"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.'
-திருவள்ளுவர்
நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக்கூடாது.
"யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்' என்பார் கள். அப்படியென்றால் நாம் நம்பியிருக் கும் இந்த நம்பிக்கை என்ன? நம் எதிர் காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன வென்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிலர் தங்கள் நம்பிக்கையைப் பணத்தில் வைக்கிறார்கள். "பணம் எல்லாவற்றுக்கும் உதவும்; பணம் பாதாளம்வரை செல்லும்; பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்' என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்தவொரு மனிதன் இறைவன்மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ-
ஒருநாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது தவித்துத் துடித்துப் போவான்.
ஒரு பெரிய செல்வந்தர், "என் நம்பிக்கையெல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது' என்று பெருமை யாகக் கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத் தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து தப்புவதற்காக இரும்புப் பெட்டியிலிருந்த லட்சணக்கான பணம், நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.
அவர்களோ, "இந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம்; நீதான் வேண்டும்' என்று சொல்லி, அவரைப் பிடித்து காரின் பின்னால் கட்டி தரையிலே இழுத்து, பிறகு அவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவைத்து, கீழே தீயை வைத்துக் கொன்றார்கள். ஆம்; அவர் நம்பிய பணம் அவரைக் கைவிட்டது.
சிலர் தங்களுடைய சரீர பலத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலையைப் பயின்று உலகத்திற்கே சவாலாக விளங்கிய வீரனான புரூஸ்லி தன் நம்பிக்கையையெல்லாம் தன் உடல் பலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் பயிற்சி செய்து தனது உடம்பையும் நரம்புகளையும் முறுக் கேற்றி, உலகத்திலேயே மிகச்சிறந்த வீரனாக விளங்கினான்.
அந்தோ! ஒருநாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவில் விஷம் வைக்கப்பட்டி ருந்தது. அதையறியாமல் புசித்தான். சில நிமிடங் களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.
இன்னும் சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியின் மேலும், இனத்தவர்களின் மேலும், மருத்துவர் கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள். "நீ நம்பியிருக்கிற உன் நம்பிக்கை என்ன?' என்று வேதம் கேட்கிறது. ஆம்; இறை நம்பிக்கைதான் நம் நம்பிக்கை. எவனொருவன் இறைவன்மேல் அபார நம்பிக்கை வைக்கிறானோ அவனை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார். "கடவுளை நம்பினோர் கைவிடப்டார்' என்பது மெய்யான ஒன்று.
கவுந்தப்பாடி என்னும் சிற்றூரில் பல வருடங் களுக்குமுன் கண்ணையன், சங்கையன் என்போர் வாழ்ந்துவந்தனர். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கண்ணையன்; சற்று வசதி படைத்தவர் சங்கையன். எதற்கெடுத்தாலும் கண்ணையன், "இன்று இறைவன் அருளால் எல்லாம் நன்றாகவே நடந்தது' என்று சொல்வார். இதை சங்கையன் ஏளனம் செய்வார். ஒருநாள் அக்னி நட்சத்திரத்தின்போது வெயில் கடுமையாக இருந்தது. சங்கை யன் குடைபிடித்துக்கொண்டு நடந்து செல்ல, எதிரே கண்ணையன் வந்தார். அவரைப் பார்த்து "என்ன, வெயிலில் இப்படி கால்கடுக்க ஒரு குடைகூட இல்லா
"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.'
-திருவள்ளுவர்
நன்கு ஆராய்ந்து தெளிந்தபிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக்கூடாது.
"யானையின் பலம் தும்பிக்கையில்; மனிதனின் பலம் நம்பிக்கையில்' என்பார் கள். அப்படியென்றால் நாம் நம்பியிருக் கும் இந்த நம்பிக்கை என்ன? நம் எதிர் காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன வென்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிலர் தங்கள் நம்பிக்கையைப் பணத்தில் வைக்கிறார்கள். "பணம் எல்லாவற்றுக்கும் உதவும்; பணம் பாதாளம்வரை செல்லும்; பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்' என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்தவொரு மனிதன் இறைவன்மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ-
ஒருநாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது தவித்துத் துடித்துப் போவான்.
ஒரு பெரிய செல்வந்தர், "என் நம்பிக்கையெல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது' என்று பெருமை யாகக் கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத் தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடமிருந்து தப்புவதற்காக இரும்புப் பெட்டியிலிருந்த லட்சணக்கான பணம், நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.
அவர்களோ, "இந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம்; நீதான் வேண்டும்' என்று சொல்லி, அவரைப் பிடித்து காரின் பின்னால் கட்டி தரையிலே இழுத்து, பிறகு அவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவைத்து, கீழே தீயை வைத்துக் கொன்றார்கள். ஆம்; அவர் நம்பிய பணம் அவரைக் கைவிட்டது.
சிலர் தங்களுடைய சரீர பலத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலையைப் பயின்று உலகத்திற்கே சவாலாக விளங்கிய வீரனான புரூஸ்லி தன் நம்பிக்கையையெல்லாம் தன் உடல் பலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் பயிற்சி செய்து தனது உடம்பையும் நரம்புகளையும் முறுக் கேற்றி, உலகத்திலேயே மிகச்சிறந்த வீரனாக விளங்கினான்.
அந்தோ! ஒருநாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவில் விஷம் வைக்கப்பட்டி ருந்தது. அதையறியாமல் புசித்தான். சில நிமிடங் களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.
இன்னும் சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியின் மேலும், இனத்தவர்களின் மேலும், மருத்துவர் கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள். "நீ நம்பியிருக்கிற உன் நம்பிக்கை என்ன?' என்று வேதம் கேட்கிறது. ஆம்; இறை நம்பிக்கைதான் நம் நம்பிக்கை. எவனொருவன் இறைவன்மேல் அபார நம்பிக்கை வைக்கிறானோ அவனை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார். "கடவுளை நம்பினோர் கைவிடப்டார்' என்பது மெய்யான ஒன்று.
கவுந்தப்பாடி என்னும் சிற்றூரில் பல வருடங் களுக்குமுன் கண்ணையன், சங்கையன் என்போர் வாழ்ந்துவந்தனர். ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கண்ணையன்; சற்று வசதி படைத்தவர் சங்கையன். எதற்கெடுத்தாலும் கண்ணையன், "இன்று இறைவன் அருளால் எல்லாம் நன்றாகவே நடந்தது' என்று சொல்வார். இதை சங்கையன் ஏளனம் செய்வார். ஒருநாள் அக்னி நட்சத்திரத்தின்போது வெயில் கடுமையாக இருந்தது. சங்கை யன் குடைபிடித்துக்கொண்டு நடந்து செல்ல, எதிரே கண்ணையன் வந்தார். அவரைப் பார்த்து "என்ன, வெயிலில் இப்படி கால்கடுக்க ஒரு குடைகூட இல்லாமல் வருகிறாயே. உன் இறைவனுக்கு இதுகூட தெரியாதா?'' என்றார்.
அதற்கு கண்ணையன், "இறைவன் அருள் இருப்பதால்தான் குடையைப் பிடித்துக்கொண்டு நீ செல்கிறாய். இல்லையென்றால் குடை இருந்தாலும் உன்னால் பயன்படுத்த முடியாது. நீ செல்லுமிடம் வருவதற்குள் இறைவன் இதை உணரவைப்பான்'' என்றார்.
சிறிது தூரம் சென்றவுடன் ஒரு வெறிநாய் துரத்த, சங்கையன் குடையை மடக்கிப் பிடித்துகொண்டு ஓடினார்.
சற்று தூரம் சென்ற பின் குடையை விரித்தபடி சென் றார். அவர் செல்லும் பாதையில் பாம்பொன்று குறுக்கே வர, அதைப் பார்த்த தும் குடையைக் கீழே போட்டுவிட்டு "துண் டைக் காணோம் துணியைக் காணோம்' என்று ஓடினார். சிறிதுதூரம் சென்றபின் கண்ணை யன் சொன்னது நிஜமாகிவிட்டது என்பதை உணர்ந்தார். அன்றுமுதல் எவர்மனமும் புண் படும்படி பேசாமல் நல்லமுறையில் அனைவரிடம் பழகிவாழ்ந்தார்.
அதே ஊரில் (கவுந்தப்பாடி) பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர்ந்திருந்தான் அன்பரசன். பெயருக்கேற்ப அன்பாகப் பழகுவான். அவனது பெற்றோர் எளிமையாக விவசாயம் செய்தனர்.
சிறுவயது முதலே பெற்றோருடன் விவசாய வேலைகள் செய்துவந்தான் அன்பரசன்.
பள்ளியில் "உழவு' என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. அவனும் கலந்து கொண்டான். முதல்பரிசு கிடைத்தது.
பொறாமைகொண்ட மூத்த மாணவர்கள் சிலர், "எங்களைவிட சிறிய வகுப்பில் படிப்பவன் எழுதிய கட்டுரையை முதல்பரிசுக்கு எப்படித் தேர்வு செய்தீர்கள்? அப்படி என்னதான் சிறப் பாக எழுதிவிட்டான்?'' என்று தலைமை ஆசிரியரிடம் கொதித்தனர்.
"எல்லாரும் உழவின் சிறப்பையும், உழுது வாழ்வோரின் மேன்மையையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இளம் வயதி லேயே உயர்ந்த கண்ணோட்டத்துடன் சிந்தித்த அன்பரசனின் கட்டுரையின் ஒரு பகுதியைப் பாருங்கள்'' என்றபடி வாசித்தார் தலைமை யாசிரியர்.
"பல்லுயிர் வளர்க்க உழவும், உழவரும் உதவுவதைப்போல, மனமென்னும் நிலத்தில் கருணை, இரக்கமென்னும் மாடுகளால் உழுது, அன்பென்னும் பயிரை விதைத்து, நேய மென்னும் நீர் பாய்ச்சி, பொறாமையென்னும் களை நீக்கிக் காத்துவந்தால் மனிதம் என்னும் அறுவடையை நிகழ்த்தலாம். உலகில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம். எனவே, அன் பைப் பயிரிட்டு மனிதத்தை அறுவடை செய்யும் உயர்ந்த உழவர்களாக, மனமென்னும் நிலத்தைப் பண்படுத்துவோம்.'' இதைக்கேட்ட மாணவர்கள் அன்பரசனை வாழ்த்தினர்.
இந்த உண்மைத் தன்மையை உணர்ந்து, மனதில் அன்பை விதைத்து மனித நேயத்தை வளர்த்த ஒருவருக்கு இறைவன் அருட்காட்சி தந்த அற்புதமானதொரு திருத்தலம்தான் தம்பிக்கலை ஐயன் திருக்கோவில்.
இறைவன்: நீலகண்டேஸ்வரர்.
இறைவி: அன்னபூரணி.
மூலவர்: தம்பிக்கலை ஐயன்.
விசேஷமூர்த்தி: ராகு- கேது, நாகேஸ்வரியம்மன்.
புராணப் பெயர்: கொங்குதேச காஞ்சி கோவில் நாட்டு தங்கமேடு கிராமம்.
ஊர்: தங்கமேடு
தலவிருட்சம்: ஊசல் மரம்.
தீர்த்தம்: சிவகங்கைத் தீர்த்தம்.
சித்தர்கள் மெய்ஞ்ஞானம் மேவியர்கள். யோகக்கலையின்மூலம் சாரூபமுக்தி எனும் இறைவ னின் திருவுருமே ஆனவர்கள்.
தமிழ்நிலம் அளித்த தவப் புதல்வர்கள். ஆகவேதான் தாயுமானவ சுவாமிகள் "வித்தக சித்தர் கணமே' என்றும், மகா கவி பாரதி, "மூலன் மரபில் வந்த நான் ஒரு சித்தன்' என்றும் போற்றுகின்றனர். அத்தகைய சித்தர்கள் சமுதாயப் பொது நோக்குடன் அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காகவே அவதரித்தவர்கள். தம்பிக்கலை ஐயனும் சித்தர் குலத்தின் ரத்தினமென, மந்திர சித்திகளுடன், வரம்பில்லா அருளாற்றலுடன் இத்தலத்தில் அவதரித்தவர். இப்படி சிறந்தோங்கிய சித்தர்களுக்கென உருவாக்கப்பட்ட திருத்தலங்கள் சிலவே. அவற் றுள் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கும் திருத்தலம்தான் தம்பிக்கலை ஐயன் திருக் கோவில்.
"வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்கு பொருப்பு வெள்ளிகுன்று- கிடக்கும்
களித்தண்டலை மேவும் காவிரி சூழ்நாடு
குளித்தண் டலையளவு கொங்கு.'
கொங்கு என்னும் சொல் மதுரம் என்னும் பொருள் குறித்தது. (கொங்குதேர் வாழ்க்கை- குறுந்தொகை). தொண்டை நாடுபோல கொங்கு நாடும் மூவேந்தர் ஆட்சிக்கு முழுமை யாக ஆட்பட்டத்தில்லை. சேரநாடுபோல மலைவளம் பெற்றது. குறிஞ்சியும் முல்லையும் குறைவில்லா மருதமும் கொண்டிலங்கியது. ஆகையால் இல்லறம் துறந்து இறைவனைத் தேடும் சித்தர்களின் சத்தியபூமியானது. சித்தத்தை சிவனிடமே வைத்த சித்தர்களுள் போகர், கோரக்கர், கருவூரர், பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி, இடைக்காடர், சிவவாக்கி யர், பிண்ணாக்கீசர் முதலிய எண்ணற்றோர் இப்பகுதியில் வாழ்ந்து இறைநிலை எய்தியவர் கள். அவர்களைப் போன்றே விஞ்ஞானம், சோதிடம், வானவியல், மருத்துவம், தத்துவம், ஆன்மிகம் முதலிய அனைத்திலும் சிறந்த ஒரு அருட்சித்தர்தான் தம்பிக்கலை ஐயனா வார். பலநூறு ஆண்டுகளுக்குமுன் தோன்றி இன்னும் இத்திருத்தலத்தில் சூட்சுமமாக அருளாட்சி புரிந்துவருபவர்.
கொங்கு தேசத்தின் 24
நாடுகளில் காஞ்சிக் கூவல் நாடும் ஒன்று. அந்த நாட்டின் தலைநகரம் காஞ்சிக்கோவில். காஞ்சிக் கோவில்நாட்டு பெரியபட்டக்காரராக செம்பன் கூட்டத்து தம்பி கவுண்டர் இருந்தார்.
அவரிடம் பல மாடுகள் இருந்தன. அவற்றை மேய்ப் பதற்கு அவருடைய சகோதரர் நல்லய்யன் என்பவர் அழைத் துச்செல்வார். ஒருநாள் அந்த கால்நடைகளில் ஒரு பசுவின் மடியில் பால் சுரக்கவில்லை என்பதை நல்லய் யன் கண்டார். அடுத்தநாள் அதைக் கண் காணித்தார். அது ஒரு புதருக்கு அருகில் சென்று ஒரு புற்றின்மீது நின்றுகொண்டது. அதிலிருந்த நாகம் அதன் பாலைக் குடித்துக் கொண்டிருந்தது. அதை தனது சகோதரர் தம்பி கவுண்டரிடம் நல்லய்யன் கூறினார். அதை நம்பாத தம்பி கவுண்டர் அவரை நன்றாக அடித்து உதைத்தார். மற்றவர்கள் அவர் அடிப் படைத் தடுத்து நிறுத்தி, மறுநாள் அனைவ ரும் நல்லய்யனுடன் அது உண்மையா என பார்க்கச் சென்றனர்.
அங்கு நடந்த காட்சியைக்கண்டு பிரம்மித்த னர். தம்பி கவுண்டர் "அறியாமல் எனது தம்பியை அடித்துவிட்டேனே' என வருந்தி னார். மற்ற உறவினர்கள் அவரைத் தேற்றி னார்கள்.
அன்றிரவு தம்பி கவுண்டரின் கனலில் அந்தப் பாம்பு தோன்றி, அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும், அவருடைய வருங்கால சந்ததியினரை தான் பாதுகாப்பதாகவும் உறுதி கூறியது. அன் றிரவே தம்பி கவுண்டர் அந்த புற்றினருகில் சென்று அமர்ந்துகொண்டார். அவருக்கு அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
பலகாலம் கழித்து தம்பி கவுண்டர் சமாதியடைய, அவரை தெய்வமாகக் கருதி, தம்பிக்கலை ஐயன் என அழைத்து அவருக்கு ஆலயம் அமைத்தனர். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலை'யில் வல்லவராதலால் இவர் பெயரும் தம்பிக்கலை ஐயன் என மருவி பெயர்க்காரணம் வந்ததாக தல புராணம் சொல்கிறது.
தம்பிக்கலை ஐயன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது. தம்பிக் கலை ஐயன் பல சித்தர் கலைகளைக் கற்றவர். தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரணி உடனுறை நீலகண்டேஸ்வரரை தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்து சித்தரானார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் பட்ஹம்ல்ண்ந்ந்ஹப்ஹண் ஆஹ்ஹ்ஹய் எர்ழ்ங்ள்ற் (தம்பிக் கலை ஐயன் வனப்பகுதி) என பதிவு செய்யப்பட்டுள் ளதாக வரலாற்று ஆவனங் கள் தெரிவிக்கின்றன. இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சுமமாக, தம்பிக்கலை ஐயனுடன் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்ப்பங்கள் வாழும் பகுதியாகவும், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீக்கும் தலமாகவும் தம்பிக்கலை ஐயன் கோவில் விளங்குவது சிறப் பாகும்.
காஞ்சிக்கோவில், அதனருகே சொர்ணபுரி எனப்படும் தங்கமேடு ஒருகாலத்தில் அடர்ந்த வனமாக இருந்தது. அதற்கு முன்பாக தாருகவனம் (நாகவனம்) என்றழைக்கப்பட்டு வந்தது. இத்தலத்தில் அம்பிகை நாக வடிவு கொண்டு இறைவனைத் தொழுது வந்தாள். நாகேஸ்வரி எனும் திருநாமம் கொண்டு அருள்புரிகிறாள். சந்நிதியின் கீழேயுள்ள புற்றுக்கண்ணில் வாழ்ந்துவரும் பல நாகங்கள் அடிக்கடி பக்தர்களுக்கு தரிசனம் தருவது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.
இந்த நாகவனத்தில் ராகு மற்றும் கேதுவும் ஞானமூல வெளியை அடைந்து, சிவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி, அன்னபூரணி சமேத நீலகண்டேஸ்வரரை வழிபட்டு தங்களுக்கு ஏற்பட்ட கிரகண தோஷத்திலிருந்து நிவர்த்தி யடைந்தனர். அதனால் இத்தவம் ராகு- கேதுக்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
* தோல்வியாதி, தோல் அரிப்பு, பூரான், தேள்கடி போன்ற பிரச்சினைகளுக்கு மண் சொப்பில் தண்ணீர் மந்திரித்து, வேப்பிலை பாடம் போடப்படுகிறது. நல்ல தீர்வுகண்டு மகிழ்வுடன் செல்கிறார்கள் பக்தர்கள்.
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உருவ பொம்மை வைத்து வழிபடுவது தனிச்சிறப்பு. கோவில் வளாகம் முழுக்க உருவச்சிலைகள் நிறைந் துள்ளன.
* இங்கு உயிருடன் நாகங்கள் உலா வருகின்றன. இங்கு மந்திரித்தால் கொடிய விஷத் தன்மைகொண்ட நாகம் தீண்டியவர்களைக்கூட பிழைக்க வைக்கமுடியும் என்கிறார் ஆலயத் தலைமை பூசாரி அவநாசியப்பன்.
* விஷப்பூச்சிகள், ஜந்துகள் தீண்டிய வர்களை சந்நிதிமுன் கொண்டுவந்து படுக்க வைத்து, தலைமாட்டில் வேப்பிலையை வைத்துவிட்டு, கோவிலை சாற்றிவிட்டு இருபது நிமிடம் அனைவரும் வெளியேறிவிடுகி றார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறிது நேரத்தில் தாமாகவே எழுந்து எதுவும் நடவாததுபோல் வெளியே வருகிறார்கள். மருத்துவ வசதிகளே இல்லாத காலத்தில் ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன.
* மகாசித்து கைவரப்பட்ட புனிதரான தம்பிக்கலை ஐயனின் அற்புதங்களைக் கேள்விப்பட்டதொரு மலையாள மந்திரவாதி ஏளனம் செய்தான். அவனுடலில் ஏற்பட்ட குறைபாட்டை ஸ்பரிச தீட்சைமூலம் குணப் படுத்தினார். அதன்பின் அவர் சிஷ்யரானார்.
* ஒடிஸ்ஸா வணிகர் ஒருவரின் பேச முடியாத மகளை இங்கு அழைத்து வந்து, அவள் நாக்கில் மூலிகைச் சாறைத் தடவி ஜெபம்செய்ய, அந்தப் பெண் பேசத் தொடங்கி னாள். அதனால் அந்நாட்டு விஜயகர்ணா என்ற மன்னர் தம்பிக்கவுண்டரின் சீடரானார்.
* "அவந்தியிலிருந்து வந்த பார்வையற்ற ஒரு பிராமணருக்கு பார்வை தந்தார். இறையரு ளால் வந்தவர் அனைவரும் குணமானார்கள்'' என்கிறார் ஆலய அர்ச்சகரான சுரேஷ்குமார்.
* பஞ்சமி திதியன்று நாகேஸ்வரி அம்மனுக்குப் பால் வார்த்து, ராகு- கேது சந்நிதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனைசெய்து, பக்தர்களுக்கு உளுந்து வடை விநியோகம் செய்தால் சர்ப்ப சாப தோஷங்கள் விலகி, நீதிமன்ற வழக்குகளில் நல்ல தீர்வு கிட்டுகிறதாம்.
* அஸ்வினி, மகம், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எமகண்ட நேரத்தில் ஜனித்தவர்கள், கேது தசாபுக்தி நடப்பவர்கள், வெள்ளிக்கிழமை ருதுவானவர்கள் தல விருட்சமான ஊசல் மரத்திற்கு நீர் ஊற்றி, விநாயகருக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து, அறுகம்புல் மாலைசாற்றி வழி பட்டால் கேது தோஷம் கெடுபலன்கள் விலகி வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும்.
* பங்குனி உத்திரத்திற்கு முன்புவரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து அடுத்த ஞாயிறுவரை ஆலயத் திருவிழா நடைபெறும். கருப்பண்ணசாமி ஆலயத்தில் மட்டும் ஆடு பலி தரப்படுகிறது. பெரிய மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது.
* கார்த்திகை தீபத்தன்று லட்சதீபமேற்றி விழா நடப்பது விசேஷமான ஒன்று. ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ராகு- கேது பெயர்ச்சியன்று உலக நலன்கருதி வேள்வி, பூஜை விமரிசையாக நடக்கும்.
திருக்கோவில் அமைப்பு
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியிலிருந்து ஊருக்குள் நுழையும்போது முகப்பு வளைவு எல்லையில் நம்மை வரவேற்கிறது. விவசாய பூமிகள் நிறைந்த தங்கமேடு எனும் இடத்தில் கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் வித்தியாசமான இரட்டை விமான அமைப்புடன் உள்ளது.
கிழக்கே பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் அன்னபூரணி சமேத நீலகண்டேஸ்வரர் திருமணக்கோலக் காட்சியுடன் மானுட வடிவில் எழுந்தருளியுள்ளார். இங்குதான் தம்பிக்கலை ஐயனை ஈசன் ஆனந்தத்துடன் ஆட்டுக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், கால பைரவர் சந்நிதிகள் உள்ளன.
அறுபது அடி உயரத்தில் 300 சிறப்பங் களுடன் ஐந்துநிலை ராஜகோபுரம் அமைந்துள் ளது. உள்ளே நுழைந்தால் 73 பிரம்மாண்ட தூண்களுடன் ஆலயம் பரந்து விரிந்துள்ளது. விநாயகர் சந்நிதி அருகிலுள்ள நாகேஸ்வரி சந்நிதி மேடையில் தான் அடிக்கடி நாகங்கள் காட்சிதருவதாகக் கூறுகின்றனர். தம்பிக்கலை ஐயனுடன் வாழ்ந்த 108 சித்தர்களே நாகவடிவுகொண்டு வாழ்ந்துவருவதாக ஐதீகம்.
தண்ணீர் மந்திரிக்கும் சந்நிதியில் தம்பிக்கலை ஐயன் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் காட்சி அற்புதமானது. இங்குதான் நாகங்களுக்கு பால், முட்டை வைக்கப்படுகிறது. இதையடுத்து நல்லய்யன் சந்நிதி உள்ளது.
மேற்குப் பிராகாரத்தில் இராமேஸ்வர திருத்தல காட்சி, கஜேந்திரன் அபிஷேகக்காட்சி, பாலசுப்பிரமணியர், சங்கரநாராயணர், பாம்பாட்டிச் சித்தர், கருப்பண்ண சுவாமிக்கு தனித்தனி சந்நிதிகள் உண்டு.
கருவறை மண்டபத்தில் வடக்கு நோக்கி தம்பிக்கலை ஐயன் சூட்சுமரீதியாய் அருள் பாலிக்கிறார்.
காலை 6.00 மணிமுதல் பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 2.30 மணிமுதல் இரவு 7.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஞாயிற் றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை தொடர்ச்சியாகத் திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், தம்பிக்கலை ஐயன் திருககோவில், தங்கமேடு, தண்ணீர்ப் பந்தல் பாளையம் அஞ்சல், காஞ்சிக் கோவில்- 638 116. பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்.
சுரேஷ்குமார் குருக்கள், அலைபேசி: 93443 41575, எழுத்தர் பி.சி. தம்பி, அலைபேசி: 99426 24793, விஸ்வநாதன் இ.ஒ: அலைபேசி: 97893 20500.
ஈரோடு- கோபி சாலை யில் செல்லும் பேருந்தில் கவுந்தப்பாடி நிறுத்தத் தில் இறங்கி மினி பேருந்து மூலம் தம்பிக் கலை ஐயன் ஆலயம் செல்லலாம். பேருந்து, ஆட்டோ வசதியுண்டு.