மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசியை சேர்ந்தவர்கள். உங்கள் ராசி அதிபதி செவ்வாய். நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம். மலைமீது உள்ள முருகர் ஆவார். இந்த மாதம் உங்கள் ராசிநாதன் மிக பலங்குன்றி நிற்கிறார். இதனால் உங்கள் பணவரவு குறையுமா எனில், இல்லை எனும் பதில் கிடைக்கிறது. பணவரவு மிக நன்றாகவே உள்ளது. திருமண ஏற்படலாம் மிக ஜருராகவே நடக்கும். ஆனால் மன தைரியம் சுத்தமாக இல்லாமல் போய்விடும். ஏனோ வேலை எந்த நேரத்திலும் போய்விடுமோ எனும் பயம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் எப்போதும் ஒருமாதிரி "பே' என்று முழித்துக்கொண்டே அலைவீர்கள். இந்த கவலை அடிக்கடி தலைவலியை இழுத்துவிடும். இந்த மாதம் உங்கள் இளைய சகோதரன், பணியாள், கைபேசி இந்த விஷயங்களில் எந்த வம்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். சிறு தூரப் பயணங்களில் சிராய்ப்பு உண்டாகும். உங்களில் ஒருசிலருக்கு அரசு வேலைமூலம் பணவரவு கிடைக்கும். சிலருக்கு அரசு பணி கிடைக்கும். உங்கள் வாரிசுகள் வேலை கிடைத்து, வேறிடம் நகர்வர். உங்களுக்கு இப்போது திருமணம் நடந்தால் ரொம்ப பொருட் செலவு மற்றும் வெளிநாட்டு சம்பந்தமும் இருக்கும். உங்கள் வணிக பங்குதாரர் களில் சிலர் விலகுவர். உங்களில் சிலரின் தாயார், பயணத்தில் கொஞ்சம் அடிபடக்கூடும். பழைய கைபேசியை கொடுத்துவிட்டு, புதிது வாங்குவீர்கள். அருகிலுள்ள கோவிலுக்கு அடிக்கடி செல்வீர்கள். தொழிலில் சிறு சிறு மாற்றம் செய்வீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மாறுவது உறுதி. கலைஞர்கள், பெரிய நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்து பதிப்பிர்கள். சிலர் அரசு குத்தகை கிடைக்கப்பெறுவீர்கள். காதல், கல்யாணத்தை நோக்கி நகரும். பழனி முருகனை நேரிலும், மனதாலும் வணங்கவும்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
நீங்கள் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆவார். நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் நந்தீஸ்வரர் ஆவார். இந்த மாதம் நல்ல பணவரவு வரும்தான். ஆனால் கையில் கிடைத்த அடுத்த நிமிடமே பணம் முழுவதும் செலவழிந்துவிடும். உங்களில் நிறைய பேர் வேலையில் சேரமுடியும். சிலருக்கு தனியார் வேலையும், சிலருக்கு அரசு சார்ந்த வேலையும் கிடைக்கும். உங்கள் பணியாட்கள்மூலம் வெகு விரயம் உண்டு. சிலருடைய பணம் திருட்டு போகும்; கவனம் தேவை. குலதெய்வ தரிசன பயணம் உண்டு. பெண் அரசியல்வாதிகள், மிக மேன்மை காண்பர். இந்த மாதம் திருமண விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்கவும். திருமண முடிவுகளை இந்த வைகாசி கடைசியில் உறுதி செய்யுங்கள். உங்களில் சிலருக்கு மறைமுக வருமானம் கிடைக்கும். சிலர் லஞ்சம் கொடுக்க வேண்டிவரும். தொழில் மேன்மைக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கண்டிப்பாக பரிசு கொடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் நல்ல பணவரவு கிடைத்தாலும் அதைவிட அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். கலைஞர்கள் வீடு கட்டுவர். நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் வீண் வாக்குவாதமும், வெட்டி விரயமும் ஏற்படாமல் இருக்க, கருடாழ்வாருக்கு நெய் தீபமேற்றி வணங்கவும்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
இந்த மாதம் பிறந்தவர்கள் மிதுன ராசியை சேர்ந்தவர்கள். உங்கள் ராசிநாதன் புதன் ஆவார். உங்களுக்கு உரிய தெய்வம் ஸ்ரீமந் நாராயணன் ஆவார். இந்த மாதம், நீங்கள் பிறருக்கு நல்லது செய்தாலும், அவர்கள் இரண்டு குறை கூறிவிட்டு செல்வர். நீங்கள் பேசும் சொற்கள், உங்களுக்கு விரயம் தரும். சிலசமயம் செமத்தியாக நாலு அறையும் தரும். உங்கள் இளைய சகோதரன் வாகன ஃபைன் கட்ட செய்வான். உங்கள் பணியாள் வீட்டைவிட்டு ஓடிவிடுவான். வீட்டு வரியை, தண்டனையுடன் கட்டுவீர்கள். பூர்வீக தொழில் ஓஹோவென்று நடக்கும். அதற்கு ஈடான செலவும் ஆகும். அரசியல்வாதிகள் செய்யும் சேவைகள், அவர்களை வண்டை வண்டையாக திட்டு வாங்கித் தரும். கடன் சம்பந்தமாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பதில் கூற மிக சிரமப்பட்டுப் போவார்கள். திருமண ஏற்பட்டால், வார்த்தைகள் கை கலப்பை தந்துவிடும். தொழில் மேன்மைக்கு மறைமுக செயல்கள் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் மூத்த சகோதரன், கடன் விஷயமாக நிறைய வசவுகளை எதிர்கொள்வார். உங்களில் சிலர் பெருந்தொகையை முதலீடு செய்வீர்கள். அது அரசு சார்ந்த குத்தகை, வீடு கட்டும், அரசு சார்ந்த ஒப்பந்தம் என இவ்வகையில் முதலீடு அமையும். பிறரிடம் திட்டும் அடியும் வாங்காமல் இருக்க, பெருமாளுக்கு நல்ல துளசி மாலை வாங்கி சாற்றவும்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள், கடக ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி சந்திரன். நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் சாந்தமான நீர்நிலைகளின் அருகில் இருக்கும் அம்பாள் ஆவாள். இந்த மாதம் உஷ்ண சம்பந்த கொப்புளங்கள் வர வாய்ப்புண்டு. பூர்வீக நிலம் பிரச்சினை தரும். பண வரவு பற்றிய குறுஞ்செய்தி கிடைக்கும். ரொம்ப நாளாக வரவேண்டிய நிலம் சம்பந்தமான பண லாபம் கிடைக்கும். அதனை அப்படியே வீடு வாங்க முதலீடு செய்துவிடுவீர்கள். உங்கள் வாரிசுகள் கௌரவ குறைச்சலைத் தருவர். கடன் அடையும். வேலை மாறும். திருமணம் வெளிநாடு சம்பந்தம் பெறும். அல்லது சற்று கலப்பாக அமையும். காதல் கசக்கும். கலைஞர்கள் வீடு சம்பந்தமான நன்மையும், தொழில் சம்பந்தமான கெடுதலும் பெறுவர். சொந்தத் தொழிலில் ரொம்ப மேன்மையை எதிர்பார்க்க வேண்டாம். அரசியல்வாதிகள், ஒரு மாறுதலுடன் அதிர்ஷ்டம் காண்பர். அரசுமூலம் பண லாபம் உண்டு. அது உங்கள் மனையை அரசு எடுப்பதால் இருக்கும். முதலீட்டுப் பெருக்கம் உண்டு. மூத்த சகோதரரால் ஒரு செலவுண்டு. உங்கள் கௌரவமும், தொழிலும் சீர் குலையாமல் இருக்க, அம்பாளுக்கு, அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கவும்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை
இந்த மாதம் பிறந்தவர்கள் சிம்ம ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி சூரியன். நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான் ஆவார். இந்த மாதம் தொழிலில் முதன்மைவர வெகுபாடுபடுவீர்கள். அது கிடைக்கவும் செய்யும். கூடவே சில வதந்திகளும், கெட்ட பெயரும் இணைப்பாக வரும். இது அரசியலில் மந்திரி பதவி வகிப்பவர்களுக்கும் கிடைக்கும். எனவே இந்த மாதம் அரசியல்வாதிகள். அரசு அதிகாரிகள், கலைஞர்கள், மந்திரிகள், பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள் என இவர்கள் கூர்மையோடு நடந்துகொள்ளவேண்டும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்போது, உள்ளீடாக ஒரு கெடுதலும் இருக்கும். பெற்றோர்நலனின் அக்கறையோடு செலவும் செய்யவேண்டி இருக்கும். மனை, வாகன விரயம் உண்டு. திருமண பேச்சுக்களின்போது கவனம் தேவை. சில பெண் கலைஞர்கள் அல்லது சமையல் செய்வோர், தீப்புண் ஏற்பட வழியுண்டு. பயணங்கள், கேடு தரும். சில அதிர்ஷ்ட நிகழ்வுகள், வெளிநாட்டு உயர் கல்வி என இவை அருகில்வந்து பின் விலகிச் சென்றுவிடும். இந்த மாதம் பயணங்களில் விபத்து ஏற்படாமலிருக்க, சிவனுக்கு விளக்கேற்றி வழிபடவும். கூடவே பைரவருக்கு விளக்கேற்றி வழிபடவும்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் கன்னி ராசியை சேர்ந்தவர்கள். ராசி அதிபதி புதன் ஆவார். நீங்கள் வணங்கக்கூடிய திருப்பதி வேங்கடேசப் பெருமாள் ஆவார். இந்த மாதம், தொலைதூரப் பயணம் செய்து ஆன்மிக தரிசனம் பெறுவீர்கள். உங்கள் மனைவிவழியில் அதிர்ஷ்ட பணவரவு உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில் வெற்றிபெறும். இந்த மாதத்தில் பிறந்த சில அரசியல்வாதிகள் இடம் மாறுவர். அது மருத்துவ மனையாகவும் இருக்கும். அல்லது சிறைச்சாலையாகவும் இருக்கும். உங்கள் உடன் பிறந்த மூத்த மற்றும் இளைய சகோதரர்கள் நிலை பிறழக்கூடும். காதல் திருமணம் கூடிவரும். உங்கள் மாமனார் பத்திரமாக இருக்கவேண்டும். உங்கள் தந்தை வகையில் ஒரு சுபச்செலவு அல்லது வணிக முதலீடு செய்வார். இப்போது எடுக்கும் தொழில் எளிதாக கைகூடும். வீடு, மனை, வாகன விற்பனை விஷயங்கள் இந்த மாதம் தவிர்த்துவிடவும். மூத்த சகோதரி பற்றிய ஒரு விஷயம் தெரியவரும். பணியாளர், கைபேசி, ஒப்பந்த விஷயங்களில் வில்லங்கம், சங்கடம் வராமல் இருக்க நரசிம்மருக்கு விளக்கேற்றியும், பானகம் தயாரித்தும் வழங்கி வணங்கவும்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் துலா ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி சுக்கிரன். நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியார் ஆவார். இந்த மாதம் எதிர்பாராத யோகம் ஒன்று கிடைக்கும். இதுவரையில் உங்களை அவமானப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் மறைந்துவிடுவர். பணவரவும், சொற்களும் தடுமாறும். வாழ்க்கைத் துணையோடு கௌரவ பிரச்சினை தலைதூக்கும். வேலைக்கு நல்ல பணியாள் கிடைப்பர். ஆனாலும் அவர்கள் அடையாள அட்டையை வாங்கி சோதித்து, வைத்துக்கொள்ளவும். வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும். பங்கு வர்த்தகம் சுமாராக இருக்கும். கலைஞர்கள், நிறைய வாய்ப்பு கிடைக்கப்பெறுவர். ஆன்மிக, சேவை, உழவார பணி செய்வீர்கள். கூடவே கொஞ்சம் இன்னலும் சேர்ந்துவரும். உங்களில் சிலர், கடவுள் மறுப்பு கொள்கை பற்றி பேசுவீர்கள். அரசியல் வாதிகள், சற்று கவனமாக இருக்கவேண்டும். எனினும் ஏதோ தில்லாங்கடி வேலைசெய்து சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிவிடுவீர்கள். முடிந்தால், மகாலட்சுமி தாயாருக்கு வெண்பட்டு வாங்கி சாற்றி வணங்கவும். வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிக்கவும்.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள். இவர்கள் ராசி அதிபர் செவ்வாய். நீங்கள் வணங்கதக்க தெய்வம் ஸ்ரீ ஐயப்பன் ஆவார். இந்த மாதம் வெகு சூதனமாக இருக்கவேண்டும். வேலை செய்யும் இடத்தில் திருவாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கவும். இல்லையெனில் வேலை டமார்தான். பண விஷயத்தில் கவனம் தேவை. காதல், கல்யாணத்தை நோக்கி நகரும்போது, செமத்தியாக வாங்கி கட்டிகொள்வீர்கள். கர்ப்ப ஸ்த்ரிகள் கவனமாக இருக்கவேண்டும். வாரிசுகள் மேன்மையான செயல்கள் செய்வதுபோல் தோன்றினாலும் அத்தனையும், எதிர்மறை பலன்களை கொடுத்து, பண நஷ்டத்தையும் கொடுத்துவிடும். எதிரிகளை கண்டால் விலகிவிடவும். எதிரிகள் மிக நீசத்தனமாக நடந்துகொள்ள வாய்ப்புண்டு. மறுமணம் நடக்க வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், மக்கள் தொடர்பு, சந்திப்பின்போது, சிலசமயம் பாராட்டு களையும் சிலசமயம் அவமானத்தையும் சந்திப்பர். இது அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும். சினிமா, கலைஞர்கள் மிக ஆடம்பரமும், நன்மையும் கிடைக்கப் பெறும் நேரம். ஒரு பெரிய சங்கடமும் கூடவே வந்து சேரும். உங்கள் வாழ்க்கைத்துணை, பெரிய பதவி போன்று உச்சநிலை தொடும்போது, உங்கள் மாமியார் அதன் முழு கிரிடிட்டையும் தானே அனுபவிக்க முயல்வார். இதனால் உங்கள் எரிச்சல் உச்சம் தொடும். உங்கள் வாழ்க்கைத்துணை வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்போது, உங்கள் உடல்நிலை, அவருடன் சேர்ந்து போக அனுமதிக்காது. திருச்செந்தூர் முருகனுக்கு, உங்களால் முடிந்த பண வசதியில், வெள்ளி அல்லது செம்பு வேல் காணிக்கை செலுத்தவும்.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் தனுசு ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் ராசி அதிபதி குரு ஆவார். நீங்கள் வணங்கக்கூடிய தெய்வம் ஸ்ரீராமர் ஆவார். உங்களில் பலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இதனால் குடும்பத்தில் குதூகலம் கூத்தாடும். வாழ்க்கைத் துணையின் தொழில் ஒரு பெரிய ஏற்றம் காணப்படும். தந்தையின் வேலை கிடைக்கும். சிலர் அரசு வேலை அல்லது அரசு சார்ந்த வேலை கிடைக்கப் பெறுவீர்கள். வீடு கட்ட கடன் கிடைக்கும். சொந்தத்தில் திருமணம் நடக்கும். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளின் தந்தை வேலை கிடைக்கப்பெறுவார். பெற்றோர்நலன் கவனிக்கப்பட வேண்டும். உங்கள் தொழில் பங்குதாரர், மனஸ்தாபம் கொள்வார். இந்த மாதம் பங்கு வர்த்தகம் பக்கம் தலைவைத்து படுக்கக்கூடாது. கலையுலகினர் ஒரே சமயத்தில் ஏற்றமும், நஷ்டமும் காண்பர். வாரிசுகளிடம் ரொம்ப கொடூரமாக சண்டையிட வேண்டாம். வீட்டைவிட்டு ஓடிவிடுவர். பெண் அரசியல்வாதிகள், கூடுதல் பொறுப்பும், நிர்வாக பதவியும் கிடைக்கப் பெறுவர். பூர்வீக நிலத்தில் நீங்கள் செய்துவந்த தெண்டச் செலவு, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்தப்படும். இந்த மாதம் புது முதலீடுகள் கூடவே கூடாது. பத்ரகாளி, வராஹி, பிரத்தியங்கரா என ஏதோ ஒரு துர்க்கைக்கு, செம்பருத்தி மாலை அணிவிக்கவும்.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மகர ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி சனி ஆவார். நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். இனிவரும் மாதங்களில் வெளிநாட்டு பண நடமாட்டம் கிடைக்கும். உங்கள் தொழில் பற்றிய குறுஞ்செய்தி கைபேசியில் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் வெற்றி அடையும். விளையாட்டு வீரர்கள் வெகுமதியும், வேலையும் கிடைக்கப்பெறுவர். கலைஞர்கள் தங்கள் கலை சேவையில் சுறுசுறுப்பு காண்பர். இவ்விதம், மிக நல்ல வேகமாக செயல்கள் ஓடும்போது, இடைஇடையே சிறிது உடல் அசதியும், நலமின்மையும் வந்து, வந்து போகும். அரசு ஆணைகள் நிம்மதியைக் குலைக்கும். அரசியல்வாதிகள், தங்களின் சக ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்களுடன் இணக்கமில்லா, இம்சை தொடரக் காண்பீர்கள். இதனால் அவ்வப்போது நெஞ்சுவலிக்கும். கடன்கள் அடையும். வாழ்க்கைத் துணையின் நலம் பொருட்டு, பைரவருக்கு நல்லெண் ணெய் தீபமேற்றி வணங்கவும்.
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் கும்ப ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி சனி. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ சக்கரத் தாழ்வார். இந்த மாதம் உங்கள் பெற்றோர்மூலம் பெரிய தொகை அல்லது வீடு கிடைக்கப்பெறுவீர்கள். பணவசதி நன்றாக இருக்கும். வாக்கு பொலிவு பெறும். வாக்கில் ஈர்ப்புத் தன்மை அதிகரிக்கும். இதனால் சினிமா, டி.வி.யில் பிண்ணனி குரல் கொடுப்போர், பாடகர்கள்,அரசியல் பேச்சாளர்கள் என இவர்கள் புகழ் ஓங்கப்பெறுவர் வாழ்க் கைத்துணையின் தொழி லில் ஒரு வெகு நன்மை யும், ஒரு கெடுதலும் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் இளைய சகோதரன் அல்லது உங்கள் பணியாளர், ஏதாவது அசாம்பாவிதத்தில் மாட்டிக் கொள்வர். அல்லது தொழிலில் திருட்டு நடக்கும். உங்கள் கைபேசி குறுஞ்செய்தியை நம்பினால், பெரிய கடனும், கௌரவக் குறைச்சலும் வந்துசேரும். சில அரசியல்வாதிகளுக்கு மந்திரி பதவி கிடைக்கும். மாமியார் மருந்து சாப்பிட வேண்டிவரும். பைரவரை தீபமேற்றி வணங்கவும்.
பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை
மேற்கண்ட மாதத்தில் பிறந்தவர்கள் மீன ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி குரு ஆவார். உங்கள் வணக்கத்துக்குரிய தெய்வம் ஸ்ரீ நடராஜர் ஆவார். நீங்கள் ஏற்றுமதி- இறக்குமதி துறை சம்பந்தப்பட்ட நபராக இருப்பின், அதன் சம்பந்தமாக பெரிய யோகப் பலன் காண்பீர்கள். அரசு சார்ந்த குத்தகை கிடைக்கும். வீடு கட்டும் ஒப்பந்தங்களில் கையெத்து போடுவீர்கள். உங்களில் சிலர் அடுக்குமாடி குடியிருப்பு ஒப்பந்தம் செய்வீர் கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால், கையில் காசு இருக்காது. ஆனாலும் கடன் வாங்கி இதையெல்லாம் சமாளிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தை எதிர்பார்த்தவர்கள், அதில் பெரிய ஏமாற்றம் காண்பார்கள். தந்தைமூலம் வரவேண்டிய பணமும் தடை ஏற்பட்டுவிடும். சிலர் மாமனாரிடம் கடன் வாங்கிக்கொள்வீர்கள். உங்களில் போதை பழக்கம் உள்ளவர்கள் ஆங்காங்கே மட்டை யாகி விடுவீர்கள். காதல் முற்றுப்புள்ளி பெறும். திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. எதிர்மறையான அல்லது விலக்கப்பட்ட பெண் பணியாளர் கிடைப்பார். தந்தை, தாயின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். கலைஞர்கள் புகழின் உச்சம் தொடுவர். பணத்தின் வீழ்ச்சி யையும் காண்பர். பெண் கலைஞர்களின் மீது அவதூறு பரபரப்படும். உங்கள் தொழிலில் உங்கள் வாரிசுகள் அல்லது உங்கள் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். அரசியல்வாதி களின் அலைச்சலும், செலவும் அதிகரிக்கும். உங்கள் மாமியார், உங்கள் பூர்வீகம் சம்பந்தமாக ஏதாவது கொளுத்திப் போடுவார். திருச்செந்தூர் முருகனுக்கு மஞ்சள வஸ்திரமும், தன்வந்திரி பகவானையும் வணங்கவும்.