நிலையான அறச்செல்வம்! - யோகி சிவானந்தம்

/idhalgal/om/sustainable-charity-yogi-sivananda

"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.'

மருத்துவ மாமேதை அருளிச் சென்ற இத்திருக்குறளின் பொருளைப் பார்ப்போம்.

காலச் சூழ்நிலைகளையும், உடல் நிலை முதலியவற்றோடும் மாறுபாடு கொள்ளாத உணவை, நிறைய உண்ண வேண்டுமென்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவு குறைத்து உண்டால், அவன் உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டா வதில்லை.

இப்போதைய சமுதாயம் எங்கும் அவசரம், எதிலும் அவசரம். இப்போது பெரும்பாலானோர் சமைப் பதில்லை. வீட்டில் சமைப்பதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. குறைந்த சதவிகிதத்தினரே வீட்டில் சமைக் கின்றனர். காரணம் சோம்பேறித் தனம். சோம்பலைப் பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.'

தாம்பிறந்த குடியை மேன்மேலும் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர், தன்னிடமுள்ள சோம்பலை நீக்கி, இடையறாத முயற்சியுடையவராக இருக்கவேண்டும்.

ஒருவனது உணவும், அவனது சோம்பலில்லாத உழைப்பும் அவனது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் கெடுக்காது. நமது இளைய சமுதாயம் கண்ணுக்குப் பிடித்ததை சாப்பிடுகிறது. மூக்குக்குப் பிடித்ததை மூக்குமுட்ட சாப்பிடுகிறது.

காது விரும்பிக் கேட்பதை சாப்பிடுகிறது. வாய்க்குப் பிடித்ததை சாப்பிடுகிறது. ஆனால் யாராவது வயிற்றைக் கேட்டோ, வயிற்றுக்குப் பிடிதத்தை சாப்பிடுகிறோமா என்றால் இல்லை. விளைவு உடல் ஆரோக்கியம் சிதைகிறது. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒருபுறம் பயனுள்ளதாக இருந்தாலும், மறுபுறம் மனித குலத்தை பயமுறுத்தும்விதமாக இருக்கிறது.

இப்போது புதிதாக மர்மக் காய்ச்சல். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பரவிவருவதாக பீதியைக் கிளப்புகிறது. இப்போது சென்னை. புதுப்புது நோயைக் கண்டுபிடித்துச் சொல்லும் நவீனம், ஏன் நம்மிடம் அதற்கான தீர்வைத் தரும் மருந்துகளும், துணை உணவுகளும் இருப்பதை வெளிக்கொண்டுவர சிறு முயற்சியும் செய்வதில்லை? நீரிழிவு எனும் சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருந்து 30 ஆண்டுகளாக முதலில் மாத்திரையை சாப்பிட ஆரம்பிக்கிறான்.

அதைப் படிப்படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறான். இனி மாத்திரை வேண்டாம்; இன

"மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.'

மருத்துவ மாமேதை அருளிச் சென்ற இத்திருக்குறளின் பொருளைப் பார்ப்போம்.

காலச் சூழ்நிலைகளையும், உடல் நிலை முதலியவற்றோடும் மாறுபாடு கொள்ளாத உணவை, நிறைய உண்ண வேண்டுமென்னும் ஆசைக்கு இடங்கொடுக்காமல், வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்குமளவு குறைத்து உண்டால், அவன் உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டா வதில்லை.

இப்போதைய சமுதாயம் எங்கும் அவசரம், எதிலும் அவசரம். இப்போது பெரும்பாலானோர் சமைப் பதில்லை. வீட்டில் சமைப்பதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. குறைந்த சதவிகிதத்தினரே வீட்டில் சமைக் கின்றனர். காரணம் சோம்பேறித் தனம். சோம்பலைப் பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்.'

தாம்பிறந்த குடியை மேன்மேலும் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர், தன்னிடமுள்ள சோம்பலை நீக்கி, இடையறாத முயற்சியுடையவராக இருக்கவேண்டும்.

ஒருவனது உணவும், அவனது சோம்பலில்லாத உழைப்பும் அவனது உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் கெடுக்காது. நமது இளைய சமுதாயம் கண்ணுக்குப் பிடித்ததை சாப்பிடுகிறது. மூக்குக்குப் பிடித்ததை மூக்குமுட்ட சாப்பிடுகிறது.

காது விரும்பிக் கேட்பதை சாப்பிடுகிறது. வாய்க்குப் பிடித்ததை சாப்பிடுகிறது. ஆனால் யாராவது வயிற்றைக் கேட்டோ, வயிற்றுக்குப் பிடிதத்தை சாப்பிடுகிறோமா என்றால் இல்லை. விளைவு உடல் ஆரோக்கியம் சிதைகிறது. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஒருபுறம் பயனுள்ளதாக இருந்தாலும், மறுபுறம் மனித குலத்தை பயமுறுத்தும்விதமாக இருக்கிறது.

இப்போது புதிதாக மர்மக் காய்ச்சல். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பரவிவருவதாக பீதியைக் கிளப்புகிறது. இப்போது சென்னை. புதுப்புது நோயைக் கண்டுபிடித்துச் சொல்லும் நவீனம், ஏன் நம்மிடம் அதற்கான தீர்வைத் தரும் மருந்துகளும், துணை உணவுகளும் இருப்பதை வெளிக்கொண்டுவர சிறு முயற்சியும் செய்வதில்லை? நீரிழிவு எனும் சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருந்து 30 ஆண்டுகளாக முதலில் மாத்திரையை சாப்பிட ஆரம்பிக்கிறான்.

அதைப் படிப்படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறான். இனி மாத்திரை வேண்டாம்; இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளலாம்' என்று அவனுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோய் குணமானதா என்றால் இல்லை. விளைவு சிறுநீரகம் செயலிழந்துவிடும். இதைப்பற்றி விழிப்புணர்வும், பொறுப்பும், அக்கறையும் வேண்டாமா?

செய்யக் கூடாததையெல்லாம் செய்துவிட்டு, கடைசியில்- அதாவது சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்றால் சங்கரன் வரமாட்டான். உனது செயலிலும் நடத்தையிலும், பழக்க வழக்கங்களிலும் குறைகளை வைத்துக்கொண்டு, நம் எண்ணத்திலும் சிந்தனையிலும் குறை களை வைத்துக் கொண்டு மதத்தைப் பற்றி பேசுவதனாலோ, கோவிலுக்குச் சென்று அர்ச்சனை, அபிஷேகம் செய்வதனாலோ நமது மனமோ, உடலோ, பொருளாதாரமோ சரியாகாது. அப்படி நினைத்தால் அது மூடநம்பிக்கை. பக்தி என்பது உள்மனதில் மாசற்றிருக்க வேண்டும். இப்போது இறைவனிடம் எதையும் கேட்கவேண்டாம். நம் மனம் நினைத்த நல்ல விஷயத்தை இறைவன் நமக்குப் பரிசாக வழங்கிக்கொண்டே இருப்பான்.

இங்கே ஒரு இறப்பு (இழப்பு) அல்லது பல இறப்புகள் யாரையாவது நல்வழிப் படுத்தியதா என்றால் இல்லை. இழப்போ, இறப்போ-அது யாருக்கோ என்ற எண்ணமே அதிகப்படியான சதவிகிதத்தினரிடம் இருக்கிறது. 6-2-2023 அன்று துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடுமையான பூகம்பம்... 28,000-த்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல கட்டடங்கள் தரைமட்டமாகின. இது எதை உணர்த்துகிறது? எதுவும் நமக்கு உரிமையானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அனைத் தும் அண்ட சராசரங்களின் தலைவனும், பிரபஞ்ச பேராற்றலின் அதிபதியுமான சிவத்தின் சொத்தாகும்.

"நான்' எனும் மகா மாயையை விட்டொழிக்க வேண்டும். இதைப்பற்றி திருக்குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்

வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.'

உடம்பை "நான்' என்றும், தொடர்பில்லாத பொருளை "எனது' என்றும் கருதுகின்ற மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் கிட்டாத உயர்ந்த வீட்டுலகை அடை வான்.

இப்போது சுயநலம் தலை விரித்தாடுகிறது; பொதுநலம் செத்துவிட்டது. ஒரு கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் இயற்கை வளங்களை அழித்து அதன்மீது கழிவு களைக் கொட்டுகிறது. விளைவு, இயற்கைக்கு கோபம் வருகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை உயிர்பலி 28 ஆயிரத்தைக் கடந்து விட்டது. அதே நேரத்தில் இந்தியாவில், தமிழ் நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய கனமழை காரணமாக 30,000 ஏக்கர் "நெற்பயிர்கள்' பலியாகிவிட்டன. இங்கே நம்முன் ஒரு கேள்வி எழுகிறது. இரண்டும் உயிர்தான். ஆனால் இரண்டையும் ஒன்றென்று எப்படி ஒப்பிட முடியும்?

sivan

ஏன் முடியாது என்பது நமது சிற்றறிவின் கேள்வி. மனித உயிரிழப்பு ஏற்பட்டால் பிரபஞ்சத்திலுள்ள பூமியில் பல உற்பத்திகள் பாதிக்கப்படும். பயிரிழப்பு ஏற்பட்டால், பல உயிர்கள் உணவில்லாமல் உயிரிழக்க நேரிடும்.

அருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்பட்ட இராமலிங்க அடிகளார்-

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர்

என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய்

நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.'

தண்ணீரின்றி வாட்டமுற்ற பயிர்களைக் கண்டபோதும், பசியால் மேனி மெலிந்து வீடுதோறும் சென்று இரந்தும் பசி நீங்காது வருந் தும் வழியரைப் பார்த்தும். நெடிது நின்று வருத்தும் நோயுடையராய் துன்புறு பவர்களைக் கண்ணெதிரே தோன்றக் காணும்போது மனம் மிக வருந்தி நொந்தேன். ஒப்பற்ற மானமுடையவராய் இருந்தும் வறுமையினால் துன்பப்படுபவர்களைக் கண்டு உள்ளம் உடைந்து மெலிந்த வர்களைக் கண்டு மெலிவுற் றேன்.

பயிர்கள் வாடியதையும், மனித உயிர்கள் உணவில்லா மல் பசியால் வாடியதையும் இணைத்தே பார்த்த மாபெரும் மருத்துவச் சித்தர் இராமலிங் வள்ளலார் வாழ்ந்த- வாழ்ந்து கொண்டிருக்கின்ற- நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற மண்ணே நம் தமிழ் மண். சீவகாருண்யத்திற்கு நம்மைத் தவிர வேறுயாரும் உலகில் சொந்தம் கொண்டாட முடியாது.

அப்படிப்பட்ட மண்ணில் பிறந்த நம் பிள்ளைகள் படிக்கும்போது கடன் வாங்கிப் படித்து கடன்காரனாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை துவங்குகிறான். "பயிர்த்தொழிலே நம் உயிர்த் தொழில். அதைத் தொலைத்த நம் பிள்ளைகள் கடன்காரனாக பெரு முதலாளிகளின் கம்பெனிகளில் (வெளிநாடு, உள்நாடு) அடிமை வேலைப் பார்ப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். ஏன் இந்த அவலநிலை?

ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சி என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் பங்கு சந்தை (நட்ஹழ்ங் ஙஹழ்ந்ங்ற்) வீழ்ச்சி என்கின்றனர்.

இந்தியாவின் அடித்தட்டு மக்களுக்கு இந்தக் கணக்கு எதுவும் தெரியாது.

70 சதவிகிதம் மக்களுக்கு மேற்பட்டவர்கள் வாழ்வாதாரத்திற்கே போராடுகின்றனர். ஒரு சதவிகிதம் பேர்களிடம் பெரும்பாலான சொத்துகள் இருக்கிறதென்று ஒரு ஆய்வு சொல்கிறது. நம்மிடம் சோம்பேறித்தனம் அதிகரிப்பதால் யார் யாரோ நமது வேலை வாய்ப்பில் பயன்பெற முடிகிறது. உழைக்க விருப்பமில்லாதவன் பிழைக்க முடியாது; பிழைக்க வழிதேடாதவன் வாழமுடியாது. கடந்த வாரம் அமெரிக்காவில் டிவிட்டர், ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களில் இருந்து இரண்டு லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வேலை இழந்துள்ளனர். அதில் இந்தியர்கள் 80 ஆயிரம் பேர்.

மனித இனம் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். உலகிற்கே உணவு கொடுக்க நம்மால் முடியும். ஏனென்றால் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரில் வணிகம் நடந்ததற்கான ஆதாரத்தை இப்போது ஆராய்ச்சிமூலம் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு நாம் வாழ்ந்ததற்குக் காரணம் நமது பாரம்பரியமும், கலாச்சாரமும், பண்பாடும், ஒழுக்கம் சார்ந்த பக்தியும்- அதாவது இறைவழிபாடுமே ஆகும்.

இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள். நீ யார் என்பதை அறிந்துகொள். உன்னிடம் அளப்பரிய ஆற்றல் இருக்கிறது. பிரபஞ்சம் என்பது ஙஹஸ்ரீழ்ர் மய்ண்ஸ்ங்ழ்ள்ங்; அதிலுள்ள மனிதன் ஙண்ஸ்ரீழ்ர் மய்ண்ஸ்ங்ழ்ள்ங்; அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில். அண்டங்களின் அரசன் அரும்பெரும் சிவம். நீ உன்னை அறிந்தால் சிவத்தை உணரமுடியும். எதுவும் நிலையில்லாதது. அதற்கு அரன் வழங்கியுள்ள அருட் செல்வத்தைத் தேடுங்கள் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. இளமை நிலையில்லாததது. திருமூலர் அருளியுள்ளதைப் பார்க்கலாம்.

"தேற்றத் தெளிமின் தெளிந்நீர் கலங்கல்மின்

ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறித்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமெ.'

செல்வம் நிலையற்றது என்பதைத் தெரிந்து தெளிவடையுங்கள். முன்பே அறிந்து தெளிந்தவர்கள் செல்வம் இல்லாமையை எண்ணிக் கவலைப்படாதீர்கள். ஆற்று வெள்ளம் போல் பெருகிவரும் செல்வச் செழிப்பைக் கண்டு கலங்கி மயங்கக்கூடாது. ஏனென்றால் வெள்ளம் வந்ததுபோல் ஒருநாள் திடீரென்று வற்றியும் போகும். எனவே பொருட் செல்வத் தின்மீது வைத்த பற்றை மாற்றிக்கொண்டு இறையருளாகிய பெரும் செல்வத்தை பெற முயலுங்கள். முயன்றால் எமபயமும்கூட உங்களை நெருங்காது.

உனது உயிர் நிலைக்க உனக்குத் தேவை பொருளல்ல; அது உன் உடலாகும். அறிவைப் பயன்படுத்தி உடலைக் காப்பாற்றினால் உயிரை நீட்டிக்கமுடியும். திருமூலர் அருளிச் செய்துள்ளதைப் பார்க்கலாம்.

"துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி

அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி

அடுத்து எரியாமல் கொடுமுன் அரிசி

விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.'

நமது உடலை வளர்க்கும் உணவைச் சமைக்க, அகப்பை, பானை, அரிசி, அடுப்பு, நெருப்பு, விறகு ஆகியவை தேவை. இதைப்போலவே இந்த உடலிலுள்ள உயிரை வளர்க்கவும் ஒரு உணவு வேண்டும். அதைச் செய்யவும் அகப்பை, பானை, அரிசி, நெருப்பு, அடுப்பு, விறகு எல்லாம் வேண்டும். அவை என்னென்ன பொருள்கள் என்று பார்ப்போம்.

1. பிராணன்- உயிர்க்காற்று.

2. அபானன்- மலக்காற்று.

3. சமானன்- நிரவுக்காற்று.

4. உதானன்- ஒலிக்காற்று (சப்தம்).

5. வியானன்- தொழிற்காற்று.

இப்படி இயற்கையிலுள்ள இறைவனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒரு தொழிலாளிக்கு கூலி கொடுப்பது முக்கியமல்ல. அவனின் உழைப்புக்கான உண்மையான ஊதியத்தைக் கொடுப்பதே சிறந்த அறமாகும். மனசாட்சி என்பதே இறைவன். அதுவே இயற்கை. அதில் கேடுவரும்போது பூமிப்பந்து கேட்டினை சந்திக்கும்.

திருமந்திரச் சிற்பி திருமூலர், "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்றுரைத்தவர். "நீ கடவுளைப் பார்க்கமுடியும். உனக்குள்ளே கடவுள் இருக்கிறார். நீதான் கடவுள்' என்கிறார்.

அப்புறம் "உன் அறிவே கடவுள்' என்கிறார். நமது சிற்றறிவு இப்படி யோசித்தது. உன் அறிவே கடவுள்... உன் அறிவைப் பயன்படுத்தி உனக்குள் இருக்கின்ற கடவுளைக் கண்டறிந்து உணர்ந்து கொண்டால் உன் கண்ணுக்குத் தெரியாத கடவுள், உன் கண்முன்னே வந்து நிற்பார் என்பதே நிஜம்.

பொருட்செல்வம் நிலையற்றது. பரம் பொருள் சிவத்தின் அறச் செல்வமே நமக்கு நிறைவான அருட்செல்வத்தை வழங்கும்.

om010323
இதையும் படியுங்கள்
Subscribe