1981-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர், சென்னை ஆவடியிலிருந்து என்னைப் பார்க்க வந்தார். அரிமா சங்கம் சம்பந்தமான விழாவில் பேச அழைத்தார். நானும் ஒப்புக்கொண்டேன்.
அந்த நேரம் ஆறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். வந்தவர் என்னிடம், "சார், பெரியார், கார்ல் மார்க்ஸ் என்றெல்லாம் பேசுகிறீர்கள்; நாடி ஜோதிடம் என்று ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்றார்.
உடனே எனக்கு 1973-ல் எம்.ஜி.ஆருக்கு நாடி பார்த்தது நினைவுக்கு வந்தது. நான் அவரிடம், "ஓரளவுக்குத் தெரியும்'' என்றேன். அவர் நம்பமுடியாத, அதிசயமான பல செய்திகளைக் கூறினார். அதைக்கேட்ட எனக்கு நாடி ஜோதிடத்தின்மீது இன்னும் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
தந்தைப் பெரியார், பத்திரிகையில் நாடி ஜோதிடத்தைப் பற்றி சொல்லியிருந் தார். அதாவது "நாடி ஜோதிடம் என்று ஒன்றிருக்கிறது. அதைப்பற்றி பலர் வியப்புடன் கூறுகிறார்கள். எனக்கு வயதாகிவிட்ட காரணத்தால், என்னால் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்ய முடியாது. எனவே, இளைஞர்கள் இதற்கான முயற்சியை எடுத்து, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் அதை ஆராய்ந்து- அதற்குரிய விஞ்ஞான விளக்கத் தைக் கொடுக்க முன்வரவேண்டும்' என்றார்.
இதைப் படித்ததும் "இந்தப் பொறுப்பை நாம் எடுத்துக்கொண்டு செய்தால் என்ன?' என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் எனக் கும் சிறுபிள்ளையில் இருந்தே ஜோதிடத் தைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, பிறகு நம்பியும் நம்பமுடியாமலும் இருந்துவந்தேன்.
நானும் பல்வேறு புத்தகங்களைப் படித்துள்ளதால், இதை அலசி ஆராய்ந்து உண்மையை விஞ்ஞானப்பூர்வமாக கண்டு பிடிக்க முடியுமென்று நினைத்தேன். அதன் பிறகுதான் இதற்கான ஆய்வில் இறங்கினேன்.
1983-ஆம் ஆண்டு "யாமிருக்க பயம் ஏன்?' என்ற திரைப்படத்துக்கான படப் பிடிப்பு முதலில் காரைக்குடி, குன்றக்குடி ஆகிய இடங்களில் நடப்பதாகத்தான் திட்ட மிடப்பட்டது. கடைசி நேரத்தில் வைத்தீஸ் வரன் கோவில் என்று மாற்றப் பட்டது. நான் படப்பிடிப்பிற்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புறப் பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, என்னுடைய அத்தை மகள் என் வீட்டுக்கு வந்தார். என்னிடம், "ஷூட்டிங் எங்கே?'' என்றார்.
நான், "வைத்தீஸ்வரன் கோவில்'' என்று சொன்னேன். உடனே அவர், "அங்கு நாடி ஜோதிடம் என்று ஒன்றிருக்கிறது. மறக்காமல் பார்த்துவிட்டு வாருங்கள்'' என்றார்.
நாடி ஜோதிடத்தில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. அன்று மாலை பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களை சந்தித்தேன்.
அவரும் இதேபோல் "மறக்காமல் நாடி
1981-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர், சென்னை ஆவடியிலிருந்து என்னைப் பார்க்க வந்தார். அரிமா சங்கம் சம்பந்தமான விழாவில் பேச அழைத்தார். நானும் ஒப்புக்கொண்டேன்.
அந்த நேரம் ஆறு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். வந்தவர் என்னிடம், "சார், பெரியார், கார்ல் மார்க்ஸ் என்றெல்லாம் பேசுகிறீர்கள்; நாடி ஜோதிடம் என்று ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்றார்.
உடனே எனக்கு 1973-ல் எம்.ஜி.ஆருக்கு நாடி பார்த்தது நினைவுக்கு வந்தது. நான் அவரிடம், "ஓரளவுக்குத் தெரியும்'' என்றேன். அவர் நம்பமுடியாத, அதிசயமான பல செய்திகளைக் கூறினார். அதைக்கேட்ட எனக்கு நாடி ஜோதிடத்தின்மீது இன்னும் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
தந்தைப் பெரியார், பத்திரிகையில் நாடி ஜோதிடத்தைப் பற்றி சொல்லியிருந் தார். அதாவது "நாடி ஜோதிடம் என்று ஒன்றிருக்கிறது. அதைப்பற்றி பலர் வியப்புடன் கூறுகிறார்கள். எனக்கு வயதாகிவிட்ட காரணத்தால், என்னால் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்ய முடியாது. எனவே, இளைஞர்கள் இதற்கான முயற்சியை எடுத்து, பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் அதை ஆராய்ந்து- அதற்குரிய விஞ்ஞான விளக்கத் தைக் கொடுக்க முன்வரவேண்டும்' என்றார்.
இதைப் படித்ததும் "இந்தப் பொறுப்பை நாம் எடுத்துக்கொண்டு செய்தால் என்ன?' என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் எனக் கும் சிறுபிள்ளையில் இருந்தே ஜோதிடத் தைப் பற்றிக் கேள்விப்பட்டு வியந்து, பிறகு நம்பியும் நம்பமுடியாமலும் இருந்துவந்தேன்.
நானும் பல்வேறு புத்தகங்களைப் படித்துள்ளதால், இதை அலசி ஆராய்ந்து உண்மையை விஞ்ஞானப்பூர்வமாக கண்டு பிடிக்க முடியுமென்று நினைத்தேன். அதன் பிறகுதான் இதற்கான ஆய்வில் இறங்கினேன்.
1983-ஆம் ஆண்டு "யாமிருக்க பயம் ஏன்?' என்ற திரைப்படத்துக்கான படப் பிடிப்பு முதலில் காரைக்குடி, குன்றக்குடி ஆகிய இடங்களில் நடப்பதாகத்தான் திட்ட மிடப்பட்டது. கடைசி நேரத்தில் வைத்தீஸ் வரன் கோவில் என்று மாற்றப் பட்டது. நான் படப்பிடிப்பிற்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புறப் பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, என்னுடைய அத்தை மகள் என் வீட்டுக்கு வந்தார். என்னிடம், "ஷூட்டிங் எங்கே?'' என்றார்.
நான், "வைத்தீஸ்வரன் கோவில்'' என்று சொன்னேன். உடனே அவர், "அங்கு நாடி ஜோதிடம் என்று ஒன்றிருக்கிறது. மறக்காமல் பார்த்துவிட்டு வாருங்கள்'' என்றார்.
நாடி ஜோதிடத்தில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. அன்று மாலை பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களை சந்தித்தேன்.
அவரும் இதேபோல் "மறக்காமல் நாடி ஜோதிடம் பார்த்துவிட்டு வாருங்கள்'' என்றார். எனக்கும் வெகுநாட்களாக அந்த மர்மமான அதிசயத்தைப் பார்க்கவேண்டுமென்று எண்ணம் இருந்தது.
அன்று ரயிலில் என்னுடன் படப்பிடிப்பிற்கு வந்தவர் நடிகர் "வெண்ணிற ஆடை' மூர்த்தி அவர்கள். அவர் வக்கீலுக்கு படித்தவர். அதுமட்டுமல்லாமல் ஜோதிடம், கைரேகை, தலபுராணங்கள், பகவத் கீதை, மகாபாரதம், இராமாயணம் மற்றும் பல்வேறு துறைகளிலும் நல்ல தேர்ச்சிபெற்றவர். நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பல்வேறு துறைகளைப் பற்றிப் பேசியுள்ளோம்.
உதாரணமாக, "மெட்டி' என்ற படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் மாலை 5.00 மணிக்கு நானும், "வெண்ணிய ஆடை' மூர்த்தியும் பேச ஆரம்பித்தோம். பேச்சு விடியற்காலை 6.00 மணி வரை நீண்டது. பிறகு, பேச்சை முடித்துக்கொண்டு இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றோம்.
அதாவது ஒரு விஷயத்தில் தொடங்கி சங்கிலித் தொடர்போல பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினோம். எங்களுடைய உரையாடலையும், விவாதத்தையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம், "மெட்டி' படத்தின் இயக்குநர் மகேந்திரன், நடிகர் செந்தாமரை, தயாரிப்பாளர் கணேசன் போன்றோர்.
இந்தச் செய்தி பிரபல வார இதழில் "13 மணி நேரம் இடைவிடாத பேச்சு, விவாதம்' என்ற தலைப்பில் அந்த நேரத்தில் வந்தது. சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களும் அலசப்பட்டன.
அலசியவர்கள் "வெண்ணிற ஆடை' மூர்த்தி மற்றும் நடிகர் ராஜேஷ் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட "வெண்ணிற ஆடை' மூர்த்தியிடம் "வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்கவேண்டும் சார்; எனக்கு உதவிசெய்யுங்கள்'' என்றேன்.
அதற்கு அவர் கேலியாக "என்ன, பெரியார் சிஷ்யன், மார்க்ஸியவாதி, பகுத்தறிவு சிங்கம் நாடி பார்க்கவேண்டும் என்று சொல்கிறது? இன்னும் திருமணமாகவில்லை என்ற பயமா? (அப்பொழுது எனக் குத் திருமணமாகவில்லை). எது எப்படியிருந்தாலும் கடைசி காலத்தில் மதம், கடவுள், ஜாதகம் போன்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும்'' என்றார்.
பிறகு, இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம். என்ன ஆச்சரியம்! அன்று எங்கள் இருவருக்கும் "ஷூட்டிங்' இல்லை. "நாளைதான் உங்களுக்கு ஷூட்டிங்'' என்றார் அஸோஸியேட் டைரக்டர். எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளவிட முடியவில்லை.
உடனே, ஏடு ஜோதிடம் பார்க்கப் புறப்பட்டோம். அங்கு சென்றவுடன் எங்களுடைய வலது கையின் பெருவிரல் ரேகையைப் பத்திர அலுவலகத்தில் செய்வதுபோல் பதிவுசெய்தார்கள்.
என் பெருவிரல் ரேகையின் அருகில், "கொடிமலர் குறுக்கு ரேகை புள்ளி மூன்று' என்று எழுதினார் கள். நான் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர்கள், "மனிதனின் கட்டைவிரலில் 218 வகையான ரேகைகள் உண்டு. அதில் புள்ளி ஒன்று, புள்ளி இரண்டு, புள்ளி மூன்று என்று பிரிக்கப்பட்டுள்ளது'' என கூறினர்.
நான் மவுனமாக இருந்தேன்.
"உங்களது ரேகை கொடிமலர் குறுக்க ரேகை புள்ளி மூன்று. இந்தவகை ரேகை உள்ள ஜாதகக் கட்டை எடுத்துவந்து பார்த்துச் சொல்வோம்'' என்றார்.
அந்நேரம் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது. என்னுடைய பெற்றோர் எனக்கு வைத்த பெயர் வேறு. 1969-ஆம் ஆண்டு நடிகர் ராஜேஷ் கண்ணா நடித்த "ஆராதனா' என்ற இந்திப் படம், மிகப்பெரிய வெற்றி யடைந்து ஓடிக்கொண்டிருந்தது. எனவே, அந்த வெற்றி நாயகனின் பெயரை சுருக்கி "ராஜேஷ்' என்று நான் வைத்துக்கொண்டேன். அரசாங்க "கெஸட்'டிலும் மாற்றிவிட்டேன்.
என்னுடைய முதல் படமான "கன்னிப் பருவத்திலே' 1979-ஆம் ஆண்டு வெளியானது. நான் நாடி ஜோதிடம் பார்க்க வந்தது 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி. எனவே, என்னைப் பார்த்தவுடன் "ராஜேஷ்' என்று என்னுடைய பெயரை எழுதிக்கொண்டார்கள்.
நான் உண்மையான பெயரைச் சொல்ல வில்லை. பிறகு அவர்கள், "ஏடு தேடியெடுக்க இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும்.
அதுவரை கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்'' என்றார்கள்.
அதுவரை கோவிலுக்குச் செல்லாத நான், அவர்கள் கூறியபடி "வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் சென்று தரிசித்துவிட்டு பக்திப் பழமாக வெளியேவந்தேன்.
பிறகு, நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றோம்.
முதலில் பார்த்தது நான்தான். ஆனாலும், என் வாயிலிருந்து எந்த ஒரு உண்மையையும், நாடி ஜோதிடர்களால் வரவழைக்க முடியாதபடி உறுதியாக இருந்தேன்.
வழக்கம்போல, "உண்டா... இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள். நீங்கள் எதுவும் எங்களுக்கு சொல்லவேண்டாம்'' என்றார் கள். அதன்படி கார்ல் மார்க்ஸ், லெனின், தந்தை பெரியார், இங்கர்சால் போன்றவர்களை எனக்குள் கொண்டு வந்துவிட்டேன். என்னிடமிருந்து எதுவும் அவர்கள் தெரிந்துகொள்ள முடியாதபடி பதில் சொன்னேன்.
முடிவில் ஒரு பாடல் சொன் னார்கள். அப்பொழுதுதான் எனக்கு தலை சுற்றியது. உலகத்தின் இன்னொரு பகுதியை நான் பார்த்தேன். ஏதோ மறுபிறப்பு எடுத்ததைப்போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் நடிகன் என்பதால் எனக்குள் பல உணர்வுப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
"விரோதி ஆண்டு, மார்கழி மாதம் 5-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு, சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம், லக்னத்தில் சனி, கன்னியில் செவ்வாய், கேது, தனுசுவில் சூரியன், புதன், சந்திரன், மகரத்தில் குரு, சுக்கிரன், மீனத்தில் ராகு இருக்க, வில்லியம் என்கிற அப்பாவுக்கும், வில்லி கிரேஸ் என்கிற அம்மாவுக்கும் இரண்டாவது சூலாக வந்து அவதரித்த, சுவாட்ஸ் சாமுவேல் என்கிற பெயர் கொண்ட, ராஜேஷ் என்னும் துணைப்பெயர் பின் சேர்க்க, சூல (மூன்று) சகோதரர்களையும், பட்டம் படித்த ஒரு சகோதரியையும் பெற்று தன்னுடைய 34-ஆவது வயதில் நம்பிக்கையுடனும், பொறுப்புடனும், வசிஷ்டனாகிய என்னைத் தேடி தன்னுடைய பிறந்தநாளில் வந்திருக்கும் இயேசு குல மைந்தனே... உனக்கு உன் எதிர்காலத்தை உரைக்கிறேன்; கேளப்பா'' என்று வாசித்தார்!
இதைக்கேட்ட எனக்கு அதிர்ச்சி. பூமியே சுற்றுவதுபோல் தெரிந்தது. வாழ்க்கையில் அதுவரை எந்தவொரு நிகழ்ச்சியும் என்னை வியப்பில் ஆழ்த்தியதில்லை.
நாடி ஜோதிடம் படித்தவர்களைப் பார்த்து, "நான் பிறந்தது டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி. நீங்கள் செப்டம்பர் 27-ஆம் தேதியாகிய இன்று பிறந்தநாள் என்று கூறுகிறீர்களே?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள். "பிறந்தநாள் என்றால் பிறந்த கிழமை என்று அர்த்தம். அதன்படி பார்த்தால் இன்று செவ்வாய்க்கிழமை. நீங்களும் செவ்வாய்க்கிழமை தானே பிறந் தீர்கள்?'' என்றார்கள். "ஆமாம்'' என்றேன்.
இதில், மற்றொரு அதிசயம்! வெளியில் யாருக்கும் தெரியாத ஒரு உண்மையும் நாடியில் வந்தது. அதாவது, எனக்குமுன்பு ஒரு பிள்ளை என் தாயின் கருவில் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு சிதைவு ஏற்பட்டுவிட்டது. எனவே, இருப்பதில் நான் மூத்த பிள்ளை. கருவின் அடிப்படையில் இரண்டாவது பிறப்பு.
இந்த உண்மை தெரிந்தவர்கள் எங்களது குடும்பத்தில் ஐந்து பேர் மட்டுமே. அதில் என்னுடைய தாத்தா, பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள். மற்றவர்கள் எனது பெற்றோ ரும், நானும்தான்.
அப்படி இருக்கும்பொழுது இந்த உண்மை நாடியில் வந்தது வியப்பாக இருந்தது. நடப்பு ஆண்டுக்குள் எனக்குத் திருமணம் முடியும் என்றார்கள். உறவுக்காரப் பெண். புஷ்பத்தின் பெயரை உடையவள். முறைப்படியே மணம்சூடி வாழ்வாய்.
அப்பா, அம்மா குடும்பத்துடன் இல்லாமல், மனைவியுடன் தனியாக வசிப்பீர்கள். 22-ஆவது வயதில் ஆசிரியர் பணி செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.'' இப்படி என் கடந்த காலத்தையும் எதிர்காலத்தைப் பற்றியும் தெளிவாகக் கூறினார்கள்.
அவர்கள் கூறியதில் இரண்டு, மூன்று விஷயங்கள் நடைபெறவில்லை. 90 சதவீதம் ஏட்டில் சொன்னபடி அப்படியே நடந்துவிட்டது. ஒருவேளை காலம் கடந்து நடக்குமோ தெரியவில்லை.
"நடப்பு ஆண்டுக்குள் திருமணமாகும் என்று கூறுகிறீர்களே! எனது பிறந்த நாள் டிசம்பர் 20. இன்று செப்டம்பர் 27-ஆம் தேதி. அப்படிப் பார்த்தால், இடையில் 83 நாட்கள்தானே இருக்கிறது. இன்னும் பெண் பார்க்கவில்லை; முடிவு செய்யவில்லை. எப்படி நடக்குமென்று கூறுகிறீர்கள்?'' என்றேன்.
அதற்கு அவர்கள், "எங்களுக்குத் தெரியாது. ஏட்டில் எழுதியிருப்பதைதான் நாங்கள் படிக்கி றோம்'' என்றார்கள். ஆனால், அவர்கள் கூறியபடி அக்டோபர் 4-ஆம் தேதி பெண் முடிவானது. நவம்பர் 9-ஆம் தேதி திருமணம் நாடியில் குறிப்பிட்டதுபோலவே கோலாகல மாக நடைபெற்றது.
"திருமணத்துக்குப்பிறகு திரைப் படத்துறையில் புகழ்பெறுவீர்கள்'' என்றார் கள். அதன்படி திருமணத்திற்குப்பிறகு வெளி வந்த "அச்சமில்லை அச்சமில்லை' "ஆலய தீபம்' "சிறை' ஆகிய மூன்று படங்களும் 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றிபெற்றன.
"மண்மனையும், மாளிகையும் கட்டி வாழ்வாய்' என்றார்கள். அதன்படி மண் என்றால் ரியல் எஸ்டேட்; மனை என்றால் கட்டடம் கட்டும் தொழில். "மாளிகை போன்ற இல்லத்தில் வாழ்வாய்' என்று கூறியபடியே இப்பொழுது எனது வீடு இருக்கிறது. அனைத் தும் நடந்துள்ளன.
என்னுடைய உண்மையான பெயரில் "சுவாட்ஸ்' என்பது அர்னால்டு சுவாட்ஸ்நேகர் என்ற புகழ்பெற்ற மேலைநாட்டு நடிகரின் பெயரின் ஒரு பகுதியே ஆகும்.
சுவாட்ஸ் என்கிற ஜெர்மானிய பாதிரியார், தஞ்சை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் போன்ற இடங்களில் சமுதாயத்தொண்டும். மதப் பிரசாரமும் செய்தவர். என்னுடைய தாயாருக்கு அவரை மிகவும் பிடிக்கும். எனவே, "எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவனுக்கு சுவாட்ஸ் என்று பெயர் வைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டேன்' என்று எனக்கு அப்பெயர் வைத்ததற்கான காரணத்தைக் கூறினார்.
என்னுடைய தகப்பனார் ராமநாதபுரத்தி லுள்ள சுவாட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்த தால், தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் சுவாட்ஸ் என்று பெயரிட வேண்டிக்கொண்டாராம்.
நான் பிறந்து பெயர் வைக்கும்போது இருவரு டைய விருப்பமும் ஒன்றாக இருந்ததால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்விட்டது. சுவாட்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.
ராமநாதபுரத்திலுள்ள சுவாட்ஸ் உயர்நிலைப் பள்ளியில்தான் நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் படித்தார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மேற்சொன்ன சம்பவங்கள் என் அனுபவத்தில் உண்மையாக நிகழ்ந்தவை. ஒரு தனிமனித வாழ்வின் நிகழ்வை பல நூற்றாண்டு களுக்கு முன்னரே முனிவர்கள் நாடியில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது!
(அதிசயங்கள் தொடரும்)