முருகு என்றால் அழகு. தமிழ் பஞ்சாங்கத்தில் தை பத்தாவது மாதம். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம். தமிழ்க்கடவுள் முருகனின் நட்சத்திரமான பூசமும் பௌர்ணமி திதியும் ஒன்றினையும். சந்திரன் முழு நிலவாக பூசத்திற்குள் வரும் நாள் தைப்பூசம் என்பதால் தை தமிழர்களுக்கு புனிதம். 1,500 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரப் பதிகங்களில் "பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த' என்று சம்பந்தரும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ் வரர் கோவில் தைப்பூசத்தில் நாலுநாட்கள் தெருக்கூத்துகள் நடந்ததாகவும் கல்வெட்டுகள் உண்டு.
தைப்பூசமானால் முருகன் சன்னதிகளின் சேவற்கொடி கொடிமரம் ஏறும். பழனியில் பத்துநாள் தைப்பூசத் திருவிழா. ஏழாம் நாள் வள்ளி- தெய்வயானையுடன் ரதவிதிகளில் தேரில் பவனிவரும் முருகருக்கு பத்தாம் நாள் தெப்பத் திருவிழா உற்சவம். பக்தர்கள் விரதமிருந்து பாதை யாத்திரையாக நடந்தே வருவார்கள். நாக்கு, கன்னம், கைகள், முதுகு என பெரிய, சிறிய வேல் களால் அலகுகுத்தி வருவார்கள். வேல்களை உடலுக்குள் செலுத்தி அதில் தேர் இணைத்து இழுத்து வருவதுமுண்டு. காவடி எடுக்கும் பக்தர்கள் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்பதாகும். கொடுமுடி காவிரி தீர்த்தக்காவடி, அலகுகுத்தி தொங்கும் பறவைக்காவடி, மீன்காவடி எனும் மச்சக்காவடி. மயில்தோகை மயில்காவடி, உடல் முழுக்க சந்தனம் பூசி சந்தனக் காவடி, பால்காவடி, பழக்காவடி, புஷ்பக்காவடி, பன்னீர்க்காவடி, சர்ப்பகாவடி, சேவற்காவடி, அன்னக்காவடி, வேல்காவடி, வாள்காவடி, விளக்குகாவடி, சர்க்கரைக்காவடி, பால்குடம் என தைப்பூசம் களைகட்டும்.
சிவன், விஷ்ணு
முருகு என்றால் அழகு. தமிழ் பஞ்சாங்கத்தில் தை பத்தாவது மாதம். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம். தமிழ்க்கடவுள் முருகனின் நட்சத்திரமான பூசமும் பௌர்ணமி திதியும் ஒன்றினையும். சந்திரன் முழு நிலவாக பூசத்திற்குள் வரும் நாள் தைப்பூசம் என்பதால் தை தமிழர்களுக்கு புனிதம். 1,500 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரப் பதிகங்களில் "பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த' என்று சம்பந்தரும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ் வரர் கோவில் தைப்பூசத்தில் நாலுநாட்கள் தெருக்கூத்துகள் நடந்ததாகவும் கல்வெட்டுகள் உண்டு.
தைப்பூசமானால் முருகன் சன்னதிகளின் சேவற்கொடி கொடிமரம் ஏறும். பழனியில் பத்துநாள் தைப்பூசத் திருவிழா. ஏழாம் நாள் வள்ளி- தெய்வயானையுடன் ரதவிதிகளில் தேரில் பவனிவரும் முருகருக்கு பத்தாம் நாள் தெப்பத் திருவிழா உற்சவம். பக்தர்கள் விரதமிருந்து பாதை யாத்திரையாக நடந்தே வருவார்கள். நாக்கு, கன்னம், கைகள், முதுகு என பெரிய, சிறிய வேல் களால் அலகுகுத்தி வருவார்கள். வேல்களை உடலுக்குள் செலுத்தி அதில் தேர் இணைத்து இழுத்து வருவதுமுண்டு. காவடி எடுக்கும் பக்தர்கள் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்பதாகும். கொடுமுடி காவிரி தீர்த்தக்காவடி, அலகுகுத்தி தொங்கும் பறவைக்காவடி, மீன்காவடி எனும் மச்சக்காவடி. மயில்தோகை மயில்காவடி, உடல் முழுக்க சந்தனம் பூசி சந்தனக் காவடி, பால்காவடி, பழக்காவடி, புஷ்பக்காவடி, பன்னீர்க்காவடி, சர்ப்பகாவடி, சேவற்காவடி, அன்னக்காவடி, வேல்காவடி, வாள்காவடி, விளக்குகாவடி, சர்க்கரைக்காவடி, பால்குடம் என தைப்பூசம் களைகட்டும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட தேவ, ரிஷிகள் போன்ற பக்தர்களுக்கு ஆனந்த தாண்டவம் ஆடி ஆதிபராசக்தி அருளாசி வழங்கியதும், அசுரர்களை வதம்செய்ய ஆண்டிக் கோலத்திலிருந்த முருகனிடம் சக்திவேலை அளித்ததும் தைப்பூச நாளில்தான்.
2,500 ஆண்டுகளுக்குமுன் போகர் எனும் சித்தர் உருவாக்கிய பழனி முருகன் மூலவிக்ரகம் பலவிதமான மூலிகைகளைக்கொண்ட நவபாஷாண விக்ரகம். இன்றுவரை மருத்துவ குணம் மாறாமல் இருப்பதுதான் போகரின் அருள். விஷ மூலிகைகளின் தொகுப்புக்கள் அடங்கிய வேதியியல், இயற்பியல் புவியியல் அடங்கிய உள்ளடக்கம் அந்த விக்ரகம். சாரம், சாதிலிங்கம், மனோசிலை, தாரம், வீரம், கந்தகம், பூரம், வெள்ளை கௌரி, தொட்டி போன்ற மூலங்கள் உள்ளடங்கிய 64 வகைக் கும் மேற்பட்ட மூலிகைகளின் நச்சுத் தன்மையை மருத்துவ குணமாக்கும் வித்தையை தெரிந்துவைத்திருந்த வேதியியல் விஞ்ஞானி போகர்.
"நீலி என்ற ஒரு பாசாணம் மற்ற அறுபத்தி மூன்று மூலிகைகளின் நச்சுத்தன்மையை முறித்து மருத்துவ குணமாக்கும் வேதித்தன்மை கொண்டது. நவபாஷாண விக்ரகத்தை செய்ய ஒன்பது ஆண்டுகள். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகை மூலக்கூட்டு மூலிகைகளால் வெயில், மழை, குளிர் என்று காலநிலை மாற்றத் துக்கு உட்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட விக்ரகமே பழனிமுருகன். நவகிரகங்களுடன் இயற்பியல் தொடர்புடைய விக்ரகத்தின் ஒவ்வொரு வேதிப்பொருளும் ஒரு நவகிரகத்தின் கனிமத் தன்மையைக் கொண்டது. பழனி முருகனை வழிபட்டால் நவகிரகங்களின் அருள் மட்டுமன்றி தோஷங்களும் விலகி ஓடிவிடும்.
மூலவர் அபிஷேகத்துக்கு நல்லெண்ணெய், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவை மட்டுமே. பனிக் காலங்களில் பன்னீர், பாலா பிஷேகம் சிறப்பு. மூலவர் மார்பில் வட்டவடிவ சந்தனக்காப்பு, இரு புருவங்களின் மையத்தில் குவியும் ஞானப்புள்ளியில் சந்தனப்பொட்டு. சூரிய குணமான அக்னியால் இரவில் சிலை முழுவதும் மெல்லிய வேதித் துளிகள் பூக்கும். அந்த துளிகள் மறுநாள் காலை அபிஷேக நீருடன் மார்புச் சந்தனத்தில் கலந்து பாவங் களைக் கழுவும் மந்திரமாகவும் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவுமாகிறது திருச்செந்தூரில் தைப்பூசத்தின்போது மார்கழி மாதமே மாலை போட்டு விரதமிருந்து ஆடல் பாடல்களுடன் பாதை யாத்திரையாக வருவார்கள். கடற்கரையில் நடக்கும் பிரம் மாண்டமான சூரசம்ஹாரத்தின்போது சமுத்திரம் பெரிதா! அலை அலையென குவிந்த மக்கள் சமுத்திரம் பெரிதா என்பதுபோல் இருக்கும்'' என்றார் மஞ்சு சுமன்.
"மலேசிய நாட்டில் மூன்று முருக படைவீடு களான பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை ஸ்தலங்களின் தைப்பூசம் உலகப் புகழ்பெற்றது. கோலாலம்பூரிலிருந்து பதின்மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பத்துமலை முருகன்கோவில். சுண்ணாம்புப் பாறை அடுக்கு கள் கொண்ட மலைப்பகுதியில் அமைந்த குகைக் கோவில் இயற்கைச் சுழலில் அமைந்துள் ளது. வரிசையாக சின்னஞ்சிறு குகைக் கோவில் களும் உண்டு. லண்டன், கனடா, சிங்கப்பூர். ஆஸ்திரேலியாவிலிருந்தும் பக்தர்கள் குவிகிறார்கள். முருகனுக்கு மாலைபோட்டு கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலி-ருந்து அதிகாலையில் இருந்தே நடக்கத் தொடங்கும் பக்தர்களின் ஊர்வலம் முடிய பத்துமணி நேரம் கூட ஆகும். சுங்கைபத்து (நமசஏஆஒஇஆபம தஒயஊத) ஆற்றில் நீராடிய பக்தர்கள் 272 படிகள்மேலே ஏறிவந்து வேண்டுதலை முடிப்பார்கள்.
ஜொகூர் மசாய் ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலிலும் தைப்பூச விழா மிக உற்சாகமாக நடைபெறும். ஜார்ஜ் டவுன் அருகிலுள்ள தண்ணீர்மலை கோவிலில் தைப் பூசத்தன்று பொது விடுமுறையாக பினாங்கு மாநில அரசு அறிவித்துள்ளது. தண்ணீர் மலைக் கோவிலில் தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் தொடர்ந்து நடை பெறும். இக்கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந் துள்ள முருகர் கோவில்களில் பெரியதாகும். மலேசியா வின் ஈப்போ குனோங் சீரோ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூசம் பக்தி சிரத்தை யுடன் கொண்டாடப்படுகிறது. தைப்பூசக் காவடி காணிக்கைகள் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலிருந்து கல்லுமலை கோவிலுக்குக் கொண்டுபோய் செலுத்தும்படியான நடைமுறை உள்ளது தைப்பூசத் திருவிழா களைகட்டும். சிங்கப்பூர் முருகர் கோவிலில் முருகனின் "சக்தி வேல்'தான் மூலவர். நீண்ட நெடுநேரம் பாலாபிஷேகம் நடக்கும். முருகன் வெள்ளித்தேரில் லயன் சித்திவிநாயகர் கோவில்வரை ஊர்வலமாகக்கொண்டு செல்லப்பட்டு அன்று மாலை திரும்ப கோவிலை தேர் வந்தடையும். முருக பக்தர்கள் பெருங்கூட்டமாக தேரினை வடம்பிடித்து இழுத்துச்செல்வார்கள். பால் காவடி மற்றும் பல வகைக் காவடிகளுடன் முருகருக்கு அலகுகுத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் தைப்பூசத்தன்று வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். தைப்பூசத்தை தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் கொண்டாடி மகிழ்வது சிறப்பு. 155 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதண்டாயுதபாணி கோவில், நாட்டின் 67-ஆவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் 3-ஆவதாக இடம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் தேசிய பாரம்பரியச் சின்னங் கள் வாரியம் "வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோவில் சமூக கலாசாரத்தைப் போற்றும்விதமான கட்டடக்கலை யின் தனித்துவம்'' என அறிவித்துள்ளது என்கிறார்கள் மலேசியாவின் அமுதா ரமணி.
"இலங்கை யாழ்ப் பாண முருகன் கோவிலில் தைப்பூச தினம், உழவர் திருநாள் என்கிறார்கள் மலேசியாவின் அமுதா ரமணி. தைப்பொங்கல் போல கதிரறுப்பு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் எழுந்து வீடு வாசல் சுத்தம்செய்து வெற்றிலைபாக்கு. தேங்காய், கற்பூரம், நெற்கதிர் அறுக்கும் அரிவாள் போன்ற வெள்ளாமைக் கருவிகளுடன் கிழக்குப்பக்கம் திரும்பி நின்று சூரியனை வணங்கி தேங்காய் உடைத்து வெள்ளாமைக்கு முற்றிய நெற்கதிர்களை அறுத்து வீட்டிற்கு எடுத்துவந்து வயதில் மூத்தவர்களிடம் கொடுத்து பூசை செய்வார்கள்.
வட அமெரிக்காவில் முதன் முதலாக பிரம்மாண்ட மேரிலாண்ட் முருகன் கோவில் "தமிழால் இணை வோம் முருகர் அருள்பெறுவோம்' என்றும், சிவா விஷ்ணு முருகன் கோவில் என்றும், செயின்ட் லூயிஸ் அறுபடை முருகன் கோவில், மொரீஷியஸ் சுப்பிரமணியர் பூசத் திருவிழா, தென் ஆப்பிரிக்காவின் காவடி விழா, டர்பன் கிளேர்வுட் ஸ்ரீசிவாசுப்ரமணியர் கோவில், கேப்டவுன் பூசம், பிஜியில் "நாடி' ஸ்ரீசிவசுப்ரமண்யசுவாமி கோவில், ஆஸ்திரேலிய நாட்டின் இந்து கழகம் சிறப்பாக நடத்திவரும் விக்டோரியா சிவாவிஷ்ணு கோவில் தைப்பூசவிழா போன்று உலகம் முழுக்க பல நாடு களிலும் தைப்பூசத் திருவிழா முருக பக்தர்களால் பக்தி சிரத்தையுடன் விமரிச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது'' என்கிறார் அமெரிக்கா வின் கனடாவைச் சேர்ந்த உமா.