"செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.''
சிறப்பு பொருந்தியவன் நீதியை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழிவழித் தலைமுறையினருக்கும் உறுதியான நன்மை தருவதோடு பாதுகாப்பாக இருக்கும்.
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லையென்று கூறிவிட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து "எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அவர்கள் "என்ன செய்யவேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர். "ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் மூழ்கும்போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டுவந்து இதை சேர்த்துவிடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்னமாதிரியே செய்தனர். திரும்பவந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறுதுண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டைக் கொடுத்தார்...! புனித நதியில் முழகிவந்த பாகற்காய்...! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்.
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்றவேகத்தில் முகம் மாறியது! தித்திக்கும்னிங்க கசக்குதே என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்...!
பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை புண்ணிய நதிகளில் தான் மூழ்கினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதைப்போலவே நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக்கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கினா லும், எந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும் என்ன பயன் வந்துவிடப்போகிறது? என்றார் ஞானி. மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் என்றார்.
மந்திரபுரி நாட்டை மன்னர் நன்மாறன் ஆண்டுவந்தார். அமைச்சர்களை அழைத்து, "பக்கத்து நாட்டு மன்னர்கள் அனைவரும் பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி உள்ளதா...' என்று கேட்டார்.
சிந்தித்தவாறே அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.
அவர்களை அழிக்க இயலாது... என்றார் ஒரு அமைச்சர்.
அதை ஒப்புக்கொள்வதுபோல, அவை அமைதியாக இருந்தது. "ம்... அந்த நாட்டை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை; நானே வழி கண்டுபிடிக்கிறேன்...' என்றார் மன்னர்.
சில நாட்களுக்குப்பின்... மந்திரபுரி நாட்டுத்தூதர்கள் பக்கத்து நாடுகளுக்கு சென்றனர். அந்தந்த நாட்டு மன்னர் களை வணங்கினர். மன்னர் நன்மாறன் கொடுத்தனுப்பிய ஓலையைத் தந்தனர். அதில்...
"மந்திரபுரி நாட்டில் கோடைவிழா சீரும் சிறப்புமாக நிகழ உள்ளது. தாங்கள் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெருமைபடுத்தவேண்டும்' என்றிருந்தது.
அழைப்பை ஏற்ற மன்னர்கள் மந்திரபுரி நாட்டுக்கு வந்தனர். மிகுந்த ஆரவாரத்துடனும், சிறப்புடனும் வரவேற்றார் மன்னர் நன்மாறன். பெருமையுடன் நடத்தினார். எந்தக்குறையும் ஏற்படாமல் கவனித்தார்.
பகை மன்னரை எல்லாம் ஒன்றாக வரவழைத்து இருக்கிறாரே.. சூழ்ச்சி செய்து அவர்களை கொல்லப் போகிறாரே...
இதனால் நாட்டிற்கு பெரும் பழி ஏற்படும் என்ற கலக்கத்தில் இருந்தனர் அமைச்சர்கள்.
கோடை விழா இனிதே முடிந்தது. விருந்தினர் களாக வந்திருந்த அண்டை நாட்டு மன்னர்கள் புறப்பட தயாராயினர். ஒவ்வொருவரையும், தனித்தனியே சந்தித்தார் நன்மாறன்.
உங்கள் வருகையால், எங்கள் நாடே பெருமை பெற்றது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று
"செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப் புடைத்து.''
சிறப்பு பொருந்தியவன் நீதியை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழிவழித் தலைமுறையினருக்கும் உறுதியான நன்மை தருவதோடு பாதுகாப்பாக இருக்கும்.
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள். ஞானியோ இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லையென்று கூறிவிட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து "எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
அவர்கள் "என்ன செய்யவேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர். "ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் மூழ்கும்போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டுவந்து இதை சேர்த்துவிடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்னமாதிரியே செய்தனர். திரும்பவந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறுதுண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டைக் கொடுத்தார்...! புனித நதியில் முழகிவந்த பாகற்காய்...! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்.
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்றவேகத்தில் முகம் மாறியது! தித்திக்கும்னிங்க கசக்குதே என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்...!
பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை புண்ணிய நதிகளில் தான் மூழ்கினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதைப்போலவே நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக்கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கினா லும், எந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும் என்ன பயன் வந்துவிடப்போகிறது? என்றார் ஞானி. மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் என்றார்.
மந்திரபுரி நாட்டை மன்னர் நன்மாறன் ஆண்டுவந்தார். அமைச்சர்களை அழைத்து, "பக்கத்து நாட்டு மன்னர்கள் அனைவரும் பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி உள்ளதா...' என்று கேட்டார்.
சிந்தித்தவாறே அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.
அவர்களை அழிக்க இயலாது... என்றார் ஒரு அமைச்சர்.
அதை ஒப்புக்கொள்வதுபோல, அவை அமைதியாக இருந்தது. "ம்... அந்த நாட்டை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை; நானே வழி கண்டுபிடிக்கிறேன்...' என்றார் மன்னர்.
சில நாட்களுக்குப்பின்... மந்திரபுரி நாட்டுத்தூதர்கள் பக்கத்து நாடுகளுக்கு சென்றனர். அந்தந்த நாட்டு மன்னர் களை வணங்கினர். மன்னர் நன்மாறன் கொடுத்தனுப்பிய ஓலையைத் தந்தனர். அதில்...
"மந்திரபுரி நாட்டில் கோடைவிழா சீரும் சிறப்புமாக நிகழ உள்ளது. தாங்கள் அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெருமைபடுத்தவேண்டும்' என்றிருந்தது.
அழைப்பை ஏற்ற மன்னர்கள் மந்திரபுரி நாட்டுக்கு வந்தனர். மிகுந்த ஆரவாரத்துடனும், சிறப்புடனும் வரவேற்றார் மன்னர் நன்மாறன். பெருமையுடன் நடத்தினார். எந்தக்குறையும் ஏற்படாமல் கவனித்தார்.
பகை மன்னரை எல்லாம் ஒன்றாக வரவழைத்து இருக்கிறாரே.. சூழ்ச்சி செய்து அவர்களை கொல்லப் போகிறாரே...
இதனால் நாட்டிற்கு பெரும் பழி ஏற்படும் என்ற கலக்கத்தில் இருந்தனர் அமைச்சர்கள்.
கோடை விழா இனிதே முடிந்தது. விருந்தினர் களாக வந்திருந்த அண்டை நாட்டு மன்னர்கள் புறப்பட தயாராயினர். ஒவ்வொருவரையும், தனித்தனியே சந்தித்தார் நன்மாறன்.
உங்கள் வருகையால், எங்கள் நாடே பெருமை பெற்றது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உதவி ஏதேனும் தேவையானால் தயங்காமல் கேளுங்கள்...' என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
விலை உயர்ந்த பொருட்களை அன்பளிப் பாகத் தந்து அன்புடன் கட்டித்தழுவி வழியனுப்பி வைத்தார். அண்டை நாட்டு மன்னர்கள் மகிழ்ச்சி யாகப் புறப்பட்டனர்.
அன்று அரியணையில் அமர்ந்திருந்தார் நன்மாறன். "மன்னா... பகைவர்களை எல்லாம் அழிக்கப் போவதாகக் கூறினீர். அது முடியாத என்று நாங்கள் கூறினோம். நாங்கள் கூறியது போலதானே நடந்தது...'' என்றார் அமைச்சர்.
"இல்லை... கூறியதுபோல பகை மன்னர் களை எல்லாம் அழித்து விட்டேனே...' என்றார் நன்மாறன்.
"எல்லாரையும் சிறப்பாக கவனித்து வழி அனுப்பிவைத்தீர். அவர்களை அழித்துவிட்டதாக சொல்கிறீர். ஒன்றும் புரியவில்லையே...'
"அமைச்சரே... பகை மன்னர்கள் இங்கேவந்து தங்கினர். அவர்கள்மீது அன்பு மழை பொழிந்தேன். நம் மீதான பகையை உள்ளத்திலிருந்து நீக்கி விட்டேன். அவர்கள் இனி நமக்கு பகைவர்கள் இல்லை அல்லவா...
உண்மைதான்... அன்பால் பகைமையை அழித்துவிட்டீர்....! என்றது அரசவை.
இயல்பை மாற்றிக்கொள்ளாத பாகற்காயைபோல் இல்லாமல் மன்னரைப்போல் இயல்பை மாற்றி அன்பு என்ற ஆயுதத்தால் பகைமை அழித்தது போல் அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு உன்னதமான ஒரு திருத்தலம்தான் திருக்கொண்டீஸ்வரம் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ பசுபதீஸ்வரர்.
இறைவி: அருள்மிகு சாந்தநாயகி.
புராணப் பெயர்: திருக் கொண்டீஸ்வரம்.
ஊர்: திருக்கொண்டீஸ்வரம்.
மாவட்டம்: திருவாரூர்.
மாநிலம்: தமிழ்நாடு.
தலவிருட்சம்: வில்வ மரம்.
தீர்த்தம்: க்ஷீர புஷ்கரணி தீர்த்தம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில் 135-ஆவது தலமாகவும், காவிரி தென்கரை தலங்களில் 72-ஆவது தலமாகவும் சிறந்து விளங்குகிறது.
"பாலகனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்புவந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.''
-திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசரால் 4-ஆம் திருமுறையில் ஒரு பதிகமும், 5-ஆம் திருமுறையில் ஒரு பதிகமும் பாடப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோவில்.
தலவரலாறு
ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதைக் கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாகப் பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையிலிருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வ வனத்தில் இறைவனைத்தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத்தோண்டுகிறாள். அவ்வாறு பூமியைத் தோண்டியபோது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இருபாகமாகக் கிழித்துவிட்டது. பாணமாக உள்ள லிங்கத்திலிருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம்கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பால் லிங்கத்தின்மீது பட்டவுன் அம்பிகை தன் சுய உரு பெற்றாள். லிங்கத்திலிருந்து இன்னும் ரத்தம் வடிவத்தைக்கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப்பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கத்தின் பாணத்திலுள்ள வெட்டுப் பகுதியைக் காட்டுவார்.
காமதேனு வழிபட்டதலம். "கொண்டி' என்றால் "துஷ்டமாடு' என்று பொருள். கொண்டி ஈசனை வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப் படுகிறது. திரு என்ற அடைமொழி சேர்த்து "திருக்கொண்டீஸ்வரம்' எனப் பெயர் பெற்றது.
சிறப்பம்சங்கள்
* இறைவனின் திருநாமம் ஸ்ரீ பசுபதீஸ்வரர், இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம்.
* இறைவியின் திருநாமம் அருள்மிகு சாந்தநாயகி. நின்றநிலையில் தெற்கு நோக்கி அழகுற அருள்பாலிக்கிறாள்.
* அம்பாள் சந்நிதிக்கும் சுவாமி சந்நிதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப் பட்ட மிகப்பழமையான "தேஷ்டாதேவி' அருள்பாலிக்கி றாள். ஜேஷ்டா என்றால் மூதேவி என்று அர்த்தம். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள்.
ஜேஷ்டாதேவி எனப்படும் தெய்வம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படுவாள். ஸ்ரீதேவியான சீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியான இவள் மூதேவி (மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. ஆனால் இவள் இத்தல வழிபாட்டுக்கு உரியவள்.
சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தரவேண்டுமென இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அனுக்கிரகம் அருளும் மூர்த்தியாக இவள் அருள்பாலிக்கிறாள்.
* சுவாமி மண்டபத்திலுள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜூரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபட வந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜூரஹரேஸ்வராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் தலபுராணம் சொல்கிறது. ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது.
ப் குருபகவான் வழிபட்டு பேறுபெற்ற நான்கு சிவலிங்கங் களில் இத்தலம் இரண்டாவது திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் இறைவன் தீர்த்தவாரி வழங்குவார்.
அன்றைதினம் சங்காபிஷேகமும் நடைபெறும். இதில் பங்குகொள்பவர்களின் பாவம் நீங்கி சுகவாழ்வு அமையும் என்பது ஐதீகம்.
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதமாகும்.
அமாவாசை, பௌர்ணமிக்கு முன்னதாக 15 நாட்களுக்கு ஒருமுறை திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷமாகும். இந்நாளில் சிவவழிபாடு செய்து பசுக்களுக்கு உணவளிப்பது மிகுந்த விசேஷமாக கூறப் படுகிறது. இறைவன் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருள்புரிவது கூடுதல் விசேஷம் என்கிறார் ஆலய அர்ச்சகர்.
பிரதோஷ காலமாகிய மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரையிலான நேரத்தில் இத்தலத்திற்கு ஒருமுறை வந்து நந்திக்கும், பசுபதீஸ்வரருக்கும் நடைபெறுகின்ற அபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்றவற்றை கண்டு, நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய்தீபமேற்றி, சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்தது. மேலும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை கூறி வழிபடுவது மிகவும் சிறந் தது என்கிறார் ஆலய அர்ச்சகர்.
பிரதோஷ மந்திரம்
"ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சர்வாய!
மஹாதேவாயதே நமஹ!.'
ஈஸ்வர தியான மந்திரம்
"நமசிவாய பரமேஸ்வராய
சசி சேகராய நம ஓம்
பவாயகுண சம்பவாய
சிவதாண்டவாய நம ஓம்
சிவாய நம ஓம் சிவாய நம
சிவாய நம ஓம் நம சிவாய
சிவாய நம ஓம் சிவாய நம
சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய- சிவாய நம
ஓம் சிவாய சங்கரா
ஓம் சிவாய நமசிவாய ஓம்
சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் நமசிவாய
சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய
சங்கரா'.
தல விருட்சமான வில்வமரத்திற்கு நீர்ஊற்றி, பிரதோஷ கால அபிஷேக பூஜையை கண்டு வணங்கி ஆலயத்தில் அமர்ந்து மேற்கண்ட ஈஸ்வர தியான மந்திரத்தை ஐந்து முறை மனமுருக வாசித்து வில்வ அர்ச்சனை செய்து வழிபாடுகள் மேற்கொண்டால் பலகார பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மன அழுத்தமில்லாமல் பிரகாசமான வாழ்வை திருக்கொண்டீஸ்வரத்தில் உறையும் பசுபதீஸ்வரர் வழங்குவார் என்று பெருமிதத்துடன் உறுதி கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகர் வெங்கடேச சிவாச்சார்யார் அவர்கள்.
* தமிழ்நாடு அரசு இந்து சமய அற நிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற இவ்வாலயத்தில் சிவாலயத் திற்குரிய அனைத்து வழிபாடுகள் நடந்தாலும் குறிப்பாக சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ராகு- கேது பெயர்ச்சி மற்றும் மகாசிவராத்திரி காலங்கள் விசேஷ ஹோமங்கள், அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுவது குறிப் பிடத்தக்கது.
* பிரதோஷ விரதம் போல் மாதாந்திர சிவராத்திரி தினத் தன்றும் விரதம் இருந்து வழிபட, வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அன்னை பார்வதி தேவி ஒருமுறை பிரளயம் முடிந்து உலகமே இருள் சூழ்ந்திருந்தபோது, சிவபெருமானை குறித்து தவம்செய்து உலக மக்கள் நன்மைக்காக மீண்டும் உலகைப்படைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அதையடுத்து பார்வதிதேவியின் விருப்பத்தை பூர்த்தி செய்த சிவபெருமான், யாரொருவர் உன்னைப்போன்று சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து வழிபடுகிறார்களோ அவர்கள் விரும்பியது அனைத்தும் கிடைக்கும் என்றார்.
மேலும் சிவராத்திரி தினத்தின் நள்ளிரவில் சிவபெருமானின் சக்தி அதிகரிப்ப தைக் கண்டறிந்த சித்தர்கள், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவேண்டும் என்று கருதினர். அதற்காக சிவபஞ்சாட்கர மந்திரத்தை கண்டறிந்து அம்மந்திரத்தை நள்ளிரவில் 108 முறை கூறி வழிபடுவது மிகச்சிறந்தது என்றனர்.
சிவ பஞ்சாக்னி மந்திரம்
"அறிஓம் ஐயும் கிலியும்
சௌவும் றீயும் ஸ்ரீயும்
நமசிவய மசிவயந
சிவயநம வயநமசி
யநமசிவ ஸ்வாஹா'
மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரி, வாரத்தின் ஏதாவது ஒரு கிழமையில் வருவது இயல்பு. அதன்படி ஒவ்வொரு கிழமைக்கும் தனித்தனி பலன்கள் உண்டு.
திங்கட்கிழமை வருகின்ற சிவராத்திரி தினத்தன்று சிவாலயம் சென்று இறைவனை தரிசித்தால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இருப்பதுடன் மறுபிறவி இல்லாத பாக்கியமும், கோவில் கட்டக்கூடிய யோகமும் கிடைக்கும்.
செவ்வாய்கிழமை யன்று சிவராத்திரி தினத் தில் இறைவனை தரிசிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் அல்லது அரசாங்கத்தில் அமைச்சராகும் யோகம் கிட்டும்.
புதன்கிழமையன்று வருகின்ற சிவராத்திரியன்று இறைவனை தரிசிப்பவர்கள் சங்கு சக்கரத்துடன்கூடிய விஷ்ணுபகவானை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும்.
வியாழன்கிழமையன்று வருகின்ற சிவராத்திரியன்று சிவன் கோவில் செல்பவர்களுக்கு ஆன்மிகத்தில் உயர்ந்த குரு கிடைப்பதுடன் குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்யும் வாய்ப்பு கிட்டும்.
வெள்ளிக்கிழமையன்று வருகின்ற சிவராத்திரியன்று சிவனை தரிசிப்பவர்களுக்கு தன்னை அறிந்து ஞானியாகும் பேறு கிட்டும்.
சனிக்கிழமையன்று வருகின்ற சிவராத்திரியன்று சிவனை தரிசிப்பவர்கள் சனிபகவானால் ஏற்படும் 7 1/2 சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி போன்ற அனைத்து துயரங்களும் விலகும்.
ஞாயிற்றுகிழமையன்று வருகின்ற சிவராத்திரியன்று சிவனை தரிசிப்பவர்களுக்கு சூரிய பதவி கிடைப்பதுடன் சூரியனைப் போல பிரகாச வாழ்வு கிட்டும்.
திருக்கோவில் அமைப்பு
சோழ மண்டலத்திலே காவிரி தென்கரையிலும்; முடிகொண்டான் ஆற்றின் தென்கரையிலும்; நீர்வளம் நிலவளம் மிகுந்த பகுதியில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, கிழக்கு நோக்கிய முகப்புவாயிலின்மேல் பசு சிவலிங்கத்தின்மேல் பால் சொரிவது போன்ற சுதைச் சிற்புத்துடன் அழகுற அமைந்துள்ளது. தெற்கு, மேற்கு, வடக்கு என மூன்று புறமும் நீர்நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோவில். இந்த அகழியே க்ஷீர தீர்த்தம் எனப்படுகிறது. வாயிலைக்கடந்து உள்ளே சென்றால் கொடிமர, விநாயகர், பலிபீடம், நந்திமண்டபம் உள்ளது. அதன் வலப்புறம் வடக்கே அகழிக்கு அருகில் தலவிருட்சம் வில்வமரம் உள்ளது.
அடுத்து 2-ஆம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரே ஒரு பிராகாரத்துடன் தோற்றமளிக்கின்ற வெளிப் பிராகாரத்தில் கன்னி மூலகணபதி, சுப்ரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் காட்சிதருகின்றனர். மேற்கு புறம் பிரம்மபுரீஸ்வரர், அகத்தீஸ்வரர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன. பைரவர், நவகிரகங்கள் திருநாவுக்கரசர், சனீஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன.
அடுத்து வௌவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்மன் சாந்தநாயகி தெற்கு நோக்கி நின்றநிலையில் தனிச் சந்நிதியுடன் அருட்காட்சி தருகிறாள். தலவரலாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இம்மண்ட பத்தில் ஆபத்சாகய மகரிஷி உருவமும் உள்ளது. அடுத்து கருவறை மண்டபத்தில் மூலவர் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக் கிறார். சிறிய பானத்தினுடனுள்ள சிவலிங்கத் திருமேனி வடுபட்டு பிளந்ததுபோல் காட்சியளிக்கும். சுவாமி மண்டபத்திலுள்ள ஒரு தூணில் மூன்று தலைகள் மூன்று கால்களுடன் ஜூரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார். சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட பழமையான "ஜேஷ்டாதேவி' அருள் பாலிக் கிறாள்.
உயிரோட்டமுள்ள இத்தலத்திற்கு வாழ்வில் ஒருமுறையாவது நல்ல நாளை தேர்வுசெய்து ஆலயத்தை வலம்வந்து வழிபட்டு வளமுடன் வாழுங்கள். மகிழ்வுடன் தங்களது எதிர்காலம் செல்லும் என்கிறார் செயல் அலுவலர் அவர்கள்.
நடைதிறப்பு: காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில், திருக்கொண்டீஸ்வரம் நன்னிலம் த.ங.ந., சன்னாநல்லூர் (வழி), தூத்துக்குடி அஞ்சல், திருவாரூர் மாவட்டம்- 609 504.
பூஜை விவரங்களுக்கு: ஆலய பிரதான அர்ச்சகர் டி.கே. வெங்கடேச சிவாச்சார்யார், அலைபேசி: 94430 38854, 82707 87135.
அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சன்னா நல்லூர் வழியாக வருபவர்களும், திருவாரூரிலிருந்து நன்னிலம் வருபவர்களும் நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துக்குடி நிறுத்தம் என்னுமிடத்தில் இறங்கி பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமை யில் உள்ளது திருக்கொண்டீஸ்வரம் கோவில்.
படங்கள்: போட்டோ கருணா