"காலம்' என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடைபட்டது. பூமியில் நேரம், காலத்தை சூரியனை வைத்தே நிர்ணயம் செய்கிறோம்.

சூரியன் கிழக்கே உதித்தால் அது காலை நேரம். அதுவே மேற்கே மறைந்தால் மாலை நேரம். இடைப்பட்ட காலம் மதியம். இதுதான் காலம் என்பது. காலத்தில் நல்ல காலம், கெட்ட காலம் என்று இரண்டு வகையுள்ளது. ஒருவனுடைய காலம் நல்லகாலமாக இருந்தால் அவன் "ஓஹோவென்று வாழ்க்கை நடத்துகிறான்.

தொட்டதெல்லாம் வெற்றியாகிறது.

அப்போது அவனைச்சுற்றி ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆஹா... ஓஹோவென்று புகழ்கின்றனர். மகிழ்ச்சியாக இருக்கிறான்.

Advertisment

dd

அதே கெட்ட காலம் வந்துவிட்டால், "அப்பாடா பட்டதே போதுமடா சாமி'' என்று புலம்புகிறான். எந்த வேலைக்குப் போனாலும் நடக்காது. எதிர்பார்த்த பணம் கிடைக்காது. நொந்து நூலாய்ப் போய்விடுவான். தொட்ட வேலை துலங்காது. இழுபறியாகும். ஏன்டா இந்த வேலையை தொட்டோம் என்று புலம்புவான். நேரம், காலமே சரியில்லையென்று வேதனைப்படுவான். இப்போ எனக்கு நேரம், காலம் சரியாக இல்லையென்று அனைவரிடமும் சொல்வான்.

இந்த நேரம், காலத்தை கணிப்பவர்கள் சூரியனை சுற்றிவரும் ஒன்பது நவகிரகங்கள் இவற்றிலே சில கிரகங்கள் நல்லதைச் செய்யும். சில தீமையைச் செய்யும். நல்லதோ- தீமையோ அவை எதைச் செய்தாலும், அவனவன் முன்வினையை வைத்தே அவை செயல்படும். முற்பிறவியில் பாவம் செய்திருந்தால் அதே பாவத்தை அவனுக்கே திருப்பியளித்து தெளிவுபடுத்தும். புண்ணியம் செய்திருந்தால் அதற்குத்தக்கபடி அள்ளிக்கொடுத்து அவனை உயர்த்திவிடும். இவற்றைத் தான் "காலம்' தன் கையில் வைத்திருக்கின்றன.

"கர்மா' என்பது முன் வினை. சென்ற பிறவியில் நீ செய்த நன்மை- தீமை களே "கர்மா' என்பது. சில பேர் சில சிக்கல்களில் மாட்டிக் கொண்டு பரிதவித்தால் "என்ன ஐயா! பண்றது. போன பிறவியில் நான் செய்தது, அதை இப்போது அனுபவிக்கிறேன்'' என்பார். ஆக, கர்மா என்பது நம்மைத் தொடர்ந்து வரும் வினைப் பயன். இது ஏழு பிறவிக்கும் தொடர்ந்து வரக்கூடியது என்று சாஸ்திரம் சொல்கிறது. காலத்திற்கும் கர்மாவுக்கு தொடர்பிருந்து கொண்டே இருக்கும். ஒருவனுக்கு நல்லகாலம் நடக்கிறது என்றால், அந்த காலம் கர்மாவிடம் சென்று "இவனுக்கு இப்போது நல்லகாலம். எனவே இவன் நல்ல, நன்மை செய்த "கர்ம' வினைகளிலிருந்து இவனுக்கு நல்லது செய். இவனை நன்றாக வைத்திரு. உயர்த்து என்று கூறும். அப்போது "கர்மா' அவன் செய்த நன்மைகளிலிருந்து அவனுக்கு உயர்வைத்தரும். அப்போது தொட்டதெல்லாம் வெற்றியாகும். தேடாமலே செல்வம் சேரும். நோய்நொடி இருக்காது. குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல கெட்டகாலம் வந்துவிட்டால், அந்த காலம் கர்மாவிடம், "இவனுக்கு இப்போது கெட்டகாலம். இவன் முற்பிறவியில் செய்த தீவினைக் கேற்ப பலனைக்கொடு'' என்று சொல்லிவிடும். காலம் சொல்லியபடியே அவன் செய்த தீவினைக்கேற்ப பலனைக் கொடுக்கும்.

அப்போது அவன் படாதபாடு படுவான். நோய் நொடிகள், கடன்தொல்லை, இருப்பதை இழப்பது, தொட்டதெல்லாம் இழுபறி யாகும். நொந்துபோவான். இது கர்மா செய்யும் கடமை.

"விதி' என்பது ஏற்கெனவே எழுதப்பட்டது. அவனவன் தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கிறது. காலம், கர்மாவிடம் சொல்வது போல "கர்மா' விதியிடம் அவனவன் செய்த நல்வினை- தீவினைக்கேற்ப நான் தரும் பலா பலன்களைச் செயல்படுத்து என்று சொல்லும். ஆக காலமும், கர்மாவும் தரும் பலா பலன்களைச் செயல்படுத்து வதே விதியின் செயல். எப்படி ஒரு ரயில் வண்டியை இன்ஜின் தண்டவாளத்தில் "இசகுபிசகு' இல்லாமல் இழுத் துக்கொண்டுபோய் சேர்த்த வேண் டிய இடத்தில் சேர்த்துகிறதோ அது போல விதியானது காலம், கர்மாவின் கட்டளை யைக் கொண்டுசென்று சேர்த்து விடும்.

காலம், கர்மா, விதி என்ற இந்த மூன்றும் தான் மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்து கின்றன. இந்த மூன்றும் நவகிரகங்களுக்கு அவ்வப்போது செய்திகள் அனுப்பிவைக்கும். இவற்றின் கட்டளைப்படி. நவகிரகங்கள் செயல்படும். ஒருவனது ஜாதகத்தில் கோட்சார ரீதியாகப் பார்த்தால், அந்தந்த கிரகங்களின் நிலை சரியாகத் தெரியவரும். அதைத் தெரிந்து கொண்டு அந்தந்த நவகிரகங்களை வழி பட்டால் நமக்கு நன்மையே நடக்கும். நல்ல காலம் நவகிரகங்கத்தின் நிலமை இருந்தால், அந்த நவகிரகத்தை வழிபாட்டால், நன்மையே நடக்கும் கெட்ட காலத்தில் நவகிரகம் நிலமை இருந்தால் தீமைகள் தோன்றும். அப்போது அந்த கிரகத்தை அறிந்து வழி பட்டால் துன்பமும், துயரும் குறையும். இதையறிந்து புரிந்து செயல்பட்டால் மனிதனுக்கு மயக்கம் தெளிந்துவிடும். வாழ்க்கை வளமாக அமைந்துவிடும். இறைவன்கூட இதுதான் அவன் தலைவிதி என்றால், அவனும் அதையே செய்வான். எங்கு, எப்படி நாம் போனாலும் தலைவிதி மட்டும் கூடவேவரும்.