சை வளர்த்த தமிழினம் இசையை நிர்ணயிக்கும் தாளக்கருவிகளை மிருகங் களின் தோலால் செய்து நுண்கலை ஆக்கினர். உழைத்துச் சோர்வடைந்த மனித இனம், முழுநிலவு நாட்களில் இரவில் வெகு நேரத்திற்கு இவ்விசையோடு சேர்ந்த ஆடல் கலைகளை, அதனோடு நாடகக் கலைகளையும் உருவாக்கி, சிறுவர்முதல் முதிர்வயதினர்வரை இன்புற்று இளைப்பாறத் தொடங்கினர்.

செல்வச்செழிப்பு மிகுந்த மருதநில மக்கள், இம்மூன்று கலைகளையும் நன்றாக அனுபவித்து நுகர்ந்தபின், இவற்றிலுள்ள நிறை, குறைகளை ஆராயத் தொடங்கினர்.

இவற்றிலிருந்த குறைகளை நீக்கி நிறைவு பெற, இவற்றிற்கான இலக்கணம் வகுத்த னர். காலப்போக்கில் இவை குருகுலங் களில் கற்பிக்கப்பட்டன.

ஏகன் ஆதனார் குருகுலப் பள்ளியில் மிகப்பழமையான பெருநாரை, பெருங் குருகு எனும் இரண்டு இசையிலக்கிய நூல் களை, இம்மடத்திலிருந்த இல்லாள குருமார்கள் பாரம் பரிய சொத்தாகப் பராமரித்துவந்தனர்.

இதேபோல், முது குருகு, முதுநாரை எனும் இசை நூல்களும் பல படிவங்கள் எடுக்கப்பட்டு, இதுபோன்ற பிற குருகுலப் பள்ளிகளுக்கு இம்மடத்தினரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இக்குருமடத்தின் இல்லாள குருமார் களிடம் பயிற்சி பெற்றவர்கள், மன்னர்கள் வாழும் தலைநகரங்களில், வெளிநாட்டினர் கள் வருகைதரும் துறைமுகப்பட்டினங் களில், பெரிய சந்தையூர்களில் இருந்த மக்கள் மன்றங்களில், தங்கள் திறமையைக் காட்டி பெரும் புகழடைந்தனர். அம்மன்றங் களில் நடந்த இசை மற்றும் ஆடல் போட்டி களில் வென்று "யாழ் வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி' ஆகிய பட்டங் களைப் பெற்றனர். இவ்வாறு மூன்று போட்டி மன்றங்களில் தொடர்ந்து வென்றவர்களுக்கு "தலைக்கோலி' என்ற மிக உயரிய பட்டமும், தலைக்கோல் பரிசும் கொடுத்து, சங்க காலத் தமிழர்கள் இவர்களை கௌரவித்து மகிழ்ந்தனர்.

இங்கு தலைக்கோல் என்பது வெள்ளி மற்றும் தங்கத்தினால் பூண் வேயப்பட்டு, அதில் நவரத்தினங்கள் இழைக்கப்பட்டு, அழகு படுத்தப்பட்ட கல் மூங்கில், கருங்காலி, செங்காலி, சந்தனம், செம்மரம் போன்றவற் றால் செய்யப்பட்ட தலைக்கோல்களாகும். இவற்றை வென்ற போட்டிகளின் தன்மைக் கேற்ப கொடுத்தனர். இவற்றுள் மிக உயர் வானது செம்மரத் தலைக்கோலாகும்.

இந்த செம்மரத் தலைக்கோலினை வென்றவர்கள் மட்டுமே, ஏகன் ஆதனார் குரு மடத்தில் இல்லாள குருமார்களாகத் திகழ முடியும். அக்காலங்களில் இக்கலைகளை வேளிர் குல வள்ளல்களும், பெருஞ்செல்வந் தர்களும், மன்னர்களும் பெரிதும் ஊக்கப் படுத்தி வளர்த்தனர். இதன் நீட்சியாகத்தான், அதிதிறமைமிக்க அரசியல் ஞானச்செருக்கு டைய தமிழ் மன்னர்களுக்கு, அவர்களுடைய நல்லாட்சியைப் பாராட்டி, அம்மன்னர் களைக் காணவந்த பெருவணிகர்களும் செல்வந்தர்களும் செம்மரத் தலைக்கோலினை பரிசாக அளித்தனர். பின் இது ஒரு மரபாக மாறி, ஒரு இளவரசன் அரசனாகப் பட்டம் சூட்டிக்கொள்ளும் பெருவிழாவின்போது, ஆன்றோர் பெருமக்களால் அவனுக்கு இச்செம்மரத் தலைக்கோல் வழங்கப்பட்டு, வருங்காலத்தில் இவன் நல்லாட்சி புரிய வேண்டும் என ஆசிவழங்கினர்.

ss

இதுவே பிற்காலத்தில் செங்கோலாகப் பெயர் மாறி, நல்லாட்சிக்குரிய குறியீடாக மாறியது. அதன் பின்புதான், தமிழ் மன்னர்கள் செங்கோல் ஏந்தி நடுவுநிலை தவறாத ஆன்றாண்மை மிக்க ஆட்சியை மேற்கொண் டார்கள். இதனைத் தொடர்ந்து, தமிழ் இசையை வளர்ப்பதற்காக, கலிப்பா, பரி பாடல் போன்ற இசைப்பாட்டு நூல்கள் இயற்றப்பட்டன. இவற்றுக்குச் செந்துறை மார்க்க நூல்கள் எனப் பெயரிட்டனர். இதேபோல் கூத்து, நாட்டியம் முதலிய ஆடற்கலைகளில் பாடப்பெற்ற நூல்கள், வெண்துறை மார்க்க நூல்கள் என்று அழைக்கப்பெற்றன. செந்துறை மார்க்க நூல்கள், ஒரு பகுதியில் மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள், நாடு, நகரம், மலை, கடல், ஆறு போன்றவற்றைப் பற்றிப் பாடும் பாடல்களாக இருந்தன. இவை இன்பச் செய்திகளைப் பற்றி மட்டுமே பாடும் இசைப் பாடல்களாகும்.

இம்மடம் இவ்விரண்டு மார்க்கங்களையும் ஆதரித்து, பல கலைஞர்களை உருவாக்கியது. அதில் திறமைமிக்க பலர் அரசவைக் கலைஞர்களாக நியமிக்கப்பட்டனர். சிலர் வணிகர் குழுக்களோடு சேர்ந்து கடல் கடந்து பல தேசங்களுக்குச் சென்று அங்கு தங்களது திறமைகளை நிலைநாட்டிப் பெரும் செல்வங்களை ஈட்டிவந்தனர்.

Advertisment

வரலாற்று காலம் என்ற முதற்சங்கக் காலத்தில் இக்கலைகள் கூத்துக்கலை என்ற பெயரில் கூத்தர்களால் மட்டுமே ஆடப்பட்டது. கூத்தாடும் கூத்தர்கள் குறிஞ்சி நிலக்கடவுளான முருகப் பெருமானைப் பற்றி ஆடிய கூத்துகளுக்கு குடைக் கூத்து மற்றும் துடியாடல் எனப் பெயரிட்டு அழைத்தனர். இதில் துடியாடல் என்பது திருச்செந்தூரில் கடலுக்கு நடுவே முருகப்பெருமான் பகைவரை அழித்ததைக் கருவாகக்கொண்டு ஆடும் கூத்து. குடைக் கூத்து என்பது முருகப் பெருமான் பகைவர்களைச் செயலற்றுப் போகும்படி போர்செய்து முடித்தபின் ஆடிய கூத்து ஆகும்.

இதேபோல், "கொடுகொட்டி' மற்றும் "பாண்டரங்கம்' போன்றவை சிவபெருமான் பகைவர்களைப் போரில் அழித்தபின் ஆடிய கூத்துக்கள் எனப்பட்டது. இது தென்தமிழ் நாட்டுக் கூத்தர்களால் ஆடப்பட்டது. முல்லை நிலத்தில் உருவான கூத்துகள் "குடக்கூத்து, அல்லியக் கூத்து மற்றும் மல்லாடல்' எனப்பட்டன. இவை பிற்காலத்தில் தோன்றியவை. இடையர் குலதெய்வமான கண்ணபிரான் பகைவர்களோடு போரிட்டு அழித்ததை விளக்கும்படியாக இக்கூத்துக்கள் ஆடப்பட்டன. பாலை நிலத்தில் "மரக்காலாடல்' என்ற கூத்து, பகைவர்களின் அனைத்துப் போர் தந்திரங்களையும் கொற்றவை முறியடித்து, அவர்களை அழிப்பதுபோல் ஆடப்படும்.

"பேடாடல்' என்பது ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடுவது. இது காமக் கடவுளான பேக்காமன் ஆடுவதாகச் சித்தரிக்கப்பட்டது. பாவைக் கூத்து என்பது திருமகள் பகைவர்களைத் தன் அழகால் மயக்கி வீழச் செய்வதுபோல் ஆடுவது. இது பாவை போன்ற அழகிய பெண்கள் மட்டுமே ஆடிய கூத்தாகும். இக்கூத்தைப் பார்க்கும் அனைவரும் மயங்கும்படி அழகிய ஆடல் மகளிர்களால் உடல் நளினத் துடன் ஆடும் கூத்தாகும்.

Advertisment

மேற்சொன்ன கூத்துகள் அனைத்தும் தெய்வங்கள் ஆடியதாகச் சித்தரிக்கப்பட்டவை. ஆதலால், இவை யனைத்தும் "தெய்வ விருத்தி' எனப் பெயரிட்டு அழைக்கப் பட்டன. இக்கூத்துகளை ஆடுபவர்கள், உட்கு அதாவது அச்சம், வியப்பு, விழைவு (ஒன்றை விரும்புவது), பொலிவு (பேரழகு) எனும் நான்கு வகை உடல்மொழிகளைக் காட்டுவதில் வல்லவர் களாக இருந்தனர். இவ்வா றான மேற்சொன்ன கூத்துகள் அனைத்தையும் பாணர்கள் எனும் ஆதி தமிழ் குலத்தவர்கள்தான் ஆடினார்கள்.

இவர்கள்தான் பின்னா ளில் நாடகத் தமிழுக்கு வித்திட்டவர்கள். இவர்களால் பல நாடக நூல்கள் எழுதப் பட்டன. நாடக நூல்கள் எழுதுவதற்குச் சில இலக்கணங்களை இவர்கள் வகுத்து வைத்திருந்தனர். இவ்விலக்கணம் பின்வரும் உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என வரையறுத்திருந்தனர்.

அவை: 1. யோனி, 2. விருத்தி 3. சந்தி என்பனவாகும்.

யோனி என்பது ஒரு நாடகத்தின் தலைவன் மற்றும் அவனது வாழ்வியல் சாதனைகள், அவனது வெற்றி போன்றவற்றைச் சித்தரிப்பது, இவற்றை நான்கு வகைகளாகப் பிரித்தனர்.

1. உண்மையாக வாழ்ந்து முடிந்த அல்லது வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பேராண்மைமிக்க தலைவனின் வாழ்க்கையில் செய்த அரிய சாதனைகள், வெற்றி, நீதிபரிபாலனம் போன்ற வற்றை கதைக் கருவாக்கி நாடகம் அமைப்பது.

2. முழுவதும் கற்பனையான கதா பாத்திரங்களையும் கற்பனை நிகழ்வுகளை யும் கதைக் கருவாக்கி, அதன்மூலம் ஒரு உயர்ந்த நீதியையோ அல்லது வாழ்வில் இக்கட்டான சூழ்நிலைகளில் தந்திர உத்திகளை அறிவுப்பூர்வமாகக் கையாண்டு அவற்றை வெற்றி கொள்வதையோ கதைக் கருவாகக்கொண்டு நாடகம் அமைப் பது.

3. ஒரு காலத்தில் உண்மையாக வாழ்ந்த ஒரு தலைவனின் வாழ்வியலில் கற்பனை நிறைந்த நிகழ்வுகளைக்கொண்டு மெருகேற்றி அதன்மூலம் ஒரு வாழ்வியல் நீதியை உறுதிபடுத்திக் கூறுவது.

4. ஒரு காலத்தில் உண்மையாக நிகழ்ந்த மக்களால் மறக்க இயலாத இயற்கைச் சீற்றங்கள், போர் போன்றவற்றை வெற்றிகொண்டதற்குக் காரணமான ஒரு கற்பனைக் கதாநாயகனை உருவாக்கி, மேற்சொன்ன வெற்றிகளுக்கு அவனே மூலகாரணம் என்பதுபோல் கதைக் கருவை உருவாக்குவது நான்காம் வகை. 5. மேற்சொன்ன நான்கு யோனி வகைகளில் முதலாம் வகையை மட்டுமே ஏகன் ஆதனார் குருமடம் ஊக்கப்படுத்தியது. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வியல் முறை, கலாச்சாரம், தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் சமூக மாற்றம் போன்றவற்றை வருங்கால தமிழ்ச் சமுதாயத்தினர் ஆழமாகப் புரிந்துகொள்ளமுடியும் என நம்பியது இம்மடம்.

ஆனால், மூன்று மற்றும் நான்காம் வகை நாடகங்கள், பிற்காலத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்களால் புராணங்களாக மாற்றப்பட்டு, நாடகக் கதாநாயகர்களை கடவுளின் அவதாரங்களாக, மக்களால் நம்பும்படும்படி செய்தார்கள். பின் அவர்களுக்குக் கோவில் எழுப்பப்பட்டு சமயச் சடங்குகளுடன் மக்கள் அங்கே வழிபாடு செய்யும்படி செய்தார்கள்.

(இன்னும் விரியும்...)

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்