கோமுகி ஆற்றின் தென்கரையில் அமைந் துள்ளது காட்டுமயிலூர் கிராமம். ஒரு காலத்தில் இப்பகுதி பெரும் காடாக பரந்துவிரிந்து கிடந்துள்ளது. இதுபோன்ற அமைதி தவழும் இடங்களை முனிவர்கள் தவமிருப்பதற்குத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி சில முனிவர்கள் இந்தக் காட்டுப்பகுதியில் தவம்செய்ய வந்துள்ளனர்.
பெரும்பாலும் முனிவர்கள் தவமிருக்கும்போது சிவ-ங்கத்தை உருவாக்கி அதன்முன்பாக அமர்ந்து தவம் செய்வார்கள். அப்படி இந்த இடத்தில் சிவலிங்கத்தை உருவாக்க முனிவர்கள் முடிவு செய்தனர்.'
ஆனால் அப்பகுதியில் அதற்கான கல் கிடைக்க வில்லை. எனவே களிமண்ணால் சிவலிங்கம் செய்ய முடிவுசெய்து மண்ணைத் தோண்டியுள்ளனர்.
முனிவர்களின் எண்ணத்தையும் தூய்மையான மனதை யும் அறிந்த சிவபெருமான் மண்ணிலிருந்து சிறிய வடிவிலான சிவலிங்கமாக வெளிப்பட்டுள்ளார். இறைவன் கருணையை எண்ணி முனிவர்கள் மெய்சிலிர்த் தனர். மண்ணைத் தோண்டும்போது முனிவர்களது கரங் களில் சிவலிங்கம் கிடைத்ததால், அந்த லிங்கத்திற்குத் திருக்கரம் தோன்றீஸ்வரர் என்று பெயர் வைத்து, அதே இடத்தில் பிர திஷ்டை செய்து தவமிருந்துள்ளனர்.
காலப்போக்கில் அப்பகுதியைச் சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் குடியேறினார்கள். வீடுகள் உருவாகின. பிறகு ஊராக மாறியது. அங்கு இறைவனுக்கு சிறிய அளவில் கோவிலையும் எழுப்பினர். மன்னர் கள் ஆட்சிக்காலத்தில் திருக்கரம் தோன்றீஸ்வரர் ஆலயம் மேலும் புகழ்பெற்றது. இரண்டாம், மூன்றாம் குலசேகர பாண்டியன் காலத்தில் இவ்வாலய இறைவனுக்கு சிறப்பான கோவிலை எழுப்பியுள்ளனர்.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் என்ற மன்னன், அம்மன் திரிபுரசுந்தரிக்கு சந்நிதி எழுப்பியுள்ளார். அத்துடன் இக்கோவிலைப் பராமரிப்பதற்காக நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அதற்கு சாட்சியாக இக்கோவில் பகுதி யில் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஆட்சிசெய்த பல்லவ ராயன் என்ற குறுநில மன்னன் இந்த ஊரை, தலைமை ஊராக விளங்கிய "கோழியூர் பற்றில் காட்டு மயில
கோமுகி ஆற்றின் தென்கரையில் அமைந் துள்ளது காட்டுமயிலூர் கிராமம். ஒரு காலத்தில் இப்பகுதி பெரும் காடாக பரந்துவிரிந்து கிடந்துள்ளது. இதுபோன்ற அமைதி தவழும் இடங்களை முனிவர்கள் தவமிருப்பதற்குத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி சில முனிவர்கள் இந்தக் காட்டுப்பகுதியில் தவம்செய்ய வந்துள்ளனர்.
பெரும்பாலும் முனிவர்கள் தவமிருக்கும்போது சிவ-ங்கத்தை உருவாக்கி அதன்முன்பாக அமர்ந்து தவம் செய்வார்கள். அப்படி இந்த இடத்தில் சிவலிங்கத்தை உருவாக்க முனிவர்கள் முடிவு செய்தனர்.'
ஆனால் அப்பகுதியில் அதற்கான கல் கிடைக்க வில்லை. எனவே களிமண்ணால் சிவலிங்கம் செய்ய முடிவுசெய்து மண்ணைத் தோண்டியுள்ளனர்.
முனிவர்களின் எண்ணத்தையும் தூய்மையான மனதை யும் அறிந்த சிவபெருமான் மண்ணிலிருந்து சிறிய வடிவிலான சிவலிங்கமாக வெளிப்பட்டுள்ளார். இறைவன் கருணையை எண்ணி முனிவர்கள் மெய்சிலிர்த் தனர். மண்ணைத் தோண்டும்போது முனிவர்களது கரங் களில் சிவலிங்கம் கிடைத்ததால், அந்த லிங்கத்திற்குத் திருக்கரம் தோன்றீஸ்வரர் என்று பெயர் வைத்து, அதே இடத்தில் பிர திஷ்டை செய்து தவமிருந்துள்ளனர்.
காலப்போக்கில் அப்பகுதியைச் சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் குடியேறினார்கள். வீடுகள் உருவாகின. பிறகு ஊராக மாறியது. அங்கு இறைவனுக்கு சிறிய அளவில் கோவிலையும் எழுப்பினர். மன்னர் கள் ஆட்சிக்காலத்தில் திருக்கரம் தோன்றீஸ்வரர் ஆலயம் மேலும் புகழ்பெற்றது. இரண்டாம், மூன்றாம் குலசேகர பாண்டியன் காலத்தில் இவ்வாலய இறைவனுக்கு சிறப்பான கோவிலை எழுப்பியுள்ளனர்.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் என்ற மன்னன், அம்மன் திரிபுரசுந்தரிக்கு சந்நிதி எழுப்பியுள்ளார். அத்துடன் இக்கோவிலைப் பராமரிப்பதற்காக நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அதற்கு சாட்சியாக இக்கோவில் பகுதி யில் கல்வெட்டுகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஆட்சிசெய்த பல்லவ ராயன் என்ற குறுநில மன்னன் இந்த ஊரை, தலைமை ஊராக விளங்கிய "கோழியூர் பற்றில் காட்டு மயிலூரை' இணைத்து, அதற்கு அதிகாரியாக இருந்த எரங்குடையான் என்பவருக்கு செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுத் துள்ளார். பல்லவராயன், அதிகாரி எரங் குடையான் ஆகிய இருவரும் சேர்ந்து உறுதிப் பட்டயத்தில் கையெழுத்திட் டுள்ளனர். இவற்றையெல்லாம் கல் வெட்டு ஆய்வுகள்மூலம் டாக்டர் கலைக்கோவன் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார்கள் ஊர் முக்கிய பிரமுகர் கள்.
தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோவில்களில் மிகப்பெரிய சிவலிங்கங்களை ராஜராஜ சோழன், அவரது மகன் ராஜேந்திர சோழன் உருவாக்கி வைத்துள்ளனர். மிகச்சிறிய லிங்க உருவத்தில் காசியில் காசி விசுவநாதர் உள்ளார். அதைவிட சிறிய உருவத்தில் காட்டுமயிலூரில் திருக்கரம் தோன்றீஸ்வ ரராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் சிவபெருமான். இதன்மூலம் பெரியவர்- சிறியவர் என்று மனிதர்களின் உருவங்களைப் பார்த்து எதையும் தீர்மானிக்கக்கூடாது. அவர்களின் நல்ல மனங்களை- எண்ணங்களை- ஆற்றல்களைப் பார்த்து மதிக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இறைவன் இப்படிப்பட்ட வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி மக்களுக்கு உணர்த்தியுள்ளார் என்பதே நிதர்சனம்.
"இப்படி இறைவன் தன்னைத்தானே வெளிப் படுத்திக் கோவில்கொண்டுள்ள இந்த ஊரில் வாழ்கி றோம் என்பதே எங்களுக்குப் பெருமை. காசியிலுள்ள விஸ்வநாதரைவிட சிறிய வடிவில் இங்கு மூலவராக இருப்பது வேறெங்கும் காண முடியாத அதிசயம். ஒருவர் குடும்பத்துடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இறைவன் சிவபெருமானே வாழ்ந்து காட்டியுள்ளார். அழகான உருவத்தில் முருகன், அழகு குறைவான வேறு வடிவத் தில் மூத்த மகன் விநாயகர், மனைவி பார்வதிக்கு உடலில் பாதி வழங்கியது என, இதன்மூலம் ஆண்- பெண் அனைவரும் சமம் என்ற அர்த்தத்தையும், தங்களுக்குப் பிறக் கும் குழந்தைகள் அழகாக இருந்தாலும் அழகில்லா விட்டாலும் அனைத்து குழந்தைகளையும் பாகுபாடு பார்க்காமல் அன்பு பாராட்டி வளர்க்கவேண்டும் என்பதற்கான உதாரணங்களையும், தங்கள் குடும்பத்தின் வழியாக மக்களுக்கு உணர்த்தியுள்ளார் சிவன். இதை ஒவ்வொரு குடும்பத்தினரும் உணரவேண்டும்" என்கிறார் சைவ சித்தாந்த சொற்பொழிவாளரும் ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவருமான கோம்பையன். இவர் தற்போது கோவில் விழாக்கள், நிகழ்ச்சிகள், பிரதோஷம் போன்ற விசேஷங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் சிவனடியார்.
இவ்வாலய இறைவனை தரிசிக்கவரும் சிவனடியார்கள், பூஜை செய்வதற்கு அருகில் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இதையறிந்த இந்த ஊருக்கு அருகிலுள்ள சிறுநெய்த நல்லூர் (தற்போது பேச்சு வழக்கில் சிறுநெசலூர்) நல்லசேவுதன் நல்லரியார் என்ற பண்ணையத்தார் குளம்வெட்டி சீரமைத்துக் கொடுத்துள்ளார் என்கிறது இக்கோவிலிலுள்ள கல்வெட்டு.
இந்த ஊருக்கு காட்டுமயிலூர் என்னும் பெயர் எப்படி உருவானது? அசுரர் மன்னர்களில் ஒருவனான சூரபத்மன் பிரம்மதேவரை வேண்டிப் பெரும் தவமிருந்து, "தாயின் வயிற்றில் பிறந்த ஆண்- பெண் யாராலும் என்னைக் கொல்ல முடியாத வரம் வேண்டும்' என்று கேட்டுப் பெற்றான். அதன்பிறகு ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் தேவர் களைத் துன்புறுத்தினான்;
சிறைப் பிடித்தான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதன் விளைவாக சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமான் தோன்றினார். இளம் வயது வாலிபனாக வளர்ந்த குமரன் முருகனிடம், அவர் எதற்காகத் தோன்றினார் என்பதை அன்னை ஆதிபராசக்தி விளக்கிக் கூறி, தேவர்களைத் துன்புறுத்தும் அசுரன் சூர பத்மனை வதம் செய்யும்படி ஆணையிட்டதோடு, தன் சக்தியின் ஆதாரமாக வேல் ஒன்றை உருவாக்கி முருகப்பெருமானிடம் கொடுத்தாள். அதை எடுத்துக்கொண்டு முருகப்பெருமான் தனது தளபதி வீரபாகுவுடன் பெரும் படைகளைத் திரட்டிச்சென்று சூரபத்மனை வதம்செய்தார்.
பின்னர் தனது படைகளுடன் திரும்பிச்செல்லும் வழியில் பெரும் காடு குறுக்கிட்டது. அதைக்கடந்து செல்லும்போது அனைவருக்கும் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. எங்கு நோக்கினும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கண்ணில் படவில்லை. அனைவரும் நாவறட்சியில் துவண்டனர். அப்போது முருகப்பெருமான் தனது வாகனமான மயிலிடம் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வருமாறு உத்தரவிட்டார். பறந்து சென்ற மயில் கோமுகி ஆற்றில் தண்ணீர் ஓடுவதைக் கண்டறிந்தது. விரைந்து சென்று முருகப்பெருமானையும் படைகளையும் தண்ணீர் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. காட்டில் தண்ணீர் இருக்கும் இடத்தை மயில் அடையாளம் காட்டியதால் இந்த ஊருக்கு காட்டுமயிலூர் என்னும் பெயர் உருவானது. அந்த இடத்தில் திருக்கரம் தோன்றீஸ்வரர் குடிகொண்டிருப்பதை முருகனும் படைவீரர்களும் கண்டனர். இறைவனை வணங்கிவிட்டுப் படையுடன் புறப்பட்டனர்.
இந்த ஊருக்குக் கிழக்கில் கோமுகி, மயூரா, மணிமுத்தா ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடுகின்றன. அந்த இடத்தில் வில்வ வனேஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இங்கு வடக்கு நோக்கி முருகன் காட்சியளிக்கிறார். இதன்மூலம் அவர் வடக்கிலிருந்து திருச்செந்தூர் சென்றுள்ளார் என்பது தெரியவருகிறது. மேலும் மகாபாரதக் கதாநாயகர்களான பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையான அக்ஞாதவாசம் செய்வதற்காக விராட தேசம்நோக்கி வடக்கிலிருந்து வந்தனர். (அவர்கள் தேடிவந்த விராட நாடு தற்போது பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் உள்ளது. இப்பகுதியிலுள்ள ஒரு ஊர் விராடபுரம் என்று அழைக்கப்பட்டு, தற்போது லாடபுரம் என்று அழைக்கப்படுகிறது.) இந்த ஊர்தான் விராட மன்னனின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அந்த ஊருக்கு வந்த பாண்டவர்கள் வழியில் நல்லூர் பகுதியில் தங்கி வில்வவனேஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். அதற்குச் சான்றாக அந்த ஆலயத்தில் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் சிலை வடிவில் உள்ளனர்.
"இவ்வாலய இறைவனுக்குப் பௌர்ணமி பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதப் பௌர்ணமியன்றும் பகல் ஒரு மணியளவில் சிறப்புப் பூஜையும் அன்னதானமும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, இறைவனும் அம்பாளும் நந்திவாகனத்தில் கோவிலைச் சுற்றி வலம்வரும் காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும்'' என்கிறார்கள் இவ்வூர் பக்தர்கள்.
இவ்வாலயத்தினுள்ளே நுழைந்ததும் தல விருட்சமான வன்னிமரத்தைச் சுற்றியுள்ள மேடையின் முகப்பில் இரட்டை விநாயகர் அமர்ந்துள்ளார். இவரை ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியன்றும் தவறாமல் வந்து விளக்கேற்றி வழிபடும் திருமணமாகாத ஆண்- பெண் அனைவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும். நாகதோஷம் உள்ளவர்கள் பரிகாரத்திற்கு இவரை வந்து வழிபட்டுப் பலன்பெற்று வருகி றார்கள்.
"பல கோவில்களில் நவகிரகங்கள் அவரவர் திசையைப் பார்த்தபடி நிற்பார்கள். ஆனால் இக்கோவிலில் மையத் திலுள்ள சூரியனைப் பார்த்தபடி சுற்றிலுமுள்ள கிரகங்கள் அமைந்துள்ளன. அதனால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு நலம்பெறுகிறார்கள்'' என்கிறார் அர்ச்சகர் குமார் சிவாச்சாரியார்.
இக்கோவிலிலுள்ள அஷ்டலட்சுமிக்கு எதிரே நவகிரகங்கள் வித்தியாசமான அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.
விருத்தாசலம் பழமலைநாதர், நல்லூர் வில்வ வனேஸ்வரர், சேப்பாக்கம் என்றழைக்கப்படும் சிவன் பாக்கம் ஈஸ்வரன் கோவில், காட்டுமயிலூர் திருக்கரம் தோன்றீஸ்வரர், இவ்வாலயத்திற்கு மேற்கிலுள்ள ஈஸ்வரன் கோவில் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களை விளக்கும் வகையில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
"மகாசிவராத்திரியன்று ஒரே இரவில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த சிவனடியார்கள் இந்த ஐந்து சிவாலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் மிகுந்த பலன் உண்டு'' என்கிறார் வேப்பூரைச் சேர்ந்த சிவனடியார் கல்யாணசுந்தரம்.
அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் உள்ளது. இங்கிருந்து வடமேற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காட்டுமயிலூர் திருக்கரம் தோன்றீஸ்வரர் ஆலயம். வேப்பூரிலிருந்து அனைத்து போக்கு வரத்து வசதிகளும் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு: 88707 28124. ப்