க்தி செய்வது அவரவர் விருப்பம். எதைநோக்கி பக்தி செலுத்துகிறோம், எதைக் குறித்து பக்தி செய்கிறோம் என்பதும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்ப மாகும். இந்தியத் திருநாட்டில்- குறிப்பாக தமிழ்நாட்டில் பல்லாயிரம் தெய்வங்கள் மக்களின் அன்றாட வழிபாட்டில் இருக்கின்றன. அதாவது சிறு தெய்வங்கள், குலதெய்வங்கள், அதிதேவதைகள், காவல் தெய்வங்கள் என்ற வகையில் எண்ணிலடங்கா வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.

ஒருவர் ஒரு மரத்தைக்கூட வழிபடலாம். இது மூடநம்பிக்கை இல்லையா என்ற கேள்வியும் கூடவே வரும். ஆனால் மரங்களை வழிபடும் போது அதிலுள்ள அறிவியல் குறித்த கருத்தினை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு வேப்ப மரமும் அதோடு இணைந்தவாறுள்ள அரசமரமும் இன்றளவும் நமது ஒவ்வொரு கிராமத்திலும் வழிபடக்கூடிய மரங்களாக இருக்கின்றன. இந்த இரண்டு மரங்களின் இலைகளும் சித்த மருத்துவத்தில் தெய்வீக மூ-கைகள் என்று அழைக்கப்படுகிறது. சரி; வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் வழிபடு வதால் என்ன பயன் என்ற கேள்வி பலருக்கும் மனதில் எழுவது நியாயமான விஷயமே.

மரங்கள் மழைபொழியக் காரண மாக இருப்பது மட்டுமில்லாமல், மனநிம்மதியையும் தருகிறது. மரங் களை வழிபடுவ தென்பது கண்ணை மூடிக்கொண்டு செய்யும் செய லல்ல. அது கருத்தி யல் எனும் மனக் கண்ணைத் திறந்து, பகுத்தறிவோடு ஆராய்ந்து வழிபடும்பொழுது அதிலுள்ள மருத்துவ குணத்தையும், அறிவியல் ஆற்றலையும், இயற்கைப் பேராண்மையையும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

ss

வேப்பமரத்திலுள்ள இலைகளும், காய்களும், பழங்களும், மரத்தின் பட்டைகளும் என அனைத்து விஷயங்களுமே மருத்துவ குணம் நிறைந் தவை. இதில் "அசாடிராக்டின்' எனும் வேதிப் பொருள் உள்ளது. இதில் மேலும் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி, கரோட்டின் போன்ற வேதிப்பொருட்கள் இயற்கையாகவே உள்ளன. கூடுதலாக அஸ்பார்டிக் அமிலம், குளுட்டமிக் அமிலம் உட்பட பல கொழுப்பு அமிலங்களும் உள்ளன. மொத்தத்தில் வேம்பு எனப்படும் வேப்பமரமானது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் "சகல ரோக நிவாரணி' என்று அழைக்கப்படுகிறது. இதை ஒரு பூச்சிக்கொல்- என்று சாதாரணமாக சொல்-விட முடியாது.

ஏனென்றால் பல்வேறுவிதமான நுண்கிருமி களையும், எதிர்மறை பாக்டீரியாக்களையும் அழிக்கக்கூடிய ஆற்றல் படைத்தது. குறிப்பாக அம்மையை குணப்படுத்துவதில் அரும்பங்காற்று கிறது.வேம்பு வெளிப்படுத்தும் பிராணவாயு வானது மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

இதைப்போலவே அரசமரத்திலும் டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், விட்டமின்கள், ஸ்டெராய்டு, மெத்தயோனியன், கிளைசின் போன்ற சத்துகள் அடங்கிய வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பா-ல் கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர, மலட்டுத்தன்மையை குணமாக்கும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறு களை நீக்கக்கூடிய மாபெரும் ஆற்றலும் இதற்குண்டு. அதனால்தான் அந்தக் காலத்தில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரை ஒரு வளர்பிறைக் காலத்தில், அதிகாலையில் எழுந்து தலை குளித்துவிட்டு, அரசமரமும், வேப்பமரமும் இணைந்திருக்கும் இடத்திற்குச் சென்று வழிபடச் சொல்வார்கள். மரங்களின் அடியில் நாக வடிவில் ஒரு சிலையை வைத்திருப்பார்கள். இம்மரங்களை ஒரு நாளைக்கு 27 சுற்றுகள் சுற்றவேண்டும். இதைப்போன்று ஒரு மண்டலம்- அதாவது 48 நாட்களுக்கு சுற்றிவரவேண்டும். சுற்றி வரும்போது நமது பாதங்களிலுள்ள ஆயிரம் நரம்பு முடிச்சுகளும் (தங்ச்ப்ங்ஷ்ர்ப்ர்ஞ்ஹ்) அழுத்தப்படுகின்றன.

நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நாளமில்லா சுரப்பிகள் நன்றாக இயங்குகிறது. உட-ன் உள், வெளி உறுப்புகள் வலுவடைந்து சக்தியூட்டப்படுகிறது. ரத்த ஓட்டம் சீராகி, உட-ன் ஆற்றல் அதிகரிக்கிறது. அதிகாலை நேரத்தில் இம்மரங்கள் வெளிப்படுத்தக்கூடிய உயிர்க்காற்றில் அதியற்புதமான மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. தம்பதியர் இதி-ருந்து வெளிப்படக்கூடிய காற்றை சுவாசிக்கும்பொழுது அது உட-ல் பிராண சக்தியை அதிகரித்து, ஆண்- பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மையை சரி செய்கிறது. பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை சீராகி கருமுட்டைகள் வளமுடன் உருவாகின்றன. ஆண்களுக்கும் அணுக்களின் எண்ணிக்கையும், சக்தியும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக குழந்தை உருவாக்கம் (கருவுறுதல்) என்ற நிகழ்வு எளிதாகிறது.

ஒவ்வொரு பழமையான கோவில் களிலும் இருக்கக்கூடிய தலவிருட்சங்கள் (மரங்கள்) ஒவ்வொன்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகவே இருக்கிறது. யார் எதை வணங்கவேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லக்கூடாது. அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையை யும், விருப்பத்தையும் உள்ளடக்கி யது. மூடநம்பிக்கையைப் புரிந்து கொள்ளவேண்டுமென்றால் கல்வியறிவு மிக முக்கியமானது. அப்படி கல்வியறிவைப் பெறும்பொழுது இறை தரிசனம் எளிமையாகிறது. கல்வியைப் பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர்-

"நிற்கின்ற போதே நிலையுடை யான் கழல்

கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்

சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்

மற்றொன் றிலாத மணிவிளக்கு ஆமே'

என்கிறார்.

உயிர் உட-ல் இருக்கும்போதே, உலகில் உயிரோடும் உணர்வோடும் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே, அழிவற்ற- என்றும் நிலையாய் இருக்கின்ற இறைவனை உணர்ந்தறியும் கல்வியைக் கற்க முயற்சி செய்யுங்கள். அவ்வாறு செய்தால் பாவங்கள் அனைத்தும் பறந்தோடிப் போகும்.

சிவப் பரம்பொருளை மனமொன்றி வழிபடுங்கள். இப்படி வழிபாடு செய்வோர் ஒப்பற்ற ஞான விளக்கொளி காணப் பெறுவார்கள்.

கல்வியின் அவசியத்தைத் திருவள்ளுவர்-

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு'

என்கிறார். நிரம்பக் கற்றவனுக்கு எந்த நாடும் தனது நாடாகும். எந்த ஊரும் தன் ஊராகும். அவ்வாறிருக்க ஒருவன் தான் சாகும்வரை கல்வியறிவு பெறாமல், கல்வி கற்காமல் காலம் கழிக்கக்கூடாது.

பொய்யான தகவல்களைச் சொல்வது, பொய்யான வதந்திகளைப் பரப்புவது, தவறான வழிகாட்டுதல்கள் செய்யக் கூடியவனை, இந்நிகழ்வுகள் தற்கா-கமாக சந்தோஷப்படுத்தச் செய்யும். ஆனால் உண்மையான நிகழ்வுகளும், உண்மையான சுயநலமற்ற வழிகாட்டுதல்களும் (மூடநம்பிக் கையற்ற) நிரந்தரமான சந்தோஷத்தில் வைத்துக்கொள்ளும் என்பதை மறந்து விடக்கூடாது.

அதைப்போலவே மலடு என்றும், குருடு என்றும், ஊனம் என்றும் சொல்லக்கூடாது. ஏனென்றால் இறைவனது படைப்பில், இயற்கையின் படைப்பில் யாரும் ஊனமானவர்கள் இல்லை. யாரும் யாருக்கும் குறைவானவர்கள் இல்லை.

திறமை என்பது ஒவ்வொருவரிடமும் உள்ளது.

அத்தகைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கவேண்டும். கல்வியைப்போல் சிறந்ததொரு பகுத்தறிவுக் கருவி வேறொன்று மில்லை. அதில் கவனம் செலுத்தவேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் அதற்கான தகுதியும் உண்டு; பங்கும் உண்டு.

"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றும் இல்லை கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா.'

நமக்குக் குறை எதுவாக இருப்பினும், நாம் அது இல்லாதிருப்பது போன்ற- அதாவது குறை ஒன்றுமில்லை என்ற மனநிலையில் இருக்கும்போது, நாம் எப்போதும் இறைவனின் அருள் பார்வையைவிட்டு விலகமாட் டோம். "நான் எப்போதும் உன்னைக் கைவிடுவதுமில்லை; உன்னைவிட்டு விலகுவதுமில்லை' என்பது மாபெரும் இறைவன் வாக்காகும்.

நமது ஒவ்வொருவரின் மனமும் பக்குவமான நிலையைப் பெறும்பொழுது பற்றுக்கள்மீது பற்றிருக்காது.

இதைக் குறித்து திருமந்திர ஞானி திருமூலர்-

"கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்

தின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்

பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்

என்றிவை இறைபால் இயற்கை அல்லவே'

என்கிறார். பிறரைக் கோபித்தலும், கண்டதற்கு ஆசைப்படுவதும், தீய செயல்களைச் செய்வதும், அளவுக்கதிகமாக உண்ணுதலும், சுவைத்து இன்புறுதலும், மற்றவர்க்குத் தீமை செய்வதும், இல்லாததை எண்ணிக் குறைபட்டுக்கொள்வதும், தம்மையே புகழ்ந்து கர்வப்படுவதும், தற்பெருமை பேசித்திரிவதும் போன்றவையெல்லாம் இறைவனிடம் உண்மை யான அன்புகொண்ட, பக்குவம் பெற்ற பெரியோர்களின் இயல்புகளாக இருக்காது. இவை பக்குவம் பெறாத, கல்வியறிவு இல்லாதவர்களின் அற்ப ஆசைகளாக இருக்கும்.

இறைவன்மீது சந்தேகம் வேண்டாம். பக்திசெய்ய பயமும் வேண்டாம். நல்லதை நினைப்போம். நன்மையானவற்றைப் பெறுவோம் வதந்திகளையும் மூடநம்பிக்கையையும் தகர்த்தெறிந்து பகுத்தறிந்து தன்னம்பிக்கையுடன் இறைவன்மீதும், இயற்கைமீதும் பக்தி செய்வோம். பரம்பொருளின் அருளாசி எனும் பிரபஞ்ச பேராற்றலைப் பெறுவோம்.