கடந்த பகுதியில் திருப்புகழும் ஸ்ரீ வித்யா பூஜையின் அஸ்திரப் பிரயோகம் வரையிலும் பார்த்தோம், இந்தப் பகுதியில் பூஜையின் மற்ற அங்கங்களைப் பார்க்கலாம்.
ஸ்ரீவித்யா பூஜையில் பல்வேறு அங்கங்கள் இருந்தாலும், பிரதான பூஜையாக இருப்பது, ஸ்ரீசக்கரத்திற்கு செய்யப்படும் நவாவரண பூஜையே ஆகும். இந்தப் பூஜை செய்வது ஒரு சாதகனை, பிறவிக் கடலிலிருந்து விடுவித்து, பரப்ரஹ்மனிடம் சேர்க்கும் ஒரு சாதனமாக இருக்கிறது. அம்பிகையின் ஒன்பது கோணங்களைக்கொண்ட யந்திரமே ஸ்ரீசக்கரம் என்றும், மஹாமேரு என்றும் வழங்கபடுகிறது. ஒரு தேவதையின் எந்திரம், மந்திரம் மற்றும் அந்த தேவதையின் உருவிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அதேபோல் அந்த தேவதையின் அருளைப்பெற்ற ஒருவர் குருவாக இருக்கும்பொழுது, அந்த குரு, அவர் கொடுக்கும் மந்திரம் மற்றும் பெற்றுக்கொண்ட சிஷ்யன் இவர்களுக்குள்ளும் எந்த வேறுபாடும் இல்லாத நிலை உருவாகிறது, இதனாலேயேதான், சீடனின் தகுதி கருதியே மந்திர உபதேசம் வழங்கப்படுகிறது. மேலும் எந்தவொரு சீடன் ஆன்ம ஞானத் திற்குத் தகுதியை வளர்த்து, இயம நியமங்களைக் கடைப்பிடித்து, ஆசைகளுக்கு வரையறை வகுத்து, எளிமையான வாழ்வை விரும்புகி றானோ, அவனே மந்திர உபதேசத் திற்கும், மேலும் அம்பிகையின் ஆவரண பூஜைக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான்.
அம்பிக
கடந்த பகுதியில் திருப்புகழும் ஸ்ரீ வித்யா பூஜையின் அஸ்திரப் பிரயோகம் வரையிலும் பார்த்தோம், இந்தப் பகுதியில் பூஜையின் மற்ற அங்கங்களைப் பார்க்கலாம்.
ஸ்ரீவித்யா பூஜையில் பல்வேறு அங்கங்கள் இருந்தாலும், பிரதான பூஜையாக இருப்பது, ஸ்ரீசக்கரத்திற்கு செய்யப்படும் நவாவரண பூஜையே ஆகும். இந்தப் பூஜை செய்வது ஒரு சாதகனை, பிறவிக் கடலிலிருந்து விடுவித்து, பரப்ரஹ்மனிடம் சேர்க்கும் ஒரு சாதனமாக இருக்கிறது. அம்பிகையின் ஒன்பது கோணங்களைக்கொண்ட யந்திரமே ஸ்ரீசக்கரம் என்றும், மஹாமேரு என்றும் வழங்கபடுகிறது. ஒரு தேவதையின் எந்திரம், மந்திரம் மற்றும் அந்த தேவதையின் உருவிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அதேபோல் அந்த தேவதையின் அருளைப்பெற்ற ஒருவர் குருவாக இருக்கும்பொழுது, அந்த குரு, அவர் கொடுக்கும் மந்திரம் மற்றும் பெற்றுக்கொண்ட சிஷ்யன் இவர்களுக்குள்ளும் எந்த வேறுபாடும் இல்லாத நிலை உருவாகிறது, இதனாலேயேதான், சீடனின் தகுதி கருதியே மந்திர உபதேசம் வழங்கப்படுகிறது. மேலும் எந்தவொரு சீடன் ஆன்ம ஞானத் திற்குத் தகுதியை வளர்த்து, இயம நியமங்களைக் கடைப்பிடித்து, ஆசைகளுக்கு வரையறை வகுத்து, எளிமையான வாழ்வை விரும்புகி றானோ, அவனே மந்திர உபதேசத் திற்கும், மேலும் அம்பிகையின் ஆவரண பூஜைக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான்.
அம்பிகையின் ஆவரண பூஜையானது, ஒரு சாதகன் தன்னைத் தானே மறந்து, அந்த எங்கும்நிறை ப்ரஹ்மத்தை ஆராதிக்க ஏற்படுத்தப் பட்ட வழிமுறையே இந்த பூஜை. இந்த பூஜையில் பாத்திர சாதனம் என்ற நிலையில், சாதகன் தன்னுடைய சித்தத்தையே அர்க்கியம் எனப்படும் திரவியத்தில் ஆவாஹனம் செய்து, அதனால் அம்பிகைக்கு தர்ப்பணம் செய்து வழிபடவேண்டும். இந்த முறையை அறிந்துகொண்டு முறையாக உபாசிக்கும் சாதகன் அம்பிகை யின் அருளைப்பெறுவது திண்ணம். அருணகிரிநாதர் இந்த முறைகளை பல்வேறு பாடல்களில் கூறுகிறார். அதை இனி பாப்போம்.
பூஜைக்குமுன் பூதசுத்தி என்று சொல்லப்படும், உடல், மனம் மற்றும் பிராணனை சுத்தப்படுத்தவேண்டும். அதற்க்கு ந்யாஸம் என்று பெயர். இந்தக் கருத்தை வலியுறுத்துமாறு பூத கலாதிகள் என்ற பாடலில் கூறுகிறார்.
"பூத கலாதிகள் கொண்டு யோகமும்
ஆக மகிழ்ந்து பூசைகள்
யாது நிகழ்ந்து பிழை கோடி
போம் வழி ஏது தெரிந்து...'
இங்கு பூத கலாதிகள் என்று சொல்லப்படுவது, உடலில் செய்யப் படும் பல்வேறு ந்யாஸங்கள் ஆகும், உதாரணமாக மந்திர ஜெபம் செய்யும் முன்னர்,
செய்யப்படும் அங்க மற்றும் கர ந்யாஸமும் இதனை உறுதிப்படுத்தும். அதனாலேதான் ந்யாஸம் முடிந்து யோகம் ஆரம்பிக்கிறது என்ற கருத்து இங்கு முன்வைக்கப்படுகிறது. இந்த ந்யாஸத்தின் விளைவு, குற்றங்கள் களையப்படுவது. அதனைப் புலப்படுத்தவே "பிழை கோடி போம்' என்று கூறுகிறார் அருணகிரிநாதர்.
ந்யாஸம் முடிந்தபின்னர் பூஜையில் பாத்திர சாதனம் என்ற பகுதியில் சாதகன் தன்னுடைய சித்தத்தையே ஆவாஹனம் செய்து அம்பிகையின் பாதங்களில் அர்ப்பணம் செய்யவேண்டும். இந்த முறையில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம் மற்றும் அக்னி மண்டலம் என்ற மூன்று மண்டலங்களை வரைந்து, தனித்தனியாக ஆவாஹனம் செய்து, அர்க்கியம் எனப்படும் திரவத்திற்கு பூஜைகள் செய்யவேண்டும். கடைசியில் இந்த மூன்று திரவியங்களும் ஒரு ஒரு பாத்திரத்தில் சேர்ந்து, ஸ்ரீ பாத்திரம் என்ற பெயரில், அந்த திரவியம் கலந்து, அதனில் தான் சாதகன் தன் சித்தத்தை ஆவாஹனம் செய்கிறான்.
இந்த திரவியமே விசேஷ அர்க்கியம் எனப் படுகிறது. கீழ்வரும் திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த பூஜை முறையைக் கையாண்டிருக்கிறார்.
"நாலிரண்டு இதழாலே கோலிய
ஞால் அம் முண்டகம் மேலே..'.
ஆறு இதழ்த் தாமரையால் வரையப்படும் மண்டலத்தின்மீது-
"தான் இள ஞாயிறு என்று உறு
கோலா காலனும் ... உதிக்கும்...'
சூரிய மண்டலமும், பிராமனைக் குறிக்கும் சங்கத்தில் சந்திர மண்டலமும் , பொன்னிறமான அக்னி மண்டலமும்-
"அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்...'
அந்த மண்டலங்களின் ஆதாரங்களில் மேலுள்ள பாத்திரங்களில் சாதகனின் சித்தமும் (பிராணன்)-
"யோக மந்திர மூலாதாரனு(ம்)...'
அந்த திரவத்தின்மீது ஆவாஹனம் செய்யப்படும் மந்திர பூர்வமான தேவதைகளும், யோக முத்திரைகளும்-
"நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக...'
இவை யாவும், சுஷும்னா நாடியில் பிரவாகமாகச் செல்ல மேலிருந்த கிரீடா பீடமு(ம்)- சஹஸ்ரார சக்கரத்தில்-
"நூல் அறிந்த மணீ மா மாடமும்...'
இறைவனின் ஐக்கிய ரூபத்தை, பல நூல்கள் விளக்கியதைக் கண்டு-
"மேதகு ப்ரபை கோடா கோடியும் இடமாக...'
அதன்மேலும் சென்று, சிவத்தை ஜோதி ரூபமாக தரிசித்து-
"வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதேறிய...'.
அந்த இடத்தையும் தாண்டி, ஜோதியை யும் தாண்டி, பராகாச வெளியில் இருக்கும்-
"வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய்.'
குருவே, எந்தன் வினை தீராயோ.
இவ்வாறு கூறும் அருணகிரிநாதர், இந்த அனுபவத்தை யார் அருளினார்கள் என்று கூறுவதைப் பார்த்தால், அம்பிகைதான் இதற்க்குக் காரணம் என்றவாறு பின்வரும் வரிகள் இருக்கின்றன.
"ஆல கந்தரி மோடா மோடி...'
விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், துர்க்கையாக இருப்பவள், குமாரி, பிங்கலை, நானா தேசி- என்றும் இளமையாக இருப்பவள், பொன்னிறத்தவள், பலவிதமான ஒளிகளில் விருப்பம் உள்ளவள்-
"அமோகி மங்கலை லோக லோகி
எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி...'
ஆசையற்றவள், சுமங்கலி, எல்லா உலகங்களையும் என்றும் காப்பவள், எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள்-
"மாதா மாதவி ஆதி அம்பிகை...'
பெரிய தவங்களை செய்பவள், செய்விப் பவள் ஆதி சக்தி,
அம்பிகை-
"ஞாதா ஆனவர் ஆட மன்றினில்
ஆடா நாடிய அபிராமி...'
எல்லாமறிந்த இறைவன் நடராஜனாய் ஆடும்போது, அவருடன் அம்பலத்தில் நடனம் புரிய விரும்பிய பேரழகி-
"கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி
மந்த்ர சபாஷா பாஷிணி...'
காலனை அழித்தவள், தூயவள், திரிசூலம் ஏந்தியவள்-
"காள கண்டி கபா- மாலினி கலியாணி...'
கறுத்த நீலநிறக் கழுத்தை உடையவள், கபாலத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், நித்ய கல்யாணிலி,
"காம தந்திர லீலா லோகினி...'
காம தந்திரம் கூறும் பூஜைகளை ஏற்பவள்-
"வாம தந்திர நூல் ஆய்வாள்
சிவகாம சுந்தரி வாழ்வே...'
வாமகேஸ்வர தந்திரம் கூறும் பூஜைகளில் வெளிப்படுபவள், சிவாகமங்களில் விருப்பம் உடையவள் அந்த அம்பிகை தந்த வாழ்வே-
"தேவர்கள் பெருமாளே...'
தேவர்களின் பெருமாளே.
இந்த திருப்புகழில் ஸ்ரீவித்யாவின் பூஜை முறையையே சுருக்கிக் கூறியுள்ளார் அருண கிரிநாதர்.
இவ்வாறு திருப்புகழில் அருணகிரிநாதர், அம்பிகை வழிபாட்டை ரஹஸ்யமாக சேர்த்துவைத்து, கடினமான பூஜை முறைகள் இல்லாமல் பராயணத்திலேயே சாதகர்கள் பயன்பெறுமாறு அமைத்திருக்கிறார்.
திருப்புகழை பாராயணம் செய்வதால் அம்பிகையின் பூஜைசெய்த பலனை சாதகர்கள் அடையலாம் என்பது திண்ணம்.
(முற்றும்)