு, துவாதசாந்தம் என்று குறிப்பிடப் படும் பன்னிரண்டு அங்குல உயரத்தில், சஹஸ்ரார சக்கரத்திற்குமேல் அம்பிகை யின் பாதங்களின் ஸ்பரிசம் கிட்டும். இதை விளக்கவே அந்தர அம்பிகை யென்று குறிப்பிடுகிறார் அருணகிரி நாதர். மேலும் இது யாருக்குக் கிடைக்கு மென்றால், இந்த "ஸ்ரீம்' பீஜம்கொண்ட மந்திரத்தைக் கடைசி பதமாக வைத்து வரும் மந்திரத்தை யோக மார்கத்தில் ஜெபிக்கும் ஒரு சாதகனுக்குக் கிடைக்கு மென்று சூட்சுமமாகக் கூறுகிறார் அருளாளர்.
அசுரர்களிடம் போரிட வாள் வாங்கிய சங்கரி என்னும் பதத்தில், இரண்டு தெய்வங்களின் உருவங்களைப் பற்றித் தெரியவருகிறது. ஒன்று துர்க்கையாக அவதரித்து மகிஷாசுரன், தூம்ரலோச னன், சண்ட முண்டர்கள், ரக்தபீஜன், சும்பலி நிசும்பர்களை அழிப்பதற்காக கையில் வாள் எடுத்ததைப் போற்றுகிறது. தசமகா வித்யையில் சின்னமஸ்தா என்னும் தேவதை யின் உருவம், தம் தலையைத் தானே வெட்டித் தன் கையில் வைத்துள்ளவாறு உருவகப் படுத்தப்படுகிறது, இரண்டாவ தாக இங்கு வாள் வாங்கிய சங்கரி என்னும் பதம், எவ்வாறு பார்வதியாக அம்பிகை வந்து, சின்னமஸ்தா உருவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி னாளோ அந்த புராணத்தின் சம்பவம் இங்கு பதியப்படுகிறது.
"இரண கிரண மடமயில் ம்ருகமதம்
புளகித இளமுலை இளநீர் தாங்கி
நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்
இறுகிய சிறுபிறை எயிறுடை
எமபடர் எனது உயிர் கொளவரின்
யான் ஏங்குதல் கண்டு எதிர் தான்
ஏன்றுகொளும் குயில்.'
பொன்னிறமான கிரணங்களுடைய மயில் போன்றவளான அம்பிகை, ம்ருகமதம் எனப்படும் கஸ்தூரி சாற்றிய இளநீர் போன்ற மார்புகளைத் தாங்கி, பாரம் தாங்காமல் நூல்போன்று மெலிந்த இடையுடையவளாக இருக்கிறாள். இங்கு அம்பிகையின் மார்பு களைப் பற்றிய வர்ணனையாகத்தான் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். ஆனால் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங் களான "ஸ்தன பார பட்ட பந்த வலித்ரயா', "கண்டாதஹ் கடி பர்யந்த மத்தியகூட ஸ்வரூபிணி' ஆகிய இரு நாமங்களையும் சேர்த்துப் பார்த்தால், பஞ்சதசி மந்திரத்தின் மத்திய கூட்டமான "ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்' என்னும் மந்திர அட்சரங் களை இந்த வரியில் அருணகிரிநாதர் வைத்துள் ளார் என்று தெரியவரும்.
மேலும் தரணியில் அரணிய என்னும் வரி தொடங்கி, வாள் வாங்கிய சங்கரி என்னும் வரிவரை, ஸ்ருஷ்டி கூட்டமாக இருந்து வாக்பவ கூட்டமான "க ஏ ஈ ல ஹ்ரீம்' என்னும் பஞ்சதசி மந்திரத்தின் முதல் பகுதியை உணர்த்தியுள்ளார். மேலும் "ஸ்ரீம்' பீஜம் மந்திரத்தின் கடைசியில் வரவேண்டும் என்றும் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.
இறுகிய சிறுபிறை என்னும் வரியில், அம்பிகையின் சக்திக் கூட்டம் வெளிப் படுகிறது. முதலில் சிருஷ்டியைப் பற்றிப் பேசியவர், ஸ்திதி என்னும் செயலைக் குறிக்க அம்பிகை யின் பஞ்சதசி மந்திரத்தின் இரண் டாவது பகுதியைக் குறிப்பதற்காக, லலிதா சஹஸ்ரநாமம்போல் அம்பிகையின் தன பாரங்களைச் சொல்லி மந்திரத்தைக் குறிப்பால் உணர்த்துகிறார். பிறகு அழிக்கும், அருளும் செயல்கள் இரண்டும் அம்பிகையின் திருவடிகளில் தாமே நடப்பதை உணர்த்தவே எம படர்களை இங்கு பொருத்தி, எம சங்கடத்திலிருந்து கர்மத்தை அழித்து, முக்தியென்னும் உயரிய வரத்தை அருள்வது அம்பிகையின் திருவடிகளே என்கிறார். அதனால்தான், திருக்கடையூரில் அம்பிகையின் இடபாகத்தைக் குறிக்கும் இடக் காலால் காலனை சிவபெருமான் சம்ஹாரம் செய்கிறார். இதுவே அம்பிகை ஒருத்தி மட்டுமே எமதூதுவர் வரும்பொழுது தாமே குரல் கொடுத்து அவர்களை விரட்டி, ஜீவன்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்வ தைக் காட்டுவதாக "தானேன்று கொளும் குயில்' என்ற வரியில் புலப்படுத்தப்படுகிறது.
இந்த வரியில் இறப்பு, எமதூதுவர்கள் போன்றவர்களும், குயிலின் கருமை நிறமும் உருவகப்படுத்தப் படுவதால், தூமாவதி என்ற தசமகா வித்யையின் மந்திரம் மறைமுகமாக அருளப்பட்டிருக்கிறது. மேலும் பஞ்சதசி மந்திரத்தின் "ஸ க ல ஹ்ரீம்' என்னும் அட்சரங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டு, பின்வரும் வரிகளில் அந்த மந்திர தேவதையின் பெயரையும் கடைசியாக முத்திரையிடுகிறார் அருணகிரியார்.
"இடுபலி கொடுதிரி யிரவலர்
இடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை
மோகாங்கசு மங்கலை...' (7)
"எழுதிய படமென இருளறு சுடரடி
யிணைதொழு மௌனிகள் ஏகாந்த
சுகந்தரு பாசாங்குச சுந்தரி...' (8)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிகளில், அம்பிகையின் இரண்டு குணங்கள் வெளிப் படுகின்றன. ஒன்று, அவள் அன்னபூரணியாக இருந்து காசியில் பஞ்சம் தீர்த்து, பிச்சை கேட்டு வந்த, பிரம்ம கபாலம் தாங்கிய சிவபெருமானின் துயர் தீர்த்த வரலாறும், மேலும் ஸ்ரீவித்யா தேவதைகளில் அன்னபூரணியாக இருந்து சாதர்களுக்கு ஞானம், வைராக்கியம் இரண்டும் தரும் தெய்வமாகவும் விளங்குவதைக் காணமுடிகிறது. இந்த வரியில் இரண்டாவதாக, அம்பிகை யாசகம் கேட்டு வரும் யாராக இருந்தாலும் அவர்களின் மனதிலுள்ள துன்பம் நீங்குமாறு அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்க வல்லவள் என்றும், அப்படிப்பட்ட அம்பிகைதான் காஞ்சி யில் ஏகாம்பரை என்னும் பெயரோடு, காமாட்சி யாக தனிக்கோவில் கொண்டும் அமைந்துள் ளாள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த காமாட்சி யின் உருவமே கரும்பு வில், பாசாங்குசம், பஞ்ச பாணம் கொண்டு, திரிபுரசுந்தரி என்னும் தசமகா வித்யையும், ஸ்ரீவித்யா என்னும் மார்க்கத்தின் அதிதேவதையுமாக விளங்குகிறாள்.
பஞ்சதசி மந்திரத்தோடு, "ஸ்ரீம்' பீஜத்தை கடைசியில் சேர்த்து ஜெபம் செய்தால், முக்திதரும் தேவதையாக திரிபுரசுந்தரி வந்து இடர் களைவாள் என்று முதல் ஏழு வரிகளி லேயே உணர்த்துகிறார். இந்த பதினாறு அட்சரங்களை சேர்த்தே, சோடஷி என்ற பெயர் பெற்ற மந்திரமாக அமைந்து, அம்பிகையின் மேலான மந்திரங்களில் ஒன்றாக இருந்து, பரப்பிரம்மத்தின் இடம்வரை ஒரு சாதகனை அழைத்துச்செல்லும் கருவியாக இந்த மந்திரம் செயல்படுவதைச் சொல்லவே, அம்பிகையை ஏகாந்த சுகம் தரும் பாசாங்குச சுந்தரி என்று எட்டாவது வரியின் கடைசியில் சொல்கிறார்.
அம்பிகை யாருக்கு இந்த முக்தியைத் தருவாள் என்பதை, முதலிரண்டு சொற்களாம் "எழுதிய படம்' என்னுமிடத்தில் சொல்கிறார். எவ்வாறு ஒரு எழுதிய அல்லது வரைந்த படம் ஆடாமல் அசையாமல் அப்படியே எந்த ஒரு சலனமுமில்லாமல் இருக்குமோ, அவ்வாறு யாரொருவர் அம்பிகையை மனதிலிருத்தி தியானம் செய்கின்றார்களோ அவர்களுக்கு இந்த முக்திப் பேறானது கிடைக்கும். இங்கு அம்பிகையின் திருவடி தியானமும் போற் றப்படுவதை "இருளறு சுடரடி' என்னும் சொற்களால் காணமுடிகிறது. இந்த ஒளி பொருந்திய திருவடிகளை தியானிப்பது கர்மத்தைக் களைந்து, சாதகர்களை "மோனம்' என்னும் நிலைக்குக் கொண்டுசென்று "மௌனி' என்றாக்குகிறது, இந்த மோனநிலையே மனதில் எண்ணவோட்டம் இல்லாத ஆழ்ந்த தியான நிலை. இது அகங்காரமில்லாத ஒரு நிலை யாக சாதகன் வாழ்வில் நிகழும் சமயத்தில், அம்பிகை அவள் திருவடிகளின் பிரபாவத்தால் அருள்வதைச் சொல்கிறார் அருளாளர்.
இங்கு மௌனிகள் என்று சொல்லப்படு பவர், வெறும் வாக்கினால் மௌனம் கடைப் பிடிப்பவர் அல்லர். மனம், வாக்கு மற்றும் காயம் ஆகிய மூன்றும் மௌனமாக இருந்து அம்பிகையின் திருவடியை தியானிப்பவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த வரியில் மேலும் ஒரு தசாமகா வித்தையின் ஸ்வரூபமான புவனேஸ்வரி தேவியைக் குறிப்பால் உணர்த்துகிறார் அருண கிரியார். பிரித்வி தத்துவமான ஏகாம்பரையைக் குறிப்பிட்டு, பின் இந்திரை என்று சகலத்துக்கும் அதிபதி என்று போற்றி, பாசாங்குச சுந்தரி என்று சொல்வது, புவனங்கள் அனைத்திற்கும் பிரித்வி தத்துவம் ஆதாரமாக இருப்பதால், அதன் அதிபதியான புவனேஸ்வரி தேவியும் பாசம் மற்றும் அங்குசம் தாங்கி, வரத, அபய ஹஸ்தங்கள் தாங்கியிருப்பதைக் குறிக்கிறது. மேலும் அம்பிகையின் திருவடிகளால் வரம் கிடைப்பதை, அது பௌதீக உலகில் உருப்பெறுவதையும் குறிப்பதே இந்த வரியில் வரும் பாசாங்குச சுந்தரியான புவனேஸ்வரியின் வர்ணனை.
"கரணமு மரணமு மலமொடு முடல்படு
கடுவினை கெடநினை காலாந்தரி
கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்...' (9)
"கனலெரி கணபண குணமணி யணிபணி
கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி
தூசாம்படி கொண்டவள்...' (10)
ஒன்பது மற்றும் பத்தாம் வரிகளில், உயிர் படும் துன்பங்களைக் களையும் செயலைக் குறித்து, பஞ்ச கிருத்யங்களில் ஒன்றான அருளளைக் குறிக்கிறது. பஞ்ச இந்திரியங் களாலான உடல், ஜனன மரண சுழற்சி, கடுமையான வினைத்தொகுதி ஆகியவற்றிலிருந்து ஜீவர்களை மீட்பதை அம்பிகை செய்கிறாள் என்றும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும் இவை யாவும் அம்பிகை யின் மந்திரத்தை மனதிலிருத்தி தியானித்து, அதனால் அனுபூதி அடையும் நிலையினைக் குறிப்பதே இந்த வரிகளில் மறைந்துள்ள தத்துவம்.
(தொடரும்)