1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சென்ற சித்திரை மாதம் சிலபல நிகழ்வுகளால் மனம் சங்கடப் பட்டுக் கொண்டிருந்த இந்த எண்காரர்கள் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்; தொழிலில் அரசாங்கம் தந்த நேர்முக எதிர்மறை பிரச்சினைகள் விலகிவிடும். உங்களில் சிலர் அரசுப்பணி கிடைக்க, யாரிடமாவது பணம் கொடுத்து, அது ஏமாற்றம் தரும் நிலையில் இருப்பின், இந்த மாதம் அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. லஞ்சப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் அமோகமாக இருக்கும். சிலர் வீடுகளில், உங்கள் மறைமுகத் துணையும், வாழ்க்கைத் துணைவியும் நேருக்கு நேர் சந்தித்து, அக்னி நட்சத்திரம் ஸ்டைலில் மோதிக்கொள்வார்கள். மற்ற வீடுகளில் உங்கள் மனைவிக்கும், மூத்த உடன்பிறப் புக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வெளிநாட்டுப் பணப் புழக்கம் உண்டு. சில அரசியல்வாதிகளின் இளைய சகோதரிகள், உங்கள் தந்தையின் இடத்தைப் பிடிக்க முயல்வர். அதற்கான முயற்சியில் ஈடுபடுவர். உங்கள் பெற்றோர்நலனில் நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் மனை விஷயம் மற்றும் உயர்கல்வி சம்பந்தமாக சற்று வீண் விரயம், கவலை ஏற்பட வாய்ப்புள் ளது. பங்கு வர்த்தகம் எதிர்பாராத இனத்தில் லாபமும், எதிர்பார்த்தவகையில் நஷ்டமும் தரும். இந்த எண்காரர்கள் இந்த மாதம் வாழ்க்கைத் துணையால் இன்னல் அனு பவிக்க நேரிடும்.
கவனம் : இந்த மாதம் மனை, நிலம், காவல்துறை, தந்தை மற்றும் ஏனைய அதிர்ஷ்ட நிகழ்வுகளை வைகாசி 10, 11, 12-ஆம் தேதிகளில் அமையுமாறு பார்த்துக்கொள்ளவும். நீண்ட தூரப் பயணங்களில் உங்கள் வாகனம் பழுதாகவோ, திருட்டுப் போகவோ வாய்ப்புள்ளது.
வைகாசி 13, 14, 15-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: சுவாமிமலை முருகரை வணங்கவும். கட்டடங்களில் செங்கல் சுமப்பவர்களுக்கு உதவலாம். அருகிலுள்ள கோவில்களில் முருகரை வணங்கவும். மின்சார பழுது நீக்க உதவலாம்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம், உங்களின் பணவரவு வழக்கத்தைவிட அதிகமிருக்கும். மேலும் அரசு சார்ந்த லாபங்களும் உண்டு. இந்த மாதம் உங்கள் யோசனை, எண்ணங்கள் சற்று அலைச்சலுடன் நிறைவேறும். வீடு மாற்றும் எண்ணம் அதிகமிருக்கும். குறுக்குத்தனமான முயற்சிகள் பொங்கிவரும். இதற்கு உங்கள் இளைய சகோதரர் ஒரு காரணமாக இருப்பார். சில பணியாளர்கள் விலகுவதும், பிற இன பணியாளர்கள் கிடைப்பதும் நடக்கும். இந்த மாதம் பங்கு வர்த்தகம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கக்கூடாது. சிலரது கெட்ட பழக்கங்கள், உங்களுக்கு தண்டனை தரும் நிலைக்குத் தள்ளிவிடும். சிலர் வாரிசுகளால் அவமானமும், கௌரவக் குறைச்சலும் அடையலாம். கர்ப்பஸ்திரிகள், மிக கவனமாக இருக்கவேண்டிய மாதமிது. இந்த மாதம் உங்கள் தந்தைக்கு இன்னதென புரிபடாத நோய் வரும். அதனைக் கண்டுபிடிக்க, நீங்களும் உங்கள் தாயாரும் அலையாய் அலைய வேண்டியிருக்கும். உங்களில் சிலர் பிற நாட்டுப்பணி கிடைக்கப் பெறுவீர்கள். தம்பதிகள் கூடியமட்டும் சமாதானமாகப்போக முயற்சியுங்கள். சிலர் புதுத் தொழில் ஆரம்பிக்க முதலீடு செய்து, பின் அதன் ஆரம்ப கட்டத்துக்கு லஞ்சப் பணமும் கொடுக்க வேண்டிவரும். சிலருக்கு இடமாறுதலுடன் பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரி இடம்மாறுவார். சில அரசியல்வாதிகள் பதவி இழப்பர். சிலர் பதவி மாறுவர். உயர்கல்வி மாணவர்களுக்கு வேறிடத்தில் கல்வி கற்க இடம் கிடைக்கும். உங்கள் மாமியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். கலைஞர்கள் அவமானம் மற்றும் இழப்பு, மாறுதல் இவற்றைச் சந்திக்க நேரி
1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சென்ற சித்திரை மாதம் சிலபல நிகழ்வுகளால் மனம் சங்கடப் பட்டுக் கொண்டிருந்த இந்த எண்காரர்கள் இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம்; தொழிலில் அரசாங்கம் தந்த நேர்முக எதிர்மறை பிரச்சினைகள் விலகிவிடும். உங்களில் சிலர் அரசுப்பணி கிடைக்க, யாரிடமாவது பணம் கொடுத்து, அது ஏமாற்றம் தரும் நிலையில் இருப்பின், இந்த மாதம் அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. லஞ்சப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் அமோகமாக இருக்கும். சிலர் வீடுகளில், உங்கள் மறைமுகத் துணையும், வாழ்க்கைத் துணைவியும் நேருக்கு நேர் சந்தித்து, அக்னி நட்சத்திரம் ஸ்டைலில் மோதிக்கொள்வார்கள். மற்ற வீடுகளில் உங்கள் மனைவிக்கும், மூத்த உடன்பிறப் புக்குமிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வெளிநாட்டுப் பணப் புழக்கம் உண்டு. சில அரசியல்வாதிகளின் இளைய சகோதரிகள், உங்கள் தந்தையின் இடத்தைப் பிடிக்க முயல்வர். அதற்கான முயற்சியில் ஈடுபடுவர். உங்கள் பெற்றோர்நலனில் நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் மனை விஷயம் மற்றும் உயர்கல்வி சம்பந்தமாக சற்று வீண் விரயம், கவலை ஏற்பட வாய்ப்புள் ளது. பங்கு வர்த்தகம் எதிர்பாராத இனத்தில் லாபமும், எதிர்பார்த்தவகையில் நஷ்டமும் தரும். இந்த எண்காரர்கள் இந்த மாதம் வாழ்க்கைத் துணையால் இன்னல் அனு பவிக்க நேரிடும்.
கவனம் : இந்த மாதம் மனை, நிலம், காவல்துறை, தந்தை மற்றும் ஏனைய அதிர்ஷ்ட நிகழ்வுகளை வைகாசி 10, 11, 12-ஆம் தேதிகளில் அமையுமாறு பார்த்துக்கொள்ளவும். நீண்ட தூரப் பயணங்களில் உங்கள் வாகனம் பழுதாகவோ, திருட்டுப் போகவோ வாய்ப்புள்ளது.
வைகாசி 13, 14, 15-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: சுவாமிமலை முருகரை வணங்கவும். கட்டடங்களில் செங்கல் சுமப்பவர்களுக்கு உதவலாம். அருகிலுள்ள கோவில்களில் முருகரை வணங்கவும். மின்சார பழுது நீக்க உதவலாம்.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம், உங்களின் பணவரவு வழக்கத்தைவிட அதிகமிருக்கும். மேலும் அரசு சார்ந்த லாபங்களும் உண்டு. இந்த மாதம் உங்கள் யோசனை, எண்ணங்கள் சற்று அலைச்சலுடன் நிறைவேறும். வீடு மாற்றும் எண்ணம் அதிகமிருக்கும். குறுக்குத்தனமான முயற்சிகள் பொங்கிவரும். இதற்கு உங்கள் இளைய சகோதரர் ஒரு காரணமாக இருப்பார். சில பணியாளர்கள் விலகுவதும், பிற இன பணியாளர்கள் கிடைப்பதும் நடக்கும். இந்த மாதம் பங்கு வர்த்தகம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கக்கூடாது. சிலரது கெட்ட பழக்கங்கள், உங்களுக்கு தண்டனை தரும் நிலைக்குத் தள்ளிவிடும். சிலர் வாரிசுகளால் அவமானமும், கௌரவக் குறைச்சலும் அடையலாம். கர்ப்பஸ்திரிகள், மிக கவனமாக இருக்கவேண்டிய மாதமிது. இந்த மாதம் உங்கள் தந்தைக்கு இன்னதென புரிபடாத நோய் வரும். அதனைக் கண்டுபிடிக்க, நீங்களும் உங்கள் தாயாரும் அலையாய் அலைய வேண்டியிருக்கும். உங்களில் சிலர் பிற நாட்டுப்பணி கிடைக்கப் பெறுவீர்கள். தம்பதிகள் கூடியமட்டும் சமாதானமாகப்போக முயற்சியுங்கள். சிலர் புதுத் தொழில் ஆரம்பிக்க முதலீடு செய்து, பின் அதன் ஆரம்ப கட்டத்துக்கு லஞ்சப் பணமும் கொடுக்க வேண்டிவரும். சிலருக்கு இடமாறுதலுடன் பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரி இடம்மாறுவார். சில அரசியல்வாதிகள் பதவி இழப்பர். சிலர் பதவி மாறுவர். உயர்கல்வி மாணவர்களுக்கு வேறிடத்தில் கல்வி கற்க இடம் கிடைக்கும். உங்கள் மாமியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும். கலைஞர்கள் அவமானம் மற்றும் இழப்பு, மாறுதல் இவற்றைச் சந்திக்க நேரிடும்.
கவனம் தேவை: உங்கள் ஆரோக்கியம், தொழில் மற்றும் கலைஞர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மேற்கண்ட விஷயங்களை வைகாசி 10, 11, 12-ஆம் தேதிகளில் முடிவெடுங்கள்.
வைகாசி 6, 7, 8-ஆம் தேதிகள் அதிர்ஷ்டம் தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 10, 19, 28.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடவும். குழந்தைகளுக்கு முடிந்த உதவிசெய்யவும். உங்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும் பணியாளர்களின் வாரிசு களுக்கு தேவையறிந்து உதவுங்கள். அருகி லுள்ள முருகர் கோவிலில் பக்தர்களுக்கு மோர் தானம் செய்யவும்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் சற்றே களேபரங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஒன்று நீங்கள் காதல் வயப்படுவீர்கள். அதுவும் பிற இன, பிற மத, பிற மொழி நபர்களிடம் காதல் பீறிட்டு வரும். அதன் பின்விளைவாக ஏற்படும் பிரச்சினையில் நீங்கள் பிறந்த இடத்தைவிட்டு வெளியிடம் தங்க நேரிடும். உங்களின் சிலரின் வாரிசுகள் செய்யும் வேண்டாத செயல்களால், அவர்களை வேறிடத்தில் மறைத்து வைக்கும் நிலை உருவாகும். பங்கு வர்த்தகம் மிகக் கீழிறங்கி விடுவதாலும் அல்லது கைபேசி விளையாட்டு களிலும், பந்தயத்திலும் பணத்தை இழப்ப தாலும் சிலர் பைத்தியம் பிடித்த நிலையை அடைவீர்கள். உங்களில் சிலருக்கு தந்தையின் மூலம் அரசுப்பணி கிடைக்கக்கூடும். பயணங்களில் கவனம் தேவை. காவல்துறை அருகில்கூட போகவேண்டாம். காவல் துறையில் பணியாற்றும் இந்த எண் ஜாதகர்கள் கனவில்கூட லஞ்சம் வாங்கக்கூடாது. இந்த மாதம் புதிய தொழில் தொடங்கவோ, தொழில் விரிவாக்கமோ செய்யவேண்டாம். கலைஞர்கள் பணிபுரியும்போது, அடிபட வாய்ப்புண்டு; கவனம் தேவை. அரசியல் வாதிகள் பணிச் சுமையால் அல்லல்படுவர். அந்த அதிக பணிப் பளுவை அதிர்ஷ்டமாக மாற்றும் வித்தையைச் செய்வர். சில அரசியல் வாதிகளின் திருமணம் நடக்கும். சிலரது பூர்வீக இடம் சம்பந்தமான விஷயங்கள் மண்டை காய வைத்துவிடும்.
கவனம் தேவை: இந்த மாதம் முழுவதுமே, அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. முக்கியமாக கையெழுத்து வாக்கு கொடுக்கவோ, ஜாமின் கையெழுத்து போடவோ கூடாது. இந்த மாதம் சாப்பிடலாம்; மூச்சு விடலாம்; பாத்ரூம் போகலாம். அவ்வளவுதான். வேறு ஒன்றிலும் முன்முயற்சி தேவையில்லை.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 16, 25.
எச்சரிக்கை எண்கள்: அனைத்து எண்களும்.
பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோவில் முருகரை வணங்கவும். அடிபட்டு காயம் பட்டவர்களுக்கு முடிந்த உதவிசெய்யவும். ஓரிடத்தில் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு துவரம் பருப்பு சேர்ந்த கலவை சாதம் வழங்குங்கள். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு துவரை தானம் நல்லது.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு நல்ல காலத்திலேயே ஏறுக்கு மாறான யோசனைகள் தோன்றும். இந்த மாதம் எண்ணங்களும், திட்டங்களும் பீறிட்டுக் கிளம்பும். அதிலும் ஆன்மிகம் சம்பந்தமாக புதுப்புது கருத்துகளை உங்கள் கைபேசியில் வெளியிட்டு, படிப்பவர்களை கதிகலங்க வைப்பீர்கள். மேலும் சிலர் பரிகாரம் செய்து கொடுக்கிறேன் எனவும், "உங்கள் சார்பில் நானே கோவில்சென்று வருகிறேன்' எனவும் கிளப்பிவிட்டுக் கிளம்பி விடுவீர்கள். நிறைய பொய் சொல்லி பணம் சம்பாதித்துவிட்டு எல்லாம் பகவான் அனுக்கிரகம் என்று இறைவன் மேலேயே பழிபோட்டு விடுவீர்கள். வீடு, மனை, தோட்டம், வாகனம் போன்றவை உங்களைப் பாடாய்ப் படுத்தும். சிலரது தாயார் காரண காரியமில்லாமல் கோபப்படு வார். வாரிசுகள், பணம் கேட்டு பாடாய்ப் படுத்துவர். உங்களில் சிலருக்கு, அரசு மூலம் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நிறைய புது முயற்சிகள் மேற்கொள்வீர் கள். திருமணத்திற்கு வரன் தேடும் பணிகளில் ஈடுபடுவீர்கள். இந்த மாதம் நீங்கள் அதிபுத்திசாலித்தனமாக செயல்படுவதால், எதிரில் இருப்பவர்கள் உங்களைப் பார்த்து, எரிச்சல் அடைவார்கள். உங்களில் சிலர் வீட்டிலேயே, கள்ள நோட்டு அடிப்பது எப்படி என செயல்முறை பயிற்சி மேற் கொள்வீர்கள். தரகு, ஒப்பந்தம், கமிஷன், ஏஜென்சி, காண்ட்ராக்ட் என இவ்வித தொழில் சார்ந்தவர்கள், தங்களது வியத்தகு புத்திசாலித்தனத்தால் நல்ல மேன்மையடைவர். கோர்ட், ரிஜிஸ்தர் ஆபிஸ் போன்ற இடங்களில் சாட்சி கையெழுத்து போடும் நபர்கள் இடைவிடாத பணி கிடைக்கப் பெறுவர். இந்த மாதம் வேலை சார்ந்து அதிக அலைச்சல் இருக்கும்.
கவனம் தேவை: எதிரிகள் மிக முட்டாள் என நினைக்கவேண்டாம். இந்த மாதம் உங்களுக்குப் பிடிக்காத எதிரிகளுடன் கூடவே பயணம் செய்யவேண்டி இருக்கும். கவனம் தேவை.
இந்த மாதம் வைகாசி 9-ஆம் தேதி நற்செய்தி கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: திருவேற்காடு சென்று வழிபடுவது நல்லது. அருகிலுள்ள முருகரை வணங்கவும். யாருக்காவது தேவையறிந்து செருப்பு வாங்கிக் கொடுங்கள்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கியே ஆகவேண்டும் என்றோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும் தொழிலை முதன்மை ஸ்தானத்திற்கு தள்ளிவிடுவதற்கு என்ன செய்யலாம்? யார் காலை வாரி விடலாம்? எவன் தலையைத் தடவலாம்? யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கலாம் என இன்னபிற யோசனைகள் முட்டி மோதும். இதற்கே இந்த மாதம் சரியாக இருக்கும். மனதிற்குள் கண்டபடி திட்டினாலும், வெளியே அமுதினும் இனிய சொற்களால் அளந்துவிடுவீர்கள். உங்கள் இளைய சகோதரனால் நீங்கள் நினைத்தது நடக்க தடை ஏற்படும். உங்கள் பணியாளர்கள் சண்டித் தனம் செய்வர். நல்ல நேரத்தில் கைபேசி காலை வாரிவிடும். தொலைக்காட்சி, பத்திரிகையில் வேலை செய்வோர், எங்காவது சிக்கலில் அகப்பட்டுக்கொள்வர். உங்கள் தாய் அல்லது வாழ்க்கைத் துணை சண்டை போடுவார்கள். அல்லது எங்காவது விழ நேரிடும். சிலரது மாமியார் காணாமல் போகும் வாய்ப்புண்டு. அஜீரணக் கோளாறு வரலாம். காதல் உண்டு; கல்யாணம் உண்டு. அதில் செம யுத்தமும் உண்டு. இதில் அரேன்ஜ்ட் மேரேஜ் எனும் திருமணங்களில் கூட, சண்டை வந்தே தீரும். அரசு மற்றும் சட்டத்துறை சார்ந்த செலவிருக்கும். உங்களில் சிலர் பேரனைப் பார்க்க வெளிநாடு செல்லலாம்.
கவனம் தேவை: இந்த மாதம் வேலை செய்யும் ஆட்களிடம் அதிகாரம் செலுத்தாமல் அன்புடன் நடந்துகொள் ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தப்பிக்கமுடி யும். முன்பின் தெரியாத நபர்களை வீட்டுக்குள் விடவேண்டாம். வீடு மாற்றும்போது மிக கவனம் தேவை. அலைபேசி தகவல்களை நம்பவேண்டாம். வைகாசி 10, 11, 12-ஆம் தேதிகளில் மட்டும் மேற்கண்ட விஷயங்களில் முடிவு எடுக்கலாம்.
வைகாசி 15, 16, 17-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.
பரிகாரம்: திருத்தணி முருகரை வணங்கவும். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு மருக்கொழுந்து வாங்கிக்கொடுக்கவும். சேவல், ஆடு போன்ற உயிரினங்களுக்கு தீவனம் வாங்கிக்கொடுங்கள்.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் சந்தேகம் மட்டுமல்ல; ஒரு சண்டை போட்டுவிட்டு வரலாமே எனும் எண்ணமும் மேலோங்கும். இதற்குக் காரணம் பைசா கையில் புரளாத கொடுமையாகத்தான் இருக்கும். மேலும் நீங்கள் எதைப் பேசினாலும், அது தவறாகப் புரிந்துகொள்ளப்படும். இந்த சொற்கள், எதிராளியை காயப்படுத்துவதால், உங்கள்மீது வெகுகோபம் கொள்வர். ஒருபுறம் வாழ்க்கைத்துணை இன்னல் தருவார். மறுபுறம், வெளியே தெரியாத இணை கும்மி எடுப்பார். முழியாய் முழிப்பீர்கள். வீடு மாறுவது குறித்து திட்டம் தீட்டுவீர்களே ஒழிய, நடைமுறையில் அது சாத்தியமாகாது. வேலை வெளியூர் அல்லது வெளிநாட்டில் கிடைக்கும். பிற இன வேலையாட்கள் கிடைப்பர். பங்கு வர்த்தகம் சரிப்படாது. தம்பதிகளுக்குள் சண்டை வந்து, ஒருவர் வீட்டைவிட்டு விலகுவார். அரசுமூலம் மறைமுக லாபம், அரசுப் பணியாளர்கள் லஞ்சப் பண பெருக்கம் கிடைக்கும். இதனால் உங்கள் நல்ல பெயர் கொஞ்சம் ரிப்பேராகும். சொந்தத் தொழில் நடத்துவோர், பங்குதாரர்களிடமும், பண விஷயத்திலும் மிக சுதாரிப்பாக இருக்கவேண்டும். உங்களின் மூத்த சகோதரர் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் உயர் கல்வி அல்லது தந்தை விஷயமாக வெளியாட்களிடம் சற்று கடன் வாங்க வேண்டியிருக்கும்.
கவனம் தேவை: இந்த மாதம் பேசும்போது கவனமாக இருக்கவும். அதுபோல் திருமணம் சம்பந்தமான விஷயங்களை இந்த மாதம் யோசிக்கவும், முயற்சிக்கவும் மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முடிவுகளை அடுத்த மாதம் எடுத்துக்கொள்ளவும். வைகாசி 10, 11, 12-ஆம் தேதிகளில் மட்டும் முக்கிய முடிவு எடுக்கவும்.
வைகாசி 28, 29, 30-ஆம் தேதிகள் நன்மை தரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: பழமுதிர்ச் சோலை முருகரை வணங்கவும். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு குங்குமம் தானம் செய்யவும். உங்கள் குடும்பங்களில் நடக்கும் திருமணங்களில் நீங்கள் ஒத்தாசை செய்யாவிட்டாலும், பரவாயில்லை; தயவுசெய்து இடைஞ்சல்கள் கொடுக்காமல் இருங்கள். அதுவே பெரிய பரிகாரமாகும்.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் பெருமைப்படுத்திக் கொள்ளவும், பிறர் உங்களைப்பற்றி உயர்வாகப் பேசிக்கொள்ளவும் மிக முன்முயற்சி செய்வீர்கள். இதற்காக கொஞ்சம் பணமும் செலவு செய்வீர்கள். வெளிநாட்டிலிருந்து, நல்ல செய்தி ஒன்று வரும். திருமண ஏற்பாடுகளில் குழப்பமுண்டு. தொழில் சம்பந்தமான உயர்கல்வி உண்டு. வேலை செய்யுமிடத்தில், உங்களின் குயுக்தியான யோசனை, உங்களின் நிலையை உயர்த்தும். சிலரது தாயாருக்கு அடிபட வாய்ப்புண்டு. உங்கள் சகோதரன் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்வார். வேலையில்லாமல் திண்டாடுபவர்கள். சிலர் ஒரு தடை, தாமதம் ஏற்பட்டு, பின் வேலை கிடைக்கப் பெறுவர். மனை வில்லங்கம் தரும். அடுக்குமாடிக் குடியிருப்பில், தவணை முறையில் ஒரு வீடு வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். காவல் துறையிடம் கவனம் தேவை. காவல் துறையில் பணியாற்றுபவர்கள், மிகுந்த முன்னெச்சரிக் கையுடன் வேலை செய்யவேண்டும். அவசரப் பட்டு யார் பல்லையும் பிடுங்கக்கூடாது. இந்த மாதம் ஒருவித அசட்டு தைரியம் பொங்கிவரும். அதைநம்பி அகலக்கால் வைக்கவேண்டாம். உங்கள் வாரிசுகள் வேலை செய்யுமிடத்தில் சற்று கவனமாக இருக்கச் சொல்லுங்கள். உங்களில் சிலருக்கு இப்போது இருக்கும் வேலையை மாற்றலாமா எனும் யோசனை தோன்றும். கவனம் தேவை: இந்த மாதம் வியாபார விஷயங்களில் மிக கவனமாக இருக்கவும். வியாபார கணக்கு வழக்குகள் இம்சை தரும். தாமதமின்றி வரி செலுத்திவிடுங்கள். தண்ணீர் சம்பந்தமான இனங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவும்.
வைகாசி 22-ஆம் தேதி நற்செய்தி வரக்கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: மருதமலை முருகரை வணங்கவும். அருகிலுள்ள முருகர் கோவிலில் மோர் தானம் வழங்கவும். விநாயகர் கோவில் அர்ச்சகருக்கு ஆடை தானம் செய்யவும்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு. பணவரவு வரும்தான். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இராது. இந்த மாதம் வீடு விற்க யோசனை இருப்பின், அந்த திட்டத்தை சற்று ஒத்தி வையுங்கள். இந்த மாதம் வீடு, மனை, வாகனம், கால்நடைகள் விற்றால், மிகுந்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வாடகை வீடு மாற்றமுண்டு. உங்களில் சிலர், வெளிநாட்டு வாகனங்களை வாங்கிவிட்டு, பின் இம்சைப்படுவீர்கள். பங்கு வர்த்தகம் வருத்தம் தரும். வாரிசுகள் விஷயமாக மன சஞ்சலம் உண்டு. சில சினிமா கலைஞர்கள், அதிக வேலைப்பளு அல்லது உடல் நோய் காரணமாக சோர்வுகொள்வர். சிலர் வெளிநாட்டு வேலை கிடைக்கும் என நம்பி, ஏமாந்துவிடுவீர்கள். இந்த மாதம் நீங்கள் சந்திக்கும். நபர்கள், உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவர். திருமண விஷயத்தில், உங்கள் தாயும், உங்கள் சகோதரியும் மிகுந்த மன உளைச்சல் தருவர். உஷ்ணம் சம்பந்த நோய்கள் தாக்கக்கூடும். நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் அல்லது தொழிற்சாலையில் சிலபல பணியாளர்கள் விலகிச் செல்வதால், நீங்கள் அதிக உழைப்பால் அல்லலுறுவீர்கள். உங்கள் மூத்த சகோதரன்வகையில் இம்சை அடைவீர்கள். சிலருக்கு வாகனம், கிணறு போன்றவை திருடு போகக்கூடும். அல்லது வீட்டு டாக்குமெண்ட் காணாமல் போய்விடும். எச்சரிக்கை அவசியம்.
கவனம் தேவை: பயணங்களில் பொருட்கள், நகைகள்மீது கவனம் இருக்கட்டும். அரசு சார்ந்த இனங்களில் விழிப்புடன் இருங்கள். உங்கள் மருமகன் வீண் சண்டை ஆரம்பிக்கக்கூடும். மாணவர் கள் கவனமாக இருக்கவேண்டும். பதவி உயர்வு கிடைத்தால், உடனே ஓடிச்சென்று அந்த உயர்ந்த பதவியை ஒப்புக்கொள்ள வேண்டாம். சற்று தாமதப்படுத்துங்கள்.
வைகாசி 17, 18, 19-ஆம் தேதிகள் நன்மையளிக்கக் கூடும்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.
எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: வயலூர் முருகரை வணங்கவும். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு புது மின்சார விளக்குகளை தேவையறிந்து வாங்கிக் கொடுக்கவும். உங்கள் குடும்பத்தில் மறுமணம் செய்துகொள்ள தகுந்த நபர்களை மனம் நோகச் செய்யாமல், முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களுக்கு பூர்வீகத்திலிருந்து பணம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் பலன், பணம் தரும். அரசு சார்பு தொகை கிடைக்கும். உங்கள் இளைய சகோதரி, உங்கள் திருமணத்திற்கு உதவுவார். உங்கள் வேலைக்கு ஒத்தாசையாக நல்ல வேலையாட்கள் கிடைப்பர். கலைஞர்கள், சினிமா ஆட்கள், நல்ல பணவரவு பெறுவர். உங்கள் தாயார்நலனின், கண்டிப்பாக கவனிப்பு தேவை. மார்பு வலி வந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். இந்த மாதம் கடன் வாங்காதீர்கள். இருப்பதை வைத்து சமாளித்துவிடுங்கள். தொழில் சம்பந்தமான உயர்கல்வி கற்க வெளியூர், வெளிநட்டு வாய்ப்புக் கிட்டும். சொந்தத் தொழில் செய்வோர். உங்கள் தொழிற்சாலைகளில் தீயணைப்பான் கருவி நல்லமுறையில் உள்ளதா என பரிசோதியுங்கள். சில அரசியல்வாதிகள் பேசும்போது மேடை சரிந்துவிழும் அல்லது கால் உடைந்துவிடும் அபாயம் உள்ளது. கவனம் தேவை: இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் இரட்டிப்பு கவனம் தேவை. நெருப்பு சம்பந்த விஷயங்கள் ரொம்ப பாதுகாப்பாக இருக்கட்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.
எச்சரிக்கை எண்கள்: நீங்கள் பிறந்த எண்களே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய எண்கள்: 9, 18, 27.
பரிகாரம்: பழனி முருகரை வணங்குங்கள். அருகிலுள்ள முருகர் கோவிலுக்கு சந்தனம் வாங்கிக்கொடுங்கள். அடிபட்டவர்களுக்கு உதவவும்.
செல்: 94449 61845