1973-ஆம் வருடம் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் "ஸ்கைலாப்' எனும் செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது. சுமார் ஆறு வருடங் களுக்குப்பிறகு 1979-ஆம் வருடம் அந்த ஸ்கைலாப் செயலிழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அது இந்தியாவைத் தாக்கப் போவதாக ஒரு செய்தி இந்தியா முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. ஆராய்ச்சியறிவு பரவலாக இல்லாத காலமென்பதால் மக்கள் மிகவும் பயந்துபோனார்கள். அதில் தமிழகம் அதிகம் பாதிக்கப்படலாம் எனும் வதந்தி பரவியது. மக்களும் பயந்துபோனார்கள்.

இந்த செயற்கைக்கோள் பூமியில் விழுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படுமென்று, அறிவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் அனைவரும் மாற்றுவழியை யோசித்து மிகுந்த கவலையில் இருந்தனர். தமிழ்நாட்டில் அந்தசமயம், சுமார் 40 வருடங்களுக்குமுன்பு நிறைய கிராமங்களில் ஸ்கைலாப் பயத்தால் பல ஆடுகள், கோழிகள் உட்பட பல உயிரினங்கள், மனித இனத்தின் உணவுக் காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தன. இங்கே ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

"நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.'

Advertisment

நீதி நூல்கள் சன்மார்க்கம் என்று சிறப்பித்துச் சொல்வது எதையெனில், பிற உயிர்களைக் கொல்லாது வாழும் பொன்மார்க்கத்தையே ஆகும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். செயற்கைக்கோள் விழுவதற்கும் பக்திக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்று பலருக்கும் கேள்வி எழும்! ஒரு நிகழ்வை நினைவுகூர்கிறேன்.

அந்த ஸ்கைலாப் எப்போது பூமியில் விழுமோ எனும் பயம் இருந்த காலத்தில்லி குறிப்பாக சென்னை யில் விழுமென்று கணிக்கப்பட்ட சமயத்தில், தமிழகத் தில் ஒரு கிராமத்தில் மிக மோசமான பயம் கலந்த ஒரு மாலை நேரம். அதாவது இருள் கவியத் தொடங்கும் நேரம். ஒரு நடுத்தரமான ஆசிரியர் குடும்பம். அந்தக் குடும்பத் தலைவி அமிர்தவள்ளி அம்மா அதிதீவிர ஆறுமுகச் சிவனின் பக்தை. அந்த அம்மாவுக்கு துளியும் பயமில்லை. தன் பிள்ளைகளுக்கு இரவு உணவு தயாரிப்பதிலேயே கவனம் இருந்தது. அமிர்தவள்ளிக்கு தான் இறைவனின்மீது வைத்துள்ள அபரிதமிதமான நம்பிக்கை, "ஸ்கைலாப்பாவது மண்ணாவது- எல்லாம் அந்த ஆறுமுகச் சிவன் பாத்துப்பான்' என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டு தனது வேலைகளின்மீது கவனம் செலுத்தத் தொடங்கினாள். தனது மகனைக் கூப்பிட்டு அவன் கையில் ஒரு ஐந்து ரூபாயைக் கொடுத்து, மளிகைக் கடைக்குச் சென்று அரிசி, இன்னும் சில பொருட்களை வாங்கிவரச் சொன்னாள். அவனோ ஸ்கைலாப் தலையில் விழுந்து விடுமென்று பயந்தான். அம்மா, "முருகப் பெருமானை மனதில் நினைத்தவாறே கடைக்குச் சென்று வா. உனக்கு ஒரு குறையும் வராது. உனக்கு பத்து பைசா தருகிறேன்' என்றாள்.

Advertisment

இவன் மனம் குதூகலமடைகிறது. மனதில் தைரியத்தை வரவழைத் துக் கொண்டு, கையில் பையையும், பையில் காசையும் எடுத்துக் கொண்டு முருகனையும், முருகனின் பாடலையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கடைக்குக் கிளம்புகிறான்.

தனது பயம்போக, "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், வேல்...

வேல்... வெற்றி வேல்...' என்று பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டே கடையை நோக்கி நடையைக் கட்டுகிறான். வீட்டிற்கும் கடைக்கும் அரை கிலோமீட்டர் தூரமிருக்கும். இருள் கவிழ்ந்த நேரமென்பதால் சாலையில் தெரு நாய்களைத் தவிர வேறு நடமாட்ட மில்லை. நாய்கள் ஒன்றையொன்று கடிப்பதுபோல் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றுக்கு ஸ்கைலாப் பற்றிய பயமில்லை. கடைக்குச் சென்றவன் கடை முதலாளி யிடம் ஒரு கிலோ பொன்னி அரிசி போடச் சொன்னான். அன்று ஒரு கிலோ பொன்னி அரிசி ஒரு ரூபாய் எழுபத்தைந்து காசு.

அவள் அம்மா சொன்ன பொருட் களையெல்லாம் வாங்கிவிட்டான். கடைக்குப் போய்விட்டு வந்தால் பத்து காசு தருவேன் என்று அம்மா சொன்னது ஞாபகம் வர, மனம் சந்தோஷப் பட்டது. கடைக்காரர் மீதியை அவள் கையில் கொடுத்தார். பொருட்களை வாங்கிய அவன் கடைக்காரரிடம், "அண்ணே, கொஞ்சம் கொசுறு கொடுங்கண்ணே!' என்றான். அவரும் ஸ்கைலாப் பயத்தில் இருந்ததனால் ஒருவித பதட்டத்துடனே வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கொஞ்சமாக கொசுறு தருபவர் அன்று அவன் கைநிறைய பொட்டுக் கடலையும், இரண்டு அச்சு வெல்லமும் கொடுத்தார். அவனுக்கோ சந்தோஷம் தாளவில்லை. ஸ்கைலாப்பை மறந்துவிட்டு பக்தி சிரத்தையுடன் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' என்று பாடியபடி பொட்டுக் கடலையையும், வெல்லத்தையும் ருசித்தவாறே வீடு வந்துசேர்ந்தான். இரவு உணவை சமைத்து அம்மா அனைவருக்கும் பரிமாறினாள். உணவை உண்ட அவனுக்கு உறக்கம் வரவில்லை. பயம் ஒருபுறம்... "ஸ்கைலாப் எப்போ விழும்னு தெரியலையே!' என்ற தவிப்பு ஒருபுறம்... முருகா... முருகா... என்று முணங்கியவாறே உறங்கிப் போனான். விடிந்துவிட்டது. காலையில் அவன் கேட்ட முதல் குரல்...

ss

"ஆல் இன்டியா ரேடியோ... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி' எனும் குரல் கம்பீரமாக ஒலித்தது. "உலகையே மிரட்டிக்கொண்டிருந்த ஸ்கைலாப் நேற்றிரவு இந்தியப் பெருங்கடலில் விழுந்தது. நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது.'

படுக்கையைவிட்டு அவன் துள்ளி குதித்து தெருவுக்குவந்து தனது நண்பர்களுடன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டான். "எங்க அம்மா சொன்னாங்கடா... முருகனை நம்பு... உனக்கும் பூமிக்கும் ஒண்ணும் ஆகாதுன்னு...

அம்மா சொன்னது பலித்துவிட்டதுடா...' என்று நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தான் சிறுவன். அவனது பக்தியில், பக்தியைவிட நம்பிக்கை முக்கியமாகும். இங்கே திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.'

விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்ப வர்க்கு எந்த இடத்திலும், எக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை.

இங்கே சிறுவனின் அம்மா பிரபஞ்ச பேராற்றலாகிய சிவப் பரம்பொருளை, சிவத்தின் இன்னுமொரு பெயரான ஆறுமுகச் சிவன் பற்றி எண்ணி இரவு முழுவதும் பக்தி வழிபாடு செய்தாள். விளைவைப் பற்றி கவலைப் படவில்லை. நினைவு நல்லதாக இருந்ததால் விளைவும் நல்லதாகவே இருந்தது. பலனும் உயர்வாக இருக்கும். திருமூலரின் திருமந்திரம் சொல்வதைப் பார்க்கலாம்.

"முன்னைஒப் பாய்உள்ள மூவர்க்கு மூத்தவன்

தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்

தன்னைஅப் பாஎனில் அப்பறி மாய்உளன்

பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே.'

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரியும் மூவருக்கும் சிவப் பரம்பொருளே தலைமையானவன். இவன் தனக்கு உவமை சொல்லவியலாத தனிப்பெரும் தலைவனாவான். பெற்ற தந்தையைப்போல உயிர்களுக்கு அருள்பாலிப் பவனாகவும் உள்ள இவனே, பொன்னைப் போல போற்றத்தக்க பெருமையுடையவன். என் உள்ளத் தாமரையில் வீற்றிருக்கின்ற இறைவனும் இவனே. நமது உள்ளம் எனும் பெருங்கோவிலான அகத்தையே தனது இருப்பிடமாகக்கொண்ட பிரபஞ்ச பேராற்றலும் இவனே. அத்தகைய சிவப் பரம்பொருளை, பிரபஞ்ச பேராற்றலை இடைவிடாது மனதில் இருத்தி போற்றி வழிபடுபவருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஸ்கைலாப் இந்தியாவில் விழப்போகிறதென்று தெரிந்தவுடன், வந்தவன், போனவன், ஊர் பேர் தெரியாமல் கிராமத்தில் தங்கியிருந்த அத்தனை பேரும் மாமன், மைத்துனன் என்று உறவு கொண்டாடினார்கள். ஆடு, கோழி என்று அறுத்து விருந்தே வைத்தார்கள். விடிந்ததும் பார்த்தால் செயற்கைக் கோளும் விழவில்லை. ஒன்றும் விழவில்லை.

அவ்வளவுதான். பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது. முதநாள் இரவு மாமன், மைத்துனன், சகலை, பங்காளி என்று பேசியவரெல்லாம் விடிந்து செயற்கைக் கோள் விழவில்லையென்று தெரிந்தவுடனே ஒரு வருக்கொருவர் தெரியாத எவரோ மாதிரி போக ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிகழ்வு எதை உணர்த்துகிறது? மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பூமியில் விழுந்து பேராபத்தை விளைவிக்கப் போகின்றதென்ற அச்சம் எல்லாருக்கும் இருந்தது. ஆனால் உண்மையான இறைபக்தியுள்ள அந்தப் பெண்ணுக்குத் துளியும் பயமில்லை. ஏனென் றால் அவள் இறைவனே பிரபஞ்சப் பேராற்றல் எனும் உண்மையை நம்பினாள். பிரபஞ்ச பேராற்றல் என்பது நூறு சதவிகிதம் நேர்மறை ஆற்றல் (டர்ள்ண்ற்ற்ண்ஸ்ங்) நிரம்பிய விஷயமாகும். அது பூமிக்கு செயற்கையாக உண்டாகக்கூடிய ஆபத்தை- அதாவது எதிர்மறை ஆற்றலை அழித்தொழிக்கும் வல்லமை பெற்றது. அது பூமிக்குமேல் விழுந்து கேடுவிளைவிக்கும் ஸ்கைலாப் எனும் எதிர்மறை ஆற்றலை சிதறச்செய்து இந்தியப் பெருங்கடலில் மூழ்கடித்து உயிர்களைக் காப்பாற்றியது. பிரபஞ்சப் பேராற்றலுக்குள்தான் மாபெரும் கருணையாளனான "சிவம்' ஒளிந்து கொண்டிருக்கிறது.

இயற்கைக் கோள்களான கிரகங்களுடன் (டப்ஹய்ங்ற்ள்) செயற்கைக் கோள்களை (நஹற்ங்ப்ண்ற்ங்) ஒருக்காலும் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் இயற்கைக் கோளான கிரகங்களில் முழுமையாக என்ன இருக்கிறது என்பதை நம்மால் இன்றும் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை.

செயற்கைக் கோளில் என்ன இருக்கிறதென்பது நமக்குத் தெரியும். பிரபஞ்சத்தில் பல கோள்கள் பலதரப்பட்ட எடைகளுடன் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அக்கோள்களால் நமக்குத் துன்பமில்லை. இயற்கைக் கோள்களின் ஆயுட்காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் செயற்கைக் கோளின் ஆயுட்காலத்தை விஞ்ஞானிகளே தீர்மானிக்கின்றனர். செய்கைக் கோளின் இயங்கு திறனை நிரந்தரப்படுத்துவது சாத்தியமில்லை. ஏனென்றால் இங்குதான் இறைசக்தி- பரம்பொருளான சிவசக்தி (கிரியை) செயல்புரிகிறது. அதாவது பூமிக்கும், இயற்கைக் கும் கேடு விளைவிக்காத நற்செயல்கள். செயற் கைக் கோள்கள் வியாபாரத்திற்கானது. இயற் கைக் கோள்கள் வாழ்வாதாரத்திற்கானது.

ஒரு தனி மனிதனின் ஒழுக்கம் மேன்மையடையும்போது பிற உயிர்களுக்கோ, இயற்கைக்கோ துன்பம் நேருவதில்லை. ஒழுக்கத் தின் உயர்ந்த கோட்பாடுகளாக, சங்கத்தமிழ் நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை கூறுவதைப் பார்க்கலாம்.

"நன்றி அறிதல் பொறை உடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்பரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து.'

பிறர் செய்த உதவியை உணர்ந்து அதற்கு நன்றி பாராட்டுதல், பொறுமை உடையவ ராயிருத்தல், இனிய சொற்களையே பேசுதல், எந்தவொரு உயிர்க்கும் துன்பம்தரும் எதையும் செய்யாதிருத்தல், கற்றறிதல், உலகத்தோடு ஒட்டி வாழ எண்ணுதல், அறிவுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டிருத்தல், நல்ல குணம் உடையவர்களோடு நட்புகொண்டிருப்பது எனும் எட்டு உயர் பண்புகளே ஒழுக்கத்தின் உயிர் நாடிகளாகும்.

எனவே இயற்கையை நேசிப்போம். இயற்கையுள் ஒளிந்துகொண்டிருக்கும்- மறைபொருளாக இருக்கும் பரம்பொருளை யாசிப்போம். தியானிப்போம். திருமந்திரம் கூறுவதைப் பார்ப்போம்.

"ஊனாய் உயிராய் உணர்அங்கி யாய்முன்னம்

சேணாய்வ்ôன் ஓங்கித் திருஉரு வாய்அண்டத்

தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்து

ஆள்முழு(து) அண்டமு(ம்) ஆகிநின் றானே.'

உடலாக, உயிராக, அது உணரும் உணர்வாக,

உள் ஒளிரும் தீச்சுடராய், எட்டாத் தொலை வாய், விண்ணும் மண்ணும் அளக்க நின்ற பேருருவமாய், உலகத்தைத் தாங்கும் ஆதார மாக, சூரியனாய், சந்திரனாய், இவை எல்லா வற்றையும் கடந்து இவற்றை ஆளுகின்றவனாய் பரம்பொருள் அண்டம் முழுவதும் கலந்து நிற்கிறான்.

அந்த உலகையே தாங்கும் கருணை வடிவான சிவத்தை நினைப்போம். மனோபலத்தைப் பெறுவோம். எதைக்கண்டும் அஞ்சவேண்டி யதில்லை. இயற்கையோடு இணைந்து நேர்மறை சிந்தனையோடு பயணிப்போம். எதிர்வரும் எதிர்மறை அனைத்தும் தவிடுபொடியாகும். இயற்கையை வணங்கு... ஈசனை நம்பு... உன்னை ஒருபோதும் நாடாது தீங்கெனும் வம்பு!