தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்கள் அருளிய வாசி யோகம்!

27

சித்தர்தாசன் சுந்தர்ஜி

Advertisment

"மதமெனும் வெறியதனைக் கொண்ட ஆன்மாவை

கூர்கொள் புத்திஅங்குசத் தாற்கொன்று விட்டேதான்

தீபமெனும் சித்சொரூபம் செய்யும் பொருளை

Advertisment

சேர்ந்துறவு கொண்டோ மென்றாடாய் பாம்பே.'

-பாம்பாட்டிச் சித்தர்

புலத்தியர்: அகத்தியர் பெருமானே! அரச வம்சத்தில் பிறந்து, மூன்றுவிதமான ஆன்மநிலை செயல்பாடுகளுடன் நாட்டை ஆட்சிசெய்யும் அரசர்களைப் பற்றி எங்களுக்குத் தெளிவாகக் கூறினீர்.

இந்த பூமியில் பிறக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபோல பிறந்து வாழும் ஒரே இனத்தினர் என்றும்; பிறப்பால் மதம், சாதி, பிரிவு, பேதம் இல்லையென்றும் பெரியோர் கூறுகின்றீர்.

அனைத்து மனிதர்களின் ஆன்மாவின் உணர்வுகள் ஒன்றுபோல இருக்குமா? அல்லது சிலர் கூறுவது போன்று மதம், சாதி என பிரிவுகளில் பிறப்ப தனால், ஆன்மாவின் செயல்களும் வெவ்வேறாக இருக்குமா?

அகத்தியர்: புலத்தியனே, இந்த பூமியில் பலவிதமான உயிரினங்கள் பிறந்து வாழ்ந்து வருகின்றன. அனைத்து உயிரினங்களும் பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி, இறப்பு, பசி, தாகம், போகம், இனவிருத்தி என அனைத்து நிகழ்வுகளிலும் ஒரே உணர்வு நிலையுடனே வாழ்கின்றன.

பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதர் களே உயர்ந்தவர்கள். நாணுடைமை, அறுசுவை உண்டிகளையாக்கி உண்ணுதல், மனையிற்றுயிலு டைமை, மக்களோடு மகிழ்தலுடைமை, ஆராய்ந்தறிதலுடைமை போன்ற செய்கைகள் பிறவுயிர்களுக்கு உண்டாகியிருக்கவில்லை. சிறப்பியல்புகளாக அமைந்த இந்த நற்குண செய்கைகளையுடைய மனிதர்களே பகுத்தறிவு டைமையால் பெருமையும் மேன்மையும் சிறப் பும் உடையவராகின்றனர். இதன்மூலம் இந்த பூமியில் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் இயற்கையால் ஒரு தரத்தினராகவே பிறக்கிறார் கள்; வாழ்கிறார்கள்.

புலத்தியர்: அகத்திய முனியே, மனித இனம் பிறப்பால் ஒன்றுபோலவே பிறக்கின்றார்கள் என்று தாங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் இந்த நிலப்பரப்பின் வடபுலத்தில் வாழும் சனகாதி முனிவர்களும், ரிஷிகளும் பிறப்பின் நிலை பற்றி மக்களுக்கு வகுத்தளித்த நூல்களில், கடவுளின் உடலுறுப்புகளிலிருந்து ஒவ்வொரு பிரிவு மக்கள் பிறந்ததாகவும்; அதனால் மதம், சாதிப்பிரிவு என்ற பேதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளதே? தென்புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு நீங்கள் வகுத்துத் தந்த வாழ்வியல் வழிமுறையான சைவத்தமிழ் சித்தாந்தம் கூறும் கருத்துகள் உண்மையா? தெளிவுபடுத்துங்கள்.

siddhar

அகத்தியர்: பகுத்தறிவால் உயர்ந்து வாழும் சித்தர் பெருமக்கள்கூடிய இந்தத் தமிழ்ச் சங்கத்தில், புலத்தியனின் கேள்விக்கு கடவுள், மதம், சாதி என்ற மூன்றுவிதமானவற்றைக் கருப்பொருளாகக்கொண்டு விவாதித்து ஆய்வு செய்வோம்.

முதலில் நான் இவற்றைப் பற்றி சில விளக்கங்களைக் கூறுகிறேன். அதற்குப் பின்பு சித்தர் பெருமக்கள் அவரவர் கருத்துகளைக் கூறுங்கள்.

புலத்தியனே, ஆரிய வேதங்களில் மட்டுமல்ல; இந்த பூமியில் பல்வேறு தேசங்களில் வாழும் மதகுருமார்கள், உயிரினங்களின் பிறப்பின் நிலை பற்றி பலவிதமாகக் கூறியுள்ளார்கள்.

இந்த பூமியில் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களும் கடவுளால் தான் படைப்பிக்கப்படுகின்றதா என்ற உன் கேள்விக்கு யான் கூறும் விளக்கத்தை அறிந்துகொள்.

"தானென்ற தானே தானொன்றே தெய்வம்

தகப்பனும் தாயுமங்கே புணரும்போது

நானென்று கருப்பிடித்துக்கொண்டு வந்த

நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு..

.' நமது தந்தையின் ஆசைக்கு தாய் ஒப்புக்கொண்டு, தாயும் தந்தையும் தாம்பத் திய உறவு, கொண்டதால் தந்தையின் விந்து, தாயின் கர்ப்பப்பையில் உருவான கருமுட்டையுடன் சேர்ந்து கருவாகி, தாயின் கர்ப்பத்தில் 270 நட்சத்திர நாட்கள் வளர்ந்து, பின் இந்த பூமியில் பிறக்கின்றோம்.

ஒரு மனிதனை உருவாக்கிப் படைக் கும் கடவுள் அவரவர் தாய்- தந்தை மட்டுமே.

வேறு எந்த சக்தியும் பிறப்பிப்பதில்லை.

புலத்தியனே, இந்த பூமியில் மனித இனம் உருவாகிப் பிறப்பதுபோன்றே விலங்கு, மிருகம், பறவை, நீர் வாழும் உயிரினம் என அனைத்தும் தன் இன ஆண்- பெண் தாம்பத்திய உறவினால் தான் கர்ப்பத்தில் கருவாகி உருவாகி பிறக்கின்றன. தாவரங்கள்கூட தங்களின் விதைகள்மூலமே தனது இனத்தை உருவாக்கி, வளரச்செய்து இனவிருத்தி செய்துகொள்கின்றன. வேறு எந்த சக்தியாலும் பூமியில் ஒரு உயிரை உருவாக்க முடியாது. ஒரு உயிரை உருவாக்கும் சக்திகொண்ட நமது தாயும், தந்தையுமே நம்மைப் படைப்பிக்கும் கடவுள். அவர்களை தெய்வமாக வணங்கி வாழ்ந்து வா.

புலத்தியர்: அன்னப்பறவை பாலையும் நீரையும் தனித்தனியே பிரித்தறிவது போல, பிறப்பின் உண்மையையும் ரகசியத்தை யும், உயிரினங்கள் கடவுளின் உறுப்புகளிலிருந்து படைக்கப்படுவதில்லை; பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவினை கிடையாது என்பதையும் அகத்தியர் வாக்கினால் அறிந்துகொண்டேன்.

இன்னும் சில கேள்விகள் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகக்கூறி தெளிவுபடுத்துங்கள். வேதம் இந்த பூமியில் வாழும் அனைவருக்கும் பொதுவானதா?

அகத்தியர்: புலத்தியனே, இந்த நிலப்பரப்பில் நாம் வசிக்கும் தென்புலத்தில் மலையாசல மலைப்பகுதிகளிலிருந்து கிருதமால், தாமிரபரணி நதிகள் உருவாகின் றன. இந்த ஆற்றங் கரைப் பகுதிகளில் தமிழ்மக்கள் பயிர்த் தொழில் செய்து, கால்நடைகளை வளர்த்து வாழ்வதுபோல, வட புலத்துப் பகுதிகளில் இமயமலையிலிருந்து சதத்துரு, சந்திர பாகா நதிகளும்; பரியாத்திர மலையிலிருந்து வேதஸ்மிருதி நதியும்; விந்திய மலைப்பகுதியிலிருந்து நர்மதை, சுரசை முதலிய நதிகளும்; சஹ்ய மலைப்பிரதேசத்திலிருந்து தாமீ, பயோஷ்ணி, நிர்விந்தியை நதிகளும்; மகேந்திர மலைப்பகுதியிலிருந்து திரிசாமா, ரிஷிகுல்யா நதிகளும்; சுக்தி மத்தென்னும் மலைகளிலிருந்து குமாரீ நதியும்; இன்னும் இவற்றைச் சார்ந்த உபநதிகளும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு திசைகளிலும் பாய்ந்து இந்த நிலப்பரப்பை வளப்படுத்துகின்றன.

இந்த நதிகள் பாய்ந்தோடும் ஆற்றங் கரைகளில் குரு, பாஞ்சாலம், மத்தியதேசம், பூர்வதேசம், காமரூபம், ஆந்திரம், கலிங்கம், மகதம், மாளவம் அபராந்தம், சவுராட்டிரம், ஆபீரதேசம், மாருகம், பாரியாத்திரம், சவ்வீரம், சிந்து, ஊணம், சாலவம், கோசலம், மத்திரம், ஆராமம், அம்பஷ்டம், பாண்டிய பூமி என இதுபோன்று இன்னும் பல நாடுகளில் மக்கள் பயிர்த்தொழில் செய்து வாழ்ந்துவருகிறார்கள்.

புலத்தியனே, இந்த ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மக்களும் தங்களுக்கென ஒரு தலைவன், தனி நிர்வாகம், தனித்தனி வாழ்க்கை, நாகரிகம், மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வாழ்கிறார்கள். நீ கேட்பதுபோல் இந்த நிலப்பரப்பில் வாழும் அனைவரும் வேதம், புராணம், சாத்திரம், சனாதனக் கொள்கைகளையும்; புராணங் கள் கூறும் கடவுளையும் வழிபட்டு வாழ்வதில்லை. ஏன்- தென்புலத்து தமிழ்மக்கள் ஆரிய வேதங்களையோ, அவை கூறும் கடவு ளையோ வழிபட்டு வாழவில்லை என்பதை நீ அறிந்தவன்தானே. இந்த நிலப்பரப்பில் வாழ்வதுபோல் இந்த பூமியில் இன்னும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் வசித்துவருகிறார் கள். அவர்களும் வேதக் கொள்கைகளைக் கடைப் பிடித்து வாழவில்லை என்பதே உண்மை.

"விளம்பினார் சனகாதி வேதங்கோடி'- தென்புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அகத்தியன் யான் வாழ்வியல் முறைகளைக் கூறும் "சைவத் தமிழ்ச் சித்தாந்தம்' கூறியுள்ளது போன்று, வடபுலத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆரிய இன மக்களுக்கு வாழ்வியல்முறைகளை சனகாதி முனிவர்கள் வகுத்தளித்தார்கள். வேதம் ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்க்கைமுறையைக் கூறுவது; அவ்வளவு தான்.

இன்று தமிழ்ச்சங்கம் கலையலாம்.

அவரவர் குகைகளுக்குச் சென்று இன்று நான் கூறியதை ஆய்வு செய்யுங்கள். இன்னும் பல உண்மை விளக்கங்களை நாளை சபையில் கூறுகிறேன்.

வாசி யோகம்

(மரணம், நோய், கஷ்டம் அறிய)

ஒருவர் பூரண பௌர்ணமி நாளில், பசு நெய்யை ஒரு செப்பு அகலில் உருக்கி ஊற்றி, அந்த நெய்யில் பூரண சந்திரனின் வடிவம் தெரியும்படி நிழலில்லாத இடத்தில் வைத்து, அந்த சந்திர வடிவத்தைப் பார்க்கவேண்டும்.

அதேபோன்று பூரண அமாவாசை நாள் பகல்வேளையில், செப்பு அகலில் பசு நெய்யை உருக்கி ஊற்றி, அந்த அகலை நிழலில்லாத இடத்தில் வைத்து, தங்கள் உருவநிழல் மறைக்காத இடத்தில் நின்றுகொண்டு சூரியனின் உருவத்தைப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு சூரியன், சந்திரன் வடிங்களை நெய்யில் பார்ப்பவர்களின் கண்களுக்கு அந்த வடிவங்கள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகத் தெரிந்தால், அவர்கள் ஆண்- பெண் என யாராக இருந்தாலும், மிக்க வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வில் வறுமை நீங்கி, சீரும் சிறப்பும் செல்வமும் அடைந்து வாழ்வார்கள்.

சூரியன், சந்திரன் பொன்னிறமாகத் தெரிந்தால், தங்கள் வருங்கால வாழ்வில் கஷ்டம் உண்டாகி, இருக்கும் சொத்துகள், புகழ், செல்வம் அழிந்து சிரம வாழ்வை அடைவார்கள்.

சூரியன், சந்திரன் பச்சை நிறமாகத் தோன்றினால், சரீரத்தில் நோய் உண்டாகி சிரமப்படச் செய்யும்.

அவை கருப்பு நிறமாகத் தெரிந்தால் மரண கண்ட காலம் என உணர்ந்துகொள்ள வேண்டும்.

அகல்விளக்கு நெய்யில் சூரியன், சந்திரனின் தென்புற வட்டம் குறைந்து தெரிந்தால் அவருக்கு ஆறு மாதத்தில் மரணம்.

வடபுற வட்டம் குறைந்து தெரிந்தால் மூன்று மாதத்தில் மரணம்.

கீழ்ப்புற வட்டம் குறைந்து தெரிந்தால் ஒரு மாதத்தில் மரணம்.

சூரியன், சந்திரன் வடிவத்தின் நடுவே ஓட்டையாகத் தெரிந்தால் பத்து நாளில் மரணம் என்பது சித்தர்கள் வாக்காகும்.

இவர்கள் சுவாசக் காற்று ஒழுங்கற்ற நிலையில் ஓடுவதால்தான் இந்த நிலை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தங்கள் மூச்சுக்காற்றின் நிலையை கவனித்து அறிந்து, அதை ஒழுங்குபடுத்திக் கொண்டால், இந்த நோய், மரண கண்டத்திலிருந்து தப்பித்து நல்வாழ்வை அடையலாம்.

"தானென்ற பெரியோர் களுலகத் துள்ளே

தாயான பூரணத்தை யறிந்த பின்பு

தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து

தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்

ஊணென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே

ஒரு நான்கு வேதமென்றும் நூலாறெ றென்றும்

நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்

நாட்டினா ருலகத்தில் பிழைக்கத் தானே.'

-அகத்தியர்

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!