பத்து வருடத் தடையை பக்தியால் வென்றவர்கள்! -விஜயா கண்ணன்

/idhalgal/om/those-who-beat-ten-year-ban-devotion-vijaya-kannan

துரை சம்மட்டிபுரம் "மிட்லாண்ட்' திரையரங்கம் 1969-ஆம் ஆண்டு முதல் துவங்கி செயல்பட்டுவருகிறது. இதன் அதிபர்களாக இப்போது செயல்பட்டு வரும் கவிதா- கஜேந்திரன் தம்பதியை சந்தித்துப் பேசினோம். தங்களின் ஆழ்ந்த தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவை, தங்கள் திரையரங்கம் சந்தித்த சோதனையை, தடையை வென்று தற்போது அதிநவீன வசதிகளுடன் வெற்றிநடைபோட்டு வருகிறது என்பது பற்றி நம்மிடம் மெய்சிலிர்க்கக் கூறினார்கள்.

கஜேந்திரன்: என் அப்பா சேடப்பட்டி ராஜு, பெரிய தொழிலதிபராகத் திகழ்ந்தவர். ஏற்றுமதி தொழிலில் சிறந்து விளங்கியவர். 1969-ஆம் ஆண்டில் அண்ணாமலை என்பவரிடம் "மிட்லாண்ட்' திரையரங்கை விலைக்கு வாங்கி, எங்களை அழைத்துக்கொண்டு மதுரைக்கு குடும்பத்தோடு வந்து குடியேறிவிட்டார். அதுமுதல் மிட்லாண்ட் தியேட்டர் அதிபராக 19 வயது முதலே நானும் என் தந்தையுடன் பெயர் பெற்றுவிட்டேன்.

கவிதா: கஜேந்திரன் என் தாய்மாமன்தான். 1989-ஆம் ஆண்டில் மதுரையில் எங்களுக்குத் திருமண மானது. கொடைக்கானல் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பு முடிந்தவுடனேயே எனக்குத் திருமணமாகி, புகழ்பெற்ற கம்பம் பள்ளத்தாக்கு கூடலூரில் பாரம்பரிய புகழ்மிக்க விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் மதுரைக்கு கணவருடன் குடும்பம் நடத்த வந்துவிட்டேன். எங்கள் தாத்தா, கிராமத்திற்குக் கோவில் கட்டித்தந்த

துரை சம்மட்டிபுரம் "மிட்லாண்ட்' திரையரங்கம் 1969-ஆம் ஆண்டு முதல் துவங்கி செயல்பட்டுவருகிறது. இதன் அதிபர்களாக இப்போது செயல்பட்டு வரும் கவிதா- கஜேந்திரன் தம்பதியை சந்தித்துப் பேசினோம். தங்களின் ஆழ்ந்த தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு, குலதெய்வ வழிபாடு ஆகியவை, தங்கள் திரையரங்கம் சந்தித்த சோதனையை, தடையை வென்று தற்போது அதிநவீன வசதிகளுடன் வெற்றிநடைபோட்டு வருகிறது என்பது பற்றி நம்மிடம் மெய்சிலிர்க்கக் கூறினார்கள்.

கஜேந்திரன்: என் அப்பா சேடப்பட்டி ராஜு, பெரிய தொழிலதிபராகத் திகழ்ந்தவர். ஏற்றுமதி தொழிலில் சிறந்து விளங்கியவர். 1969-ஆம் ஆண்டில் அண்ணாமலை என்பவரிடம் "மிட்லாண்ட்' திரையரங்கை விலைக்கு வாங்கி, எங்களை அழைத்துக்கொண்டு மதுரைக்கு குடும்பத்தோடு வந்து குடியேறிவிட்டார். அதுமுதல் மிட்லாண்ட் தியேட்டர் அதிபராக 19 வயது முதலே நானும் என் தந்தையுடன் பெயர் பெற்றுவிட்டேன்.

கவிதா: கஜேந்திரன் என் தாய்மாமன்தான். 1989-ஆம் ஆண்டில் மதுரையில் எங்களுக்குத் திருமண மானது. கொடைக்கானல் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பு முடிந்தவுடனேயே எனக்குத் திருமணமாகி, புகழ்பெற்ற கம்பம் பள்ளத்தாக்கு கூடலூரில் பாரம்பரிய புகழ்மிக்க விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் மதுரைக்கு கணவருடன் குடும்பம் நடத்த வந்துவிட்டேன். எங்கள் தாத்தா, கிராமத்திற்குக் கோவில் கட்டித்தந்து தெய்வத்துடன் பேசும் வல்லமை பெற்றவர் என்பதால், எங்களுக்கு தெய்வபக்தி, அதிதீவிர பிரார்த்தனை, பூஜை, கடவுள் ஈடுபாடு ரத்தத்திலேயே ஊறி வந்த பாரம்பரிய சொத்து என்றுகூட சொல்லலாம்.

dd

கஜேந்திரன்: இப்போதும் வீட்டில் விசேஷ பூஜை, வழிபாடுகள் செய்தபிறகுதான் வெளியே கிளம்புவோம்.

கவிதா: எங்கள் குலதெய்வம் கோவில் மானூத்து பெத்தனசாமி, உசிலம்பட்டி அருகில் உள்ளது. எங்கள் தாத்தா விடம் சாமி பேசும் என்பார்கள். கூடலூரில் சுந்தரேஸ்வர அழகிய பெருமாள் கோவிலுக்குச் சென்று, அந்தக் காலத்தில் மழையில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டபோது, தெய்வக் குரலாக எங்கள் தாத்தாவிடம் "உன் சொத்தை கோவிலுக்கு எழுதிவைத்து கும்பாபிஷேகம் செய்' என்ற உத்தரவு வந்ததாம். அதன்படி அவர் செய்தார். மழை பெய்தது. மக்கள் மனம் குளிரிந்து தாத்தாவை தெய்வமாகப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடினார்கள். அன்றுமுதல் இன்றுவரை தாத்தாவின் ஆண்வழி வாரிசுகள் வருடாவருடம் சித்ரா பௌர்ணமி திருவிழாவை பிரம்மாண்டமாக சிறப்பாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆயிரம் புஞ்சை, ஆயிரம் நஞ்சை விவசாய நில உரிமையாளராகத் திகழ்ந்த, பல விவசாயிகளை வாழவைத்த எங்கள் தாத்தா பேயத்தேவர், அந்த கூடலூர் பெருமாள் கோவிலுக்காக வயல் எழுதி வைத்தார். கோவிலைப் பராமரிக்கும் எல்லா இனத்தினருக்கும் சொத்து எழுதிவைத்தார். கோவில் தேரை ஓடவைக்கும் கிறித்துவ, முஸ்லிம், இந்துக்களுக்கு உதவியிருக்கிறார். பக்தியில் ஜாதி, மத, இன வேறுபாடு இல்லையென்று அன்றே செயல்பட்டு, அமரரானாலும் அனைவரது மனதிலும் இன்றும் வாழ்ந்துவருகிறார் எங்கள் பேயத்தேவர் தாத்தா! அண்ணல் பேயத்தேவர் என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். மகன்வழி வாரிசு என்ற முறையில் நாங்களும் வருடந்தோறும் நடக்கும் சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழாவிற்கு எங்கள் பங்கையளித்து வழிபட்டுவருகிறோம்.

கஜேந்திரன்: எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஒச்சாண்டம்மன். நாங்கள் இருவரும் தம்பதியாக எங்கள் இருவரின் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டபிறகுதான் எந்தவொரு புதிய திட்டம், செயலையும் செய்யத் துவங்குவோம்.

கவிதா: யாரும் குல தெய்வ வழிபாட்டை மறந்து விடவேகூடாது. குலதெய்வத்தைக் கும்பிட்ட பிறகுதான் மற்ற தெய்வங்களைக் கும்பிடவேண்டும். இது எங்கள் வீட்டுப் பெரியவர்கள் எங்களுக்கும், அனைவருக்கும் சொன்ன அற்புதமான அறிவுரை.

கஜேந்திரன்: ஒரு சகோதரன், ஆறு சகோதரி களுடன் பிறந்தவன் நான். ஆனால், என் மனைவியோ அவள் பெற்றோருக்கு ஒரே செல்ல மகள். எங்களுக்கும் ஒரே பெண்தான். பெயர் சக்தி என்ற தாட்சாயிணி.

dd

கவிதா: எனது தெய்வ வழிபாட்டால் பள்ளிப் படிப்போடு சரி என்று நான் நினைத்த நிலை மாறி, கணவரின் ஆதரவுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து எம்.ஏ சோஷியாலஜி பட்டம் பெற்றேன்.

கஜேந்திரன்: எங்கள் மகளும் தீவிரமான தெய்வ பக்தியால், இடக்கை பழக்கமுள்ள எங்கள் பெண் பள்ளிப் படிப்பிலேயே சிறந்து விளங்கினார். கிரியேட்டிவ் சிந்தனை மிகுந்தவர். ஆல் இந்தியா தேர்வில் பக்தியுடன் முழு கல்வி ஈடுபாட்டுடன் செயல்பட்டு, லட்சக்கணக்கான பேர்கள் எழுதிய தேர்வில் தேர்ச்சிபெற்று ரேங்கும் பெற்று பெங்களூரில் புகழ்பெற்ற சஒஎபலில் பேஷன் டிசைன் படிப்பு படித்துவருகிறார்.

கவிதா: நான் மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றதற்கும் எங்கள் ஒரே செல்ல மகள் சிறந்த படிப்பு படிப்பதற்கும் எங்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் மற்ற கடவுள்களையும் மனமார வழிபடும் செயல்களும்தான் முக்கிய காரணம் என்று உறுதியாக சொல்வோம்.

கஜேந்திரன்: 1969 முதல் எங்கள் "மிட்லாண்ட்' தியேட்டர் ஷிப்டிங் தியேட்டராக மட்டுமே இருந்தது.

அதாவது பிற மதுரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிவிட்டு பிறகே எங்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு ஓடும். ஆனால், "விதி' போன்ற படங்கள் எங்கள் தியேட்டரிலும் நூறு நாட்களுக்குமேல் ஓடி சாதனை புரிந்திருக்கிறது.

கவிதா: "விதி' படம் பெண்களுக்கு மட்டுமே ஸ்பெஷல் ஷோக்கள் எங்கள் தியேட்டரில் ஓடி அனைவரையும் அசர வைத்திருக்கிறது.

கஜேந்திரன்: எதிர் பாராத காரணங்களால் 2009-ஆம் ஆண்டுமுதல் 2019-ஆம் ஆண்டுவரை பத்து வருடங்கள் எங்கள் தியேட்டர் இயங்காமல் மூடியே கிடந்தது.

கவிதா: அப்பப்பா... அந்த பத்து வருடங்கள் நாங்கள் பட்ட வேதனைகளை, சோதனைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. சாப்பிடாமல், தூங்காமல் அழுது கொண்டே இருந்த காலமது. 19 வயது முதலே தியேட்டர் நிர்வாகம் செய்த என் கணவர்தான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அதிதீவிரமாக குலதெய்வ வழிபாடுகள் செய்தோம். விரதம், விசேஷ பூஜைகள் செய்தோம்.

கஜேந்திரன்: பல முயற்சிகள் செய்து கடின உழைப்பால் 2019-ஆம் ஆண்டு தெய்வ அருளால் "மிட்லாண்ட்' தியேட்டர் மீண்டும் திறக்கப்பட்டது. அனைத்து தெய்வ சக்திகளையும் கொண்டாடி மகிழ்ந்தோம்.

கவிதா: கடவுளின் பரிபூரண அருளோடு 2019-ஆம் ஆண்டில் பழைய "மிட்லாண்ட்' ஆக இல்லாமல் புத்தம் புதிதாக அதிக செலவில், உழைப்பில் சீரமைக்கப்பட்டு, ஏஸி திரையரங்கமாக 2உ 4ஃ புரொஜக்ஷன், 7.1.2 டால்பி சவுண்ட் சிஸ்டம்- லேட்டஸ்ட் இன்டீரியர் 420 வசதியான இருக்கைகளுடன், அதிநவீன கேண்டீன்வசதியுடன், சூரியாவின் சநஃ துவங்கி, மதுரையின் மற்ற சினிமா தியேட்டர்களுக்கு இணையாக நல்ல வரவேற்புடன் புதிய திரைப்படங்களைத் தொடர்ந்து ரிலீஸ் செய்துவருகிறோம்.

கஜேந்திரன்: எனவே, பத்து ஆண்டு தடையை பக்தியால் வென்றோம் என்று தெய்வ நம்பிக்கையோடு உறுதியாகக் கூறுவோம்.

பக்திதான் மனிதனுக்கு சக்தியென்று நிரூபித்த கவிதா- கஜேந்திரன் தம்பதியை வாழ்த்தி விடைபெற்றோம்.

இவர்களை வாழ்த்த கைபேசி எண்: 90479 04704

om010323
இதையும் படியுங்கள்
Subscribe